Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் உறுப்பினரான வருண ராஜபக்சவுடன், இனியொரு இணையத்தை நடத்தும் தமிழ் தேசியவாதிகள் நடத்திய தர்க்கத்தினை கேள்வி பதிலாக வெளியிட்டுள்ளனர். மார்க்சியத்தின் பெயரில் இந்த தேசியவாதிகள் லெனினியத்தை திரித்துப் புரட்டுகின்றனர்.

"சுவீடன் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது."

என்று லெனினின் பெயரில் கூறி, அதையே ஜேவிபி செய்யவேண்டும் என்ற கூறுகின்ற, இதையே மார்க்சியமாக ஜே.வி.பிக்கு விளக்குகின்ற தேசியவாதத்தின் நோக்கம் மிகத் தெளிவாக இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி உருவாகிவிடக் கூடாது என்ற அரசியலின் வெளிப்பாடாகும்.

 

தன்னாதிக்கம் என்பது, வர்க்க நலன் சார்ந்தது. சுரண்டும் வர்க்க நலன் சார்ந்து தன்னாதிக்கத்துடன் "பிரிந்து போவதும்" அதற்காக "போராடுதலும்" பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அல்ல. இப்படியிருக்க மார்க்சியத்தின் உள்ளார்ந்த அதன் அரசியல் விளக்கங்களை திரித்தலே, பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் இருப்புக்கான அரசியல் அத்திவாரமாகின்றது. ஒரு முரண்பாட்டின் பொதுத்தன்மையை மறுத்து, குறித்த தன்மையை முதன்மையாக்குகின்ற கூறு தான், பிரிந்து செல்லும் உரிமை சுயநிர்ணய கோசத்தின் மீதான அரசியல் திரிபாகும்.

 

அப்பழுக்கற்ற தியாகங்களை யாரும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதை வைத்து வியாபாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. இவைகள் மட்டும் தான் தியாகம், வீரம் என்ற கூறுகின்ற பாசிசப் புரட்டை முன்வைத்து பிழைப்பதை அனுமதிக்க முடியாது.

இலங்கையில் மக்கள் பாசிச இனவாத அரசின் கோரப்பிடியில் சிக்கி, மூச்சுக் கூட விடமுடியாதவர்களாக உள்ளனர். புலத்தில் புலியின் பாசிசப் பிடியில் சிக்கி, மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது வாழ்கின்றனர். இப்படி அரசு – புலி இரண்டும் மக்களின் உரிமைகளை ஒடுக்கி இதில் குளிர்காய்கின்றது.

 

ஏன் சுயநிர்ணயம் என்று மட்டும் முன்வைக்கக் கூடாது, என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. சுயநிர்ணயம் என்றால் பிரிந்து செல்வதைக் குறிக்கும் தானே, ஏன் அதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி பல கேள்விகள். இதுமட்டுமல்ல பல அரசியல் விலகல்கள். இதைச் சரியாக எடுத்துப் பேசாவிட்டால், பாட்டாளி வர்க்கம் ஒரு வர்க்கத்தின் கட்சியாக இருக்க முடியாது. இதுதான் எமது கடந்தகால வரலாறு.

 

மக்களைக் கொன்று குவித்த, குவிக்க உதவிய உருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்? ஆம் அரசும் – புலியும் வழக்காடுகின்றனர். தாங்கள் கொன்று குவித்த மக்களுக்கு, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியப் போகின்றனராம்! பலி கொடுத்து பலி எடுக்க அரசியல் நடத்தியவர்கள், அதற்கு முன்பாக ஆயிரம் ஆயிரம் மனித உயிர்களை காவு கொண்டவர்கள். இப்படி மக்கள்விரோத அரசியல் மூலம் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் இராணுவ - அரசியல் மூலம் மக்களைக் கொன்று குவித்தவர்கள் இவர்கள். இன்று அதே வழிமுறையில் அதன் எல்லைக்குள் கால்கடுக்க நின்றபடி, உண்மையை அறியவும் நீதியை வேண்டியும் ஓருவருக்கு எதிராக மற்றவர் மல்லுக் கட்டுகின்றனர். அரசியல் கோமாளிகள் தம்மின மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.

 

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிக்காகவே இராணுவத்தை நிறுத்தி இருப்பதாக, மகிந்த அமெரிக்காவில் வைத்து கூறுகின்றார். மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி, மக்களை ஆளும் ஜனாதிபதிக்கு அக்கறை கிடையாது. தமிழ் மக்களின் கோரிக்கை என்ன? இராணுவத்தை அங்கிருந்து அகற்றும்படி மக்கள் கோருகின்றனர். இப்படியிருக்க தமிழ் மக்களை வகைதொகையின்றி ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த இராணுவம், தொடர்ந்து அந்த மக்களின் இயல்பான சிவில் நடத்தைகளை இல்லாதாக்குகின்றது. இதன் மூலம் இராணுவ ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றது. இது தமிழர் பகுதியில் சட்டபூர்வமான சிவில் சமூக நடத்தைகளை இல்லாதாக்குகின்றது. ஆக சட்டவிரோதமாகவே செயல்படக் கோருகின்றது. இதுதான் மகிந்தா வழங்கும் ஜனநாயகம். இதற்கு தலைமை தாங்கும் டக்ளஸ் முதல் கருணா வரையான கைக்கூலிகள்.

 

இலங்கையில் நடக்கும் ஓவ்வொரு நிகழ்வையும் தங்கள் சொந்த இனவாதம் ஊடாக அணுகுவது தான் அறிவாகி, அது பரப்புரையாகின்றது. இப்படி கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றவர்களின் அறியாமையும், மடமையும், எம் இனத்தையே குட்டிச் சுவராக்குகின்றது. அண்மையில் அமைச்சரின் காலில் விழ மறுத்த சிறுவனின் செயலை தமிழன் வீரச் செயலாகவும், ஜே.வி.பி இற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு தமிழனின் தலைமையில் என்று கூறின தமிழினவாத ஊடகங்கள். இப்படி தமிழ் மக்களுக்கு பட்டை நாமம் போட்டபடி, அவர்களை மொட்டை அடித்தனர். குறுகிய குருட்டுப் பார்வை கொண்ட தங்கள் ஊடகவியல் வக்கிரங்களை, தமிழ் என்ற அடையாளத்தை முன்னிறுத்திய இனவாதம் ஊடாகவே உலகை காட்டி நஞ்சை ஊட்டுகின்றன.

 

பிரிந்து போவதற்காக போராடுவது பிற்போக்கானதல்ல என்ற பூர்சுவா வர்க்கத்தின் கோசத்தை, மார்க்சியத்தின் பெயரில் முற்போக்குக் கோசமாக காட்டி முன்வைக்கின்றனர். இங்கு "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது தான் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை என்று கூறுகின்ற மிக நுட்பமான அரசியல் புரட்டு முன்வைக்கப்படுகின்றது. அதாவது "ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வெவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குரலாகவும் புனையப்படுகின்றது" என்று கூறி, "ஒரு தேசியம் பிரிந்து போவ"வதற்காக "போராடு"வது முற்போக்கானது, அது உழைக்கும் மக்களை கூறு போடாது என்று மார்க்சியத்தின் பெயரில் கூற முற்படுகின்றனர்.

 

சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் மூலம் தனிமைப்பட்டு வரும் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதத்துடன் கூட்டுச்சேர்ந்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை மதம், இனம் சார்ந்து தன்னை தக்கவைக்க முனைகின்றது. இலங்கை அரசு வேகமாகவே சர்வதேச அளவில் தனிமைப்பட்டு வரும் இன்றைய நிலையில், இதை எதிர்கொள்ள மத இன அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி சிறுபான்மையினரை மேலும் கூர்மையாக ஒடுக்கத் தொடங்கியுள்ளது. எல்லா மக்கள்விரோத சர்வாதிகார அரசுகள் போல் தான், இன்று மகிந்த குடும்ப சர்வாதிகாரமும் இதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இனம் சார்ந்த பிளவுகளும் மோதல்களும் நாட்டின் பிரதான முரண்பாடாக இருக்கின்ற நிலையில், மேலதிகமாக மதம் சார்ந்த மோதல்களையும் பிளவுகளையும் திட்டமிட்டு விதைத்து வருகின்றது.

இந்த வகையில் இலங்கை அரச இனரீதியாக மட்டுமல்ல, மதரீதியாகவும் தன்னை குறுக்கிச் செல்லுகின்றது. இந்த வகையில் அண்மையில் பேரினவாத அரசின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க இரு சம்பவங்கள் அரங்கேறியது.

1.முனீஸ்வரம் கோயிலில் மிருகபலி சடங்கு நடைபெற்ற நாள், அமைச்சர் ஒருவர் பௌத்தத்தை முன்னிறுத்தியபடி, மற்றயை மதங்களை நிந்தனை செய்தபடி காடைத்தனத்தைப் புரிந்துள்ளார்.

2. அனுராதபுரத்தில் மிகப் பழைமை வாய்ந்த தர்கா ஒன்றை, அரசின் துணையுடன் பௌத்த அடிப்படைவாதிகள் தகர்த்துள்ளனர்.

மார்க்சியத்தின் பெயரில் முன்வைக்கப்படும் பிரிவினை, பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை செயல்பூர்வமற்ற ஒன்றாகக் காட்டுவதன் மூலம், பிரிவினையை செயல்பூர்வமான ஒன்றாகக் காட்ட முனைகின்றது. சாராம்சத்தில் சுயநிர்ணயத்திற்கு பதில் பிரிவினையை இது முன்வைக்கின்றது. இரண்டும் ஒன்றுதான் என்கின்றது. மறுதளத்தில் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் தர்க்கம், இதை செயல்பூர்வமற்றதாகக் காட்டி, பாட்டாளிவர்க்க ஆட்சி அதிகாரத்தின் கீழ் தான் இது தீர்க்கப்படும் என்கின்றது. இப்படி பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை "செயல்பூர்வமற்ற" ஒன்றாக காட்டி அதை மறுக்கின்ற பிரிவினைவாதமும், பிரிவினை மறுப்புவாதமும் மார்க்சியத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

 

ஆக இது தமிழ் மக்களுக்கானதல்ல. ஆனால் தமிழ் மக்களின் பெயரில் நடக்கின்றது. தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுகின்ற அரசியல். இதை பேரினவாதம் மட்டும் செய்யவில்லை, தமிழ் குறுந்தேசிய அரசியலும் கூட இதைத்தான் செய்கின்றது. இதை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அரசியல் சூழலை உருவாக்கி வைத்துக்கொண்டு தான், தமிழ்மக்களை மேய்கின்றனர். இந்த பின்னணியில் இதைவிட்டால் வேறு தீர்வை தமிழ்மக்கள் பெற முடியாது என்று கூறி, தமிழ்மக்களை மொட்டை அடிக்கும் அரசியல் தீர்வையும் நாளை திணிப்பார்கள். தமிழ் - சிங்கள மக்கள் தாம் விரும்பிய ஒரு தீர்வைக் காணப்போவது கிடையாது. இதற்குரிய அரசியல் சூழலை உருவாக்காமல் வைத்திருப்பதுதான், தமிழ் - சிங்கள் அரசியல்வாதிகளின் தொடர் அரசியலாகும்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE