1980 களில் இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியும், ஆயுதமும் பணம் கொடுத்ததுடன், சிங்கள அப்பாவி மக்களைக் கொல்லுமாறு கோரினர். இதனடிப்படையில் இந்தியா முன்னின்று வழிகாட்ட புலிகள் அனுராதபுர நகரத்தில் 150க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடத்தியதற்காக இந்தியா 50 கோடி இந்திய ரூபா தந்ததாக பாலசிங்கம் பின்னால் கூறினார். இந்தத் தாக்குதல் மூலம் தான் திம்புப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா வழிகாட்ட நடந்த இது போன்ற தாக்குதல் தான், எல்லைப்புற சிங்கள முஸ்லீம் கிராமங்கள் தோறும் ஆயிரமாயிரம் சிங்கள மக்களைக் கொன்று குவிக்கவும் வழிகாட்டியது. இன்று தமிழகத்தில் சிங்கள மக்கள் மேலான தாக்குதல் இதே போன்ற இனவாதத் தாக்குதல் தான். அன்று போல் இன்றும் தமிழினத்தின் பெயரில் இவை அரங்கேறுகின்றது.