Language Selection

பி.இரயாகரன் - சமர்

குறிப்பு : 07.05.87 அன்று மதியம் விசு என்பவர் நடந்த மற்றும் கதைத்த விடையங்களை கேட்டு பதிவு (ரேப்) பண்ணினான்.

விளக்கம் : எனது விசாரணையில் ஒத்துக் கொண்டவைகளை ஒளிநாடாவில் பதிவு செய்தனர். புலிகள் நவீன சித்திரவதை முறைகளையும் உள்ளடக்கிய வகையில், காட்டுமிராண்டித்தனத்தை ஒருங்கமைத்த வகையில் அவர்களின் வதைமுகாம் வெம்பிக்கிடந்தது. கடத்திவரும் ஒவ்வொரு நபர்கள் மீதும், அடி உதை முதல் எலும்புகளை முறித்துக் கொல்வது, உயிருடன் இருக்கும் போதே உடல் பாகங்களை வெட்டி அகற்றுவது, அவர்களை நிர்வாணமாகவே படம் எடுப்பது, விசாரணையைப் பதிவு செய்வது என்று பல வடிவங்களில் வதையின் கதைகள் உறைந்து போன, எமது தமிழ் சமூகத்தில் ஆழப் பதிந்து கிடக்கின்றன.

இனவாதமும், மதவாதமும் கொண்ட அரசியல் கண்ணோட்டமும், அது சார்ந்த செயல்பாடும் தான் இதன் பின்னால் காணப்படுகின்றது. இலங்கையில் பெரும்பான்மை சார்ந்த இனவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை சார்ந்த இனவாதமும் காணப்படுகின்றது. கடந்தகாலத்தில் இனவாதம் இழைத்த மனிதகுற்றங்களை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத சமூகத்தில், அந்த அரசியல் தொடரப்படுகின்றது. தங்கள் இனம் சார்ந்து பாதிக்கப்பட்ட மற்றைய இன மக்கள் தம்முடன் மீள இணைந்து வாழ முன்னின்று வழிகாட்டாத குறுகிய இனவாதத்தைக் கொண்டு, மக்களை மோத வைக்கின்ற நிகழ்வுதான் மன்னார் சம்பவம். இனம் கடந்து, மதம் கடந்து மனிதனாக உணராத குறுகிய உணர்வுகளும், இதை தூண்டும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் இதன் பின் குளிர்காய்கின்றனர். சிங்களப் பேரினவாதம் மட்டும் தான், பௌத்த மதம் மட்டும் தான், மக்களைப் பிளக்கின்றது என்பது கடைந்தெடுத்த பொய். மாறாக பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் கூட, இன மத வாதிகளாக, ஒடுக்குபவராக, இனப்; பிளவை தூண்டுபவராக உள்ளனர். இதில் ஒன்றை தூண்டி ஒடுக்குவது என்ற வகையில், அரசின் பங்கு சார்ந்த கூற முதன்மையான அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது.

திடீர் "தகைமை"யுடனும், "உரிமை"யுடனும், "முன்னேறிய"வர்களும் கூடிக் குலாவ முனையும் பந்சோந்தி அரசியல். விடுதலைப் புலிகள் மக்களைப் "பணயக் கைதிகளாக" வைத்திருந்தனராம்!? புதியேதார் உலகம் நாவல் பற்றி, திரிக்கப்பட்டு புரட்டப்பட்டு புதிதாக பதிவு செய்யப்படுகின்றது. இப்படி திடீர் திடீரென "முன்னேறிய" பிரிவினருடன் கூடி ஆவி இறக்கும் பூசாரியாக, கனடாவில் ஜமுனா ராஜேந்திரன் காட்சியளிக்கின்றார். கனடாவில் தொடர்ச்சியாக அரங்கேறும் அரசியல் "விபச்சார" மேடைகளில், "முன்னேறிய" புத்திஜீவிகளும் கூடி, "மார்க்சியம்" என்னும் அரசியல் பிசாசைக் கலைக்கின்றனர்.

"தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி"யதாக யமுனா ராஜேந்திரன் எழுதுகின்றார். இதற்கு ஆதாரமான இந்திய றோவின் கூலி அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பினர் ஒருவரின் கூற்றை ஆதாரமாக காட்டுகின்றார். இன்று ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பிரான இவர், அன்று கொலைகார புளட்டுக்கு தலைமை தாங்கி தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்து திரிந்தவரில் ஒருவர். யமுனா ராஜேந்திரனின் கருத்தை வெளியிட்ட இணைய ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்தபடி, துப்பாக்கியுடன் தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்தவராயிருந்த ஜென்னி எழுதிய கூற்று, யமுனா ராஜேந்திரனுக்கு "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட" ஒன்றாகிவிட்டது. அதை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்கின்றார். உண்மையான போராட்ட வரலாற்றை திரித்துப் புதைக்கின்ற கச்சிதமான பணியில் யமுனா ராஜேந்திரனும், குருபரனும், ஜென்னியும் ஒன்றாகவே பயணிக்கின்றனர்.

புலி அரசியலும், அரசியல் நடத்தைகளும் தவறானதல்ல. ஏனெனில் அது வலதுசாரிய அரசியல் நடைமுறையாகும். இந்த வகையில் புலிகளின் "தவறு" பற்றிய கூற்றுகள் கூட, அடிப்படையில் மக்கள் விரோதத்தன்மை கொண்ட வலதுசாரியமாகும். "பொதுவாக" தவறு பற்றிப் பேசுவது வேறு, போராட்டத்தின் வழி பற்றியும், அதன் மீதான விமர்சனம் சுயவிமர்சனத்தில் "தவறு" பற்றி பேசும் போது அது திரிபாக வெளிப்படுகின்றது. இங்கு "தவறு" பற்றிய பிரபாகரனின் நிலை, இதற்கு மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் பதில் தருகின்றது. "கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்." இதுதான் எதார்த்த உண்மை. இதைக் கடந்து இதற்கு விளக்கம் கிடையாது. இது பிரபாகரனின் சரியானதும், துல்லியமானதுமான விளக்கம் மட்டுமின்றி எதிர் விவாதமுமாகும். இந்த வகையில் உண்மையில் தன் அரசியலை, மிகப் சரியாகப் புரிந்து கொண்டவர் பிரபாகரன். இதை "தவறு" என்றவர்கள், இன்றும் "தவறு" பற்றி கூறுகின்றவர்கள் இந்த அரசியலை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது இந்த அரசியலை பாதுகாக்க "தவறு" பற்றி கூறி அதைப் பாதுகாக்க முனைகின்றனர். இதுவொரு வலதுசாரிய அரசியல் என்பதையும், இதைவிட இந்த அரசியலுக்கு வேறு வடிவம் எதுவும் கிடையாது என்பதை, அதன் வர்க்க அரசியலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக இது தவறு அல்ல, இதுவொரு அரசியல் வழிமுறை. இதை "தவறு" என்று கூறுகின்றவர்கள், அந்த அரசியல் வழிமுறையை மீண்டும் முன்னிறுத்துகின்றனர்.

அரசு முதல் புரட்சியாளர்கள் வரை தங்கள் கட்சிக்கு ஆள்பிடிப்பதன் மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கலாம் எனக் கருதுகின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையை இப்படித்தான் அரசு முதல் புரட்சியாளர்கள் வரை அணுகுகின்றனர். முரண்பாடுகளுக்குரிய அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில், அந்தச் சமூகப் பிரிவுகளின் ஆள்பிடிக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர். அதாவது மக்கள் தமது தீர்வுக்காக போராடுவதற்கு பதில், மக்களுக்காக போராடும் சிலரைக் கண்டுபிடிக்க முனைகின்றனர். மக்களை ஒடுக்கவும், இதே அரசியல் வழிமுறையைத்தான் அரசு கையாளுகின்றது. போராடவும், ஒடுக்கவும், அந்தந்த சமூகப்பிரிவில் ஆட்களைப் பிடிப்பதன் மூலம் தீர்வு காணமுடியும் என்ற அரசியல் வழிமுறை, இலங்கையில் பொதுவில் எங்கும் காணமுடிகின்றது.

