Language Selection

பி.இரயாகரன் - சமர்

செப்டம்பர் 11ம் திகதி மனித இனத்தின் வரலாற்றில்  ஒரு காலக்கோட்டை கிழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் இருந்த உலகம் அதற்குப் பின்னர் சடுதியில் மாற்றமடைந்து தனது இயல்பிலிருந்து முற்றிலும் மாறிப்போய் விட்டது என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்கா 3000 பேர்களையும் தனது சுரண்டல் பொருளாதாரத்தின் சின்னமாக உயர்ந்தெழுந்து நின்ற இரட்டைக் கோபுரத்தையும், உலக ஆதிக்க ஆக்கிரப்பு இராணுவத்தின் கட்டளை மையமாக அச்சுறுத்தி நின்ற பென்டகனையும் அழிவுக்குள்ளாக்கிய போது மட்டும் தான் உலகம் மாறிப் போய்விட முடியுமா ?

வழமை போல் இம்முறையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எமது தேசியத்தை உயர்த்திப் போராடவும், செய்ய வேண்டிய வரலாற்று பணிகளை இந்தச் செய்தி அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. குறிப்பாக புலிகளின் விடுதலைப் போராட்டம் செய்த தவறுகள் மீதான சுயவிமர்சனம் மற்றும் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டும் வகையில், ஒரு போராட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று தார்மீகப் பணியைப் பற்றி வழக்கம் போல் எதுவுமில்லை. புலிகள் தம்மையும் தமது தவறான அரசியல் வழியில் இருந்து மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதை, மீண்டும் நெருக்கடியான இன்றைய தருணத்திலும் செய்தியாக தாங்கி வெளிவந்துள்ளது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வால் பிடித்து செல்வதும், கருத்துக் கூறுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இம்முறை வழமையான வலது கண்ணோட்டத்துக்கு பதில், இடது தன்மை கொண்ட வலது கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் புலிகளின் தலைவரின் செய்தி, புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே ஒரு அதிர்ப்தியை வலது கண்ணோட்டம் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. மறு தளத்தில் சொல்லத் தவறியது, செய்யத் தவறியது என்ற விடயத்தை விட்டு, சொன்னதுக்குள்ளான சிலவற்றின் மீதான விமர்சனத்தைப் பார்ப்போம்.

பராளுமன்ற சாக்கடையில் புளுத்தெழுந்த பன்றிகள் அனைவரும், உலகமயமாதலை ஆதரித்து அதை நிறைவு செய்வதில் தம்மை ஒத்த கருத்துடையவர்களாக, முரண்பாடு இன்றி திகழ்கின்றனர். ஜனநாயகம், சுதந்திரம், வாக்குரிமை என அனைத்தும், மக்களின் தன்னிறைவான சுயபொருளாதாரம் என்ற தேசியத்தை அழித்து, உலகமயமாதலை நிறுவி பாதுகாப்பதை குறிக்கோளாக கொள்கின்றது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்றோர் வாழ்வு, பல சோகங்களைக் கொண்டவை. உள்ளுர் அதிகார வர்க்கமும் பொலிஸ்சும், துரோகக் குழுக்களின் முன்னாள் உறுபினர்களும் இனைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் வக்கிரம், பல வகையானது. தமது ரவுத்தனத்துக்கு எதிரானவர்களை தாக்குவது முதல் படுகொலை செய்வது வரை, இவர்களின் கைவந்த கலையாகும்.

திருச்சி கொட்டப்பட்டு அகதி முகமைச் சோந்த கோகுலதாஸ், 13.1.2002 அன்று 15 ரவடிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, அகதி முகாங்களின் நிர்கதியைக் காட்டுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் முன்னாள் உறுப்பினர்கள் பொலிஸ் துணையுடனேயே, இந்த கொலை வெறியாட்டத்தை நடத்தினர். சாதாரண பிரச்சனையில் பழிக்குபழி வாங்கும் படுகொலை வக்கிரங்கள் மூலம், மக்களை மிரட்டுகின்றது இந்த ரவுடிக் கும்பல்.

படுகொலை செய்ய முன்பு முகத்தைச் சிதைத்ததுடன், படுகொலை செய்து திருச்சி தென்னூர் உய்யகொண்டான் ஆற்றில் எறிந்துவிட்டே சென்றனர். இந்த கொலைகார கும்பல் கியு பிரிவு, உளவுத்துறை, பொலிஸ் ஆகியோருடன் இனைந்து, நக்கி பிழைத்த படி,  முகாமில் உள்ள 350 குடும்பங்களையும் மிரட்டி வருகின்றனர். பல்வேறு கொலை, மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதுடன், பொறுக்கி வாழும் ரவுடிக் கும்பலாகவே செயற்படுகின்றனர்.

இந்த கொலைக்கு எதிராக மக்கள் திரண்டு போராடியதுடன், இந்த கொலைகார ரவடிக் கும்பலை தமது பிரதேசத்தில் இருந்து அகற்றக் கோரியும் போராடி வருகின்றனர்.

உலகமெங்கணும் அமைதியும் சமாதானமும் வேண்டி தரப்புக்களுக்கிடையில் தரகராக பணிபுரியும் நோர்வேயின் சமாதான வெண்புறா அதன் இறக்கைகளுக்குள் ஒளித்து வைத்திருப்பது என்ன ?

பாரிஸ்சில் தனிப்பட்ட இருநபருக்கு இடையில் நடந்த வன்முறையையும், அதை வைத்து நடத்திய பிழைப்பையும் அம்பலம் செய்த அறிக்கை (இது மேலே உள்ளது) ஒன்றை அனுப்பிய போது, வந்த இரண்டு ஈ மெயில்கள் கீழ் உள்ளது. ஒரு கடிதம் அனுகுமுறை ரீதியாக வக்கிரமானதும் வன்முறை ரீதியானவை. இரண்டாவது சமுதாய விடையங்களில் இருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் இந்த சமுதாய பிரியரிடம் இருந்து வந்தவை.

தமிழ் மக்களின் பிரச்சனை என்ன? அவர்களின் அடிப்படை சமூக பொருளாதார பண்பாட்டுத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது? தமிழ் மக்களின் தேசிய போராட்டம் யாருக்கு எதிரானது? இவற்றை தெளிவாக விளக்கும் வகையில் "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாதலின் பரிணாமமும்" என்ற எனது 112 பக்க சிறு நூல் ஒன்று விரிவாக ஆராய்கின்றது. பார்க்கவும். இதற்கு வெளியில் புரிந்துணர்வு உடன்பாட்டின் இன்றைய நிலைமையை இக் கட்டுரை குறிப்பாக ஆராய்கின்றது.

பரிசில் வன்முறை என்பது ஒரு மொழியாக, அதுவே கோஸ்டி கானமாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. இம்முறை இந்த கோஸ்டி வாதம் வெகுஜன அமைப்பு ஒன்றை வலிய வன்முறையுடன் சம்பந்தப்படுத்தியுள்ளது. இந்த வெகுஜன அமைப்பின் கருத்தை கேட்பதற்கு பதில் அதற்கு ஒரு முத்திரையை வழங்கிய குறுங்குழுவாதம், கோஸ்டிவாதத்தை ஆழமாக்கியுள்ளது. இந்த முத்திரையை வன்முறையால் பாதிகப்பட்டவாகளின் கோஸ்டி வழங்கிய போது, ஜெர்மனியில் சிலரும் பரிசில் சிலரும் முந்தியடித்துக் கொண்டு, ஒருதலைப் படசமாக கருத்தை தெரிவித்தன் மூலம், இந்த கோஸ்டி கான இராகத்தில் பங்காளியாகியுள்ளனர்.

பொருளாதாரம் சாராத ஒடுக்குமுறைகள் சமுகத்தில் உள்ளதாக  காட்டும் அசை, திரிபுவாதத்தை மாhக்சின் பெயரில் கொடியாக்குகின்றது

அண்மையில் பிரான்சில் நடந்த ஐனாதிபதிக்கான தேர்தலில், நாசிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். அதை அடுத்து பிரான்ஸ் மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்வைத் தொடர்ந்து இதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், ஆளும் வர்க்கங்களையே கிலியூட்டின. பிரான்சின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தடுமாறின. உள் சிதைவுகள் முதல் கட்சிகளின் தலைவிதிகளே கேள்விக்குள்ளாகியது. லட்சக்கணக்கான மக்கள் புதிதாக அரசியல் உணர்வு பெற்றனர், அரசியல் ரீதியான புதிய தேடுதல் தீவிரமாகியுள்ளது. எப்படி நாசிகள் ஆட்சிக்கு வரமுடிகின்றது என்பது தீவிர தேடுதலுக்குள்ளாகியுள்ளது. ஏகாதிபத்திய அதிகாரவர்க்கங்கள் நாசிசம் பற்றி மூடிமறைத்து வெளியிடும் திரிபுகளுக்கு வெளியில், வரலாற்றின் உண்மைத் தன்மை தேடுவது அதிகரித்துள்ளது.

இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருடமாக வாழ்ந்து வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. பல இடைக்கட்டங்களின்றி, இன்றைய பார்ப்பனர்கள் உருவாகவில்லை. ஏன் பார்ப்பனியம் கூடத்தான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE