Language Selection

பி.இரயாகரன் - சமர்

குறிப்பு : விஜிதரனை யார் கடத்தியது என்றான். நான் நீங்கள் தான் என்று சொல்ல ஏன் என்றார். விஜிக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை. அமைப்புக் குழுவின் தோற்றமும் அது புலிக்கு எதிராக போராடியதும், அதில் விஜி முன்நின்றதும் விஜிதரன் கடத்தப்பட்டதற்கான காரணம் என்றேன்.

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை பலிகொடுத்தும், இறுதியில் சரணடைந்த பின்னணியில்  படுகொலைக்குள்ளாகி அழிந்தனர். இந்த வகையில் இலங்கை அரசும், தன்னைத் தானே சர்வதேச முரண்பாட்டுகளுக்குள் புதைத்து வருகின்றது.

அரசியல் சதியுடன் கூடிய ஊடக விபச்சாரமே, புலித் தேசியத்தின் பின் பரவலாக திட்டமிட்டு அரங்கேறியது. இதன் பின்னணியில் இவற்றைப் புனைந்தவர்களுக்கு, முன்கூட்டியே சனல் 4 வெளியிட இருக்கும் காட்சிகள் என்ன என்பதும் தெரிந்திருக்கின்றது. சனல் 4 காட்சிகள் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்ட பின்னணியில், சிலரின் தேவைகளுக்காக முடக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டு வெளிவருகின்றது. இதை நாம் தனியாக வேறு ஒரு இடத்தில் ஆராய்வோம். இங்கு பிரபாகரனை கேட்டு மகனை கொன்றதான புனைவை ஆராய்வோம்.

சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுப்புலமை சார்ந்த பிழைப்புவாத பிரமுகர் லும்பன் அரசியலா அல்லது சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியாளர்களின் நடைமுறை அரசியலா என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் - இலக்கிய சமூகக் கூறுகளை குறிப்பாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து தெளிவுபெற்று நாம் அணி திரள வேண்டும். எது போலி எது உண்மை என்பது, மக்களுடன் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அதன்பாலான அவர்களின் நடைமுறையும்தான் தீர்மானிக்கின்றது. நடைமுறையைக் கோராத, நடைமுறையில் பங்குகொள்ளாத வெளியில், தனிப்பட்ட கருத்துகள் வியாக்கியானங்கள் தனிநபர் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தான் அரசியல் விளைவாக தருகின்றது.

நெடுந்தீவைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகின்றாள். இப்படி நடந்த இந்த அவலத்துக்கு யார் எல்லாம் பொறுப்பாளிகள்? குற்றத்தை இழைத்த குற்றவாளி மீது மட்டும் குற்றம் சாட்டுவதன் மூலம், பொறுப்பேற்கத் தவறுகின்ற அரசியல் பின்னணியில் தான் இந்தக் குற்றங்கள் தொடருகின்றது.

ஈபிடிபியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பா.உ. குத்துக்கரணமடித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். அவர்கள் வெளியிட்ட அறிக்கை முதலில் உண்மையை மூடிமறைக்கின்றது. அதன்பின் அறிக்கை திரிக்கப்பட்டு இரண்டு விதமாக வெளிவருகின்றது. அவற்றை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள். யார் குற்றவாளிகளுக்கு உடந்தையாக முன்நின்று தொடர்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை இனங்காண, இந்தத் திரிபான வரிகள் போதுமானது. இந்தத் திரிபுக்கு வெளியில் உண்மை என்பது, புதைக்கப்பட்டு இருக்கின்றது.

தம்மை முதன்மைப்படுத்தி தமக்காக வாழத்தெரிந்த அரசியல் இலக்கியப் பிரமுகர்கள், சமூகத்துக்காக தம்மை முதன்மைப்படுத்தி வாழ்ந்தவர்களையும் வாழ்பவர்களையும், இதன் பொருட்டு தம் உயிரை இழந்தவர்கள் எல்லாம் வாழத் தெரியாதவர்களாகக் காட்டுகின்றனர். பிரமுகராக இருப்பதற்கே அரசியல் - இலக்கியம் என்று சொல்லும் அளவுக்கு விளக்கங்கள் வியாக்கியானங்கள். மக்களுக்கான அரசியல் இலக்கிய முயற்சியா? அல்லது பிரமுகராக இருப்பதற்கா அரசியல் இலக்கிய முயற்சியா? என்ற சுய கேள்வியை எம்முன்னும் தள்ளுகின்றனர். மக்களுக்காக இயங்குவதை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லுகின்றனர். இப்படி புலத்தில் இருந்து மண் வரை பிரமுகர்கள் கூடுகின்றனர். மக்களை அணிதிரட்டுவதை மறுத்து, அதற்காக அரசியல் இலக்கிய முயற்சி செய்வதை மறுத்து, நடைமுறையில் தம் கருத்துக்காக போராடுவதை மறுத்து, சமூகத்தையும் சமூக முரண்பாட்டையும் பயன்படுத்தி பிரமுகராக இருக்க முனைகின்றனர்.

என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே

பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்

தாங்கள் ஒடுக்குபவர்களுடன் இல்லை, ஒடுக்கப்படும் மக்களுடனும் இல்லை என்கின்றது "சாம்பல்" கோட்பாடு. ஏனெனின் இப்படி இருத்தல் "ஒற்றைப்பரிமாண அரசியல்", "ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள்" என்கின்றனர். இதுவே இவர்களின் "சாம்பல்" கோட்பாட்டுத் தத்துவம். பிரமுகரான தங்கள் சுயஇருப்பை மையப்படுத்தி "ஒரு வாழும் யதார்த்தம்" என்று அவர்கள் கருதுவது இதைத்தான். இதன் பின்னணியில் தான் அரசியல் இலக்கிய புலமைசார் மோசடிகள்.

இந்த உலகத்தில் ஜனநாயகம் என்பது மூலதனத்தின் சுதந்திரம்தான். இதற்கு இசைவாகத் தான் கருத்துகள் முதல் அனைத்தும் உருவாகக்கப்படுகின்றன. இந்த ஜனநாயக உலகத்;தின் வௌ;வேறு காலகட்ட சுதந்திரத்தின் உரிமைபற்றி, மூலதனம் முதல் பாகத்தில் மார்க்ஸ் அம்பலப்படுத்துவதைப் பார்ப்போம்.

மார்க்சியத்துக்கு எதிராக திட்டவட்டமாக வெளிப்படுத்தி இயங்க வெளிக்கிட்டுள்ள, பிரான்சில்  இருந்து வெளிவரும் அம்மா புரட்டாதி 2000 இதழில், "வன்முறை எழுத்து" என்ற தலைப்பில் ஜெர்மனிய மார்க்சிய தலைவர் கார்லீப்னெக்ட் பெயரில், அவரை அவமானப்படுத்தும் வகையில், புனைபெயரில் மார்க்சியத்தை கோட்பாட்டில் விட்டோடிய ஓடுகாலி ஒருவர், கட்டுரை ஒன்றை எழுதித் தள்ளியுள்ளார். மொழியில் வன்முறை பற்றி எழுதப் போனவர், என் மீதான தனி நபர் தாக்குதலுக்கு பதில் சொல்வதாக பாசாங்கு செய்யப் போனவர், சாருநிவேதா கடந்து என் மீதான (உதாரணம் சோபாசக்தி, இது போல் பல வன்முறைகள் புலம் பெயர் இலக்கியத்தில் உள்ளது) தனி நபர் தாக்குதலுடன் சமரசம் செய்தபடி, வன்முறைபற்றிய கட்டுரையை இடையில் கைவிட்டு, என் மீதான அரசியலற்ற முத்திரை குத்தலில் இறங்கி விடுகின்றார். சாருநிவேதா எனது கோட்பாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் கண்மூடித்தனமான அவதூற்றை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு எழுத வெளிக்கிட்ட இக் கட்டுரையாளர், என் மீது அதே பாணியில் எனது கோட்பாட்டுக்கு பதிலளிக்க முடியாது, முத்திரை குத்தலைச் செய்கின்றார். என் கருத்துகளுக்கு பதிலளிக்காத கட்டுரையின் சாரம், என் மீதான மற்றொரு முத்திரை குத்தலை செய்வதன் மூலம் எனக்கு எதிரான பிரச்சாரத்தை சாருநிவேதாவில் இருந்து, வடிவத்தில் வேறுபட்டு செய்துள்ளார். "வன்முறை எழுத்து" என்று தலைப்புக் கொடுத்து ஏமாற்றியபடி, எனக்கு எதிரான ஒரு முத்திரை குத்தலை திட்டமிட்டுச் செய்துள்ளார்.

இனி இந்த இடதுசாரி வேடதாரிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்;. இடதுசாரி மார்க்சிய ஆய்வளராக, ஸ்டாலின் எதிர்ப்பு வாதிகளாக திகழ்ந்த அறிவுத்துறை கோட்பாட்டுளரகளான ரஸ்ஸல், ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகியோரின் சொந்த முகங்கள் 1996 யூலையில் அம்பலமானது. இவர்கள் பிரிட்டிஸ் உளவுத்துறையில் கைக்கூலியாக இருந்து கம்யூனிசத்தை திருத்தி எழுதவும், ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு போராளியாக இருந்தது உலகையே வியக்கவைத்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE