Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எதிராக வளர்ச்சி பெற்ற போது, அது அம்மக்களின் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கியது. இந்த அடக்கமுறைக்கு எதிரான சக்திகளின் அரசியல் தவறுகள் அவர்களையே அவர்களின் மண்ணில் இருந்து ஓட வைத்தது. ஓடிவந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீதான அக்கறையை தமது புதிய பூர்சுவா வாழ்க்கையுடன் தொலைக்கத் தொடங்கி சீரழிந்தவர்கள், அந்த மக்களின் நியாயமான குரல்களையே பின்னால் மறுப்பவர்களாக தம்மை மாற்றிக் கொண்டனர்.

தமிழீழ புதிய சனநாயக கட்சியில் தேசபக்தன் இதழ் 17 இல் பல மார்க்சிய விலகலைக் கொண்டிருந்த போதும், முக்கியமானதும் அடிப்படையானவைகளை ஒட்டிய கோட்பாட்டு விவாதத்தை இக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கின்றது.

எனது மூன்று வயது மகன் "எனது பைத்தியம் எங்கே?" என தனது பொம்மை மாட்டைக் குறித்து கேட்க்குமளவுக்கு "மாட்டுப் பைத்தியம்" நோய் ஐரோப்பாவையும், உலகையும் உலுக்கி எடுக்கின்றது. உண்மையில் "மாட்டுப் பைத்தியம்;" என்பது உண்மைக்கு மாறானது, மாறாக மூலதனத்துக்கு பைத்தியம் என்பதே சரியான அரசியல் உள்ளடக்கமாகும்.

ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் அமெரிக்காவின் தலைமையில் மேற்கின் ஆதரவுடன் உலகை, உலகமயமாதலை நோக்கி வழிநடத்திச் செல்லும் மக்கள் விரோத சர்வதேச குற்றவாளியாக பரிணமித்துள்ளது. 1990 களில் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் வரைமுறையற்று அழித்தொழிக்கும் ஆக்கிரமிப்பின் போதும், யூக்கோசிலாவியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் நடத்திய தாக்குதல்கள் மிலேச்சச்தனமானவை. அணுகுண்டுக்கு பாவித்த யூரேனியக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட யூரேனியக் குண்டுகள், இந்த நாட்டு மக்கள் மீது வரைமுறையற்ற வகையில் வரலாறு காணாத வகையில் வெடிக்க வைக்கப்பட்டது. உலக ஜனநாயக வாதிகள் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அறிவுஜீவிகளின் போராட்டமற்ற மௌனம் சாதிக்கும் சர்வதேச முற்போக்கு ஆய்வுகளிலும், மறுவாசிப்பிலும், தேடுதலின் பின்பு தான், இவை ஐக்கிய நாடுகளின் ஜனநாயக சுதந்திர ஆயுதமாக நீடிக்கின்றது.

28.1.2001 பாரிசில் நடந்த வேலணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க நிகழ்வில், பெண் விடுதலை என்ற பெயரில் ஒரிருவர் சுதந்திர கோசத்தை, புலம் பெயர் இலக்கியவாதிகள் அனைவரையும் எதிர்த்து எழுப்பினர். ஒரிருவர் அண்மையில் நடத்திய புலம் பெயர் இலக்கியச் சந்திப்பை மான வெட்கமின்றி அண்மையில் அலங்கரிக்கவும் தவறாதவர்கள். சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு முரண்பாடு. புலிகளின் பினாமியாக உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற நிலையிலும் இயங்கும், 99 சதவீதம் சினிமா திரைப்பட ஆணாதிக்க பாடல் குப்பைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக் காட்சிகளில், படுபிற்போக்கான அறிவிப்பளார்களாக பவனி வருபவர்கள். அங்கு தேவாரம் முதல் திருக்குறள் வரை குழந்தைகள் மீது திணித்து, ஆணாதிக்கத்தை மதத்தினுடாகவும் பண்பாட்டின் ஊடாகவும் ஊட்டி வளர்ப்பவர்கள். புலம்பெயர் இலக்கிய வாதிகளின் நேர்மையைப் பற்றி வாய் கிழிய கோசமிட்டவர்கள், பார்ப்பனிய ஆணாதிக்க அடிமை திருமணச் சடங்குகளின் சின்னமான தாலியை கழுத்திலும், ஆணின் அடிமையை பறை சாற்றும் குங்குமத்தை நெற்றியிலுமாக மடிசார் முறையில் வீற்றிருந்து, ஆணாதிக்கம் பற்றி தமது கோசத்தை, நேர்மையினமாக நடைமுறைக்கு எதிராகவே இரவல் கோசத்தில் எழுப்பினர். புலம்பெயர் இலக்கிய சீரழிவையும் வக்கிரத்தையும் குறித்து விமர்சிப்பதற்கு, அதாவது இங்கு பொதுவில் அல்ல, குறைந்தபட்சம் அதற்கு சமூக நடைமுறையில் ஆணாதிக்க ஒழிப்பில் நேர்மை தேவை. குறிப்பான பாதிப்பு இருப்பின் குறித்த விமர்சனமும், பொதுவான விமர்சனம் எனின் உயர்ந்த சமூக விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் நின்று செய்வதுமே நேர்மையாகும். இந்து மதத்தை ஒழிக்காமல் பெண்ணியம் என்பது வெற்றுப் பேச்சாகும். இந்து மதமே ஆணாதிக்க வக்கிரமாகவும் வன்முறையாகவும் இருக்கின்ற போது, இந்துமதச் சடங்குகளை கோயில் படியேறி செய்வதில் தொண்டராக இருந்தபடி, ஆணாதிக்க ஒழிப்பு பற்றி பிதற்றுவது எதற்காக? புலிகளின் ஆணாதிக்க உரைகள் முதல் நடத்தைகள் வரை சமரசம் செய்து சோரம் போய் விமர்சிக்க வக்கற்று, அனைத்து மனித விரோதத்துக்கும் துணை போபவர்கள், புலிகள் அல்லாத இலக்கிய வாதிகளின் கோட்பாடுகள் மீது பொதுவாக கொச்சைப்படுத்தி தாக்குவது எதற்காக? ஆனால் தேசியம் மீது மட்டும் ஆகயாக, என்ன காதல்! என்ன சமரசம்! என்ன ஆணாதிக்கம்! இதன் அரசியல் பின்னணி என்ன?  தாம் சொல்வதற்கு எதிராக ஆணாதிக்க அடிமைத்தனத்தை தனக்குள் பாதுகாத்தபடி, பெண் விடுதலை பற்றிய பிதற்றல், உள்ளடக்கத்தில் பிற்போக்கானவை. ஆணாதிக்க அடிமைத்தனத்தை தாலியிலும், குங்குமத்திலும், மெட்டியிலும் அணிகலனாக அணிந்தபடி, அந்த சடங்குகளை சுயவிமர்சனமின்றி பாதுகாத்தபடி, மேடையில் அச் சின்னங்களுடனும், வனொலியிலும் அதை பண்பாடாக கூறியபடி, கோசம் போடுவதே பெண் விடுதலை என்கின்றனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியும், தமிழ் மக்களை ஆழ்ந்த அறியாமையிலும், வீட்டில் ஆணாதிக்க சினிமாவைக் கொண்டு தனிமையில் காலம் தள்ளி வாழும் அடிமைப் பெண்களின் தொலைபேசித் தயவிலும், பிழைப்பு நடத்தும் வனொலிகளின் அறிவிப்புத் திலகங்களின் பெண்ணியம் என்பது, நவீன ஆணாதிக்கத்தை பெண்ணுக்கு அணிகலனாக்கி அதை நடைமுறையில் கொண்டிருக்கும் "சுதந்திரத்தை" அங்கீகரிக்க கோருவதாகும். ஆணாதிக்க அடிப்படை நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரங்களை பேணியபடி "சுதந்திர" ஆணாதிக்கத்தில், பெண்களின் "சுதந்திர" ஆணாதிக்க நடத்தைகளை கோருவதில் இவை மண்டிக்கிடக்கின்றது. இப்படி நடைமுறையில் ஆணாதிக்கத்தை கொண்டபடி கோசம் போட்ட பெண்கள் புலம்பெயர் இலக்கியத்துடன் எந்தவிதமான ஒட்டோ உறவோ கிடையாது.  புலம் பெயர் இலக்கியத்தை படிப்பதோ, அது பற்றி தெரிந்து கொண்டவர்களோ அல்ல. ஆனால் புலம் பெயர் இலக்கியம் மீது தேசியத்தை விலத்தி மற்றைய கோட்பாடுகளின் மீது நடத்திய பொது தாக்குதலின் பின்னணி என்ன? (பார்க்க பெட்டிச் செய்தியை.)

நீட்சே எதை சமுதாயத்தின் மிக உயர்ந்த பண்பாக வருணிக்கின்றாரோ, அதுவே  சுரண்டலில் தொடங்கி ஆணாதிக்கம் ஈறாக யதார்த்த மனிதப் பண்பாகவுள்ளது. "காமவேகம், வலிமை சக்திக்கு ஆசை, சுயநலம் இம் மூன்றும் தான் முப்பெருந் தீமைகளாகப் பன்னெடுங் காலமாகச் சபிக்கப்பட்டு வருதிருக்கின்றன. ஆனால் அம்மூன்றும் தான் மனிதத் தன்மையில் நல்லனவாக நான் எடை போடுகிறேன்"1 என்று சமுதாயத்தை பிளந்து, அதில் இதைச் சாதிக்கும் சிறுகூட்டத்தின் திமிர்த்தனத்தையே நீட்சே, உயர்வான மனிதப் பண்பாக காட்டமுயல்கின்றார். காமம், ஆசை, சுயநலம் என்பன மனித சமுதாயத்தை பிளந்து அதில் சிலர் மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக அனுபவிக்க கூடியவை. சமுதாயப் பிளவு இந்த சமுதாயத்தில் இல்லாத வரை, இதை ஒருக்காலும் யாராலும் சாதிக்க முடியாது. சமுதாயப் பிளவற்றதாக இருக்கின்ற போது, இந்த உணர்ச்சிகள் சார்ந்த மனித இழிவுகள் கற்பிதமாக மாறிவிடுகின்றது. உலகமயமாதல் சரி நாசிகளின் பாசிசம் சரி மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும் இதையே ஆதிமூல மந்திரமாக, தனிமனித நடத்தையாக கொண்டே, கோடான கோடி மக்களின் உதிரத்தையே உறுஞ்சிச் சுவைத்து ரசிக்கின்றது. இதை நீட்சே இயற்கையின் விதி என்கிறார். "உயிர் வாழ்பிறவிகள் அனைத்திடமும் கொள்ளையடிப்பதும், கொலை புரிவதும் லட்சணங்களாக அமைந்திருக்கின்றனவே! இயற்கை நியதி அது தான் அல்லவா?" என்று கூறி உயிரியல் விதியையே திரித்து கொள்ளையடிக்கவும், கொலை புரியவும் உரிமை உண்டு என்று, உரக்க பாசிட் கோட்பாட்டாளனாக மூலதனத்தின் பாதுகாவலனாக பிரகடனம் செய்கின்றார். உயிர்த் தொகுதிகளில் இரண்டு வேறுபட்ட உயிர்களுக்கிடையில் உணவுக்கான போராட்டம் கொலையோ, கொள்ளையோ அல்ல. இயற்கை அதற்கு அப்படி பெயரிட்டதில்லை. இயற்கை மறுத்த வர்க்க சமுதாயத்தின் சுரண்டல் பண்பாக உழைப்பை திருடிய போதே, இது கொள்ளையாகவும் கொலையாகவும் அடையாளம் காணப்பட்டது. கொலையும் கொள்ளையடிப்பதும் மனித இயல்புகளாக வர்க்க சமுதாயத்தில் மனித உழைப்பை சுரண்டியதால் உருவானவை தான். உயிர்த் தொகுதியில் உயிர் வாழ்தல் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றை ஒன்று உண்டு வாழ்வது நிகழ்கின்றது. இது சங்கிலித் தொடராக சுழற்சியாக நிகழ்கின்றது. ஆனால் மனிதன் அதை அப்பட்டமாக நிர்வாணமாக மீறுகின்றான்; மற்றவன் உழைப்பைச் சுரண்டி உபரியை திரட்டவும், அதைக் மூலதனமாக்கி அதை கொண்டு அடிமைப்படுத்தவும், மற்றைய உயிரினங்களை கொன்று கொள்ளையிடுவது என்ற பண்பு இயற்கையானது அல்ல. அடுத்து சொந்த மனித இனத்துக்குள் மற்றவன் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டு கொன்று போடும் தன்மை, உயிரியல் தொகுதியின் இயற்கையானவையல்ல. மனித இனம் இன்று உயிர்வாழ்வதற்குரிய மனிதப் பண்புக்கு இது நேர் எதிரானது. மனிதனை மனிதன் கொன்று அழித்து கொள்ளையிட்டிருப்பின், மனிதன் காட்டுமிரான்டி சமூகத்தை தாண்டி ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீட்சேயின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுயநலத்தில் ஆசைப்பட்டு காமத்துடன் அலைந்து, கொள்ளையிலும் கொலையிலும் கொழுத்து எழும் பூதமாகவே உலகமயமாதல் காணப்படுகின்றது. இதன் பண்பாடு, பொருளாதார கலாச்சார அலகுகள் அனைத்துமே, விதிவிலக்கின்றி இதுவே தாரக மந்திரமாக உயிருடன் உலாவருகின்றது. இதை தீவிரமாக்க வர்க்கப் போராட்டத்தை அடக்கியொடுக்க, பாசிசத்தையே அதன் மூல மந்திரமாக கொண்டு கூத்தடிக்கின்றது. சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதை வெறுக்கும் நீட்சே " ~மானுஷிகத்தின் எதிர்காலத்திற்கு மிகக்கொடிய விபத்தை விளைவிப்பவர்கள் நன்மை நியாயம்" என்கிற வாதங்களைப் பேசித்திரிகிறவர்கள் தான்! தீங்கானவர்களின் செயலைக் காட்டிலும்  இந்த நன்மை வாதிகளின் செயல் தான் மிகக் கெடுதலானவை."1 என்று கூறுவதன் மூலம் சமுதாய நலன் சார்ந்த நடத்தைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகின்றான். நன்மை, நியாயம் என்பன இந்த வர்க்க சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருப்பது, நீட்சேக்கு அருவருப்பூட்டி வெறுப்பூட்டுவதாக இருக்கின்றது. இதனால் சமுதாய நலன்களை தூற்றுவது, இது இருக்கின்ற சுரண்டல் அமைப்புக்கு தீங்கானவை என்றும், ஆபாத்தானவை என்று கூறி வெறுப்பதில் வக்கரிக்கின்றான்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் இன்று ஏகாதிபத்திய நாடுகளின் உலகமயமாதல் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்கி திணறுகின்றது. உலகம் என்பது மையப்படுத்தப்பட்ட அரசியல் பொருளாதார பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் வேகமாக தனித்துவங்களை இழந்து வருகின்றது. சுதந்திரமான ஜனநாயகம் என்பது உலகமயமாதலால் எல்லைக்குள் விரிந்த வடிவில் கோரப்படும் போது, இதை மறுப்பது ஜனநாயக விரோதமாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. உலகெங்கும் சிதறி பரந்து வாழும் மக்களின் தனித்துவமான பண்பாடுகள், கலாச்சாரங்கள், பொருளாதாரம், அரசியல் என அனைத்தும் இன்று உலகமயமாதலால் அமைதியாகவும், பொருளாதார ஆதிக்கத்தாலும், இராணுவ மிரட்டல் மற்றும் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றது. இதற்கு எதிரான உணர்வுகள் போராட்டமாக மக்களின் வாழ்வியல் பிரச்சனையாக எழுகின்ற வரலாற்றில், தேசியம் முதல் பாட்டாளி வர்க்கப் போராட்டம் வரை உயிர்ப்புள்ள மக்களின் சித்தமாக காணப்படுகின்றது.

மலடாகிப் போன வக்கற்ற புலம்பெயர் இலக்கிய நடத்தைகளை இட்டு எழுதுவது காலத்தையும், இடத்தையும் விரயமாக்குவதாகவே மாறிவிட்ட நிலையில், இதை அம்பலம் செய்யும் வகையில் சிற்சில குறிப்புகள் அவசியமாகி விடுகின்றது.

ஐரோப்பிய பாலியல் வக்கிரத்தை தீர்க்க சுற்றுப் பிரயாணத்தை செய்த சாருநிவேதா, இந்திய ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு சார்பான மேட்டுக் குடி பெண்களின் அலைந்து திரிந்து அனுபவிக்கும், நுகர்வு விபச்சாரத்தை ரசித்து அனுபவித்த ஆணாதிக்க வக்கிர வெறியை இலக்கியமாக்கி, அதை புலம்பெயர் வக்கிரங்களுக்கு புலம்பியபடி, ஐரோப்பிய விபச்சாரிகளை வீதி விதியாக தேடி, பரந்த பெரிய மார்பகங்களை கண்டுபிடித்து (இப்படியான பெண்களே வேண்டும் என்று கோரி தேடியலைந்தான்) அவர்கள் முன் அமர்ந்தே, இலக்கிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த புரட்சிச் செம்மல். ஆணாதிக்க பாலியல் வக்கிரம் பிடித்த இந்தச் செம்மல் 1.2.2001 குமுதம் இதழில் "கஞ்சா புகைத்தபடி" ஆடை அவிழ்ப்பை நடன (டிஸ்கோவில்) மண்டபத்தில் செய்ததாக வாக்கு மூலம் கொடுக்கின்றான். கஞ்சா அடித்தபடி ஆணாதிக்க வக்கிரத்தை ரசித்து இலக்கியம் படைக்க, கோப்பை கழுவி கூப்பிட்டதாக இந்த ஆணாதிக்க பன்றி அதில் எழுதத் தயங்கவில்லை. பாரிசில் ஸ்ராலின் பேய் கலைக்க வந்த இடத்தில், சாதித்தது எல்லாம் இவைதான். இந்த பச்சைப் புளுகாண்டி கஞ்சா அடித்த போதையில் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை தீர்க்க கூப்பிட்ட புலம்பெயர் பின்நவீனத்துவ தலித்துகள், நாள் ஒன்றுக்கு 30 மணி (!!) நேரம் உழைத்து, 30 மணி முடிய (!!) மயங்கி விழுந்ததாக கூறுவது, பார்ப்பான் தியாகராயர் சிதம்பரம் சென்ற போது திரைச்சீலை அறுந்து விழுந்து திருவுருவம் காட்டியது போல் அதிசயமானது. இது போன்ற பல புளுகுகளை குமுதம் ஊடாக வெளியிட்ட சாருநிவேதாவை, 30 மணி நேரம் மயங்கி விழ விழ கோப்பை கழுவி அவரை கூப்பிட்டு தூக்கி திரிந்து, விவாதம் நடத்திய எல்லா எழும்பு சுப்பிகளின் "சுதந்திர" "இலக்கிய" தலித் பின்நவீனத்துவ "முதுகு எலும்;புகளிடம்" குலைத்து நக்க இதை விட்டுவிடுவோம்;. "அரசியல்வாதிகளால் கவிஞர்களைப் புரிந்து கொள்ள முடியாது. வெறுமனே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவே முடியும்" என்று சாருநிவேதா கூற, அம்மா இதில் இருந்து தனது இலக்கிய கோட்பாட்டை வகுக்க, அதன் ஆசிரியர் குறிப்பில் "இன்றைய இலக்கியச் சூழல் ஓர் கலகக்காரரின் வருகைக்காக காத்துக்கிடக்கிறது..." என்ற தலைப்பிட்டே இதை எடுத்துக் காட்டி, ஒரு கலகக்காரனுக்குரிய பெருமை கொடுத்து பெருமைப்பட்டு சாமரை வீசத் தயங்கவில்லை. கஞ்சா அடித்து ஆணாதிக்க வக்கிரத்தை (சினிமாவில் ஆடவைக்கப்படும் பாலியல் வக்கிர நடனங்கள் மற்றும் காட்சிகள் போல்) கொட்டித் தீர்க்கும் கோட்பாட்டு சமூகவிரோதிகளை, அரசியல்வாதிகள் சரியாக புரிந்தே இருப்பதை இவை மீண்டும் உறுதி செய்கின்றது. இங்கு அரசியல்வாதிகள் என்பது பாட்டாளி வர்க்கத்தை குறித்தே நிற்கின்றது. (இந்த நடத்தைகளில் ஈடுபடும் சாதாரண மக்களை, கோட்பாட்டு இலக்கிய தளத்தில் இருந்து வேறுபிரித்தே பாட்டாளி வர்க்கம் அணுகுகின்றது.) இந்தியாவில் கோடான கோடி மக்கள் கொத்தடிமையாகவும், சாதிய கொடூரத்தாலும் மற்றும் சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் உதிரத்தை மறைமுகமாக ஆதாரமாக கொண்டு, சொகுசாக வாழும் இந்த பன்றிகளின் சமூக விரோத வக்கிர இலக்கியங்களை பாட்டாளி வர்க்கம் சரியாகவே மீண்டும் இனம் காண்கின்றது. அதையிட்டு மூலதனமும், அதை வாலாட்டி சூப்பித் தின்னும் நாய்களும் குரைக்கின்ற போதே, எமது விமர்சனத்தினதும்; போராட்டத்தினதும் சரியான பாதையை மீளவும் உறுதி செய்கின்றது.

அண்மையில் பிரஞ்சுப் பத்திரிகையான லிபரேசனுக்கு (LIBRATION - 15.12.2000), சிறந்த சிறுகதை எழுத்தளார் என்று ஒளிவட்டம் கொடுக்கப்பட்ட கலாமோகன் கொடுத்த கருத்துகளில், வலதுசாரி அரசியல் புளுத்துப் போய் வெளிப்பட்டது. இக்கருத்துகள் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக, பிரஞ்சு ஏகாதிபத்திய நோக்கத்தை திருப்தி செய்து, அதன் நலன்களை பாதுகாக்க முனைந்து நிற்பதை இனம் காட்டி அம்பலம் செய்வது அவசியமாகும். "பிரான்சில் புகலிடம் பெற்ற தமிழ் அகதிகளில் 90 சதவீதமானவர்கள், கள்ள (பொய்யான) அகதிகள் ஆவர். ஏனென்றால் இவர்கள் பிரஞ்சு பிரஜா உரிமை பெற காத்துக் கிடப்பவர்கள்" என்று சிறந்த சிறுகதை எழுத்தாளர் என புகழப்படும் கலாமோகன், தன்னைத் தானே நிர்வாணப்படுத்த தயங்கவில்லை. இந்தக் கூற்று சர்ச்சைக்குள்ளாகியதை அடுத்து, கலாமோகன் 23.12.2000 வெளியிட்ட துண்டுபிரசுரத்தில், லிபரேசன் பத்திரிகை தனது கருத்தை திரித்து, அகதிகளுக்கு எதிரான வகையில் பயன்படுத்திவிட்டதாகவும், அதை நிவர்த்தி செய்ய அவர்களிடமே இடம் கேட்டிருப்பதாகவும் கூறி, தனது சொந்த வலதுசாரி அரசியலுக்கும், பாலியல் வக்கிர இலக்கியத்துக்கும் கவசமிடமுனைகின்றார்.

வேலணை மத்திய மகாவித்தியாலய நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர் உரை ஒன்றை செய்த வாசுதேவன்,  மேற்கின் மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் அதன் பண்பாட்டையும், இலங்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறிய, உலகமயமாதலின் பண்பாட்டு அடிப்படைகளை காவிச் செல்ல தயாராக இருப்பதை பறைசாற்றினர். மூன்றாம்  உலக நாடுகளின் கல்வி சமூக கண்ணோட்டமற்ற  மூடத்தனத்தையும், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலும், ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள அதிகார வடிவங்கள் விமர்சனத்துக்குரியவை தான். இந்தக் கல்வியை உருவாக்கிய காலனியாதிக்கவாதிகளின் பொருளாதார நோக்கத்தை ஈடு செய்வதில், இதன் அடிப்படை நோக்கமும்  உள்ளடக்கமும் இதன் சாராம்சமாக இன்று வரை திகழ்கின்றது. ஆனால் இதை அரசியலில் இருந்து பிரித்து எடுத்து மேம்போக்காக எதிர்த்து மேற்கின் கல்வி மற்றும் பண்பாட்டினை முன்னிறுத்தி, அதை எமது கல்விக்கு மாற்றாக முன்வைத்து தீர்க்கக் கோருவது தான் இங்கு விசித்திரமானது. உலகமயமாதலை தூக்கி முன்னிறுத்தி காவிச் செல்ல நேரடி ஆக்கிரமிப்புகள் தேவையில்லை, புத்திஜீவித்தனத்துடன் கூடிய மேற்கு பொருளாதார பலத்தினை ஆதாரமாக கொண்ட அறிவுத்துறையினர் மட்டும் போதுமானதாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE