அரசியல் சூதாட்டமே அரசியலாகிப் போன நிலையில் அரசியல். எங்கும், எவரும், காய் நகர்த்தும் இந்த அரசியல் தான் பண்பாகிவிட்டது. மக்களை இராணுவரீதியாக ஒடுக்கியாள, அரசுக்கு ஒரு எதிரியைக் காட்டுவது அவசியமாகின்றது. இந்த வகையில் அரசுக்கு புலி தேவைப்படுகின்றது. மறுபக்கத்தில் மீண்டும் குண்டு வைத்து அரசியல் செய்யலாம் என்ற கனவுகளுடன், தேசியம் பேசும் வலது - இடது உதிரிக் கூட்டங்கள் தங்கள் காய்நகர்த்தும் சொந்த சதிகளுடன் அங்குமிங்குமாக ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.
அரசு தன் புலனாய்வை மேற்கோள் காட்டி மீண்டும் புலிகள் என்றும், இந்தியாவில் மூன்று பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், மன்னார் கடற்கரையில் புலிகளின் அதி வேக இரு வள்ளத்தைக் கைப்பற்றியதாகவும் செய்திகளை கசியவிட்டு இருக்கின்றது.