Language Selection

பி.இரயாகரன் - சமர்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூத இனவெறியர்கள் 2ம் உலகயுத்தின் பின் மிகமோசமான ஒரு காட்டாட்சியை நடத்திவந்தனர். ஜனநாயகம் பற்றி உரத்துக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் சாமரம் வீச, இஸ்ரேலிய இனவெறியர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்களை, அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கியொடுக்கி சுடகாடாக படுகொலைகளின் மூலம் இராணுவ ஆட்சிகளை இந்த ஜனநாயகத்தின் பேரில் நடத்தினர். இதை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களான பாஸ்தீன வீரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாத காட்டாச்சி நடத்தினர். கொள்ளை, கொலை, கற்பழிப்பு...ஊடாகவே இஸ்ரேல் என்ற இந்த நாடு உருவானது.

அம்மா

நண்பர்கள் என்னைத்தேடி வந்து

கதவிலே தட்டும் போதெல்லாம்

தாயே, நீ வெம்பிக் கண்ணீர் -மல்குவதை

எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

 

ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என்

சிறையிலே பிறக்கிறதென்று

நான் நம்புகிறேன் அம்மா.

என்னை இறுதியில் சந்திக்க வருவது

ஒரு குருட்டு வெளவாலாய்

இருக்காதென்றும் நான் நம்புகிறேன்

அது பகலாயத்தான் இருக்கும்

அது பகலாய்த்தான் இருக்கும்

 

சமீஹ் அல் காசீம்

நன்றி:- பலஸ்தீனக் கவிதைகள்-

சென்ற இதழின் இத் தொடர்ச்சியை நாம் மேலும் விரிவாக ஆராய்வது மேலும் மேலும் பிரஞ்சு சமுதாயத்தை புரிந்து கொள்வதன் மூலம் சர்வதேச சமுகத்தையும் புரிந்துகொள்ள உதவும். சர்வதேச ரீதியாக இவ்விடயத்தை உங்கள் முன் இக்கட்டுரையின் மூலமும் வெளிக்கொண்டு வருகின்றோம். சர்வதேச ரீதியாக உற்பத்தியை வருடம் (Pஐடீ) ஒன்றுக்கு நாம் முன்னணி ஒழுங்கில் ஆய்வு செய்வோமாயின்

உயிர்ப்பு-6 வெளிவந்துள்ளது. வழமைபோல மார்க்சிசத்தின் மீது இம்முறையும் சேறடிப்புத்தான். இம்முறை ஆசிரியர்தலையங்கங்கள், டிசம்பர் 1994 வெளியாகிய அ.மார்க்சின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற பகுதிக்குள் உள்ளடங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு கற்பிதம் என்ற வரையறையில் தொடங்கி அ.மர்க்ஸ் அதில் குறிப்பிட்ட சிவத்தம்பியின் சைவ வேளாளர் சித்தாந்தமே தேசியம் என்ற எல்லையைத் தாண்டிவிடவில்லை.

யூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரஞ்சு மண்ணில் நிற எதிர்ப்புப் போராட்டம் பரிணாமிக்கும் வகையில் கருப்பு இன மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப்போராட்டத்தை வன்முறை மூலம் நசுக்கிய பிரஞ்சு அரசும், பொலிசும் 50ம் நாள் இப்போராட்ட வீரர்களைக் கைதுசெய்து சிறைகளில் தள்ளினர்.

விடுதலைப் புலிகள் அண்மையில் முல்லைத்தீவு முகாமை முற்றுமுழுதாகவே கைப்பற்றி இருந்தனர். இது விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இத்தாக்குதல் தமிழ் மக்கள் மீதான இலகுவான இன அழிப்பை தற்காலிகமாக பின்தள்ளியதுடன், தென்னிலங்கை இனவாத இராணுவப் பிரச்சாரத்தையும் சிலகாலத்துக்கு பின்தள்ளியுள்ளது.

அண்மையில் சர்வதேச வீரர்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் ஜனநாயகவிரோத நிற இனவெள்ளை நாசிசத்தை இனம்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஒப்பந்தங்களை மட்டுமன்றி, சர்வதேச மனிதஉரிமை மீறல்களையும் மீறிவருவதாக அமெரிக்காமீது குற்றம்சாட்டியுள்ளனர். 260 பக்கங்களைக்கொண்ட இவ்வறிக்கையில் அமெரிக்காவிலுள்ள நிற மக்கள்மீது திட்டமிட்ட குற்றச்சாட்டுக்களையும், மரணதண்டனைகளையும் விசாரனையின்றி மனிதநாகரீகத்திற்கு எதிராக பொய்யாக சோடிக்கப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன.

அண்மையில் சர்வதேச மன்னிப்பு சபை பிரான்சில் இனவாதம் வளர்ந்து வருவதையும், அரசு இனவாதத்திற்கு துணை போவதையும் கண்டித்துள்ளது. லுபென் தலைமையிலான் நாசிக்கட்சி 30 லட்சம் வெளிநாட்டவரை உடன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் அதேநேரம், 25லட்சம் பிரஞ்சு பிரஜா உரிமை பெற்றவர்களைப் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கூறி தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

அண்மைக்காலமாக ஐரோப்பாவுக்கு வருகைதரும் இந்தியப் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது. இந்தவகையில்  அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரைஎனப் பாரிய விளம்hரங்களுடன் இங்கு சுற்றுப் பிரயாணம் செய்வதுடன், மார்க்சியவிரோத கருத்தையம் பரப்பியும் செல்கின்றனர். இதற்குப் பிரதி உபகாரமாக இங்கிருந்து தொலைக்காட்சிப் பொட்டி, வீடியோப் பெட்டியென எலற்றோனிக் முதல் எல்லாவித பொருட்களையும், பணமுடிச்சுக்களையும் கைமாற்றாக எடுத்துச்செல்கின்றனர்.

கடந்த காலங்களில் ஈழப்போராட்டத்தின் சீரழிவு காரணமாக வெளியேறி வந்த சமூக அக்கறைக்குரிய பிரிவு ஐரொப்பா எங்கிலும் தன்னால் இயன்றவரை செய்ய முயன்றனர். இந்தவகையில் உருவான பிரிவுகள் ஆரம்பத்தில் வெளியிட்ட கருத்துக்கள் சரியான மார்க்சிய வழியில் நின்று பல்வேறு கருத்துக்ளை செயல்களை முன்னெடுத்தனர்

 

அண்மையில் கொழும்பிலிருந்து வெளியாகும் சரிநிகர் வரமுடியாத வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு தடுத்து நிறுத்தியது. ஆசிரியரை மாற்றவும், செய்திகளை மாற்றவும் என எண்ணற்ற வேண்டுகோளுடன், பத்திரிகை ஆசிரியர் குழுமீது தமது அழுத்தத்தைப் பிரயோகித்தினர். இதன் தொடர்ச்சியில் ஆசிரியர், உழியர்கள் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் பின் பத்திரிகை வெளிவந்ததுடன் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டிருந்தது.

அண்மைக் காலமாக சில சம்பவங்கள் மீது, சில காலகட்டங்கள் மீது.., விமர்சனம் செய்வதன் மூலம், அதை மட்டும் தவறாக காட்டுகின்ற பம்மாத்தான "சுயவிமர்சன" "விமர்சன" அரசியலை அரங்கேற்றுகின்றனர். அம்பலப்பட்டுபோன புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, இந்த உத்தி மூலம், மீண்டும் மக்களை எமாற்ற முனைகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் சரியாக இருந்ததாக காட்டிக் கொண்டு, மீண்டும் அதை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் கூறும் "தவறான" சம்பவங்கள், "தவறான" காலகட்டத்துக்கான பொறுப்பை தனிநபர்கள் மீதும், குறித்த சூழல் மீதும், மற்றவர்கள் மீதும் சுமத்தும் இவர்கள், இது தாங்கள் கொண்டிருந்த அந்த அரசியலின் தவறல்ல என்கின்றனர். இதன் மூலம் மற்றவர்கள் மீது இலகுவாக குற்றம் சாட்டுவதன் மூலம், அதை தங்கள் சரியான அரசியலின் ஒரு "தவறாக" இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றனர். இது தவறு அல்ல, மாறாக அந்தந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் வெளிப்பாடாகும். இங்கு "தவறு" குறித்த இவர்களின் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்துடன் கூடிய அரசியல் மோசடியாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE