Language Selection

பி.இரயாகரன் - சமர்

பாரிஸ்சில் தனிப்பட்ட இருநபருக்கு இடையில் நடந்த வன்முறையையும், அதை வைத்து நடத்திய பிழைப்பையும் அம்பலம் செய்த அறிக்கை (இது மேலே உள்ளது) ஒன்றை அனுப்பிய போது, வந்த இரண்டு ஈ மெயில்கள் கீழ் உள்ளது. ஒரு கடிதம் அனுகுமுறை ரீதியாக வக்கிரமானதும் வன்முறை ரீதியானவை. இரண்டாவது சமுதாய விடையங்களில் இருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் இந்த சமுதாய பிரியரிடம் இருந்து வந்தவை.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் குண்டு வீசி மக்களை கொன்று போட்ட, சிங்கள இனவாத வான்வழி தாக்குதல்களை நடத்திய விமானங்கள் மேல், அண்மையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தியிருந்தனர். வான் படையின் முதுகெலும்பே தற்காலிகமாக முறிந்துவிடுமளவுக்கு, இந்தத் தாக்குதல் விரிவானதாக இருந்தது. பலத்த பாதுகாப்புகளைக் கொண்ட விமானப்படைத் தளம் மீது, ஊடுருவிய தாக்குதலை நடத்தியதுடன், ஒரு பகுதியினர் தப்பிச் சென்றதுடன், தாக்குதலின் ஒளி நாடாவையும் வன்னியில் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தற்காலிகமாக தமிழ் மக்கள் மீதான இனவெறி வான்வெளி படுகொலைகளை மட்டுப்படுத்தியதுடன், அரசின் யுத்த பொருளாதார நெருக்கடியையும் அதிகரிக்க வைத்துள்ளது. அதே நேரம் இனவாத கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அண்மைக் காலமாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில், புலிகளுக்கு எதிரான தனிமனித அழித்தொழிப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. முக்கிய முன்னணி தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், ஈனத்தனமான இராணுவ அரசியல் வழிமுறையாகும். தனிமனித படுகொலை மூலம் போராட்டங்களையும், நியாயமான மக்களின் உரிமைகளை சிதைக்கவும் அழிக்கவும் முனைகின்றனர். நன்கு தேர்ந்த முறைகளில் விரிவான தளத்தில் இந்த படுகொலைகள் நடப்பதையே நிகழ்வுகள் தெளிவாக்கின்றன. இயக்க முன்னணி தலைமைகளை குறிவைத்து தொடர்ச்சியாக நடக்கும் அழித் தொழிக்கும் நடைமுறைக்கு, தலைமைக்கு அருகில் நெருங்கி நிற்கும் பிரிவுகளை சார்ந்து நிற்பதே, எப்போதும் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும்;. எதிரி நெருங்கி வரமுடியாத நிலையில், போராட்ட சக்திகளுக்கு அருகில் அக்கம் பக்கமாக நிற்கும் அதிர்த்தியுற்ற பிரிவுகளை கண்டறிவதன் மூலமே, எதிரி அவர்களை பயன்படுத்தும் நுழைவாயிலை ஏற்படுத்திவிடுகின்றது. இது இயக்கத்தின் உள்ளும் அமைப்புக்கு வெளியிலும் எதிரி நுழைந்துவிடும் போது, போராட்டம் ஆழமான நெருகடியை சந்திக்கின்றது.  இந்த வகையில் அதிர்த்தியுற்ற நபர்கள் உருவாகதா வகையில், போராடும் அமைப்புகள் ஜனநாயக மத்தியத்துவத்தை ஆதாரமாக கொண்டு, எதிரியையும் நன்பனையும் சரியாக கோடு பிரிக்க வேண்டும்;. இதில் தவறு இழைக்கும் போது, எதிரி அவற்றை தனக்கு சதகமாக இலகுவாக பயன்படுத்திவிடுகின்றான்.

கிருஸ்துவ மதத்தின் பெயரில் உலகை அடிமைப்படுத்தும் காலனித்துவத்தை ஆதாரமாக கொண்ட கொள்ளையிலேயே வத்திக்கான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இன்றைய வத்திக்கானின் செல்வ செழிப்பு அதிகாரமும் கூட உலக மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட பரம்பரையின் எச்சங்களே. மற்றவன் உழைப்பை உறுஞ்சியபடி வத்திக்கானின்; அதிகார பீடங்களில் கொழு வீற்றிருக்கும் பன்றிகள் 1958 இல் எடுத்த முடிவுக்கு இணங்க, ஆசிய மக்களின் உழைப்பை நிபந்தனையின்றி வேட்டையாட ஒரு வானொலியின் தேவையை உணர்ந்தது போன்று  ஏகாதிபத்தியமும் உணர்ந்தது. 1960 ஆண்டு மேற்கு ஜெர்மனியிடம் இதற்கான பணத்தை வத்திக்கான் கோரியது. ஏகாதிபத்தியமும் கிருஸ்துவ மதமும் இணைந்து மக்களின் உழைப்பை சுரண்ட, மக்களை மதத்தின் பின் அடிமைப்படுத்தி செம்மறிகளாக்க, 1963 இல்  ஜெர்மன் ஏகாதிபத்திய பாராளுமன்றம் இந்த வானொலியை அமைக்க நிதியை வழங்கியது. இந்த எகாதிபத்திய கிருஸ்துவ கூட்டு வானொலியான வெரிதாஸ், 17 ஆசிய மொழியில் தனது செம்மறிகளைத் தேடி இன்று களத்தில் உள்ளது. இந்த ஏகாதிபத்திய கிருஸ்துவ வானொலி, 2000 ஆண்டில் 126 000 நேயர் கடிதத்தை பெற்றதாம். இதில் அரைப்பகுதி இலங்கை தமிழருடையது என்பது கவனத்துக்குரியதாக எம்முன் உள்ளது.

வடக்கு கிழக்கில் புலிகளின் ஆட்சேர்ப்பு தொடர்பாக அண்மைக் காலத்தில் தொடாச்சியான பாரிய சர்ச்சைகள் எழுகின்றன. இது தொடர்பாக மட்டக்களப்பு - திருமலை ஆயர் ஜோசப் கிய்ஸ்லி சுவாம் பிள்ளை, இராம கிருஷ்ண மிஷன் பிரதிநிதி பத்மநாதன், மட்டக்களப்பு சமாதான குழு உறுப்பினர் அன்டன் மாhட்டின், மனித நேயர் நிலைய பிரதிநிதி எஸ். கமலநாதன் ஆகியோர், கிழக்கு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் கரிகாலனையும் வேறு முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக புலிகள் "எமது விடுதலைப் போராட்டக் கொள்கைக்கு அமைவாக வீட்டுக்கு ஒரு வீரனைத் தரவேண்டுமென்றே கோரிக்கை விடுத்தோம். அதற்கு அமைவாகவே பெற்றோர்கள் பிள்ளைகளை எங்களிடம் கையளித்து வருகிறார்கள். ... ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் குழுவினரே, பிள்ளைகளின் பெற்றோர் மூலமாக கையளித்து வருகிறார்கள். சிலர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துகளை நாம் கண்காணித்து வருகின்றோம்." என்று தெரிவித்த பின்னனியில், இந்த விடயம் மக்கள் மத்தியில் புதிய பாரிய முரண்பாட்டை புலிகளுடன் ஏற்படுத்தியுள்ளதை காட்டுகின்றது. இங்கு புலிகளின் கருத்துக்களான கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடவில்லை, சொத்துகளை பறிமுதல் செய்ய வில்லை என்ற கூற்றுக்கு மாறாக, அவர்களின் முரண்பாட்டை தெளிவாக கொண்டு வருகின்றது.

அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத ஆக்கிரமிப்பை எதிர்த்து உழைக்கும் மக்களின் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அமெரிக்காவின் இதயமான மூலதனத்தின் சுதந்திர வர்த்தக மையங்கள் மீதும், அதை பாதுகாக்கும் இராணுவ கட்டளை மையமான பென்டகன் மேலான, தனிமனித பயங்கரவாத தாக்குதல்கள் உலகையே உலுக்கியது. இந்த தாக்குதலால் அமெரிக்கா பொருளாதாரத்துக்கு 3000 கோடி டொலர்  நேரடி  இழப்பு எற்பட்ட அதே நேரம். மொத்த இழப்பு 9000 கோடி டொலர் என முதல் மதிப்பு தெரிவிக்கின்றது. இதை அடுத்து அமெரிக்க ஐனாதிபதி புஷ் "அமைதியான அடிபணியாத ஆவேசம்" என்று கூறியபடி, மறுகாலனியாக்க முளைகள் ஆழமாகவும் அகலமாகவும் விதைப்பதன் மூலம், உலகை மறுபங்கீடு செய்வது தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மூலதனத்துக்கு உலகளவில் ஏற்பட்டு வந்த நெருக்கடியில் (அண்மையில் அமெரிக்காவில் பலமுறை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் வட்டிவீதம் குறைக்கப்பட்டது) இருந்து மீள, புதிய இராணுவ ஆக்கிரமிப்புகள் மூலதனத்துக்கு அவசியமாகின்றது. இந்த ஆக்கிரமிப்பின் மூலம் பொருளாதார நெருக்கடியை சரிக்கட்டி விட முடியும் என, மூலதனம் கொக்கரிக்கின்றது. மூலதனத்தின் சுதந்திரமான விடுதலைக்கு உலகம் தழுவிய விரிவாக்கமே, உலகத்தின் பொருளாதாரமாக, பண்பாடாக, ஆட்சியாக மாறிவருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரலில் மற்றைய அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித் தொழிக்கும் போது, எதிர்வினைகள் பலதளத்தில், பலவடிவில் வெடித்துக் கிளம்புகின்றன. இந்த வகையில் உலகை உலுக்கும் மக்கள் போராட்டம் ஒருபுறமும், தனிமனித பயங்கரவாத தாக்குதல்கள் மறுபுறமாக, இரு வேறு தளத்தில் நேர் எதிராக கருக்கொண்டு பிரசிவிப்பது நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

30 வருடமாக புலி அரசியலையும், அதன் மனிதவிரோத குற்றங்களையும் எதிர்த்து போராடியதை எற்காது, முள்ளிவாய்க்காலுக்கு பின்னான புலிகள் பற்றி விமர்சனமும் அதன் அரசியலும் எதுவாக இருக்கின்றது? அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றது? முள்ளிவாய்க்காலுக்கு முன் இவர்களுக்கு புலிகளுடன் முரண்பாடு இருந்து இருப்பின், எந்த அரசியலின் அடிப்படையில் இவர்கள் முரண்பட்டு இருப்பார்கள்? அதை இன்று என்னவாக, எப்படி அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? இதை எல்லாம் மூடிமறைக்க, இலக்கியம் என்ற தகுதி போதுமா? இப்படிப்பட்ட இவர்கள வேறுயாருமல்ல, புலிகளின் அரசியல் தவறுகள் எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்ததுடன், புலிகளின் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன். இதற்காக "தவறு" ஒன்றை, அவர் திடீரெனக் கண்டு பிடிக்கின்றார். வேடிக்கை என்னவென்றால் இவர் "தவறாக" கண்டுபிடித்த விடையம், படிப்பகத்தில் மின்நூலாக்கப்பட்டுள்ள 10000 பிரதிகளுக்கும் பொருந்தும். இவர் சொல்லும் அதே "தவறு"டன் தான் அவையும் இணையத்தில் "உரிமை" மீறி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படி இவர் "தவறு" என்று கூறுவது, மின் நூலாக்கப்பட்டவற்றுக்கு அனுமதியை நாம் பெறவில்லை என்பதுதான். ஆக உங்கள் படிப்பகத்தை மூடக் கோருகின்றார்.

குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.

விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.

கடந்தகால இயக்க நடத்தைகள், இயக்க புனைவுகள் சார்ந்தும், மக்களின் அவலங்கள் சார்ந்தும் யோ.கர்ணன் கதைசொல்வது ஏன்? சமூகம் மீதான அவரின் சமூகப் பார்வை தான் என்ன? இனவொடுக்குமுறைக்கு எதிரான அவரின் செயல்பாட்டுத்தளம் என்ன? புலிக்கு பின் எல்லா சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் புதிய முகமூடிகளுடன், மூடிமறைத்த தங்கள் நோக்கங்களுடன் களத்தில் இறங்குகின்றனர். இதை யோ.கர்ணனின் கதைகளிலும் காணமுடியும். அரசு வழங்கிய (சுய) "புனர்வாழ்வை" இந்த கதைகள் மூலம் இனம் காணமுடியும்.

கதைகளின் நோக்கம் மிகத் தெளிவானது. சமூக நோக்கு கொண்டவர்களை அரசியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து அன்னியப்படுத்துவது தான். அதே நேரம் சமூக நோக்கு கொண்டவர்களை பற்றிய வெறுப்பை, மக்கள் மத்தியில் ஊட்டுவதுதான். இந்த வகையில் கதைகள் கடந்தகால இயக்கங்கள் நடத்தையை கருப்பொருளாக கையில் எடுத்து, மனித அவலங்களைக் காட்டி வெறுப்பை ஊட்டுகின்றது. யுத்தத்தின் பின் போராட்டத்துக்கு எதிரான பொது உணர்வுகளை, அரசியல் ரீதியாக வளர்ப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த "புனர்வாழ்வு" கதைகள். மக்களுக்கும் "புனர்வாழ்வு" அழிக்க இந்த கதைகள் மூலம் முனைகின்றது. அந்த நோக்கில் இவர்கள் எழுதுகின்றனர், எழுத வைக்கப்படுகின்றனர். போராட்டம் தவறானதா? இல்லை. மாறாக அதன் அரசியலும், அதன் சமூகப் பார்வையும், அதன் நோக்கமும் தான் தவறானதாக இருந்தது. இதை தங்கள் கதைகளில் கூறுவதை இவர்கள் மறுதலிக்கின்றனர். இந்த அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனத்தைக் கூட, இவர்கள் தங்களளவில் செய்ய மறுக்கின்றனர். இந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்தும் வண்ணம், சமூகப் பொறுப்புடன் இவர்கள் கதை சொல்லவில்லை.

யாரைக் கொண்டு தான் புரட்சியை நடத்தமுடியும்? சில புரட்சியாளர்களின் புரட்சிக் கோசம், மக்களுக்கு எதிரான சதியாகிவிடும். நாம் ஒடுக்குமினமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடவேண்டும். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் இனத்துக்குள் தான் நடத்தவேண்டும். இனவொடுக்குமுறையை அந்த இனம் சார்ந்து முன்னெடுப்பதால், அந்த மக்களை அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்கள் அதைச் செய்யாது, ஒடுக்கப்பட்ட இனத்தை அணுக முற்படுகின்றனர். ஒரு தவறான அரசியல் பாதை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE