Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன்று புரட்சிகர சக்திகள் யார்? இன்று புரட்சிகர சக்திகளை வேறுபடுத்துவது எது? இதற்கு அனைவரும் இன்று விடை காணவேண்டும். இதில் நான் யார் என்பதற்கு நடைமுறையில் பதிலளிக்கவேண்டும். இந்த வகையில் எம்மை மட்டுமல்ல, எம்மைச் சுற்றிய அனைத்தையும் மீள் பரிசோதனைக்கு உள்ளாக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தவேண்டும்.

இன்று யார் சுரண்டப்படும் மக்களைச் (வர்க்கத்தை) சார்ந்து நிற்கவில்லையோ, யார் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைப் போராட்டத்துடன் இணைந்து போராடவில்லையோ, அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகள்!

யார் இன்று வர்க்க அரசியலை ஏற்கவில்லையோ, யார் வர்க்க நடைமுறையை சார்ந்த செயற்பாட்டை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களை ஏமாற்றுகின்ற முதல்தரமான எதிரிகள். அரசு போன்று, மக்களை தம் அறிவு மேலாண்மை மூலம் ஏமாற்றி வாழ்கின்ற பொறுக்கிகள். ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தப்பபட வேண்டியவர்கள்.

தமிழ் தேசியத்தின் ஊடாக, இனமுரண்பாட்டையும், சிங்கள தேசியத்தையும் பார்த்தல் மார்க்சியமல்ல. மாறாக ஆளும் வர்க்கத்தின் பெரும் தேசிய வர்க்க உணர்வுகளின் மூலமும், சிங்கள தேசிய இன உணர்வுகளின் மூலமும் உருவானதே இனமுரண்பாடு. இப்படித்தான் இதை இனம் காணவேண்டும். இப்படி இனங்கண்டு போராடுவதே சர்வதேசிய உணர்வாகும்.

தமிழ் தேசியத்தின் ஊடாக இனமுரண்பாட்டை புரிந்து, அதற்கு ஏற்ப அரசியல் ஓட்டுப்போட முடியாது. மாறாக சிங்களப் பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் மயப்படுத்துவது என்பது, சிங்கள தேசியத்துக்கு எதிரான சர்வதேசியத்தை உருவாக்குவதன் மூலம தன் சொந்த வர்க்கப் போராட்டத்தை அது நடத்த வேண்டும். சிங்கள தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை உயர்த்துவதைத் தவிர, வேறு எந்தத் தேசியமும் இருக்க முடியாது. இங்கு தமிழ் தேசியம் பற்றிய விடையம், இங்கு இரண்டாம் பட்சமானவை. சிங்கள தேசியம் பற்றிய விடையமே முதன்மையானது. அதனூடாகவே இன முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்.

யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.

"கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை" என்றார் மார்க்ஸ். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் பொருள் முதல்வாதம், ஒருமைப் பொருள் முதல்வாதமாகும்.

ஒருமைப் பொருள் முதல்வாதம் கருத்தியல் ரீதியிலான அம்சத்திற்கும் பொருளாய ரீதியிலான அம்சத்துக்கும் இடையிலான உட்தொடர்பை விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. இது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஓரே கோட்பாட்டில் இருந்து எழுகின்றது. இது பொருள் மற்றும் கருத்தியல் வடிவத்தைக் கொண்டு இருக்கின்றது. கருத்தியல் மற்றும் பொருளாயதம் என்ற இரு நிகழ்ச்சி போக்குகள், இயற்கை அல்லது சமுதாயத்தின் இருவேறு வடிவங்களே ஒழிய வேறல்ல என்பதே ஒருமைப் பொருள் முதல்வாதத்தின் உள்ளடக்கமாகும். இங்கு கருத்தியல் மற்றும் பொருளாயதம் இரண்டில் ஒன்று இன்றி மற்றொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிலவுகின்றது, சேர்ந்தே வளருகின்றது. ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத இயற்கையாகவும், அதே நேரம் கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற இரு வேறுபட்ட வடிவங்களில் இது தன்னை வெளிப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் கூட பிரிக்க முடியாத, அதே நேரம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதாவது பிரிக்க முடியாத நாணயத்தின், இரு வேறுபட்ட பக்கங்கள் இருப்பது போன்றது.

அண்ணளவாக கிளிநொச்சி இரணைமடுக் குளம் சார்ந்த நெற்பயிர்ச்செய்கையில் மூன்றில் ஒன்று நீர் இன்றி அழிந்திருக்கின்றது. மிகுதி முழுமையான பலனின்றி அரையும்குறையுமாக சுடுகாடாகி இருக்கின்றது. யுத்தம் அனைத்தையும் அழிக்க, மீண்டும் இராணுவம் விவசாயிகளை சூறையாடியிருக்கின்றது.

இதன் பின்னால் வரட்சியையும், பயிரிட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் விதைத்ததுமே காரணம் என்று அரசும் அரசு ஊதுகுழல்களும் ஊளையிடுகின்றது. இதன் மூலம் இவைகளே தான் இதற்கு காரணம் என்று தங்கள் குற்றத்தை மூடிமறைக்க அதிகார வர்க்கம் முதல் இராணுவம் வரை முனைகின்றனர். கிளிநொச்சி விவசாயிகளுக்கு பிரதான நீர் விநியோகக் குளமான இரணைமடுக் குளமும், குளத்தைச் சுற்றியும் நடக்கும் பாரிய இராணுவ விஸ்தரிப்புத் தான், 3000 ஏக்கர் நெற்பயிரை கருக்கி இருக்கின்றது.

மனித வாழ்வை எப்படி எந்த வழியில் நாம் புரிந்து கொள்வது? நாம் புரிந்து வைத்திருப்பது முழுமையானதா? என் வாழ்வைக் கூட நான் புரிந்து கொண்டுள்ளேனா? இப்படி நான் என்னை, என்னை சுற்றிய மனிதர்களை, முழு உலகத்தை எப்படி, எந்த அடிப்படையில் புரிந்துகொண்டு இருக்கின்றேன்? இப்படி என் அறிவையும், என் புரிதலையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நான் என் வாழ் நிலையின் எல்லைக்குள் தான், அந்த வாழ்வின் இருப்புக்கும் இயல்புக்கும் ஏற்றதான அறிவும் புரிதலுமே, எனது சொந்த வெளிப்பாடாகின்றது. நான் என் என்ற குறுகிய அறிவு மற்றும் புரிதல் சார்ந்த கண்ணோட்டத்தைக் கடந்து, நாங்கள் எங்கள் சார்ந்த அறிவையும் புரிதலையும் பெறுவது எப்படி? இதற்கு மனித சிந்தனை எதன் பிரதிபலிப்பு என்ற தெளிவு எமக்கு அவசியமானது.

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். மனித வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இந்த வகையில் மனித வாழ்வையும், அதனுள்ளான முரண்களையும், இயங்கங்களையும் புரிந்து கொள்ள மார்க்சியம் உதவுகின்றது. இது கற்பனையான வெறும் தத்துவமல்ல. இது எமக்கு வெளியில் இருந்து வருவதுமில்லை. மாறாக எம் வாழ்வின் எதார்த்தம் சார்ந்து, அதை பகுப்பாய்வு செய்யும் சமூக விஞ்ஞான முறைமையாகும்.

இயற்கைக்கு வெளியில் மனிதன் சந்திக்கின்ற வாழ்வியல் முரண்பாடுகள் ஏன்? எங்கிருந்து? எப்படி? தோன்றுகின்றது என்பதை தன் அறிதலுக்கு உட்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை எந்த நடைமுறை மூலம், எப்படி அடைய முடியும் என்பதையும் முன்வைக்கின்றது. இதில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்வது மார்க்சியமல்ல.

நடைமுறையுடன் மார்க்சியத்தை இணைக்காத பிரமுகர்த்தன "மார்க்சியம்" முதல் திண்ணை "மார்க்சியம்" வரை, பாசிசத்துக்கு உதவுவதையே அரசியல் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தை சார்ந்த கருத்தை முன்வைக்கும் எவரும் மக்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு அணி திரட்டாத வரை, அவர்கள் மார்க்சியத்தை பிழைப்பாக்குகின்றனர். இப்படி இவர்களே இருக்கும் போது "மார்க்சியம் போதாமை" குறித்தும், "கறுப்பு வெள்ளை" அரசியல் குறித்தும், "சாம்பல் அரசியல்" குறித்தும், "அதிகாரத்துக்கு ஏற்ப தகவமைப்பதே மனிதன்" .. என்று கூறும் பல தத்துவங்கள் கோட்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசிசத்துக்கு உதவுவனவாகவே இருக்கின்றது.

சிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.

தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்ததுதான், சமூகத்துடன் தன்னை இணைத்து போராடாத இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலாக வெளிப்படுகின்றது. அதன் தத்துவம், கோட்பாடு, நடைமுறை அனைத்தும் இந்த அடிப்படையிலானது. சமூகத்துக்குள் தனிநபரா அல்லது சமூகத்துக்கு மேல் தனிநபரா என்ற அடிப்படை வேறுபாடு தான், தனிச் சொத்துடமையைப் பாதுகாக்கும் எல்லைவரை அவர்களை இட்டுச்செல்வதுடன் பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய அரசியற் செயல்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றது. இப்படி பிரமுகர்களின் சமூக இருப்பு, தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்தது. இதுதான் தனிச்சொத்துடமையில் எங்கும் காணப்படுகின்றது.

அதிகார சூழலுக்கு ஏற்ப தன்னைத் "தகவமைப்பதே" மனிதன் என்று கூறும், ஒரு அற்ப மனிதனின் அற்பத்தனமான கதைகள். இப்படி "தகவமைத்து" வாழ்தல் மனித "இயல்பே" ஒழிய அது "பிழையல்ல" என்று கூறி, அதுவே தன் கதைகள் என்கின்றார். இந்த வகையில் தன்னை அதன் ஒரு பிரதியாகவும் முன்னிறுத்துகின்றார். இன்று தன்னையும் ஒரு பிரமுகராக தகவமைத்துக் கொள்ள எழுதுகின்றார். "அதிகாரத்துக்கு தகவமைத்து" வாழ்தல் தான், மனித இயல்பும் இருப்பும் என்று கூறக் கூடிய ஒருவரின், அந்த இருப்பு சார்ந்து எழும் கதைகள். மனித இனத்தை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற கூட்டத்துடன் தன்னை தகவமைத்துக் கொண்ட வக்கிரமான குரலாக இவை வெளிவருகின்றது. மனிதனுக்கு மனிதன் அடங்கிப் போகும் வண்ணம் "தகவமைப்பை" விளக்குகின்ற, கோருகின்ற அடித்தளத்தை, மனித "இயல்பு" என்கின்றார். இது "பிழையல்ல" என்று, தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பை நியாயப்பபடுத்துகின்றார். மனிதனை மனிதன் அடக்குவதும், ஒடுக்குவதும் ஏன்? மனிதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தன்னை தகவமைக்க மறுப்பதால் தான், அடக்குவதும், ஒடுக்குவதும் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. இப்படி எதார்த்தம் இருக்க, அடங்கி ஒடுங்கி தகவமைத்துக் கொண்டு அதையே பிறமனிதன் மீது செய்யும் தங்களை ஒத்த அற்பர்களை நியாயப்படுத்தி முன்னிறுத்தும் கதை. இதுதான் அவர்கள் அளவில் காணும் எதார்த்தம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE