Language Selection

பி.இரயாகரன் - சமர்

1980 களில் இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியும், ஆயுதமும் பணம் கொடுத்ததுடன், சிங்கள அப்பாவி மக்களைக் கொல்லுமாறு கோரினர். இதனடிப்படையில் இந்தியா முன்னின்று வழிகாட்ட புலிகள் அனுராதபுர நகரத்தில் 150க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடத்தியதற்காக இந்தியா 50 கோடி இந்திய ரூபா தந்ததாக பாலசிங்கம் பின்னால் கூறினார். இந்தத் தாக்குதல் மூலம் தான் திம்புப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா வழிகாட்ட நடந்த இது போன்ற தாக்குதல் தான், எல்லைப்புற சிங்கள முஸ்லீம் கிராமங்கள் தோறும் ஆயிரமாயிரம் சிங்கள மக்களைக் கொன்று குவிக்கவும் வழிகாட்டியது. இன்று தமிழகத்தில் சிங்கள மக்கள் மேலான தாக்குதல் இதே போன்ற இனவாதத் தாக்குதல் தான். அன்று போல் இன்றும் தமிழினத்தின் பெயரில் இவை அரங்கேறுகின்றது.

 

சிந்தனையே அல்லாத ஒன்றை, சிந்தனையாக கூறுவதில் இருந்து தொடங்குகின்றது இந்த இடதுசாரிய திரிபும், புரட்டும். சுரண்டும் வர்க்கம் எந்த வடிவில் எப்படி மக்களை மோதவிட்டு சுரண்டி ஆள்வது என்பதை தாண்டி "மகிந்த சிந்தனை" என்று ஓன்று புதிதாக கிடையாது. இதை "மகிந்த சிந்தனை" என்று ஆளும் சுரண்டும் வர்க்கம் கூறி அழைப்பதால், இதுவொரு புதிய சிந்தனையே கிடையாது. இல்லை, இது ஒரு புது சிந்தனைதான் என்று கூறுகின்ற இடதுசாரியம், ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கை மீள திணிக்கிறது என்பது தான் இங்குள்ள அரசியலாகும்.

தமிழ்மக்கள் தங்கள் நியாயமான உரிமைகளைப் பற்றி சிங்கள மக்களுடன் பேசாத வரை, அதன் நியாயத்தன்மையை சிங்கள மக்கள் உணரவோ புரிந்து கொள்ளவோ முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தமிழ்மக்களின் உரிமைகளை நியாயமற்ற கோரிக்கையாக சிங்கள மக்களிடம் கூறுவதை நாம் தொடர்ந்து அனுமதித்து இருக்கின்றோம். இந்த எல்லையில் தான், தமிழ் மக்களை குறுந் தமிழ்தேசியமும் கூட சிறையிட்டு இருக்கின்றது. குறுகிய இனவாதம், மற்றைய இனத்துக்கு எதிராக தன் இனத்தை அணி திரட்டுகின்றது. இதைத்தான் பேரினவாதமும், குறுந்தேசியமும் செய்கின்றது. இதற்கு எதிரான உரையாடலை, போராட்டத்தை நடத்தாத வரை, நாமும் இனவாதிகளுக்கு துணை போபவர்கள் தான்.

தமிழ் மக்களை அணி திரட்டிப் போராடாத, சிங்கள மக்களுள் பேசாத, ஆளும் வர்க்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தை வெறும் அரசியல் நாடகங்கள் தான். “காலக்கெடுவும்” “எழுத்து பூர்வமான” பதிலையும் கோரி இந்த நாடகத்தில் இருந்து விலகுவது, புலிகளின் அதே அரசியல் வங்குரோத்து தான். இரகசியமான பேரங்கள் மூலமான தீர்வு என்று நம்பிக்கை ஊட்டிய, தாங்கள் உருவாக்கிய அத்திவாரத்தை தங்களே தகர்த்து விட முன்வைத்த நிபந்தனை பேரினவாதத்துக்கு சாதகமானது. குறைந்தது இதிலிருந்து வெளியேறுவதற்கு கூட, தெரியாத குறுகிய அரசியல் முட்டாள்தனத்தைத் தான், தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டமைப்பு செய்துள்ளது.

பிரிட்டிஸ் அரச குடும்பத்தைப் பார்த்து பண்பாட்டை வளர்க்கின்ற நாகரீக சீமான்களும் சீமாட்டிகளும், நேரெதிரான ஒரு காட்சியை காணும் வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு அராஜக சூழலை உருவாக்கி வைத்திருப்பதை கனவில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள். பணக்காரக் கூட்டம் மட்டும் வாழமுடியும் என்று நம்பி வாழும் நாகரீக சமூகம், ஏழைகளின் அராஜகத்தை நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி நாகரீக சேரிகளை உருவாக்கி வைத்திருப்பது, தனது நாகரீகத்துக்கான கல்லறைகள் என்பதை எண்ணிக் கூட பார்த்திருக்கமாட்டர்கள்.

இலங்கை ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தை தடுக்க இனமுரண்பாட்டை ஆணையில் வைத்திருக்கின்றது. இந்த இனமுரண்பாடு இருக்கும் வரை, இலங்கையில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தை மறுக்க மார்க்சியத்தை புரட்டிப் போடுகின்றது நூல். "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்று கூறிக்கொண்டு "சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனைந்தாலும் பௌத்த-சிங்கள பேரங்கார போதையில் மிதந்து கொண்டிருக்கும் சிங்கள மக்கள் வரமாட்டார்கள்" (பக்கம் 285) என்கின்றது. "போராட்டம் தொடரும்" என்பது, இங்கு வர்க்கப் போராட்டத்தையல்ல. அதைச் சொல்ல இடதுசாரிய சொல்லடுக்குகள், இடதுசாரிய வாதங்கள், இடதுசாரிய தர்க்கங்கள். இதன் அரசியல் பின்னணியில் "முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமே இன்று இலங்கையில் பிரதானமானதும் உடனடியானதுமான வேலைத்திட்டமாக அமைகின்றது" (பக்கம் 212) என்று கூறுவதன் மூலம், வர்க்க அரசியலில் இருந்து ஜனநாயகத்தை கூட பிரித்து அணுகுகின்ற வர்க்க அரசியலை நிராகரிக்கின்ற அரசியல் கோட்பாட்டை இந் நூல் முன்வைக்கின்றது.

 

சமூக நடைமுறையில் இருந்து அன்னியமாகிய நிலையில் சமூகம் பற்றி எம்மளவில் நாம் சிந்தித்து மையப்படுத்திய சிந்தனைமுறையும், நாம் மட்டும் சரியாக இருக்கின்றோம் என்ற எம்மைச் சுற்றிய எம் சொந்த அனுபவம், இதைக் கடந்து கூட்டுவேலையை முன்னெடுப்பதில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இரு பத்து வருடங்கள், பழக்கப்பட்ட ஒன்றாக இதுமட்டும் தான் எம்முன் இருந்திருக்கின்றது. என்னை அல்லது எம்மைச் சுற்றி அனைத்தையும் காணுகின்ற கடந்தகால இந்த நடைமுறை, இதைச் சுற்றி இயங்குகின்ற முரண்பாடுகளும் சுய முரண்பாடுகளும் கூட, எம்மை நாம் கடந்து விட முடியாதவர்களாக மாற்றிவிடுகின்றது. இதன் அர்த்தம் அரசியலை கைவிடுதல் அல்ல, அரசியலை ஆணையில் வைத்தல். அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. தனிமனித செயல்கள் அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டது. தனிமனித செயல், கூட்டுவேலைமுறை அனைத்தும் அரசியலுக்கு உட்படுத்தியதாக இருக்க வேண்டும். நாம் கடந்தகால நடைமுறையில் இருந்து கடந்து வருதல்;, மாற்றத்தின் முதல்படியாகும். எல்லாவற்றையும் மீளப் பார்க்கவும், சுயவிமர்சனம், விமர்சனம் செய்வதன் மூலமும் எம் காலடிகளை சரியாக முன்வைக்கமுடியும்.

 

புலிகள் தங்கள் அரசியல் வழிமுறையை வலதுசாரிய முன்னுதாரணங்களில் இருந்தது மக்கள்விரோதமாக கற்றுக் கொண்டது போல், நோர்வே வலதுசாரிய கொலைகாரன் புலிபபாசிட்டுகளிடம் இருந்து தான் கற்றதை 1500 பக்கம் கொண்ட தன் கொள்கைப் பிரகடனத்தில் கூறியுள்ளான். (அதன் மூலம் மற்றும் பகுதித் தமிழாக்கம் இக் கட்டுரையின் இறுதியில் உள்ளது.)

தேசியம் பற்றி ஒற்றைத் துருவப் பார்வை, அரசியலை நிராகரிக்கின்றது. இனத்தை முன்னிறுத்திய படுபிற்போக்கான ஒடுக்கும் தேசியத்தின் அதே தேசியக் கூறையே மீள முன்வைக்கின்றது. தமிழ்த்தேசியம் இப்படித்தான் தன்னை வெளிப்படுத்தியது. இது ஒடுக்கும் தேசியத்தின் இயல்பில் இருந்து, ஒடுக்கப்படும் தேசத்தின் தேசிய இயல்பை தன்னளவில் கூட வேறுபட்டு தன்னை வெளிப்படுத்தியது கிடையாது. ஒடுக்கும் தேசம் சார்ந்த தேசிய உணர்வை, ஒடுக்கப்பட்ட தேசம் தன் தேசிய உணர்வாக கொண்டிருக்குமாயின், அது படுபிற்போக்கானது மட்டுமின்றி அதன் இயல்பில் இருந்தே தோற்றுப்போகும். இது தான் இலங்கையில் நடந்தது.

 

முன்னேறிய நிலையில் எமது கருத்து ஆதிக்கமும், அதை முன்வைக்கும் திறனும், எமது செயல்பாட்டில் இல்லை. அதுபோல் எமது அமைப்பின் ஒட்டுமொத்த ஒரு கூறாக இது முன்னேறிவிடவில்லை. இது எம்மைச் சுற்றி அரசியல் எதார்த்தம். இது உள் மற்றும் வெளி முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

நாம் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது, எதிர்ப்பிரச்சாரத்தை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அதை முறியடிக்கும் அரசியற்பலத்தை நாம் பெற்றிருக்கவேண்டும். எமது பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதபோது, எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரம் தன்னை மூடிமறைத்துக் கொண்டும், தன்னை சார்பானதாக நிறுத்திக்கொண்டும், ஒரு இடைவெளியை உருவாக்கி அதன் ஊடாக எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றது. இன்று பொதுவில் பலதரப்பும் எம்மை நோக்கிக் கூறுவது, உங்கள் கருத்துக்கள் எல்லாம் சரி, ஆனால்? என்றவாறு ஏதோ ஓன்றை எப்போதும் கூற முற்படுவதன் மூலம் தான் எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றனர். கருத்தியல்ரீதியாக இதை எதிர்கொள்ள அவர்களால் முடிவதில்லை. நாங்கள் வெளிப்படுத்தும் கருத்து சரி என்பவர்கள், அதை தம்மளவில் கூட முன்னெடுப்பதில்லை. இப்படி எதிர்ப்பிரச்சாரம் கருத்துக்கு வெளியில் அமைகின்றது.

 

யுத்தத்தில் வென்றவர்கள், தமிழ்மக்களை வெல்லவில்லை. யுத்தத்தில் வென்றவர்களை, தமிழ்மக்கள் மீளத் தோற்கடித்து இருகின்றார்கள். புலிகள் தான் அனைத்துப் பிரச்சனையும் என்றவர்கள் முன், இன்று தமிழ்மக்கள் பிரச்சனையாகியுள்ளனர். இனங்களுக்கு இடையில் அமைதியும், சமாதானமும் தோன்றிவிட்டது என்று கூறியது எங்கும் பொய்யாகியுள்ளது. வடக்கின் "வசந்தம்", கிழக்கின் "உதயம்" என்ற மகிந்தவின் பாசிசச் சிந்தனைக்கு, செருப்படி கிடைத்திருக்கின்றது.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE