"பிரிவினைவாதம்" பற்றியும், "பயங்கரவாதம்" பற்றியும் மட்டும் பேசிய ஜே.வி.பி., இனப்பிரச்சனை பற்றிப் பேசவில்லை. "பிரிவினைவாதத்தையும்", "பயங்கரவாதத்தையும்" சோசலிசத்துக்கு முன்னமே ஒழிக்கவும் கோரி அதற்கு உதவியவர்கள், பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவில்லை. மாறாக இனப்;பிரச்சனையை தாம் சோசலிசத்தில் ஒழித்து விடுவோம் என்று கூறியதன் மூலம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது அதற்கு மறைமுகமாக உதவினர். இப்படி இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது இனவொடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவியவர்கள் தான், தாங்கள் இனவொடுக்குமுறையில் ஈடுபடவில்லை என்றும் கூறினர். இதுதான் ஜே.வி.பி.யும், அதன் அரசியலும். இந்த அரசியல் வழிமுறை லெனினிய வழிமுறையல்ல. மாறாக திரோஸ்கிய வழிமுறையாகும். ஜே.வி.பி.யின் இந்த அரசியல் பின்புலத்தில் லெனினின் சுயநிர்ணயத்தை மறுத்தவர்கள், திரோஸ்கிய சுயநிர்ணய மறுப்புக் கோட்பாட்டையே தமதாக்கினர். இந்த அரசியல் போக்கு, இன்றும் பரவலாகவே பல தரப்பிடம் தொடர்ந்து காணப்படுகின்றது.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01
பிரபாகரனின் விருப்பத்துக்கு ஏற்ப, புலிகள் என்ற இயக்கத்தை கட்டமைத்தவர் ஐயர். ஐயர் இல்லாமல் புலிகள் இயக்கம் இல்லை. இந்த உண்மையின் பின்னால் ஐயர் இல்லாமல் பிரபாகரன் இல்லை, பிரபாகரன் இல்லாமல் ஐயர் இல்லை என்பது எதார்த்தமாகின்றது. பிரபாகரன் போன்றவர்கள் கொலைகள் செய்ய, அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி அதை அரசியலாக்கி அமைப்பாக்கியவர்களில் ஐயர் முதன்மையானவர். ஒரு முன்னோடியாக, ஒரு நிர்வாகியாக, செயல்வீரனாக, விமர்சனத்துக்கு உள்ளாகாத நேர்மையான, தூய்மைவாதியாக ஐயர் இருந்த பின்னணியில் தான், புலிகள் இயக்கம் உருவானது. பிரபாகரன் அதன் உந்து சக்தியாக இருந்தான். இப்படித்தான் புலிகள் இயக்கம் இனவொடுக்குமுறை சார்ந்து உருவானது.
இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05
தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் இலங்கையில் குறைவில்லை. அப்படியென்றால் தவறு எங்கே உள்ளது? ஆம் தவறு அரசியலில் உள்ளது. அதன் யுத்தத் தந்திரத்தில் உள்ளது.
இதற்கான அடிப்படைக் காரணம், லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கோட்பாட்டுச் செல்வாக்காகும். இதுதான் இன்று வரையான இலங்கையில் உள்ள நிலைமை. உண்மையில் லெனினியத்தை உயர்த்திய கட்சிகள் கூட, லெனினை மறுத்த திரோஸ்க்கிய கண்ணோட்டத்தையே சார்ந்து நின்றன. அதைத்தான் இன்றும் தம் அரசியல் வழிமுறையாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்த வகையில் இலங்கையில் லெனினிய வழியிலான வர்க்க போராட்டக் கட்சிக்கு பதில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கண்ணோட்டம் சார்ந்த கட்சிகள்தான் பொதுவில் உருவானது. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாவதை, இது தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றது.
புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04
புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவை நிராகரித்து, சிங்கக் கொடி பிடிக்கும் கூட்டணியின் அரசியல் வங்குரோத்து
இனப் பிரச்சனைக்கான ஒரு தீர்வை வழங்காது இழுத்தடிக்க, பாராளுமன்ற தெரிவுக் குழுவை தீர்வுக்கான வழியாக அரசு புதிதாகக் காட்டுகின்றது. இந்த உண்மை மட்டும் தான், இதன்பின் உள்ளது என்று கருதினால் அதுவொரு முழுப்பொய். மற்றொரு உண்மை உள்ளது. இந்த தீர்வை வழங்காத அரசுக்கு எதிராக, கூட்டணியிடம் எந்தப் போராட்ட வடிவமும் கிடையாது. ஆக அரசு தீர்வை வழங்காது, கூட்டணி அதற்காக போராடாது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. இரு தரப்பும் சேர்ந்து மக்களை இந்த அரசியலுக்குள் கட்டிப்போட்டு மூழ்கடித்து வருகின்றனர்.
நரித்தனமாக புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த முனையும் பாரிஸ் "வாசுதேவன்" முதல் கனடா "சுவிஸ் முரளி" வரை
புலி பாசிசத்தை நியாயப்படுத்த எத்தனை குறுக்கு வழிகள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இவர்கள் குற்றம்சாட்டும் ஒரு விடையத்தைக் கொண்டு, தமிழ் (புலிப்) பாசிசத்தை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனத்தை தம் பாசிச நடைமுறை அரசியலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் தங்களை அறிவாளியாக, ஜனநாயகவாதிகளாக, விமர்சகர்களாக தம்மை காட்டிக் கொள்ள முனைகின்றனர். தமிழ் (புலி) பாசிசத்தை நியாயப்படுத்த, சோசலிச நாடுகளிலும் கொலைகள் நடந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இப்படித்தான் இவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவதூறுடன், தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான ஒரு பட்டியலை முன்வைத்து, குறுக்கு வழிகளில் தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக போராட்ட கோசத்தைக் கூறக் கோரி தாக்கினர்-(வதைமுகாமில் நான் : பாகம் - 48)
குறிப்பு : அமைப்புக் குழுவில் யார் யார்? அவர்கள் எந்த இயக்கங்கள்? என்று கேட்டனர்.
குறிப்பு : துண்டுப்பிரசுரம் எங்கே அடித்தீர்கள்? என்று கேட்டனர்.
குறிப்பு : 07.05.87 அன்று சலீம் என்பவர் விஜிதரன் போராட்டத்தில் எடுத்த படங்களுடன் வந்தார் (இவை சோதிலிங்கம் வீட்டில் கைப்பற்றியது)
குறிப்பு : படத்தில் உள்ளவர்கள் பெயர்கள் கேட்டெழுதப்பட்டது. அவர்களது அரசியல் நிலை பற்றியும் கேட்கப்பட்டது.
"ஒற்றுமை"யையும் "தமிழன்" அடையாளத்தையும் கோரும் தமிழ் தேசியம் குறித்து..!?
இதுதான் தமிழ் தேசியம் வெற்றிபெறாமைக்கான காரணம் என்கின்றனர். இதுதான் தமிழ் தேசியம் தோற்றமைக்கான காரணம் என்கின்றனர். தமிழ் தேசியத்தின் இன்றைய பலவீனத்துக்கு இதுதான் காரணமென்கின்றனர். இந்த மலட்டு ஒப்பாரிக்கு மட்டும் குறைவில்லை. இதன் மூலம் தமிழ் தேசியம் கோருவது தான் என்ன? ஐனநாயக மறுப்பைபும், பாசிசமயமாக்கலையும் தான். "ஒற்றுமை"யையும் "தமிழன்" அடையாளத்தையும் உருவாக்க, சுட்டுக்கொல்வதைத் தவிர அதனிடம் வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. இதுதானே உண்மை. இதை விரித்து ஆராய்வோம்.
இனியொரு துணையுடன் வலதுசாரிகள் (புலிகள்) தலைமை தாங்க, பாரிசில் நடந்த ஐயரின் புத்தக வெளியீடு
ஐயரின் நூல் வெளியீட்டின் பெயரில், நடப்பது என்ன? ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் தத்துவங்களையும் மேடை போட்டுத் தூற்றுகின்றனர். சுரண்டுவது முதல் சாதிய ஆணாதிக்க … ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டக் கோரும் மார்க்சியத்தை தூற்றுகின்றனர். இதை ஒழித்துக்கட்டக் கோருவது தான் மார்க்சியம். இதற்கு வெளியில் மார்க்சியம் என்ற வேறு எதுவும் கிடையாது.
இங்கு ஐயரின் நூலை தமக்கு பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர். ஐயர் புலி – புளட்டில் இருந்து விலகிய பின், தான் கொண்டிருந்த அரசியல் அடிப்படையில் நின்று கடந்தகால சம்பவங்களை விமர்சிக்கவில்லை. புலி ஆதரவாளரைக் கொண்டு தொகுத்த பின்புலத்தில், இந்த நூல் புலியை அப்பாவித்தனமான காட்டி புலியைப் பூசிக்க வைக்கின்றது. இந்த பின்னணியில் புலி அரசியலை விமர்சிக்கத் தவறியுள்ளது. இந்தப் பின்புலத்தில் இந்த நூலை புலிகளும், புலி சார்ந்த கோட்பாட்டு அடிப்படையைக் கொண்டவர்களும் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர். அதற்கு இனியொரு பாய்விரித்து ஏற்பாடு செய்கின்றது. இதுதான் பாரிசிலும் நடந்தது.
புலிகளின் வன்முறைக்கு சமூக அமைப்புத் தான் காரணம், புலிகளல்ல என்ற அரசியல் புரட்டு மீது
இந்தத் தத்துவம் படைப்பாளி படைப்புக்கு பொறுப்பல்ல என்ற, இலக்கியப் பொறுக்கித் தனத்தில் இருந்து உருவாகின்றது. சமூகத்தில் இருந்து விலகி நிற்கின்ற, தன் கருத்து சார்ந்த மக்களை அமைப்பாக்கும் சமூகப் பொறுப்புகளையும் கடமைகளையும் நிராகரிக்கின்ற, பிரமுகர்களின் இருப்பியல் சார்ந்த தத்துவம் தான் இது. இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான், புலியின் பாசிச நடத்தைகளுக்கும் அவர்கள் பொறுப்பல்ல என்று புது அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர்.
புலி அரசியலை விமர்சிக்காது, புலியை விமர்சிக்கும் அரசியல் மோசடியானது
புலியையும், பிரபாகரனையும் குற்றஞ்சாட்டி விமர்சிக்கின்ற அரசியற்பின்புலத்தில் இந்த அரசியல் மோசடிகள் அரங்கேறுகின்றன. புலியின் நடத்தைகளை விமர்சிப்பதன் மூலம், புலி; கொண்டிருந்த அரசியலை பாதுகாத்தல் இதன் பின் அரங்கேறுகின்றது. இதன் மூலம் கடந்தகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த அரசியலையும், அதன் நீட்சியான இன்று தாங்கள் கொண்டுள்ள அரசியலையும் நியாயப்படுத்திப் பாதுகாத்தலும் கூடவே அரங்கேறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் புலியின் அரசியல் தான், புலிகளின் நடத்தைகள் என்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றது. இதன் பின்னாக பல புலி மற்றும் புலியெதிர்ப்புப் பிரமுகர்கள் முதல் இலக்கியம் பேசிய பிரமுகர்கள் வரை அடங்கும்.