Language Selection

பி.இரயாகரன் - சமர்

அடுத்து இருண்ட "இருள்வெளி" தொகுப்பில் முதல் தொகுக்கப்பட்ட  Nஐhர்ஐ.இ.குருஷ்ஷேவ்வின் "வாக்களிக்கப்பட்ட பூமிக்கு" என்ற இலங்கையரசு சார்பு கட்டுரையைப் பார்ப்போம்.

அண்மையில் இந்திய நீதிமன்றம் சிறுபான்மை ஆளும்வர்க்கத்தின் நீதியின் பெயரால், உன்னதமான ஜனநாயகத்தின் பெயரால் அப்பாவிகள் இருபத்தியாறு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உலகுக்கு புதியனவா? ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைக்குள் நீடிக்கும் நம்பும் பிரிவுக்கு இவை ஆச்சரியமான அதீசயமான அதிர்ச்சியான விடையங்களாக மாறிவிடுகின்றது. இந்த தீர்ப்பையொட்டி, இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும், நாட்டிலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தனிவெளியீடுகள் இந்தியா ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டதுடன், தீர்ப்புக்குள் தமது அதிப்தியை வெளியிட்டு இந்த சிறுபான்மை ஆளும் வர்க்க ஜனநாயகம் அதிராமல் இருக்க கருத்துரைத்துள்ளனர்.

"தென்னாசிய சமூகத்தில் பெண்நிலைவாதம்" என்ற தலைப்பில் லஷ்மியால் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தென்னாசிய பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து தமது கோட்பாட்டு இணக்கத்துடன் விசுவாசமாக எடுத்து எக்ஸிலில் முன்வைத்துள்ளார். இதை ஆராய்வோம்.

சரிநிகர் 144 இல் ஸ்பாட்டகஸ்தாசன் என்பவர் ஜெர்மனியில் இருந்து வாசகர் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இவர் சரிநிகரில் வெளிவந்த எம்.ஆர்.ஸ்ராலினுடைய விமர்சனத்தை விமர்சித்த தொடர்ச்சியில், இலக்கியச் சந்திப்பில் ஜெயபாலன் புலிகள் திருந்திவிட்டனர் எனக் கூறியதை "சமர்" விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்ததை "பொய்ச் செய்தி" எனக் குறிப்பிட்டு பலகருத்துகளை வெளியிட்டிருந்தார்.

உலகம் புதிய ஆக்கிரமிப்புகளை உலக மயமாதல் மூலம் சந்திக்க தொடங்கிவிட்டது. அமெரிக்க தலைமையிலான ஒற்றை உலக அமைப்பு மற்றைய ஏகாதிபத்தியங்கள் உடன் இனைந்து உலகை பங்கிட்ட போக்கில் புதிய பரிணாமங்கள் அரங்கிக்கு வந்துள்ளது. இதுவரை காலமும் பொருளாதார ஆக்கிரமிப்பு மூலம் உலக மயமாதலை ஏகாதிபத்தியம் நடைமுறையாக்கிய போக்கில் புதிய பரிணாமாக அண்மையில் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது நடத்திய இராணுவ தாக்குதல் எல்லை கடந்த அதிகாரத்தை ஏகாதிபத்தியம் சட்டப்படியாக்க ஐனநாயக வடிவமாக்க மாற்றத் தொடங்கியுள்ளது. தனிநபர் பயங்கர வாதங்களை தமக்கு சாதகமாக்கி தேசங்களின் தேசிய எல்லையை அழிக்கும் ஆக்கிரமிப்பில் உலக மயமாதல் இராணுவத்துறையிலும் அப்பட்டமாக தொடங்கியுள்ளது.

அண்மையில் கோட்பாடற்ற பிரதிநிதிகளின் வெளியீடாக பிரான்சில் இருந்து எக்ஸில் தனது முதலாவது இதழ் வெளியீட்டிருந்தனர். இவ்விதல் கோட்பாடற்ற நிலைக்கூடாக எதை நியாயப்படுத்துகின்றனர் என அவர்களின் வரிகளுடாக எக்ஸிசில், தனது முதல் ஆசிரியத் தலையங்கத்தில் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

"தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியம் "

பழைய சரக்குகள் அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல புதிதாக அந்தோனிசாமி மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை" என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்கக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

இலங்கையில் இனங்களுக்கிடையே தொடரும் யுத்தமும், அதன் பரிணாமவளர்ச்சியும், இலங்கையில் முற்போக்கு மற்றும் புரட்சிகர அரசியலும் அதை ஒட்டிய சக்திகளை இல்லாது ஒழித்துக் கட்டுகின்றது. இவை ஒருபுறம் அழித்தொழிப்பு மூலமும், மறுபுறம் சொந்த வர்க்க அடிப்படை மாற்றத்துடன் முற்றுப் பெற்றுவருகின்றது.

குப்பையைக்கிண்டி பொறுக்கி வாழ நிர்ப்பந்திக்கும் நவநாகரிக உலகில், மிருகத்திலும் கேவலமாக எலும்புக் கூட்டு மனிதனாக வாழ நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த "ஐனநாயக சமாதான" உலகம். இங்கு  நூற்றியிருபது கோடி மக்கள் அடுத்த நேர உணவுக்கு வழி தெரியாது பரிதவிக்கும் படுமோசமான வறுமையில் வாடுகின்றனர். ஐம்பது கோடி  மக்கள் ஒரு வாய் குடிக்க தண்ணீர் இன்றி   பரிதவிக்கின்றனர். இருபத்திஐந்து கோடி பச்சிளம் பாலகர்கள் உடல் உழைப்பிலும், விபச்சாரமும் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதே தொகை கொண்ட  மக்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்டு தொட்டாலே தீட்டு எனக் கூறி சேரியில் தள்ளி கையேந்த வைக்கப்பட்டுள்ளனர். இப்படி எங்கும் எல்லாம் உலகமே மனிதனின் துன்பங்களினதும் துயரங்களினதும் நரகமாய் சாக்கடையாய் உள்ளது.

இதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலை. பறிகொடுத்த தங்கள் உறவுகளுக்காக போராடும் மக்கள், தங்கள் சொந்த சட்டபூர்வமான நிலங்களுக்காக போராடுகின்ற அவலம். தமிழ்மக்கள் தங்கள் பூர்வீக பிரதேசத்துக்காக போராடிய மக்கள், இன்று தங்கள் வாழ்விட உரிமைக்காக போராட நிற்பந்திக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக வடக்கில் வெளிப்படும் உணர்வுகள், கிழக்கில் வெளிப்படவில்லை. ஒடுக்குமுறையும், விழிப்புர்ணவும், சோரம் போதலும் பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்ற பின்னணியில், வடக்குகிழக்கில் இனவழிப்பு புதிய வடிவம் பெற்று இருக்கின்றது. யுத்தகாலத்தில் யுத்த வன்முறை மூலம் எதையெல்லம் செய்ய முடிந்ததோ, அதை யுத்ததின் பின்னலான கொள்கையாக நடைமுறையாகக் கொண்டு அரசு செயல்படுகின்றது.

ஐரோப்பியப் பயணக் கட்டுரை எனக்குறிப்பிட்டு அ.மார்க்ஸ் வெள்ளைத்திமிர் என்ற நூல் ஒன்றை வழமைபோல் விடியல் பதிப்பகமே வெளியிட்டுள்ளது. அ.மார்க்ஸ் ஐரோப்பா வந்து சென்றதை ஒட்டி தொகுக்கப்பட்ட நூலில் ஐரோப்பிய வாழ்வின் எம்மவர்களின் (புலம்பெயர் தமிழரின்) கருப்புத்திமிர் பக்கத்தை மறைத்தும் தனது குருட்டு அரசியலுக்கு எது பொருந்துமோ அல்லது எதை பொருத்த முடியுமோ அதை பொருத்தி வெளியிட்ட நூலே "வெள்ளைதிமிர்" என்ற கருப்புதிமிர் நூல்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE