Language Selection

பி.இரயாகரன் - சமர்

சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, செல்வியை கொலை செய்த புலிகளே தாமே தமக்கு எதிராக இக் கூட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளனர். அதை அவர்கள்

"செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ... கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள். பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது."

என்று கூட்டத்தை புலிகள் பாணியில் முத்திரை குத்துகின்றனர்.

செல்வியை நாம் நினைவுகூர்வது, அவர் கொண்டிருந்த அரசியலுக்காகத்தான். இதனால் தான் அவர் இறுதியாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் போராட்டம் புலிக்கு எதிராக மட்டுமல்ல, தான் இருந்த இயக்கத்துக்கு எதிராகவும், அந்த இயக்கத்துடன் தொடர்ந்து இருந்த தன் காதலனுக்கு எதிராக, அவரின் போராட்டம் எந்தவிதமான சரணடைவுக்கு விட்டுக்கொடுப்புக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.

இந்த நிலையில் நாம் எதற்காக இன்று செல்வியை முன்னிறுத்துகின்றோம்? இந்த நோக்கம் கூட செல்வியின் அரசியல் நோக்கத்தை கடுகளவும் சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பலர் பல காரணங்களைக் காட்டி, தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப செல்வியை குறுக்கிக் காட்டிவிட முனைகின்றனர்.

 

தற்கொலை அரசியலை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத அரசியல், போராட்டங்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றது. தற்கொலை மூலம் வீங்கி வெம்பும் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை புதைகுழிக்குள் அனுப்புகின்றது. அரசியல்ரீதியாக தற்கொலை போராட்டத்தை "உத்வேகப்படுத்துகின்றது" என்றால், எந்த வகையான போராட்டத்தை அது உத்வேகப்படுத்துகின்றது. அறிவுபூர்வமான வர்க்கப் போராட்டத்தையா!? அல்லது உணர்ச்சி சார்ந்த குட்டிபூர்சுவா வர்க்கம் சார்ந்த வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியலையா!?

 

மக்கள் போராடியதால் தான் நீதிமன்றம் தூக்கை நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால், இதே காரணத்தைக் கொண்டு இந்திய நாடாளுமன்றம் அண்ணா ஹசாரேயின் ஜோக்பாலலின் ஒரு பகுதியை ஏற்றதாக கூறலாம். இரண்டும் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பும் முடிவுகளும், தீர்ப்புகளுமாகத் தான் வழங்கப்பட்டது. இதை மக்களின் வெற்றி என்று கொண்டாடுவது, இதை முதல் வெற்றி என்று சொல்வது, மக்களை திசைதிருப்புவதாகும்.

 

தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் சார்ந்து தன்னை இராணுவமயப்படுத்துகின்றது இலங்கை அரசு. இதற்காக பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டை, தனக்கு ஏற்ற அரசியல் சூதாட்டமாக்குகின்றது.

இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்? இந்தத் தண்டனைக்குப் பின்னால் கையாளப்பட்ட சட்ட நடைமுறைகள் அனைத்தும், நீதியைக் கேலி செய்கின்றது. ஒரு கட்டைப் பஞ்சாயத்து மூலம், குற்றமற்றவர்கள் குற்றவாளியாக்கப்பட்டனர். இதற்காகவே தடாச் சட்டத்தின் கீழான விசாரணையையும் தண்டனையையும் வழங்கினர். இந்த தடாச் சட்டம் தொடர்ச்சியாக சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தியதை அடுத்து, நீக்கப்பட்டது என்பது மற்றொரு கதை.

 

தேவை கடந்த ஆடம்பரமும், வரைமுறையற்ற நுகர்வுவெறியும பாலியலிலும் (செக்ஸ்) அவற்றைக் கோருகின்றது. நுகர்வைக் கடந்த வாழ்க்கை நெறிமுறையை, சமூகம் இழந்துவிட்டது. பெருந்தொகையான பாடசாலை மாணவிகளின் கர்ப்பங்கள் கண்டு அதிர்ந்து போகும் சமூகப் பரிமாணங்கள், இதைக் குறுக்கிக் காட்டுகின்றனர். தேவை கடந்த மிதமிஞ்சிய அனைத்து நுகர்வின் பொதுவெளிப்பாட்டில் உள்ளடங்கித் தான், அது பாலியல் நுகர்வாக வெளிப்படுகின்றது. உலகில் எங்குமில்லாத அளவில், வடிவில் அது வெளிப்படுகின்றது.

மோசடிக்காரன் அன்னா ஹசாரே ஊழல் என்று சொல்வது எதை? இதன் மூலம் யாருக்கு சேவை செய்கின்றார்? இந்த அடிப்படையில் இதை அணுகாதவரை, இதன் பின் மூடிமறைத்துள்ள சூக்குமத்தை விளங்கிக்கொள்வது என்பது, விளக்கிக் கொள்வது என்பது சிரமமானது. இங்கு "ஊழல் எதிர்ப்பு" என்பது, மூலதனத்திடம் ஊழல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோருகின்றது. இதற்குச் சிறப்பு சட்டம் தேவை என்பதை கூறாது, ஊழல் எதிர்ப்பாக மக்கள் உணர்வுகளை திருடி முன்வைக்கின்றது.

 

வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது. சரியான வர்க்கப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள், தானாக தன்னளவில் புரட்சி செய்யாது. மக்களிடம்; அதை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு வெளியில் மக்கள் தம்மளவில், தம் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடுகின்றனர். இப்படி இருக்க வர்க்க சக்திகள் அந்த மக்களின் நடைமுறை போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டு, ஈடுபட ஏன் முடியவில்லை என்பதை, குறைந்தபட்சம் அரசியல் விவாதமாக முன்னெடுக்காத வரை, எமது வர்க்க அரசியல் அர்த்தமற்றுப் போய் விடுகின்றது.

 

புலிகளை மட்டும் இராணுவம் ஊடுருவித் தாக்கவில்லை. இன்று மக்களையும் தான் ஊடுருவித் தாக்குகின்றது. அன்று தம்மை உருமறைப்பு செய்து புலிகள் பிரதேசத்தில் ஊடுருவிய படையணி தான், இன்று மக்களை ஊடுருவித் தாக்குகின்றது. குறிப்பாக தமிழர் அல்லாத மற்றைய சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பொதுவான அச்சமும் பீதியும். குறிப்பாக பெண்கள் கடுமையான உளவியல் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இந்த வகையில் மலையகம், முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசங்கள், தமிழரின் எல்லையோர கிராமங்கள் எங்கும் ஒரேவிதமான விடையங்கள், செய்திகளும் வெளியாகின்றது. அரசோ இதை வதந்தி என்கின்றது. போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் அரசு அல்லவா இது.

 

சமூகவெட்டுகள் மூலம் பிரிட்டிஸ் ஏழைகளிடம் பிடுங்கியதை, யாருக்கு கொடுக்கின்றது இந்தப் பிரிட்டிஸ் அரசு? பிரிட்டிஸ் சமூக அமைப்பில் செல்வம் யாரிடம் எப்படி எந்த வகையில் குவிக்கப்படுகின்றது? சமூகவெட்டு மூலம் நிதியை திரட்டும் அரசு, பணத்தை பல மடங்காக குவிப்பவனுக்கு வரி விலக்குகளையும் சலுகைகளையும் அழிப்பது ஏன்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான், இந்த வன்முறையைப் புரிந்து கொள்ளமுடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE