Language Selection

பி.இரயாகரன் - சமர்

நம் தோழரின் கவிதை நூலுக்கு விமர்சனம். முன்கூட்டியே அவருடன் உரையாடி வந்த விடையம் தான், நூல் மீதான தர்க்கரீதியான விமர்சனமாகின்றது. செம்மையான மொழியைக்கொண்டு, "நனவெரிந்த சாம்பலில்" என்ற கவிதை நூல். மொழியை முதன்மைப்படுத்தியதால், கவிதையின் உள்ளடக்கம் முதன்மை பெறத் தவறிவிட்டது. சொந்த மண்ணின் நினைவுகள் முதல் புலம்பெயர் வாழ்வு வரையான பல்வேறு பரிணாமங்கள் முதல், வாழ்வின் முரண்கள் மீதான கவிதைகள் தான் இவை. மனித நம்பிக்கைகள் முதற் கொண்டு மனித வாழ்வின் சீரழிவு வரையான பவ்வேறு விடையங்கள் கவிதைப் பொருளாக உள்ளது. மதத்தைச் சாடவும், ஆடம்பரமான வாழ்வை சாடவும் தயங்காத கவிதைகள், மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டு நியாயம் பேசும் தர்க்கம் வரை இக் கவிதை கேள்வி எழுப்புகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மொழியால் பேசுவதற்கு பதில், மொழிக்குள் அடங்கிப்போகுமாறு கவிதையின் உள்ளடகத்தை அடக்கிவிடுகின்றார்.

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

யாழ்ப்பாணத்தானுக்கு எதிரான பிரதேசவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடிய "ஜனநாயகத்" தேர்தல். இந்த அரசியல் அடித்தளத்தை கொண்டு, அரச இயந்திரத்தின் முழுப் பலத்துடன், பாரிய நிதியாதாரங்களுடன், வன்முறையைத் தூண்டி, மக்களை மிரட்டியதன் மூலம், ஒரு முறைகேடான சட்டவிரோத தேர்தலை நடத்தினர். மறுதளத்தில் தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய குறுந்தேசிய வாதத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை எதிர்த்தரப்பாக எதிர்கொண்டனர்.

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது. மனிதகுலம்அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்துநிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும்தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுக்கிறது.

தமிழக இனவாதிகளின் இனவெறியாட்டத்தைத்தான், சிங்கள பேரினவாதமும் காலகாலமாக செய்து வருகின்றது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த இந்த இனவெறிக் கண்ணோட்டம், இங்கு அரசியல்ரீதியாக வேறுபடுவதில்லை. இலங்கையில் நடந்த இனவழிப்பு யுத்தத்துக்கு காரணம் சிங்கள மக்களா!? ஆளும் சுரண்டும் வர்க்கமா? கூறுங்கள்.

சிங்கள மக்களைக் குற்றவாளியாக்குகின்ற அரசியல், தமிழகத்தில் நாசிய இனவெறி அரசியலாக வெளிப்படுகின்றது. தமிழகத்துக்கு வருகை தந்த இலங்கை அரச ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும் மற்றும் இராணுவத்துக்கும் எதிரான போராட்டங்கள், இன்று அப்பாவி சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறியிருக்கின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் மீதான, தமிழினவெறியாக மாறி இருக்கின்றது. இது மக்களை இனம் சார்ந்த எதிரியாகக் காட்டுகின்றது. இது நாசிய பாசிச கொள்கையும் நடைமுறையுமாகும்.

இலங்கையை மத மோதலுக்குள் கொண்டுவருவதன் மூலம், மதப் பெரும்பான்மை சார்ந்து மக்களை பிளந்துவிட முனைகின்றனர் பாசிட்டுகள். இன்று இன, மதப் பெரும்பான்மை சார்ந்து, மூலதனத்தின் ஆட்சியை இலங்கையில் தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் முனைகின்றனர். இந்த வகையில் மூலதனத்தின் ஆட்சி வடிவங்கள், பாசிசம் மற்றும் ஜனநாயகம் என்ற இருவேறு ஆட்சி வடிவங்களைக் கொண்டது. முரணற்ற ஜனநாயகத்தை பற்றிய அதன் இரு வேறு அணுகுமுறை தான், இதை வேறுபடுத்துகின்றது. சமூகத்தை வர்க்கரீதியாக பிளந்து ஆளுவது முதலாளித்துவ ஜனநாயகம். பாசிசம் இதை மட்டும் கொண்டு ஆளுவதில்லை, மாறாக சமூகத்தை இனம் மதம், நிறம் .. என்ற வேறுபாட்டைக் கொண்டு, அவர்களுக்கு இடையில் மோதலை தூண்டி ஆளுகின்றது.

அண்மையில் "விடியல் சிவா" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். "சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்." என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன், அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.

மார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.

நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.

பொதுவாக புலியெதிர்ப்பு அரசியல் குறித்து மட்டும் தான், இந்தத் தவறான புரிதல் இன்று பொதுவானதாகக் காணப்படுகின்றது. அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவிலும் கூட, இதே தவறான அரசியல் போக்கு தான் காணப்படுகின்றது. புலியெதிர்ப்பின் அரசியல் சாரம் எப்படி ஜனநாயகத்தை மட்டும் கொண்டு இயங்குகின்றதோ, அதே ஜனநாயகத்தைக் கொண்டு அரசு – புலி எதிர்ப்பு அரசியலும் இயங்குகின்றது. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்று புலியை மட்டும் எதிர்க்கின்றது, மற்றது அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்றது. இதற்கு அப்பால், இவர்களுக்கிடையிலான அரசியல்ரீதியாக வேறுபாடு தெளிவாக வெளிப்படுவதில்லை.

இதில் உள்ள அரசியல் மற்றும் நடைமுறை வேறுபாட்டை தெளிவாக பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்;. இன நல்லுறவு ஊடாக வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்கப் போராட்டம் ஊடாக இன இனநல்லுறவா என்பதை அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். சுயநிர்ணயம் முன்வைக்கும் இன ஐக்கியம் என்பது, இனங்களுக்கு இடையில் நல்வுறவுகளை ஏற்படுத்துவதல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் ஊடான வர்க்க ரீதியான ஐக்கியத்தையும், அது சார்ந்த இன நல்லுறவையும் ஏற்படுத்துவதுதான்.

"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE