சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, செல்வியை கொலை செய்த புலிகளே தாமே தமக்கு எதிராக இக் கூட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளனர். அதை அவர்கள்
"செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ... கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள். பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது."
என்று கூட்டத்தை புலிகள் பாணியில் முத்திரை குத்துகின்றனர்.