Language Selection

பி.இரயாகரன் - சமர்

எந்த எதிர்ப்பு அரசியலும் கூட குறைந்தபட்சம் இரண்டாக பிரிகின்றது. 1.செயலுக்குரியதாகவும், 2.இருப்பு சார்ந்த சடங்காகவும் பிரிகின்றது. இங்கு செயலுக்குரியது சமூகம் சார்ந்தாகவும், சடங்கு சார்ந்தது தனிமனிதன் சார்ந்தாகவும் தன்னை நடைமுறையில் வெளிப்படுகின்றது. இந்தவகையில் இரு வேறு தத்துவங்களும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் கூட உருவாகின்றது. இதுபற்றி பின்னால் விரிவாக பார்க்க உள்ளோம்.

இங்கு எதார்த்த வாழ்வைக் கடந்து தத்துவங்கள், கோட்பாடுகள் மூலமும், தங்கள் சொந்த நடைமுறையை நிராகரிப்பதன் மூலமும், பாசிட்டுகளுக்கு உதவுவது பிரமுகர்களின் பிழைப்புத்தனமாகும். இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு பின் எப்படி செயல்படுகினரோ அதே போன்றுதான் அன்று புலிக்கு பின்பும் இவர்கள் செயல்பட்டனர். உண்மையில் இவர்கள் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் நடைமுறை மார்க்சியத்தை எதிர்ப்பதன் மூலம், பாசிசத்துக்கு எற்ற நல்ல பிள்ளைகள் ஆனார்கள். இந்த வகையில் செயலை மறுக்கும் திண்ணை மார்க்சியம் முதல் பிரமுகர் மார்க்சியம் வரை அடங்கும். இந்த அரசியல் பின்புலத்தில் தான் பாசிட் அமைப்பின் தத்முவ பிரமுகர்கள் தொடங்கி மார்க்சிய பிரமுகர்கள் வரை பரஸ்பரம் உறவு கொண்ட, தம்மை அறிவுஜீவிகளாக முன்னிறுத்திக் கொண்டு அங்கும் இங்கும் கூடிக் கூலாவினர், கூலாவுகின்றனர். அங்குமிங்குமாக பாலம் காட்டுகின்றனர்.

வெள்ளை வானில் கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் தான் என்கின்றார் கோத்தபாய. தங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர்களை, அடித்துக் கொன்ற பின் பிணத்தைக் கூட கொடுக்கமுடியாது என்கின்றது அரசு. பிணம் நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி நீதிமன்றம் மூலம் தங்கள் பாசிசப் பயங்கரவாதத்துக்கு கவசமிடக் கோருகின்றனர்.

இது மட்டுமா அண்மைய சம்பவங்கள். இல்லை. வடக்கில் போராட்டத்தை நடத்துபவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றனர். நீதிமன்றம் இதற்கு மறுக்க, போராட்டத்தில் புலிக்கொடியுடன் புகுந்து ஆட்டம் போட்டும் அரச பாசிசப் பயங்கரவாதம், அதைக்காட்டி ஐயோ புலி என்கின்றது. இதுவும் அம்பலமாக, நீதிமன்றம் மூலம் தடைவிதிக்க மறுத்த நீதிபதி வீடும் தாக்கப்படுகின்றது. யுத்த குற்றக் கும்பலால் ஆளப்படும் நாட்டில், பாசிப் பயங்கரவாதம் தலைகால் தெரியாது இன்று ஆட்டம் போடுகின்றது.

ம் பக்கத் தொடர்...

நகைச்சுவைக்குரிய ஒரு வரியாகும். இதைத் தொடர்ந்துள்ள அடுத்தவரி "கடந்த காலங்களில் அருந்ததி பதித்த இலக்கியச் சுவடுகள்: கனதியானவை. பிரான்ஸ் புகலிட இலக்கியம் அரந்ததியைக் கடந்து: இதுவரை எதையும் பதிவு செய்ய வில்லை’’

என்ற வரிகள் அபத்தமானவை. சொந்தப் புகழ் தேடி தம்மைத்தாம் எழுதும் கூட்டத்துடன் இதுவும் சேர்ந்ததே. அருந்தி ஒரு போராளியாக, இலக்கியத்தில் சாதனையாளனாக மாறியது மாற்றியது என்ற சோகக் கூற்றை ஆராய்வோமாயின் அருந்ததி யார்?

அருந்ததி ஒரு சில நாடகங்களைப் போட்டதுடன், பிரான்சில் வெளியாகிய தேடல் இதழிலும் (7 இதழ்களே வெளிவந்தன), பின் ஒரு கவிதை புத்தகத்தையும் நாம் அறிய வெளியிட்டவர். இந்த அருந்ததி இந்தியன் ஆமி இலங்கையில் இருந்த காலம் வரை, அதை ஆதரித்தும்,  நுPசுடுகு ஐ பாராட்டியும் நின்றவர். இக்காலத்தில் இதற்கு முன்னரும் வெளிவந்தவையே இவையெல்லாம்.  அதுவும் தேடலில் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்து இருந்தாலும், ஈப்பி யை ஆதரித்ததால் அதில் பலர் வெளியேறியதும் வரலாறு. அருந்ததியின் இலக்கியம் அவரின் அன்றைய கருத்துப்போக்குடன் துரோகத்துடன் இணைந்திருந்தது.

எம் மண்ணில் வெளியாகிய புலிகளின் சில படங்கள், அருந்ததியின் முகம் என்பன வௌ;வேறு கோணத்தில் மசாலாத் தன்மையை நிராகதித்ததால் மட்டும் இப் படங்களை வரவேற்க முடியும். ஆனால் கருத்துத் தனத்தில் இப்படங்கள் பாரிய விமர்சனத்துக்குரியதே அருந்ததி போராளியானான் என்பது எமது போராட்டத்தில் ஆயிரமாயிரம் போராளிகள் தம்மை விடுதலைக்காக அர்பணிக்கும் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமமாகும். யாரோ ஒருவன் போராடி அழிந்துவிட அவன் பெயரால் போராட்டத்தில் ஈடுபடாத பிரிவுகள் அரசைக் கைப்பற்றுவதைப் போல அதன் வழியில்  அருந்ததி போராளியானான் என்பது, அவரின் மறுப்பு எதுவுமில்லாத ஒரு வரலாற்றுப் பொய்யுடன் கூடிய பிழைப்புவாத புகழுரைகளே.

ஒரு படைப்பு மக்களுக்காக, சொந்தப் புகழுக்காக அல்லாததாக இருக்க வேண்டும். வரலாற்றைத் திரிக்காததாக தமது நியாயப்படுத்த முடியாத தொழில்களை (இது ஓர் அகதியின் முக்கிய பிரச்சினை) படங்களில் விளக்குவதன் மூலமோ, அகதி நாட்டின் ஆளும் ஆட்சியின் கொடுமைகளைச் சொல்லாமல் நல்ல பிள்ளையாக நடப்பதன் மூலமோ, படைப்பும் படைப்பாளியும் மக்களுடன் இணைந்துவிட முடியாது

இந்திய ஏகாதிபத்தியங்களது  நலன்களுக்கு, தேசங்கடந்த  பன்னாட்டு  நிறுவனங்களின் கொள்கைக்கு கதவை அகலத்திறந் விட்டுள்ளது  இந்திய  மக்கள்  விரோத  அரசு. அந்நிய முதலாளிகள் இந்திய மக்களை  சுரண்டவும்,   இயற்கை வளங்களை சூறையாடி  சுற்றுச் சூழலை  நாசப்படுத்தவும்  ஆரம்பித்துள்ளனர். அன்னியர்களின்  இலாபவேட்டையில்  தமது  வாழக்கையை இழந்து  வரும்  மக்கள்  போர்க்கோலம்   ப+ண்டு   வருகின்றனர்.

இந்தியாவின்  கர்நாடக  மாநில  ஜனதா  அரசு இப்போது   7 மிகப்பெரிய  அந்நியத்தொழில்  நிறுவனங்களுக்கு  ஒப்புதல்அளித்துள்ளது.  அமெரிக்காவின்   நேரடி  முதலீடு   கொண்ட  "கொஜென்டிரிஸ்"   அனல்மின்நிலையம்  மட்டுமன்றி  அந்நியக்கூட்டுடன்  மிகப்பெரிய  தரகு  முதலாளித்துவ  நிறுவனங்ளும்  கர்நாடகாவின்  மங்கரைச்  சுற்றியுள்ள  பகுதிகளில்  தமது ஆலைகளை  நிறுவியுள்ளன.

நாகார்ஜூனா  எஃகு  நிறுவனம் , மங்க@ர்  எண்ணெய்  சுத்திகரிப்பு  ஆலை  கிரேசிம்  செயற்கை  இழை ஆடை  நிறுவனம் ,கனரா எஃகுத்  தகடு நிறவனம், பி,ஏ,எஸ்,எஃப் சாயத்தொளிற்சாலை ,உஷா இரும்புத்தாது   நிறுவனம் குதிரேமூக் இரும்புத்துத்தாது  நிறுவனம் முத லான  மிகப்பெரிய ஆலைகளின் விளைவாக இப்பகுதியே படிப்படிபடியாக நஞ்சாகி வருகின்றது.  ஆலைகளிலிருந்து வெளியேறும்  எண்தெணய், கிரீஸ்,அமோனியா,பினாயில்,சயனைடு,சலபைடு  மற்றும்  உலோகத்தாதுக் கழிவுகளின்  விளைவாக  நேத்ராவதி,குர்புர், சீதாநதி , சுவர்ணநதி  ஆகிய ஆறுகள் மாசுபட்டுப்போயுள்ளன.  நிலத்தடி  நீரும்  நஞ்சாகிப்;போயுள்ளது.  எல்லாவற்றிற்க்கும்  மேலாக  இந்நச்சுக்கழிவுகளால்  மீன்கள்  செத்து  மிதப்பதால்  மீனவர்களின்  வாழக்;;கையே  இன்று  கேள்விக்குறியாகிவிட்டது.  இது தவிர,  இந்

நஞ்சுக் கழிவுகளால்  சுற்றுச்சூழல்  கடுமையாகப்  பாதிக்கப்பட்டு  காடுகளிலுள்ள  அரிய விலங்கினங்களும்   ப+ச்சி-பறவையினங்களும்அழிந்து  வருவதாகச் சுற்றுச்சூழல்வாதிகள்  எச்சரிக்கின்றனர்.

இநிநிலையில்   கர்நாடகத்தின்  கடற்கரையோர   மாவட்டங்களைச்  சேர்ந்தவிவசாகிகளும்,  மீனவர்களும்  மாநில  அரசின்  புதியதொழிற்கொள்கையை  எதிர்த்து  போர்க்குணத்தோடு  போராடி  வருகின்றார்கள்.

கடந்த  டிசம்பர்  19ந்  திகதி முதல் 25ந்  திகதி  வரை   மங்க@ர் எண்ணெய்  சுத்திகரிப்பு-பெற்ரோலிய  நிறுலனத்துக்கு  எதிராக ஆ ர்ப்பாட்டம்-பேரணிகளை  நடத்திய  இம்மக்கள்  அந்நிறுவனத்தின்  எண்ணெய்க் குழாய்களையும்  உடைத்தெறிந்துள்ளனர்.  தடியடி,துப்பாக்கிச்சூடு   நடத்தியும்   முன்னணியாளர்கள்  300 பேரைக் கைது செய்தும்  பொலிசு அடக்குமுறையை  ஏவிய போதிலும்  இம்மக்களின்  போராட்டத்தை  அடக்கமுடியவில்லை.

இந்நிறுவனங்களுக்காக  விவசாய  நிலங்கள்  2000 ஹெக்டேர்  அளவுக்கு  விவசாயிகளிடமிருந்து   நயவஞ்சகமாக  பறிக்கப்பட்டு   அவர்களுக்கு  உரிய  நிவாரண  வசதிகள் செய்து தரப்படவில்லை.  விளைநிலங்களை  அபகரித்து தங்ளை  ஏமாற்றிய  அரசுக்கு  எதிராக விவசாயிகள்  ஏற்கனவே  போராட்டங்களை  நடத்தி வருகின்றனர்.  மத்தி யமாநில அரசுகளின் நாட்டைச்  சுடுகாடாக்கும் நாசகார  கொள்கையை  எதிர்த்து  ஏற்கனவே    "கார்கில்"   விதை  நிறுவனம் ,   "கெண்டகி"  கோழி இறைச்சி  நிறுவனங்களைத்  தாக்கியழித்த   கர்நாடக  விவசாயிகள்  இப்போது  ஏகாதிபத்தியக் கூட்டுடன்  நிறுவப்பட்டுள்ள  நச்சுக்கழிவு  ஆலைகளுக்கெதிராக  தமது  போராட்டத்தைத்  தீவிரப்படுத்தி  வருகின்றார்கள்.

நன்றி - புதிய ஜனநாயகம்.

பீகார்:-

பீகார் , நிலப்பிரபுத்துவ கொடுகோன்மையும் மேல்சாதி ஆதிக்கவெறியும் கோலோச்சுகின்ற இந்திய மாநிலம்  இராஜபுத்திரர்கள், ப+மிகார்,  குர்மி , யாதவ் போன்ற மேல்சாதி நிலப்பிரபுக்களும் , சாதி ஆதிக்க சக்திகளும் தான் கிராமப்புறங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்து   அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.  இவர்களே தேர்தலில் நின்று வெற்றி பெற்று  எம். எல். ஏ , எம்.பி , மந்திரி பதவிகளை கைப்பற்றிக்  கொள்கின்றனர் அரசு அதிகாரிகள். பொலிசு, ஓட்டுக்கட்சித் தலமை அனைவரும் கைப்பாவைகள் தான்.

ஜெர்மனிய அரசும், அதன் அரசுயந்திர உறுப்புமான பொலிஸ் நாசிஸ்ட்டுக்களின் வாரிசுகள் தான் என்பதை அண்மைய சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை மீளவும் ஒரு முறை தெளிவாக்கியுள்ளது.

5-5-96ல் சர்வதேச மன்னிப்புசபை வெளியிட்ட அறிக்கையில் ஜெர்மனியின் சில பொலிஸ் நிலையங்களின் பெயரைக் குறிப்பிட்டு , அங்கு வெளிநாட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தெரிந்த ஆதாரங்கள் கொண்டவை மட்டுமே. ஆனால் உண்மையில் இதன் கொடூரம் வெளிவராத புதைகுழியாகவே உள்ளது.

சரிநிகர் 92ல் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரி யர் சங்க உறுப்பினர் கலாநிதி சிறிதரனின் வாக்குமூலத்தைப் பார்ப்போம்:-


"புலிகளின் பிரதான அரசியல், யுத்தம் யுத்தம் என்பது, தீய சக்தி யாக தொழிற்படுவதாகும். புலி களின் தீய இயல்பு, சிங்கள அரசை மிகவும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இச் செயலி னால் சிங்கள, தமிழ் மக்களிடை யே நம்பகமற்ற தன்மை ஏற்படுகிறது.’’

என்று புலம்பும் சிறிதரன் இன வாதிகளின் காவடியாக எல்லாம் புலிகளே எனக் கூறுகின்றார். புலி களின் தோற்றமும், அதன் அடிப்ப டையும் இனவாத என்ற சிங்கள அரசு சார்ந்து உருவானதே. தமிழ்- சிங்கள மக்கள் நம்பகமற்ற தன்மை புலிகளுக்கு முன்பே இதே இனவாத அடிப்படையில் இருந்தது. ஆனால் இன்று சந்தி ரிக்காவின் சீலையில் தொங்கும் கலாநிதிகளான சிறிதரன் புலிகள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தனது இனவெறி பச்சோந்தித் தனத்தை மூடி மறைத்துவிட முடியுமா என்ன? ‘’தமிழ் மக்களுக்கு புலிகளைத் தவிர வேறு வழியில்லையா?’’ என்று தலைப்பிட்டதன் மூலம் மாற்றுத் தலைமை இனவாத சந்திரிகா அரசே தமிழ் மக்களின் மாற்றுத் தலைமை எனப் பிரகடனம் செய்கின்றனர். சபாஷ்!மௌனம் 6ல் இனவெறி ஆசிரியர் தலையங்கத்தில்

‘’சிறிலங்கா அரசினதும், பெரும் தேசிய இன வெறியாளரதும் களிப் பையும், குதுகெலத்தையும் இறுமாந்த உரைகளையும் பார்த்தால்.... எல்லாள      னை வெற்றிகொண்ட துட்டகைமுனு வின் உள்ளக் கிடக்கையும் இனவெறி வக்கிரத்தையம் பறைசாற்றுகிறது.’’

இப்படி மௌனம் மௌனமாக இருப்பதாக நடித்தபடி பச்சை இன வாதிகளாக வரலாற்றையே புரட்டி விடுபவர்களாக மாறியது ஏன்தானோ? புலிகள் கூட இப்படி இவ்வரலாற்றைப் புரட்டியது கிடையாது. எல்லாளன், துட்டகைமுனு இடையி லான யுத்தம் இன அடிப்படையிலானர் என சிங்கள இனவெறியார்களின் வரிசையில் மௌனம் அணிவகுப்பது ஏனோ? எல்லாளன், துட்டகைமுனு யுத்தம் கி.மு (145 - 101) செய்த காலத்தில் தேசிய இனங்களே இருந்திருக்க வில்லை என்ற வரலாறு கூட இந்த போலி மார்க் சியவாதிகளுக்கு ஏன் தெரியாது போனது? தெரிந்து கொள்ள ஈழமுரசில் வெளிவரும் காக்கை வன்னியன் முதல்... மற்றும் புலியின் முக்கிய பிரமுகரான கனடா இராச ரத்தினம் எழுதிய தமிழீழமும் நாடும் அரசும் என்ற புத்தகத்தை படித்தாலே உங்கள் மார்க்சிய மூளையின் இனவெறித்தனம் பச்சையாகவே வெளிப்படும். எல்லாளன் படையில் சிங்களவர்களும், துட்டகைமுனுப் படையில் தமிழர்களும் போராடி இருந்ததையும், எல்லாளன் கொல் லப்ட்ட பின் துட்டகைமுனு அவனை மதித்து ஆயிரங்கால் மண்டபத்தை எல்லாளனுக்காக் கட்டி அனைவரையும் கட்டாய வணக்கம் செலுத்தப் பணித்தான். அங்கு இன வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் மௌனம் பச்சை இனவெறியாக மாறி சிங்கள இன வெறியர்களின் வரிசையில் பின்பக்கமாகப் போய் நின்று கூச்சல் எழுப்புவது ஏனோ? மார்க்சிசத்தை கைவிட்டு அதை பெயருக்கு பிழைப்பு நடத்துப வர்களின் உண்மை முகம் இப்படித்தான் பளீச்சென முகத்தில டிக்கும்.

மௌனத்தின் ஆசிரியர் தலை யங்கத்தில் இன்னு மொரு ஏகாதிபத்தி  யத்தை நோக்கி அழைக்கும்  இன்னு மொரு பொன்மொழிகளைப் பாhப்போம்.

"இந்த ஐம்பதாம் ஆண்டின் நிறைவின் பின்பு ஐ.நா என்பதானது, வீடுபற்றி எரிந்து முடிந்த பின்னர் வந்துசேரும் ஒரு தீயணைப்புப் படைக்கு மேல் அதன் பங்கையாற்ற முடியாதிருப்  பதேன்?’’

என்ற கேள்வியை எழுப்பும் மௌனம் கேட்பது என்ன? முன்கூட்டியே தலையிட்டு மறுகாலனியாக்கும் படியே! நீங்கள் இல்லாமல் போனதுதான் இங்கு பிரச்சினைகள். நீங்கள் நெருப்பு எரியும் முன்னமே நெருப்பு அணைக்கும் கருவியுடன் வந்துவிடவேண்டும் என்கின்றனர். எரிப்பவன் யார்? ஐ.நா வை ஆட்டிப்  படைக்கும் மேல்நிலை வல்லரசுகளே! நெருப்பை எரியவிட்ட பின், அதில் குளிர்காய்ந்தபின் அணைப்பது போல் நடித்து அங்கிருப்பவைகளை கொள் ளையடிப்பதே ஐ.நாவின் தொழில்இ இந்த வரலாறு எல்லா சாதாரண அறிவுள்ளோரக்கும் நன்றாகத் தெரி  யும். சொந்த நாட்டை அடகுவைக்க தயாராக உள்ள மௌனம், எங்கள் நாட்டில் ஐ.நாவை தலையிட மறை முகமாக மகுடம் ஊதி அழைப்பு விடுகின்றனர். எம்மக்கள் ஒருமுறை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் இந்தியாப் படைகளின் கொட்டத்தை அடக்கு  முறையை அனுபவித்தார்கள். அப்போது இவர்கள் அவர்களின் செல்லப்பிள்ளைகள். இன்று ஐ.நா   வைக் கோருவது எம்மக்ளை மேலும் அடக்கி ஒடுக்க, தேசிய இன அடையளத்தை துடைத்தெறிய வகை செய்யும் ஒரு பச்சைத்துரோகமாகும். ஐ.நா உலகில் மக்களுக்காக எதையுமே செய்தது கிடையாது. மாறாக மேல்நிலை வல்லரசுகளை பாதுகாக்கவும், விரல்விட்டு எண்ணக்   கூடிய பன்னாட்டு நிதிநிறுவனத்தைப் பாதுகாக்கவும் எல்லாவித ஆக்கிர மிப்பையும் நடத்தும் ஒரு சர்வாதிகார மக்கள் விரோத அமைப்பாகும். போலி மார்க்சிச வேடதாரிகளான மௌனத்   தின் முகத்தில் பளீச்சென மின்னும் ஏகாதிபத்திய விசுவாசக் கோரிக்கை யாக எழுந்ததே மௌனத்தின் இந்த  ராஜீவ் கொலைதொடர்பாக புலிகளின் நிலையற்ற வாக்குமூலங்கள்.

1991 -06- 12 இந்தியன் எஸ்பிரஸ் சுக்கு கிட்டு வழங்கிய பேட்டியில் கூறியதை சற்றுப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சில தீவிரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன. அவை அதிகாரபூர்வ பத்திரிகைகள் கூட நடத்துகின்றன. புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம் ஆகிய அதி தீவிர வாதப் பத்திரிகைகள் லண்டனில் கூட விநியோகிக்கப்படுகின்றன. ராஜீவின் கொலைகாரன் எனச் சந்தேகிக்கப்படும் குர்தா அணிந்த ஆசாமி அந்தப் பத்திரிகைகளின் நிருபர்களின் ஒரு வராக இருக்குமென்று நான் நினைக் கின்றேன்..................... அப்பெண் தமிழ் நாட்டுப் பெண்போலத்தான் தெரிகின் றாள்.

திலகர் ஜூனியவிகடனுக்கு 21-01-1996ல் வழங்கிய பேட்டியில்

சாட்சியங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் ஈடுபட்ட சில பெரியமனி தர்களின் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றது...... ராஜீவ் கொலை ஒரு ஜோடிக்கப்பட்ட விஷயம் தான்.... ஆனால் தனியாகச் சில ஈழத்தமிழர்கள் சம்மந்தப்படுத்தப் பட்டிருப்பதுதான் வேதனையான விஷயம் இப்படித் திலகர் கூற, முன்னர் கிட்டு புதிய ஜனநாயகம் மீது பழிகூற நாளைய புலித்தலைவர்கள் எப்படிக் கூறுவர்? எனக் கற்பனை செய்து பாருங்கள்! அப்போது புரியும் புலிகளின் அரசியலின் நோக்கம்பற்றி.

அண்மையில் புலிசார்பு ஈழமுரசில் ஒரு வாசகர் ஒருவர் புதியஜனநாயகம் பற்றி கேட்ட கேள்விக்கு ஈழமுரசு கூறியது:- அது ஒரு பார்பான பத்திரிகையென்று. பத்திரிகை வாசிக்காத சினிமா புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் ஈழமுரசு வாசிப்பவர்களாயின் புதிய ஜனநாயம் பார்ப்பான பத்திரிகையென நம்பிக்கொண்டிருப்பர் உண்மையைத் தேடுபவர்கள் ஒருக்காலும் ஈழமுரசின் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய இப்பொய் யை நம்புவார்களென ஈழமுரசு முட்டாள் தனமான நினைக்கிறதோ?

மௌனம் 6ல் பிரான்ஸ் சுவாமித் திரோன் பற்றி ‘’இவர் தீவிர வலதுசாரியாகவும் கத்தோலிக்க தேசி யவாதியாகவும், சோசலிசவாதியாகவும், மார்க்சிசவாதியாகவும் விளங்கிய இவர் ஐரோப்பிய கூட்டாட்சியை நேசிப்பவ ராகவும், மதசார்பற்றவராவும் வெளிப் பாட்டைக் கொண்டிருந்தார்’’

வாழ்க மௌனத்தின் கணிப்பீடுகள். ஒரு மனிதன் எல்லாமாக ஓரே நேரத்தில் இருப்பது எப்படியோ? எல்லாமாக இருக்க முடியும் என்பத னூடக மாhக்சியத்தையே ஏற்றுக் கொண்டால் ஒருவன் மிகுதி எல்லா வற்றையும் கொண்டு அதற்காக செயற்பட முடியும் என்கின்றனர். அதாவது அதை அங்கீகரிக்க மறை முகமாகக் கோருகின்றனர். அது சரி, பிரான்ஸ் சுவாமித்திரோன் ஒரு மார்க் சிசவாதியாம் வாழ்க, ஓர் ஏகாதிபத் தியத்தின் ஆட்சிப்பீடத்தில் இருந்து உழைக்கும் மக்களை

அடக்கிய ஒரு மக்கள் விரோதியாவான்.

சரிநிகர் 98ல் ‘’சொந்த மண்ணிலேயே வேறு மனிதனாய்’’ எனத் தலைப்பிட்ட எஸ்.மனோரஞ்சனின் சிங்கள் மொழி பெயர்ப்புக் கட்டுரையில் இருந்தது. யாழ் சென்ற பத்திரிகையாளர் குழுவில் இருந்த இவர் முதற்கோரிக்கையாக இராணுவத்திடம் கேட்டது.

‘’நான் எனது வீட்டைப் பார்க்க முடியுமா? தற்போது அவ்விடத்தில் வசிக்கும் எனது உறவினர்கள் பற்றி அவருக்குக் கூறினேன். அவ்வீடு நல்லூர் கோவிலில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தைவிட குறைவான தூரத்திலேயே அமைந்திரந்தது..........’’

‘’ எனினும் நான் எனது கிராமத்துக்குள்ளே நுழையும் போதே பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதை கண்ணுற்றேன். இறுதியில் நான் எனது வீட்டைக் கண்டுபிடித்தேன்.  அங்கு கூரை இருக்கவில்லை. சுவர் வெடித்திருந்தது. ‘’

‘’என்னுடன் இருந்த வீரர்கள் நிலத்தை நோக்கினர். அயலவர்களிடம் அவ் வீட்டில் இருந்தவாகளைப் பற்றி விசாரித்தேன். அயலில் வேறு ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் கூறினர்.

‘’ பிரச்சனையில்லை ஆயினும்!’’

‘’நான் அவாகளைக் காணத் தயாராகிக் கொண்டே வீரர்களிடம் கூறினேன் ‘நான் தனினே செல்கிறேன்’ ....’’

இல்லை இல்லை நாங்களும் வருகிறோம்........’’

அப்படியில்லை இராணுவம் வந்துபோவதை புலிகள் அறிந்தால் அவர்களால் பிரச்சனை ஏற்படு மல்லவா?’’

இவ்வாறு திரும்பிச் செல்லும் போது என்னுடன் இருந்த இராணுவ வீரன் இவ்வாறு குறிப்பிட்டான்’’

‘’ எனக்குத் துக்கமாக இருந்தது. ஒரு சொல்லாது பேசவில்லையே. கட்டிய ணைத்து அழுதது மட்டும்தான். எப்படி இந்த மக்கள் வாழ்கின்றாhகள்.....?என ஒர் அழகான கட்டுக்கதையை நல்ல வர்ணனையுடன் மனோரஞ்சன் இணைத் துள்ளர். ஒரு பெரும் தேசிய இனவாதி தனது

ஆக்கிரமிப்பை எப்படி பச்சையாக மறைப்பாரோ அதுபோன்றே மனோரஞ் சனும் செய்துள்ளார். அது சரி பொய் சொல்லப் போனாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் ஜனநாயகவாதி மனோரஞ்சன் அவர்களே!

ஏனெனில் மனோரஞ்சனுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு கிடையாது என்பது சிங்கள மக்களுக்குத் தெரியாதுதானே. ஆனால் தமிழ் மக்களுக்கும் இப்படி ரீல் விட முடியுமா?

‘’இராணுவத்தை நல்லதாக மனிதாபி மான மெச்சத்தக் கவர்களாக காட்ட ஒரு கற்பனை வீட்டை யாழ்ப்பா ணத்தில் கட்டிய மனோரஞ்சன் இராணுவம் கூறும்போது நிலத்தை நோக்கினர், எனக்குத் துக்கமாக இருந்தது எனக் கூறிய மனோரஞ்சன் இராணுவம் அங்கு உள்ளேவரின் புலிகள் கொண்டு விடுவர் தம் உறவினர்களை என்று கூறுவதன் மூலம் சமநிலையைக் கூட இழந்த தைத் தவிர புலிப்பேய் பிடித்த புலி எதிர்ப்பாளராக, சிங்கள இனவா தியாக மாறியதை இந்தப் பொய்க் கட்டுக் கதையே நிறுவிவிடுகிறது.  மேலும் ஆதாரம் தேவையா என்ன?

புலி பாசிசமாக்களின் பின் கருணாகரன் போன்ற இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இன்றைய அரச பாசிசமாக்களின் பின்னான இவர்களின் நடத்தையை இனம் காணமுடியும். அதுபோல் புலி அழிவுக்கு பின் முன்னாள் புலிப் பிரமுகர்களையும், முன்னாள் புலியல்லாத பிரமுகர்களையும் ஒன்றினைக்கும் அரட்டை புள்ளி எது? மார்க்சியம் பேசும் இடது பிரமுகர்களையும், மார்க்சியத்தை மறுக்கும் வலது பிரமுகர்களையும் ஒன்றாக கூடி குலாவ வைப்பது எது? அந்த அரசியல் என்ன? இந்த அரசியல் பின்புலத்தில், அரசு இதற்குள் இயங்க முடிகின்றது.

தொடரும் இனவழிப்பு மூலமே, நாட்டை முழுமையாக பாசிசமயமாக்க முனைகின்றது அரசு. இதற்காக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் சிந்தனை அரங்கை கைப்பற்ற முனைகின்றது. இந்த வகையில் முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுபிடிக் கும்பலை பயன்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து துறையையும் தன் மயப்படுத்துகின்றதன் மூலமான பாசிசமயமாக்களை தொடங்கி இருக்கின்றது. புலிகள் கடந்த காலத்தில் எதை எப்படி செய்தனரோ அதை அரசு செய்கின்றது. அதற்கு பழக்கப்பட்ட, அதையே பிழைப்பாக கொண்டு வாழ்ந்த முன்னாள் புலிகளையே இதற்காக அரசு பயன்படுத்துகின்றது. வசதி வாய்புகளுடன் கூடிய சுதந்திரமான செயல்தளத்தை தன் எடுபிடிகளுக்கு வழங்குவதன் மூலம், இதை செயல்படுத்துகின்றது.

அரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட  கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிம் மண்ணிலும் -  புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி "தவறு"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்கள் தமது பணத்தை இலங்கை, இந்தியா......... போன்ற நாடுகளுக்குள் மாற்றிக்கொடுக்கும் இந்த உண்டியல் தொழில் ஒரு இலாபம் தரும் தொழிலாக இன்று உள்ளதுடன் கருப்புப் பணத்தை மாற்றிக்கொடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா..... ஊழல் கொள்ளை கரண்சியாகவும் மாற்றி விடுகின்றனர். எந்த சட்டவிரோதப் பணத்தையும் மாற்றிவிடும் இந்தத்தொழிலில் வீரகேசரி  விபச்சாரம் செய்யப்போனது தான் ஆட்ச்சரியமானது.

வெளிநாடு வரும் ஞாயிறு வீரகேரி வாரப் பத்திரிகையின் உள்ளே இன்றைய பணப் பெறுமதி என்னவென்று குறிப்பிட்டு வருவது வழக்கம். எம்மவர்கள் பணம் அனுப்பமுன் இதை ஒப்பிட்ட பின் உண்டியல் ரேற்றைக் கேட்டு அதைச் சரிபார்த்து தமது கடின உழைப்புப் பணத்தைக் கைமாற்றுவர். இந்த வீரகேசரி பணப்பெறமதி செய்தி உண்டியல் காரரக்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்தது. தமது பெரிய கொள்ளைக்கும் வாராவாராம் இலங்கைப் பணப் பெறுமதிக்கு இசைவாக 0,20,30,40 பிராங் குறையக் கொடுக்க வேண்டி ஒரு நெருக்கடிக்குள் குறைந்த இலாபத்தை வீரகேசரி மூலம் பெறவேண்டி இருந்ததால் இந்த உண்டியல் பேர்வழிகள் வீரகேரியுடன் நடந்த பேரத்தின் பின்  வீரகேரி அப்பகுதியை போடுவதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளத. இதன் மூலம் இல்கை, இந்தியப் பெறுமதியை திட்டமிட்டு மறைக்க உதவியதன் மூலம் உண்டியல் பேர்வழிகள் பச்சையாகவே கொள்ளையடிக்க வீரகேசரி துணைபோயுள்ளனர். வாழ்க! கொள்ளையடிப்போர் சார்பான உங்கள் பேரங்களும் சம்திங்குகளும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE