Language Selection

பி.இரயாகரன் - சமர்

அம்மா 5இல் வெளியாகிய விமர்சனங்கள், கதை  மற்றும் அம்மா 4 இல் வெளியகிய விமர்சனம்  தொடர்பாக, அதன் உள்ளடக்கத்தை ஒட்டிய அரசியல் வர்க்க நிலைப்பாடுகளை ஆராய்வோம்.

"வளர்மதியும் ஒரு வாசிங்மெசினும்" என்ற இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய சிறு கதையை ஷோபாசக்தி அம்மா 4 இல் விமர்ச்சித்தார். இதைஓட்டி அம்மா 5இல் அழகலிங்கம் மேலும் மார்க்சியத்தின் பெயரால் பூசிமொழுகி உள்ளார். மற்றும் கதை அதற்க்கு வெளியில் இலக்கியம் தொடர்பான பல கருத்துகள் வெளியாகி உள்ளது.

கலை இலக்கியம் யார்ருக்காக எதற்க்காக படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி, இன்று சமூகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் உள்ளது. படைப்புகள் படைக்கப்பட்ட பின் அதன் கலை அம்சம் மட்டும், புகழுக்குரிய சிறந்த படைப்புகளாகி விடுகின்றன. படைப்பின் உள்ளடக்கம் அதை ஒட்டிய சமூகப் பார்வை என்பது விவாத்துக்குரியதாக பார்பது என்பது, கலை இலக்கியவாதிகள் மீதான சட்டாம்பித்தனமானது என சேறு அடிக்கும் நிலையில்,படைப்புகள் பற்றிய துல்லியமான ஒரு விவாதம் அவசியமாகின்றது.

அண்மையில் இறந்து போன கம்பூச்சியாவின் போர்க்குணம் கொண்ட வீரமிக்க மார்க்சியவாதியான பொல்போட், ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு துரத்தியடித்ததுடன், சொந்தப் பொருளாதாரத்ததை கட்டியமைக்கும் போராட்டத்தில், உள்நாட்டு எதிர்புரட்சியும் ஏகாதிபத்திய சதிகளும் சோவியத்ஆக்கிரமிப்பும் ஆக்கிரமிப்பாளன் விட்டுச் சென்ற அழிவுகளும் சேர்ந்து பாரிய நெருக்கடிகள் ஊடாக நாட்டை மீட்யெடுக்க போராடினர்.

இதன் தொடர்ச்சியில் வியட்நாம் ஆக்கிரமிப்பும் அதன் தொடர்ச்சியில் பின்வாங்கிச் சென்று தொடர்ந்தும்போராடினர். இருந்த போதும் போரட்டத்தில் விட்ட தவறுகள் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

மறுபுறம் ஏகாதிபத்தியம், கம்பூச்சிய போராட்ட புதல்வார்கள் மீது தமது கடந்தகால தோல்விகள் மற்றும் தொடர்ச்சியான சுரண்டலை நடத்தும் கனவுகளுடன் சர்வதேச ரீதியாக அவதூறு பொழிந்து தள்ளுகின்றது.

அதைப் பொறுக்கி எடுக்கும் முற்போக்கு மூகமுடி போட்ட நயவஞ்சகர்கள்; மனிதாபிமான பெயரில் கடை விரிக்கின்றனர்.

வரலாறு கம்பூட்சிய புரட்சிகர வரலாற்றை தனக்கே உரிய வகையில் விமர்சனக் கண்கொண்டு மீளப்பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.

சரிநிகர் 133 இல் (ஒக்-நவம்பர் 1997) சரிநிகரின் முக்கியமானவரும் சரிநிகரின் அரசியலைத் தீர்மானிப்பவருமான நாசமறுப்பான், 'முன்றும் முன்றும் முடிபும்" என்ற கட்டுரையில், இனவாதத்தை மூடி மறைத்து மீளவும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமாக மாறிய விந்தையைப் பார்ப்போம் .

சுவடுகள் 78 இல் யமுனா ரா ஜேந்திரன் என்ற சுரண்டும் வர்க்க எழுத்தாளன் படைப்பாளி பற்றிய குறிப்பில் 'எல்லா அமைப்புக்களுக்கும், மாற்றுக்கருத்தை ஒடுக்கும் எல்லா அரசியல் அமைப்புக்களுக்கும் பொருந்துபவை. சர்வாதிகாரம், ஐனநாயகம், கம்யூனிசம் என நிலவிய எல்லா அமைப்புக்கும் பொருத்திப் பார்க்கிறார் ரோமன் போலன்ஷ்க்கி (போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தற்போது பாரிசில் வாழ்கிறார்) இடது சாரிகளின் மனித உரிமை ஒரு அரசியல் தந்திரோபாயமாகவே இருப்பதை விமர்சிக்கிறார் டோப்மேன். என யமுனா முதலாளித்துவ சுரண்டலுக்காக இழுத்து எடுத்து முன்வைத்து பிதற்றி உள்ளார்.

உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான், இந்தப் பத்திரிகைகளின் ஒரே அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக நிர்வாணமாகத் தெரிந்தன. சரிநிகர் 130 இல் ரத்னா என்பவர் " பரந்துபட்ட உலகமக்கள் டயானாவின் மூலமாக ஒரு பழம் பெருமிதம் உடைபடுவதைக் கண்டார்கள். ---- அவர் இன்னொரு திரேசாவாக இயங்குவதை வரவேற்றார்கள். --- அன்று தொடக்கம் இன்றுவரை பெண் என்ற ஒரே காரணத்துக்காக சமூக, கலாசார ரீதியான துன்பங்களை அவள் எந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த வகையிலும் சரி அநுபவித்தேயாக வேண்டும். ... ஒரு பெண் என்ற விதத்தில் தான் விரும்பியபடி வாழ்வதற்கு அவருக்கு இருந்த நெருக்கடிகள் வேறெந்தப் பெண்ணுக்குமிருந்த பொதுவான நெருக்கடி தான். .... இந்த வகையில் இரக்க சுபாவமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட டயானா என்ற பெண்ணின் மரணத்தில் இரத்தக்கறை ஆணாதிக்க சமூகத்தின் கைகளில் படிந்திருப்பது மறுக்க முடியாததே ".

அமெரிக்க ஏகாதிபத்தியம் அண்மையில் புலிகளை தடை செய்து இருந்தனர். உலக பொலிஸ்காரனும் உலக அடாவடிக்காரனும் உலக வன்முறைக்கு தலைமை தாங்குபவனுமான அமெரிக்கா புலிகளை தடை செய்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய கோரிக்கையை ஒழித்துக்கட்டி விடமுடியும் என நம்புகிறது.

தமிழன் என்றால் எப்படியும் கொல்லலாம், எப்படியும் நடத்தலாம். இதுதான் இலங்கையின் அதிகார வர்க்கத்தின் நடைமுறை. இன அடையாளம் மட்டும் போதும், அவர்களைத் தண்டிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது. நாட்டின் சட்டம் நீதி எல்லாம் தமிழனுக்கு கிடையாது என்பது, பொது நடைமுறை. தாம் அடித்தே கொன்ற பிணத்தைக் கூட, கொடுக்க மறுக்கும் அளவுக்கு தங்கள் இனவாதக் கொடூரங்கள் மூடி மறைக்கின்றது அரசும் நீதித்துறையும். நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த அரசு தான், தாம் கொன்ற பிணம் கூட நாட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று கூறுகின்றது. இந்த நிலையில் காணமல் போன 15 ஆயிரம் பேரின் விபரத்தை, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு இலங்கையிடம் கோருகின்றது.

தமிழில் எழுதிக் கொண்டிருப்போர், தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இனவாத ஒடுக்கு முறையையோ, அந்த மக்களின் அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகள் போராட்டங்கள் தியாகத்தைப் பற்றி அக்கறையோ, எழுத்தையோ முன்வைக்க முடியாது, தமிழ் மக்களில் இருந்து அன்னியப்பட்ட தமது தனிமனித வக்கிரங்களால் படைப்புக்களை இலக்கியங்களாக பேந்து விடுகின்றனர்.

பாரிசில் இருந்து வெளியாகிய 'எக்ஸில்' இதழ் ஒன்றில் எஸ்.வி. ரஃபேல் என்பவர் "விளக்கமளிப்புக் கோட்பாட்டு அணுகுமுறைகளை.....?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவரே பாரிசில் வெளியாகிய "இருள்வெளி" மலரில் "பெண்ணியத்தை அணுகுதல் குறித்து" என்ற கட்டுரையையும் எழுதியிருந்தார்.

அண்மையில் பாரிசில் இருந்து "இருள் வெளி" என்ற தொகுப்பு மலரை சுகன் வெளியிட்டிருந்தார். இம்மலர் திட்டவட்டமாக பட்டாளிவர்க்க எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெளியாகியுள்ளது. தொகுப்புரையில் ஒரு வார்த்தை கூட சுரண்டலுக்கு எதிராக பேசாது மௌனம் சாதித்து சுரண்டுவோருக்கு கம்பளம் விதித்தவர், சுரண்டலுக்கும் ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கு எதிராக போராடும் மார்க்சியத்துக்கு எதிராக தனது தாக்குதலை நடத்தியதன் மூலம் குரு அ.மார்க்ஸ் போல் சுரண்டுவோரையும், அதன் எழுத்தாளர்களையும் புல்லரிக்கவைத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE