புலிக் குழுக்களுக்கான உள்ளார்ந்த அடிப்படை என்ன? ஏன் தமக்குள் மோதுகின்றன? இதற்கான பின்னணி என்ன? இவை எதில் இருந்து தோன்றுகின்றது? பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் கேட்ட வேண்டிய கேள்வி. இதைக் கேட்காதவன், விடை காணமுடியாதவன் பகுத்தறிவு அற்றவன். மந்தைத்தனத்தை, எடுபிடித்தனத்தையும் தாண்டிய சுயஅறிவுள்ள மனிதர்கள் அல்ல.
இந்த குழுக்களின் பின்னணி என்ன என்று பார்ப்போம். மக்களைச் சார்ந்து அரசியல் செல்வாக்கு பெற்ற தலைவர்களின் பின்னணியில், இந்தக் குழுக்கள் தோன்றவில்லை, அதைச் சார்ந்து அவர்கள் மோதவில்லை. இந்தக் குழுக்கள் முன்வைக்கும் அரசியல் செல்வாக்கு சார்ந்த மக்கள் பலத்துடன், இந்த குழுக்கள் தோன்றவில்லை, மோதலும் நடக்கவில்லை. ஆக இங்கு மக்கள் மந்தைகள். ஆக மோதலின் பின்புலம் என்ன? சட்டப்படியான புலிப் பினாமிச் சொத்துடமைகள் அங்குமிங்குமாக பிரிந்து கிடப்பதால், அதை கைப்பற்றவும் தற்காக்கவும் நடக்கும் தனிநபர்களுக்கு இடையேயான மோதல் தான், இன்று குழு வடிவம் பெற்று நிற்கின்றது. இதை மூடிமறைக்க, மக்களை ஏய்க்க அரசியல் வேஷம்.