Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலிக் குழுக்களுக்கான உள்ளார்ந்த அடிப்படை என்ன? ஏன் தமக்குள் மோதுகின்றன? இதற்கான பின்னணி என்ன? இவை எதில் இருந்து தோன்றுகின்றது? பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் கேட்ட வேண்டிய கேள்வி. இதைக் கேட்காதவன், விடை காணமுடியாதவன் பகுத்தறிவு அற்றவன். மந்தைத்தனத்தை, எடுபிடித்தனத்தையும் தாண்டிய சுயஅறிவுள்ள மனிதர்கள் அல்ல.

இந்த குழுக்களின் பின்னணி என்ன என்று பார்ப்போம். மக்களைச் சார்ந்து அரசியல் செல்வாக்கு பெற்ற தலைவர்களின் பின்னணியில், இந்தக் குழுக்கள் தோன்றவில்லை, அதைச் சார்ந்து அவர்கள் மோதவில்லை. இந்தக் குழுக்கள் முன்வைக்கும் அரசியல் செல்வாக்கு சார்ந்த மக்கள் பலத்துடன், இந்த குழுக்கள் தோன்றவில்லை, மோதலும் நடக்கவில்லை. ஆக இங்கு மக்கள் மந்தைகள். ஆக மோதலின் பின்புலம் என்ன? சட்டப்படியான புலிப் பினாமிச் சொத்துடமைகள் அங்குமிங்குமாக பிரிந்து கிடப்பதால், அதை கைப்பற்றவும் தற்காக்கவும் நடக்கும் தனிநபர்களுக்கு இடையேயான மோதல் தான், இன்று குழு வடிவம் பெற்று நிற்கின்றது. இதை மூடிமறைக்க, மக்களை ஏய்க்க அரசியல் வேஷம்.

வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்தில் தான், வர்க்க ரீதியான சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படும். இந்த உண்மை என்பது ஒருபுறம் இருக்க, முரண்பாடுகள் அதுவரை தீர்க்கப்படாமல் இறுகிய நிலையில் இருப்பதில்லை. அதாவது முரண்பட்ட வர்க்கங்கள், முரண்பட்ட சமூகங்கள் தமக்குள் தீர்வுகளை காண்பதை மார்க்சியம் மறுப்பதில்லை. இந்த வர்க்க அமைப்பினுள், அவை தீர்வு காண முற்படுபடுகின்றது. கம்யூனிச சமூகத்தில் தான் முரண்பாடுகள் தீர்க்கப்படும், அதுவரை முரண்பாடுகள் நீடிக்கும் என்பது இயங்கியல் அல்ல. உதாரணமாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கேயுரிய முரண்பாடுகள் முதலாளித்துவ சமூக அமைப்பில் தீர்வு காணப்படுகின்றது. சமூகப் பொருளாதார மாற்றங்கள் முதல் போராட்டங்கள் வரை, முரண்பாடுகளை இந்த வர்க்க அமைப்பிற்குள்ளாக களைய முனைகின்றது அல்லது மற்றொன்றாக மாற்றுகின்றது. உதாரணமாக இந்திய சாதிய அமைப்பு சார்ந்த சாதியத்திற்கு, முரணற்ற முதலாளித்துவ சமூக அமைப்பில் தீர்வு காணமுடியும். அதாவது மதம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான, அதேநேரம் தேசிய முதலாளித்துவத்தை உயர்த்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி மூலம் இதை முடிவுகட்ட முடியும்.

ஊடகங்கள் மேலான வன்முறைகளைத் தொடர்ந்து, அதன் தடைக்குரிய அரசியல் பின்னணி என்ன? இது எப்படி சாத்தியமாகின்றது? இந்த நிலைமை இன்று தமக்கு உருவாக, அவர்களே காரணமாக இருந்தனர். ஆம், சிங்கள "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகளே" காரணமாக இருந்திருக்கின்றனர். புலி அழிப்பின் பெயரில் இனவழிப்பு யுத்தத்தை நடத்தியவர்கள் ஆளும் வர்க்கம் என்பதை இவர்கள் மறந்தார்கள். இதுவொரு அடக்குமுறை இயந்திரம் என்பதைக் காணத் தவறினார்கள். யுத்தத்தின் போக்கில் தங்கள் உரிமைகளையும் அது காவுகொள்ளும் என்ற உண்மையை உணரத்தவறினார்கள். இப்படிப்பட்ட இவர்கள் தான், "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகள்" என்று தம்மை அடையாளப்படுத்தினர். இந்தப் போக்கு அரசு – புலி என்று இருதரப்பும் சார்ந்து, மக்கள்விரோத யுத்தத்தை ஆதரித்து நின்ற "அறிவுத்துறையினர்", "புத்திஜீவிகளால்" தான், மக்கள் தங்கள் உரிமைகளை இழந்தனர். இவர்கள் யாரும் மக்களுடன் நிற்கவில்லை. இனம் கடந்து நேர்மையாக உண்மையாக நிற்கவில்லை.

மணியம் போல் நானும் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவன் தான். அதனால் என்னைவிட மற்றவனுக்கு நடந்த சித்திரவதைகள் குறைவானது என்று கூற முடியுமா!? அரசு புலிகள் போல் செய்யவில்லை என்று, நான் கூற முடியுமா!? இப்படிக் கூறுவது உள்நோக்கம் கொண்ட, உண்மைக்கு புறம்பானதுமான மக்கள்விரோத அரசியலாகும். அதுவும் மார்க்சியவாதியாக கூறிக்கொண்டு சொல்வது பொறுக்கித்தனமாகும்.

 

.

சில நிறுவனங்களை தேசிய மயமாக்கும் மகிந்த அரசின் அறிவித்தல், தேசிய நலன் சார்ந்ததல்ல. தேசிய நலன் சார்ந்த எந்தத் திட்டமும், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது தேசிய வர்க்கங்களின் நலன்களை முன்னிறுத்திய தேசிய கொள்கைகளை கொண்டிராத எவையும், தேசிய நலன் சார்ந்ததல்ல. இவை தேசத்துக்கும், மக்களுக்கும் எதிரான, ஆளும் போர்க்குற்ற கும்பலின் சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில் தான் மேற்கு எதிர்ப்பும், தேசிய மயமயமாக்கலும் இன்று அரங்கேறுகின்றது. அரசைச் சார்ந்து திடீர் பணக்காரராகிவிட்ட போர்க்குற்றக் கும்பல் தான், இதன் பின்னணியில் திட்டமிட்டு இயங்குகின்றது. நாட்டை எப்படி எந்த வழியில் சூறையாடுவது என்பதை, திட்டம் போட்டே செய்கின்றது. இதற்காகப் புதிய சட்டத்தைப் போடுகின்றது, அதைத் திருத்துகின்றது.

 

புரட்சிகர நெருக்கடி தோன்றும் போது "ஒவ்வொரு அயோக்கியனும் கூட … புரட்சிவாதியாகத்தான் தன்னை அறிவித்துக்கொள்வான் என்பதை நாம் காண்போம்." என்ற லெனின் கூற்றுதான், இங்கு மிகச் சரியாக பொருந்துகின்றது. முள்ளிவாய்க்காலின் பின் தம்மை மார்க்சியவாதிகளாக கூறிக்கொண்டும், காட்டிக்கொண்டும் திடீர் "இடதுசாரிகளாக" சிலர் வெளிவருகின்றனர். வர்க்கப் போராட்ட அரசியல் இந்தச் சமூகத்தில் தோன்றுவதை தடுக்க, அற்பவாதிகள் எல்லாம் வானத்தில் இருந்து திடீர் திடீரெனக் குதிக்;கின்றனர். இந்த அற்பவாதிகளுக்கு மாறானது மார்க்சியவாதிகளின் அணுகுமுறை. நெருக்கடிகளின் போது ஒரு மாhக்சியவாதி என்ன செய்வான் என்பதை லெனின் மிகத்தெளிவாக "பாட்டாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களையும் அதற்கு (புரட்சிக்கு) தயார்செய்யக் கூடிய தைரியத்தைப் பெற்றிருப்பார்" என்றார். இப்படி அரசியல் உண்மை இருக்க, இன்றைய திடீர் "மார்க்சிய" அயோக்கியர்கள், "இடதுசாரிய" அற்பவாதிகள் எல்லாம் எதிர்ப்புரட்சி நிலவிய காலத்தில், செய்யவேண்டிய புரட்சிகர கடமையைச் செய்யாது அதற்கு எதிரான அற்பத்தனத்தையே தங்கள் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்தவர்கள்தான்;. இன்று வேஷம் போடுகின்றனர்.

முதலில் நாம் கிறீஸ் நெருக்கடி என்ன என்பதைப் பார்ப்போம். வாங்கிய கடனை மீள திருப்பிக் கொடுக்கும் தவணைகளையும், கடனுக்கான வட்டித் தவணைகளையும், கிறீஸ் கொடுக்க முடியாது போயுள்ளது. இதைக் கொடுப்பதற்காக தொடர்ந்து புதிய கடனை வாங்க முடியாது போய் இருக்கின்றது. ஆக இது நெருக்கடி. யாருக்கு நெருக்கடி? வட்டிக்குப் பணம் கொடுத்து, இந்த நெருக்கடியை உருவாக்கிய நிதிமூலதனத்துக்கு தான். அதாவது கிறீசை சூறையாடி இந்த நிலைக்குக் கொண்டுவந்த மூலதனத்துக்குத்தான். அதை தலைமை தாங்கும் தலைவர்களுக்குத்தான். ஆக இந்த கொடுப்பனவை செய்ய வைப்பதன் மூலம் தான் ஏகாதிபத்திய உலகமயமாதலை காப்பாற்றமுடியும்; என்ற நிலையும், கவலைகளும். பிரான்ஸ் உள்ளிட்ட ஜெர்மனிய வங்கிகள் இந்தக் கொடுப்பனவை செய்ய முன்வைக்கும் தீர்வு தான் என்ன? அரசுதுறைகளை தனியார் மயமாக்கல், அரசுதுறைகளில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டுகள், ஓய்வூதிய குறைப்புகள், சமூக வெட்டுகள், சமூக கட்டமைப்புக்கான நிதிகளை (மருத்துவம், கல்வி) வெட்டுதல் … மூலம், அந்தப் பணத்தை நிதிமூலதன தவணைக்கு கொடுக்கக் கோருகின்றனர். மூலதனத்தின் அறாவட்டிக்காரனின் கொள்ளையைக் காப்பாற்ற, மக்களை தியாகம் செய்யக் கோருகின்றனர். இதை மீறி மக்கள் போராடினால் அதை ஒடுக்கக் கோருகின்றனர். இது தான் ஐரோப்பிய ஜனநாயகத் தலைவர்கள் கூறுகின்ற தீர்வு. மூலதனம் எல்லா பாசாங்குத்தனத்தையும் கடந்து, கோர முகத்தோடு தாண்டவமாடுகின்றது.

 

மக்களின் நிமித்தம் நாம் அன்று கூறியது போல் புலி பினாமிச் சொத்தை தமிழ்மக்களின் பொது நிதியமாக்கி இருந்தால், புலிக்குள்ளான இந்த வெட்டுக்குத்துக்கு இடமிருந்திருக்காது. பல புலிக் குழுக்கள் தோன்றி இருக்காது. புலியைச் சொல்லி தமிழ்மக்களை தின்ற பிழைப்புவாதக் கூட்டம் தானாக கழன்று ஓடியிருக்கும். புலியின் பெயரில் புலியை பப்பா மரத்தில் ஏற்றி வயிறுபுடைக்கத் தின்ற கூட்டம், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும். பினாமிச் சொத்து தான் புலியாக, புலிப் பிரச்சனையாக மாறியுள்ளது. புலிப் பினாமிச் சொத்துகளை அபகரிக்கும் போராட்டம் தான், அரசியல் வேஷம் போட்டுக்கொண்டு வெட்டுக்குத்தை நடத்துகின்றது. இன்று கூட புலிப் பினாமிச் சொத்தை தமிழர் பொதுநிதியமாக மாற்றினால், இந்தக் குழுக்கள் எல்லாம் தானாக மறைந்துவிடும். இந்த வெட்டுக் கொத்துகள் நின்றுவிடும். "புலித்தேசிய"த்தின் பின்னான புரட்டுப் பேர்வழிகளும், போலிகளும் காணாமல் போய்விடுவார்கள். இப்படி புலி பினாமிச் சொத்தை அபகரிக்கும் போட்டி, குழுப்போட்டியாக, அதுவே முரண்பட்ட புலி அரசியலாக மாறிவிட்டது. அது தன்னைதான் வெட்டிக் கொள்கின்றது.

புலிகள் மட்டும் மக்களின் எதிரியல்ல. அரசும் மக்களின் எதிரி. அரசுடன் சேர்ந்து இயங்கிய முன்னாள் இன்னாள் குழுக்களும் கூட மக்களின் எதிரி. இடதுசாரிய வர்க்க அரசியலை மறுக்கும் வலதுசாரிகள் கூட மக்களின் எதிரி. இந்த உண்மையைக் கடந்து, ஒரு எதிரிக்கு எதிராக மற்றைய எதிரியுடன் கூட்டுச்சேர முடியாது. மக்களின் எதிரிகளின் பின் இருப்பதோ மக்கள் விரோத அரசியல்.

இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும், இடதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும், வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி அரசியலும்;, வலதுசாரியத்தின் பெயரில் அரசு அல்லது புலி எதிர்ப்பு அரசியலும் பொதுவில் காணப்படுகின்றது. இந்தத் தரப்புடன் அங்குமிங்குமான கூட்டு அரசியலும், கூட்டுச்செயல்பாடுகள், சுய தணிக்கையுடன் கூடிய அரசியல் முன்னெடுப்புகளும், ஒன்றை மட்டும் குறிப்பாக முன்னிறுத்திய செயல்பாடுகளும், மக்களுக்கு எதிராக வர்க்க அரசியலுக்கு முழுக்கு போடுவதுதான்.

 

 

எது தவறானதோ அதை மாற்றியமைக்க போராடாதவர்களும் அதற்கு உதவுகின்றனர். இது மறுக்க முடியாதவொரு உண்மை. ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து, மாற்றத்தை முன்வைத்து செயல்பூர்வமாக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, வெறும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் எதையும் மாற்றிவிடாது. விமர்சனங்கள் அபிப்பிராயங்கள் என அனைத்தும், மக்களை அணிதிரட்டிப் போராடும் அரசியலாக மாற வேண்டும். வர்க்கப் போராட்டம் என்பது இதற்கு அப்பால் கிடையாது.

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் ராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்த பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுகசிறுகச் சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE