Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழ் மக்கள் தமக்காக தாம் தான் போராடவேண்டும். சிங்கள மக்கள் இதற்கு ஆதரவாகவும், தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும். இந்த நடைமுறைப் போராட்டம் தான், தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் இயல்பான அரசியல்ரீதியான ஒன்றிணைவை உருவாக்கும். இதைச் செய்யாது, சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்காக தாம் முன்னின்று போராட முற்படுகின்றனர். இது தவறானது. தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியது போல், ஜே.வி.பி சிங்கள மக்களுக்காக போராடியது போல்தான் இதுவும். மக்கள் தாம் தமக்காக போராடுவதை இது தடுத்து நிறுத்துகின்றது.

தமிழ் சிங்கள மக்கள் மட்டுமல்ல, மலையக முஸ்லீம் மக்களுடன் கூட இணங்கி ஐக்கியமாக வாழ இன முரண்பாடு தடையாக இருக்கின்றது. இன்று இதை மேலும் தூண்டும் வண்ணம், இதற்குள் மத முரண்பாடுகளை இனவாதிகள் புகுத்துகின்றனர். இவை அண்மைய நிகழ்வுகள். மக்கள் குறுகிய மத இன உணர்வு பெற்று இதைத் தூண்டவில்லை. மக்கள் தமக்குள் ஐக்கியமாக வாழ்வதைத்தான், தங்கள் தெரிவாக, வாழ்வாகக் கொண்டிருக்கின்றனர். இதை நாம் புரிந்தாக வேண்டும்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இயல்பாக நாம் ஏற்றுக் கொண்ட, எம்மைச் சுற்றிய வாழ்க்கையை இது புரட்டி போடுகின்றது. தன்னில் தாழ்ந்தவனை குற்றவாளியாக்கும் எமது அறத்தையும், எமது மௌனங்களையும், வெறும் அனுதாப உணர்வுகளையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கின்றது. இந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சினிமா, தன் கலை உணர்வுடன் அழகியலுடன் வெளிவந்திருக்கின்றது.

"இனத் துரோகி" "தேசத் துரோகி" என்று கூறி தண்டித்த புலிகள் இன்று இல்லை. ஆனால் "தேசத் துரோகி" என்று கூறி தண்டிப்பது மட்டும் தொடருகின்றது. முழத்துக்கு முழம் இராணுவம் உள்ள பிரதேசத்தில், அதுவும் அதிகாலை 1.30 மணிக்கு "தேசத் துரோகி"யாக சித்தரித்து தாக்குதல் நடக்கின்றது. வடக்கில் நடக்கும் சிவில் நிர்வாகத்தின் இலட்சணம் இதுதான். சிறிது காலம் திடீரென வந்து மறைந்த கிறிஸ் பூதங்கள் போல் தான், இதன் பின்புலங்கள் கூட.

புற்றுநோய் மருத்துவரும், யாழ் வைத்திய சங்கத் தலைவருமான ஜெயக்குமாரின் வீட்டின் மீது அதிகாலை 1.30 மணிக்கு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். அத்துடன் "தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" என்ற செய்தியையும் அங்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஆரியன் தன் சடங்கைச் செய்ய மறுத்தவனை 'தாச' மக்கள் என்று கூறி ஒடுக்கினான்;. இதன் மூலம் ஆரிய சடங்கை, தனது சுயநலத்துக்கு ஏற்ப செய்வதை கட்டாயப்படுத்தினான். இந்தச் சடங்கை ஆரிய வழிவந்த பார்ப்பனன் தான் மட்டும் சுரண்டும் சுயநலத்துடன், பெரும்பான்மை மக்களுக்கு தடை செய்தான். இதன் போது, உருவான சாதிய சமூக பொருளாதார பண்பாடுகள் தான், பார்ப்பனியம்.

குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.

ஒரு வலதுசாரிய வர்க்கத்துக்கு "தேவைப்பட்ட போராட்ட"மும், அந்த வர்க்க அரசியலின் "முன்னோடி"களால் இனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் "எமது திசைவழி தவறானது" என்று கூறி, நடைமுறையில் மாற்று அரசியல் வழிமுறையை முன்னெடுத்துப் போராடியவர் ஐயர். இந்த நிலையில் அவரின் நூலோ, அவரின் இந்தக் கருத்துக்கும் நடைமுறைக்கும் எதிராக வந்திருக்கின்றது. இது எதைக் காட்டுகின்றது? தகவலை ஒவ்வொரு வர்க்கமும் தனக்கு ஏற்ப பயன்படுத்தியதையே, இந்த நூலில் சிறப்பாக நாம் காணமுடியும்.

அன்று "சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாகக் கூறி, பிரபாகரன் தன் வர்க்கம் சார்ந்து துண்டுப்பிரசுரம் விட்ட நிலையில், இந்த அரசியலை நியாயப்படுத்துகின்றது இந்த நூல். "பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறித்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது." இங்கு ஐயர் தன்னளவில் தன் அரசியல் வழியிலான "தவறு" குறித்து, "புதிய அரசியல்" வழி சார்ந்து, தன்னைத்தான் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார். இப்படி உண்மை இருக்க அரசியல் சாராத "தவறு" குறித்து, எப்படி மூன்றாம் தரப்பாக கூறமுடியும். இந்த அரசியல் வழிமுறையை "தவறாக" காண்பதா அல்லது முற்றாக நிராகரிப்பதா? இரு நேர் எதிர் அரசியல் வழிமுறைக்குள் இந்த நூல் தடுமாறுகின்றது. இரு வேறுபட்ட வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட நபர்களின் சொந்தக் கண்ணோட்டத்துக்கு ஏற்ப, தகவல்கள் அரசியலாகின்ற போது நூலுக்குள்ளான முரண்பாடுகள் ஆழமாகவே வெளிப்படுகின்றது.

இந்தச் சமூக அமைப்பிலான தீர்வுகளை, பாட்டாளி வர்க்கம் சார்ந்து இருப்பதில்லை. இதற்கு பதில் தன் வர்க்கம் சார்ந்த தன் வர்க்க தீர்வுகளை முன்வைக்கின்றது. இந்த வகையில் உடனடித் திட்டம் நீண்ட காலத்திட்டம் என குறைந்தபட்சம் இரண்டை அடிப்படையாகக் கொண்டது தான் பாட்டாளி வர்க்கத் திட்டம். இதில் ஒன்றை நிராகரித்தாலும் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வரமுடியாது. இன்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் செய்வதில் உள்ள தடையும் இதுதான். இலங்கையின் பிரதான முரண்பாடான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண, உடனடித் திட்டம் மற்றும் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அரசியல் நடைமுறைகளை முன்னெடுக்காத வரை, பாட்டாளிவர்க்கம் இதன் மேல் அரசியல் செல்வாக்கு செலுத்த முடியாது.

1980களின் பின் எம் தேசவிடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுடன் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பல்;வேறு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இதைவிட 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு நாடுகளில்புலம் பெயர்ந்தோர்களில் 80 வீதமானோர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் மேற்தட்டு வர்க்கப் பிரிவினராகவுள்ளனர். மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் பொருளாதார அகதியாகவே புலம் பெயர்ந்தவர்கள். இன்று மேற்கு நாடுகளில் இருந்து திரும்பிச் செல்லல் என்பது 5வீதம் அல்லது  10வீதமாக மட்டுமே இருக்கும்.

இப்படி எம்மைப் பற்றி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லித் திரித்துப் புரட்டுகின்றனர், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறிக்கொள்வோர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "ஜக்கியம்" என்பது "அடிமைத்தனமாம்"! "அயோக்கியத்தனமாம்"!! மக்கள் தங்கள் மத்தியில் ஐக்கியப்படுவதை விரும்பாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், தங்களைத் தாங்கள் "மார்க்சியவாதிகள்" என்கின்றனர். "முன்னேறிய பிரிவுகள்" என்கின்றனர். “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” என்கின்றனர். சிலர் தம்மை "சுதந்திர ஊடகவியலாளர்கள்" என்கின்றனர். ஆளும் வர்க்கங்களோ, மக்களைப் பிளந்து அதில் குளிர்காய்கின்றது. அதை எதிர்த்துப் போராட, மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தாத கருத்துகள், பிரச்சாரங்கள் அனைத்தும் இனவாதம் சார்ந்தவை தான். இந்த வகையில் திடீர் "மார்க்சியம்" பேசுகின்றவர்கள், அரசு சார்பானவர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தவகையில் "இனியொரு" இணையத்திலும், "தேசம் நெற்" இணையத்தி;லும், "குளோபல் தமிழ்"நியூஸ்" இணையத்திலும் "ஐக்கியம்" "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்கின்றனர்.

கொலை செய்வதே புலியின் அரசியலாக முதலில் இனம் கண்டு கொண்ட ஐயர், அதை நிராகரித்தார். ஐயரின் நூலை அறிமுகம் செய்த தமிழ் பாசிட்டுகள், ஐயரின் இந்த முடிவுக்குக் காரணம் பார்ப்பனியத்தின் "கருணை" சார்ந்த அவரின் பிறப்பு சார்ந்த ஒன்றாக விளக்கம் கொடுத்தனர். இப்படிக் குறுகிய விளக்கம் கொடுக்கும் வண்ணம், நூலில் அரசியல் காணப்படுகின்றது. இந்த நூல் புலிகளை அரசியல் ரீதியாக அல்லாது, புலிகளை "குறைபாடு" கொண்ட "தவறுகள்" கொண்ட ஆனால் திருத்தக்கூடிய ஒன்றாக காட்டமுனைகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE