Language Selection

பி.இரயாகரன் - சமர்

“கூட்டத்தில் பேச முனனர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், "வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா? அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா? கடந்த 30 வருடங்களாக அவர் எதனை முன்னெடுத்துச் செல்கின்றார்?

பிரமுகராக இருப்பதையும், கொசிப்பதையும் இலக்கிய அரசியல் வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு இது அக்கறையற்றதாக இருக்காலம். தண்ணி அடிப்பதையே உயர்ந்தபட்ட அரசியல் ஒருங்கிணைவாக கொண்டு வாழ்பவர்களுக்கு, இதுவொரு அரசியல் விடையமே அல்ல. தங்கள் கூட்டாளிகள் பற்றி இப்படி கூறுவது, அதற்கு நாம் அரசியல் ரீதியாக வேட்டு வைப்பது கண்டு, அரசுக்கு எதிரான நடைமுறையை மறுக்கும் இவர்கள் "அரசு எதிர்ப்பு" வேசம் மட்டும் போட்டுக் காட்ட முடியும். இந்த வேசம் கூட தங்கள் சுய இருப்புக்கானதே ஒழிய, மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டுதைக் கோருவதுமல்ல, அதற்காக தாமைத் தாம் அணிதிரட்டுவதுக்குமல்ல. பிரமுகராக இருப்பதற்கான, கொசிப்பதற்கான அடையாள அரசியல். இந்த வகையில் அ.மார்க்ஸ் இவர்களின் பங்காளியாக இருக்கின்றார்.

10-4-96 ல் ஐ.நா ஆய்வறிக்கை ஒன்றின் புள்ளி விபரத்தின்படி ஓர் ஏழைநாட்டில் வாழ்பவனின் வருமானத்தை விட பணக்கார நாடொன்றில் வாழ்பவனின் வருமானம் 18 மடங்கு அதிகமாகவுள்ளது. இது 1960களில் 13.3 மடங்காக மட்டுமே இருந்தது.

99.9 வீதமான   செய்தி அமைப்பு ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும்  விடாப்பிடி யாகத் தொடர்ச்சியாக  போல்போட் டிற்கு எதிரான அவப் பிரச்சாரத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.   கம்ப+ஜிய ஒடுக்கப்ட்ட மக்களின் தலைவராக  இருந்த போல் பொட் மிது  நடத்தப்படும் இச் சேறடிப்பு மூலம்  கம்ப+ஜிய மக்களின் வர்க்கப் போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்ட வரலாற்றையும்  அதன் வீரம் மிக்க போராட்டத்தையும் நசுக்கிவிட முடியும் எனக் கனவு காண்கின்றனர்.  இந்த வகையில் பாட்டாளிவர்க்க அணிகளும் தமக்கான அணிகளை ஊடுருவி இனம் கண்டு  உருவாக்கிய தன் மூலம் கட்சிகளும்  உள் முரண்பாட்டை மூட்டிவிட்டனர். இதன் தொடர்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் நடந்த உட்கட்சி மோதலின் பின்   பாட்டானிவர்க்க அணிகள் ஒடுக்கப்பட் டன. இந்நிலையில் போல்போட் உட்பட முன்னணி பாட்டாளி வர்க்க  தலைவர்களைக் கைது செய்துள்ள  கட்சியின் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ அணிகள்   போல்போட்டை அமெரிக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனமும்  முன் 18 வருடத்தில் பின் நிறுத்தி தமது    பிரச்சாரம் செய்கின்றனர்.

சமரானது கேள்வி-பதில் பகுதி ஒன்றை தொடர்ச்சியாக வெளியிட உத்தேசித்துள்ளது. உங்கள், எங்கள் கேள்விகளை, கேள்விக்கு உட்படுத்தி, எமது சமுதாய அறிவை உயர்த்துவது என்ற அடிப்படையில் வெளிவரும் இப்பகுதிக்கு, உள்கள் கேள்விகளையும் சமர் வெளியிடவும் பதில்தரவும் தயாராகவுள்ளது. நண்பர்களே எழுதி அனுப்புங்கள்.

தமிழ் இன அழிப்பை சந்திரிகா அரசு  தலைமையில் வேகப்படுத்தும் வகையில் சமாதானத்திற்கான யுத்தம் என கூறிய படி சிங்கள் இனவெறி காட்டுத்தாபார் கட்டவிழ்த்து விட்டுள்ளது. யாழ் நோக்கிய முன்னேற்றத்தாக்குதல்கள்  தமிழ்மண்ணை மேலும் மேலும்  கூறு போடுதல் பொருளாதாரத்தடை , கலாச் சாரச்சிதைவு, பெண்கள் மீதான பாலி யல் வன்முறைகள் ,  சொத்துக்களை எரித்து சுடுகாடாக்குவது என என்ன வெல்லாம்  செய்ய முடியுமோ எல்லாவற்றையும்  தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது சிங்கள இனவாதிக ளால். பெண்களைப் பாலியல்வதைக்குட் படுத்திவிட்டு புலிகளின் உறுப்பினர்க ளாக்குவது, சிறையில் தள்ளுவது , காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ப்பது, மோதலில் இறந்தவர்களாக் குவது புதைப்பது, பெண்உறுப்புக்குள்ளே குண்டுவைத்துத் தகர்ப்பது, எனத் எதைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் ஆணாதிக்க இனவெறியர்கள் கையாளுகின்றனர். இதை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிகா வின் ஆணைக்குழு ஆணாதிக்கவாதிக ளைப்பாதுகாக்க இனவாதிகளை நியா யப்படுத்துபவர்களாக அப்படியெதுவும் நிகழவில்லை  அல்லது தாமாகவே நிகழ்ந்தன என அறிக்கை எழுதிக் குவிக்கின்றன.

குருஷ்டிஷ்தான் தொழிலாளர் கட்சியை அழிக்கும் நோக்கில் துருக்கிய  பாசிச இராணுவசர்வாதிகாரிகள் தமது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்து  தாக்குதலை நடாத்தி 998 பேருக்குமேல் படுகொலை  செய்துள்ளதுடன்,  தொடந்து ஆக்கிரமிப்பை நடாத்திவருகின்றனர்.

சரிநிகர் 122 இல் ''ஆணில்ப+த்த கலாப+ர்வமும் முகிழ்த்த ரசனையும்'' என சுவீஸ்  ரவீந்திரன் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார்.   அதில் வரும் மார்க்சிய விரோத கருத்துத் திணிப்பபை அம்பலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரையை சமரில் எமுதுகிறோம்.   சரிநி கர்   திட்டமிட்டு எமது கருத்தை பிரசுரிக்க மறுத்து வருகின்ற நிலையில், எமது கருத்தை சரிநிகரில் எழுதமுடி யாத நிலையிலேயே  நாம் இதனை சமரில் எழுதுகின்றோம். நாம் அனுப்பிய பல கட்டுரைகள் இதுவரை பிரசுரிக்கப்  படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதித் தலைவர் சு.று.ஆவ விNதிலக்கா நீர், மற்றும் தொலைபேசி விலை உயர்வு தொடர்பாக குறிப்பிடும் போது, உலக வங்கியின் கட்டாயப்படுத்தலாலே இந்த விலை அதிகரிப்பு என்று குறிப்பிட்டு, இந்த அதிகரிப்பை கடந்த வருடமே அமுல்படுத்த கோரியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார். அமச்சர்களின் இழுத்தடிப்புத்தான் இந்த ஏப்பிரலில் அமுலுக்குவர காரணமென்று வேறு அறிவித்தார். இன்று அமைச்சர், அரசுக்கு மீறிய அரசாக உள்ளது. உலக வங்கியே ஆகும். இதன் இயக்கம் அமெரிக்காவின் கையில் உள்ளது.  ஏகாதிபத்தியங்கள், உலக வங்கி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஏழையாக்கியும் பணக்காரரை மேலும் பணக்காரனாக்கும் இன்றைய உலக சனநாயகத்தை உடைக்காதவரை மக்களுக்கு சனநாயகம் இல்லை என்பதை இது காட்வில்லையா? இது உங்கள் மூளைகளில் உறைக்கவில்லையா?

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தத்தை இலங்கையில் இனப்பிரச்சனைக்கு மாற்றாக முன்வைக்கக் கோரி பல வேறுபிரிலும் முன் தள்ளப்படுகிறது. இஸ்ரேல் பலஸ்தீனம் வழியில்  ஈழப் போராட்டத்தைக் கைவிடப் புலிகளைக் கோருகின்றனர். இந்த வேண்டுகோளை இலங்கை வந்த அரபாத் கூடவிட்டு வைக்கவில்லை.

மாவோ சொன்னார் '' பொருட்களின் சாராம்சத்தை உள்ளடக்கத்தில் தேடவேண்டும்  உலுவத்தில் அல்ல'' என்றார். ஆம் போலந்து போலிகள் உருவத்தில் கம்யுனிஸ்ட்டுக்கள்  .உள்ளடக்கத்தில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள். உலக பன்னாட்டு நிறுவனத்தின் எடுபிடிகலாக வலம்வரும் இந்தப்பிரதிநிதிகள்  கம்யுனிசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்க முயலும் கயவாளிக ளே.

ஜனநாயகத்தை மீட்ட அதாவது கொள்ளையடிக்க கதவுகளைத் திறந்த,  வலேசவுக்கு எந்த விதத்திலும் தாம் சளைத்தவர்கள் அல்ல, என்பதைப் போலிகள் உலகளவில் இனம் காட்டத் தீவிரமாக அலைந்தனர். அலைகின்றனர்.

மக்களை விட கொள்ளையடித்தவனைக் திருப்த்ப்படுத்தும் இந்தப் போலிகளையிட்டு,  பிரஞ்சு போலிக் கம்யுனிஸ்ட் டுக்கள்  இவர்களை '' சமூகசனநாயக வாதிகள் '' எனக் குற்றம் சாட்டி தம்மைப் பாதுகாக்க முனைந்தனர்.

அண்மையில் உலகை இரட்சிக்க வந்ததாக கூறிக்கொள்ளும் போhப் பாண்டவர் விஜயம் செய்தபோது போலிகள்; ஓடோடி வந்து கைகோர்த்தனர். எமது குறிக்கோளும் ஆண்டவனின் குறிக்கோளும் ஒன்றுதான் என பிரகடனம் செய்தனர். உலகை எப்படிக் கொள்ளையடிக்கலாம்  மக்க ளை எப்படி எப்படி ஏமாற்றலாம்  என்பதில் கருத்து முரண்பாடு இல்லையென  பிரகடனம் செய்தபடி தமது நோக்கத்தைத் தெளிவுபட விளக் கினர்.

ஆம் கம்யுனிச ஜனநாயக விரோதமா னது எனக் கூறி, மக்களின் அடிப்படை வசதியைக் கோருவது பயங்கரவாதம் என அறிவித்து, சிலர்  வாழும் வாழ்வு இறைவனின் கொடை என்றனர்.

அதை நிறைவு செய்ய முன்பு வலேசா மூலம் போப்பாண்டவர் நேரடியாகப்  போலந்தில்  இரகசியக் குழுக்களை அமைத்தும்,  அச்சகங்களை நிறுவியும்  இரகசிய அரசொன்றை நடாத்திய, இந்தக் கும்பல் தான் உலகை மீட்க வந்த இரட்சகர்களாகப் பிரகடனம் செய்கின்றனர்.

அதேவகையில் போலிக்கம்யுனிசக் கட்சியும்  தனது எல்லாவித புரட்சிகரக் கோசங்களையும் கைவிட்டு  விபச்சாரத் தில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இந்தத் துரோகத்தை நாம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா அல்லது எதிர்த்துப் போராடப் போகிறோமா என்பது எம்முன்னுள்ள ஒரேஒரு கேள்வி.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE