Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன யுத்தத்தை நடத்திய அதே இராணுவக் கட்டமைப்பு மூலம், கொழும்பு வாழ் மக்களிடமிருந்து நிலத்தை அரசு அபகரிக்கும் திட்டம் தயாராகின்றது. இதை மகிந்தாவின் தம்பி கோத்தபாய முன்னின்று வழி நடத்துகின்றார். கொழும்பு வாழ் மக்களிடம் இருந்து நிலத்தை ஆக்கிரமிக்கும் இன்னுமொரு யுத்தம், மிகவிரைவில் இலங்கையில் தொடங்க இருக்கின்றது. இந்த நில ஆக்கிரமிப்பை மூடிமறைக்க, நவீன வீடுகள் மூலம் அந்த மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கோத்தபாயவின் அறிவிப்பு வேறு வெளிவந்திருக்கின்றது. இதன் பின்னணியைப் புரிந்துகொள்ள, இனவழிப்பு யுத்தத்தின் பின்னான சூழலை புரிந்து கொள்வது அவசியம்.

 

ஏதோ இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து தான், தாங்கள் தங்கள் நிலையைத் தெரிவிப்பதாக கூறிக் கொண்டு தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றனர். பாவம் தமிழ்மக்கள். அன்று புலிகளின் அடாவடித்தனத்துக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி வாய் பொத்தி வாழ்ந்த மக்கள், இன்று ஈ.பி.டி.பி என்ற அரச எடுபிடி கும்பலின் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்றனர். கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானின் கண்காணிப்பின் கீழ் தான், மக்கள் வாழ்கின்றனர். அக்கம் பக்கம் பார்க்காமல், மக்கள் சுதந்திர மூச்சை விடுவது கிடையாது. புலிக்கு முன், புலிக்கு பின் என, இதுதான் மக்களின் வாழ்நிலை. இந்த நிலையில் ஈ.பி.டி.பி கூறுவது போல் அது ஒரு அரசியல் கட்சியல்ல. அரசுக்காக வாலாட்டி குலைக்கின்ற, கடிக்கின்ற எடுபிடி லும்பன்கள்.

 

ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க அரசியல் கடமையை மறுப்பதன் மூலம், பிரிவினைவாதமே தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் என்ற திரிக்கின்றது. இந்த நிலையில் லெனின் ஒடுக்கப்பபட்ட தேசிய இனப் பாட்டாளிவர்க்கம் தொடர்பாக என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். "ஒடுக்கும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சமூக-ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும் வெவ்வேறானவை என்று வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியத்தை" லெனின் இங்கு மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றார். ஆனால் இதை மறுத்தும், திரித்தும், "ஸ்தூலமான கடமைகளை" எதிர்நிலையில் முன்னிறுத்தியும் தான், மார்க்சியத்தின் பெயரில் பிரிவினைவாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தவகையில் தான் மார்க்சியத்தின் பெயரிலான பிரிவினைவாத மறுப்பும் கூட முன்வைக்கப்படுகின்றது. இங்கு மார்க்சியவாதிகளின் வேறுபட்ட ஸ்தூலமான கடமைகள் மிகத்தெளிவானது.

 

2001 இல் அமெரிக்கக் கோபுரங்கள் மேலான தாக்குதல் பயங்கரவாதம் என்றால், அதற்கு முன்பின் அமெரிக்கா உலகெங்கும் நடத்தியது எல்லாம் என்ன? செப் 11க்கு முன்பின் ஈராக்கில் 15 இலட்சம் பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. இது பயங்கரவாதமில்லையா!? இது போன்ற பயங்கரவாதத்தின் எதிர்வினைதான், அமெரிக்கக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதமாக மாறியது.

 

கொண்டாட்டங்கள் காட்சிக்காக கொண்டாடப்படுகின்றது. இந்தக் காட்சிக்காக நடிப்பதை மகிழ்ச்சி என்கின்றனர். தாம் நடித்ததை மீளப் பார்ப்பது தமக்கு மகிழ்ச்சி என்கின்றனர். ஆக போலியான ஒரு நாள் வாழ்க்கை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்கப்படுகின்றது. இப்படி தங்களை அறியாமல் மற்றைய நாட்கள், மகிழ்ச்சியற்ற நாட்களாக்கப்படுகின்றது. இப்படி இதற்கு வெளியில் மகிழ்ச்சியை காணமுடியாத பகட்டுத்தனத்தில் தான், சம்பிரதாயங்களும் சடங்குகளும் விபச்சாரம் செய்யப்படுகின்றது.

 

இலங்கை மார்க்சியவாதிகள் நீண்டகாலமாக, சுயநிர்ணயத்தை மறுத்ததும், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுத்ததும், தொடரும் இன அவலத்துக்கு அடிப்படைக் காரணமாகும். பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைரீதியான இந்த முடிவு, அரசியல் ரீதியாக இனமுரண்பாட்டில் இருந்தும் தன்னை ஓதுக்கிக் கொண்டது. இதனால் பிரிவினை வாதமும், பிரிவினை மறுப்புவாதமும் கொண்ட அரசியல், இனப்பிளவுகளையும், இன அவலங்களையும் உருவாக்கியது.

 

பிரிந்து செல்லும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயம், பிரிவினைக்கும், பிரிவினைவாத மறுப்புக்கும் எதிரானது. இங்கு பிரிந்து செல்லும் உரிமையில்லாத சுயநிர்ணயம் என்பது, சுயநிர்ணயமேயல்ல. இங்கு பூர்சுவா வர்க்கம் முன்வைக்கும் பிரிவினையை, பிரிந்து செல்லும் உரிமையாக சுயநிர்ணயம் விளக்கவில்லை. அதேபோல் பிரிவினையை மறுக்கும் பூர்சுவா வர்க்கத்திற்கு எதிராக, பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கின்றது. இதைத் தாண்டி சுயநிர்ணயத்துக்கு வேறு அரசியல் விளக்கம் கொடுக்க முடியாது. சுயநிர்ணயம் பிரிவினையுமல்ல, பிரிவினையை மறுக்கும் கோட்பாடுமல்ல. இலங்கைமார்க்சியவாதிகளோ இதைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்து தவறிழைத்து வருகின்றனர். இதுதான் எம்மைச் சுற்றிய அவலங்களுக்கு காரணம்.

 

"கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?" என்று கேட்டு, அதை மறுத்து இலக்கியா எழுதியுள்ளது, அரசியல்ரீதியான கல்வியின் அவசியத்தை பரந்தளவில் முன்னிறுத்தி இருக்கின்றது. வலதுசாரியமல்லாத பொது அரசியல் தளத்தில் இந்த அரசியலே உள்ளதும், கடாபியை தேசியவாதியாக, ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக, மக்கள் நலம் சார்ந்த ஏதோ ஒருவராக காட்டப்படும் விம்பங்கள் முதல் அதை ஒட்டிய அரசியல் கோட்பாடுகள் மீதான விவாதத்தை இது கோருகின்றது. நான் இதையொட்டி இரண்டு கட்டுரைகளை முன்பே எழுயிருந்தேன்.

 

1. லிபியா சர்வாதிகாரியும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களும்

2. கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.

 

இப்படி இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் சிலர் இன்று அரசியல் செய்கின்றனர். புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியவர்களின் ஓரு பகுதியினர், புலிக்கு எதிராக இருக்கும் அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் இயங்குகின்றனர். புலியை மக்களின் முதன்மை எதிரியாக காட்டிக் கொள்வதன் மூலம், அரசு தான் அந்த எதிரியை ஓழித்ததாக கூறிக்கொண்டு, அரசின் பின் நின்று கூச்சல் எழுப்புகின்றனர். புலியை அரசுக்கு வெளியில் வேறு எந்த வகையிலும் ஓழித்திருக்க முடியாது என்றும், இதை மறுப்பது எதார்த்தத்தைக் கடந்த ஓன்று என்றும் கூறுகின்ற தர்க்கத்தைக் கொண்டும், அழித்தொழிப்பு அரசியலை தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.

இன்று கடாபியைக் கொன்றவர்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான். கடாபி கொல்லப்பட்டது, லிபியா மக்களால் அல்ல. ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தம் மூலம் தான் கடாபி கொல்லப்பட்டான். கடாபிக்கு எதிரான லிபிய மக்களின் கோபங்களை, தங்கள் கைக்கூலிகள் தலைமையில் மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆயுதபாணியாக்கியது. இதை வான்வெளித் தாக்குதல் மூலம் ஒருங்கிணைத்து, தரைவழியாக தலைமை தாங்கியதன் மூலம் கடாபியின் கதையை முடித்தன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். இதற்காக ஐ.நா தீர்மானத்தை தனக்கு ஏற்ப திரித்தும், வளைத்துப் போட்டும், தனக்கு எதிரான முரண்பட்ட ஏகாதிபத்திய நாடுகளுடன் ஒரு ஏகாதிபத்திய யுத்தத்தை நடத்தி முடித்திருக்கின்றது.

புலியை தேசியத்தின் பேரில் ஆதரித்த "இடதுசாரியம்" போல் தான், புலிக்கு எதிராக தேசியத்தை எதிர்த்த "இடதுசாரிய" அரசியலும். இதன் அரசியல் சாரம் என்பது மக்களைச் சார்ந்ததல்ல. தனக்கென சொந்தமாக எந்த அரசியலுமற்றது. புலி எதிர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. புலிக்கு எதிரான அனைவரையும் சார்ந்து நின்று தன்னை வெளிப்படுத்துகின்றது. இது அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை சோரம் போனது. தன்னைத்தான் "மார்க்சியவாதியாகவும்", "ஜனநாயகவாதியாகவும்" கூறிக்கொள்ளும் இந்தப் பிரிவு, புலிக்கு எதிராக அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை இனம் காட்டுகின்றது. இதைத் தாண்டி அதனிடம் வேறு மக்கள் சார்ந்த கோட்பாடோ, நடைமுறையோ கிடையாது.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE