இன யுத்தத்தை நடத்திய அதே இராணுவக் கட்டமைப்பு மூலம், கொழும்பு வாழ் மக்களிடமிருந்து நிலத்தை அரசு அபகரிக்கும் திட்டம் தயாராகின்றது. இதை மகிந்தாவின் தம்பி கோத்தபாய முன்னின்று வழி நடத்துகின்றார். கொழும்பு வாழ் மக்களிடம் இருந்து நிலத்தை ஆக்கிரமிக்கும் இன்னுமொரு யுத்தம், மிகவிரைவில் இலங்கையில் தொடங்க இருக்கின்றது. இந்த நில ஆக்கிரமிப்பை மூடிமறைக்க, நவீன வீடுகள் மூலம் அந்த மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கோத்தபாயவின் அறிவிப்பு வேறு வெளிவந்திருக்கின்றது. இதன் பின்னணியைப் புரிந்துகொள்ள, இனவழிப்பு யுத்தத்தின் பின்னான சூழலை புரிந்து கொள்வது அவசியம்.