புலியை அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்கி, அந்த அரசியல் வழியை முற்றாக நிராகரிக்க வேண்டியதை வெறும் "தவறாக" இட்டுக் கட்டுகின்றது. இந்த நூல் அதைத்தான் செய்கின்றது. இதற்கமைவாக தங்கள் இந்த "தவறுகளுக்கு" இடதுசாரிகளை பொறுப்பாக்குவதே, இந்த நூலின் மைய அரசியல் சாரம். புலியின் வலதுசாரிய அரசியல், இந்த நூலில் மிக நுட்பமாக கவனமாக புகுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் புலியை நியாயப்படுத்தியிருக்கின்றது. "இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு." என்கின்றது. தங்கள் வலதுசாரிய அரசியல் வழி எல்லாம் சரியாக இருந்தது, "தவறு"களை "களைந்துகொள்"வதன் மூலம் சரியாக வழிநடத்த முடியும் என்கின்றது. ஐயரின் தகவலை தொகுத்தவர்களின் அரசியல், இவ்வாறு மிக நுட்பமாக வெளிப்பட்டு இருக்கின்றது. புலியின் நடத்தைகள் வலதுசாரிய அரசியல் என்பதையும், இது "தவறு அல்ல" ஒரு அரசியல் வழி என்பதையும், இது மறுதலித்திருக்கின்றது. "பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது." என்று தம் வலதுசாரிய அரசியலுக்கு சுய நியாயம் கற்பிக்க முனைகின்றது.

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

(தமிழ்) பிரிவினைவாதத்துக்கு எதிரான (பேரினவாத) அரசு எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிப்பது எப்படி? சிங்கள மக்களும், சிங்களப் பாட்டாளி வர்க்கமும் பதிலளிக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுதான். அரசின் பிரச்சாரத்துடன் சேர்ந்து பயணிப்பதா, அல்லது எதிர்த்துப் பயணிப்பதா? எதிர்த்து என்றால் எப்படி? சேர்ந்து என்றால் எப்படி? "பிரிவினைவாதம்" பிரிவினை வாதிகளின் கோசம் மட்டுமல்ல, பிரிவினைவாதத்துக்கு எதிரான அரசின் கோசமாகவும் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தான் பிரிவினைவாதத்துக்கு எதிரான பேரினவாதக் கோசத்துடன் "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவாக வெளிவந்திருக்கின்றது. சிங்கள மக்கள் இதற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். சிங்கள மக்களை இனவாதியாகக் காட்ட முனைகின்றது. இனவாதியாக்கவும் முனைகின்றது. "கோத்தாவின் யுத்தம்" என்ற நூலும், யுத்த "வெற்றி கொண்டாட்டங்களை" எதிர்த்து வெற்றி கொள்வதே, சிங்கள மக்கள் முன்னுள்ள அரசியல் பணி. சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள அரசியல் சவால்.

இனவாதம் மூலம், யுத்தம் மூலம் கொழுத்த தரகு முதலாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான பிளவு தான், இந்த ஏகமனதான இந்த ரத்து செய்யக் கோரும் முன்மொழிவைத் திணித்திருக்கின்றது. இலங்கையில் மற்றைய ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கை தடுத்து நிறுத்த, அமெரிக்காவும் - இந்தியாவும் கூட்டாக மறைமுகமான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றது. இது இலங்கை அரசுக்குள்ளும், ஆளும் வர்க்கத்துக்குள்ளும் பிளவைக் கொண்டு வருகின்றது. அமெரிக்க- இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்கு அரசு அடிபணியும் போது, இன்று ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்கா - இந்தியா அல்லாத தரகுமுதலாளித்துவ பிரிவுகளின் நலன்கள் பறிபோகும். இந்த தரகுமுதலாளித்துவ வர்க்கம் இனவழிப்பைக் கூர்மையாக்கி வைத்திருப்பதன் மூலமாக, தரகு முதலாளித்துவ நலன்கள் பறிபோவதை தடுக்கும் ஒரு முயற்சிதான், 13வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானமாகும்.

இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கிவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும், பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக்கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இதுதான்.

"மே18" காரர் கனடாவில் நடந்த கூட்டம் ஒன்றில், தம்மை "தமிழரங்கம்" காட்டிக் கொடுத்ததாகக் கூறி, அங்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை தடுத்து நிறுத்தினர். அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள "கனடாவில் "முன்னேறிய பிரிவினரின்" ஜனநாயக மறுப்பு! "என்ற கட்டுரையைப் படியுங்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE