Language Selection

பி.இரயாகரன் - சமர்

வர்க்கப்புரட்சி மூலம் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை. இது எங்கள் சொந்த அரசியல் வழிமுறை. இப்படி இருக்க இதை வர்க்கப்புரட்சிக்குப் பிந்தைய தீர்வாகக் காட்டி திரிப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் பின் அணிதிரட்ட முனைகின்றனர். சமுதாய முரண்பாடுகளை முரணற்ற வகையில் விளக்கும் மார்க்சியம், முரணற்ற தீர்வுகளைக் கொண்டிருக்கின்றது. இதை எதிர்கொண்டு அரசியல் நடத்த முடியாதவர்கள், இதை வர்க்கப் புரட்சிக்குப் பிந்தைய தீர்வாக காட்டிவிடுவதன் மூலம் தான் தங்கள் அரசியலை நடத்த முனைகின்றனர். இதற்கு அமைவாகவே வர்க்கப் போராட்டத்தை கைவிட்டவர்கள், இதற்கு செங்கம்பளம் விரித்து தங்கள் வர்க்கப் போராட்டமற்ற அரசியலை முன்னிறுத்தி இதை விரிவாக்கினர்.

இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு குறிப்பான விடையங்கள் குறித்து தற்போதைக்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1.சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது குறித்து

சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்க மறுத்தது குறித்து பேசுகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் மூலமும், இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 30 வருடத்தில் எங்கே எப்படி இருந்தனர் என்பது தொடங்கி இன்று என்ன செய்கின்றனர் என்பது வரை, இவர்களை தெரிந்து கொள்வதன் மூலம் இவர்களின் "சுயநிர்ணயம்" என்ன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை. சுயநிர்ணயம் பற்றிய இவர்களின் அரசியல் வரையறை கூட, பிரிவினையாக அல்லது தமிழனின் அதிகாரத்தைக் கோருவதாகத்தான் இருந்தது. இந்த வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாமும் சரி, சுயநிர்ணயத்தை முன்மொழியாத அவர்களும் சரி, மேற்சொன்னவர்களின் அடிப்படையிலான இவர்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தப் பேட்டி பற்றி திறந்த விவாதம் இன்று அவசியமாகின்றது. தங்கள் சொந்த இனவாதம் மூலம், மற்றவற்றை எதிர் இனவாதமாக நிறுவமுனையும் போக்கில் இந்த நிகழ்ச்சியின் கேள்விகள் இழுபட்டுச் சென்றது. கேள்விகள் அனைத்தும் சுற்றிச் சுற்றி இனவாதம் சார்ந்ததாக இருந்ததால், இந்த விடையத்தைச் சுற்றிய விரிவான அரசியல் பார்வையை குறுக்கிவிட்டது. இங்கு தம்மை "மார்க்சியவாதியாக" "இடதுசாரியாக" காட்டிக் கொண்டு, சுயநிர்ணயம் தொடர்பாக குமார் குணரத்தினத்திடம் எழுப்பிய தர்க்கம் அனைத்தும் இனவாதம் சார்ந்த தேசியவாதம் தான். லெனினின் சுயநிர்ணயம் என்பது, தேசியத்தையும் இனவாதத்தையும் எதிர்த்த வர்க்கப்போராட்டம் மூலம் தீர்வு காணவே வழிகாட்டுகின்றது. இந்த வர்க்க அமைப்பில் அல்ல. இந்த வகையில் இந்தப் பேட்டியையும், இதைச் சுற்றிய நிகழ்வுகளையும் புரிந்து கொள்வதன் மூலம் தான், முன்னிலை சோசலிசக்கட்சியின் செயற்பாட்டுத் தளத்தை நாம் சரியாக இனம் காணமுடியும்.

இலங்கை மார்க்சிய லெனினியக் கட்சிகளில் இந்தத் தவறான போக்கு காணப்படுகின்றது. இலங்கையில் 80 வருட காலமாக ஊடுருவிய திரோஸ்கியவாதத்தின் விளைவு இது. இது எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்ற கோட்பாட்டுத் தவறை பல்வேறு மட்டத்தில் வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ நாடுகளுக்கும், முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நவகாலனிய நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்க்க ரீதியான வேறுபாட்டை மறுப்பதுடன், புரட்சியின் வேறுபட்ட கட்டங்களையும் வேறுபட்ட வர்க்க அணிச்சேர்க்கைகளையும் மறுக்கின்ற போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இது தவறான அரசியல் யுத்த தந்திரத்தை உருவாக்குகின்றது.

மார்க்சிய லெனினியவாதிகள் ஐக்கியப்படாமல், மக்களின் ஐக்கியத்தைப் பற்றி பேசுவது என்பது நடைமுறையற்ற கோட்பாடாகும். இந்த வகையில் இன்று இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்காத எவரும், மார்க்சிய லெனினியவாதிகள் அல்ல. இதற்கு நிபந்தனை விதிக்க முடியாது. கோட்பாட்டு வேறுபாட்டைக் கொண்டு இதில் இருந்து விலகி நிற்க முடியாது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சக்திகளை, போராட்ட நடைமுறையில் வைத்துத்தான் பரிசோதிக்க முடியும். இதுவின்றி யாரும் ஆரூடம் கூற முடியாது. இந்த போராட்டத்தை எவரும் தட்டிக் கழிக்கவும் முடியாது. அனைவரும் இனவாதத்துக்கு எதிரான களத்தில் இறங்கியாக வேண்டும். இதற்குத் தடையாக மார்க்சிய லெனினியவாதிகள் எவரும் செயற்பட முடியாது. உண்மையில் இனரீதியான பிளவு பாட்டாளி வர்க்க சக்திகளையும் கூட பிளந்து இருக்கின்றது. மார்க்சிய லெனினியவாதிகளைக் கூட இது விட்டுவைக்கவில்லை. குறுகிய இன உணர்வுகளுக்;குள்ளும், சந்தேகங்களுக்குள்ளும், தயக்கங்களுக்குள்ளும், தடுமாற்றங்களுக்குள்ளும் நின்றபடி அணுகுகின்ற பொதுப் போக்கு, இன ஐக்கியத்தை நோக்கி பயணிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது.

சுயநிர்ணயம் பற்றி இனவாதிகளின் கண்ணோட்டம், சுயநிர்ணயம் மூலமான இன ஜக்கியத்துக்கு தடையாக இருக்கின்றது. சுயநிர்ணயம் என்பது "பிரிவினை" தான் என்று இனவாதிகளின் பிரச்சாரம், பிரிந்து செல்லும் உரிமை தான் சுயநிர்ணயம் என்பதை மறுக்கின்றது. கடந்த 30 வருடமாக சுயநிர்ணயத்தை திரித்து புரட்டிய குறுந்தேசியவாதிகளும் பெரும்தேசியவாதிகளும், சுயநிர்ணயம் சமன் "பிரிவினை" என்ற இனவாத கண்ணோட்டத்தைப் புகுத்தியுள்ளனர். சுயநிர்ணயத்தை முன்வைத்து பிரிவினைக்கு எதிராகவும், பலாத்காரமான ஐக்கியத்துக்கும் எதிராகவும், பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் பாட்டாளிவர்க்கம் முன்னனெடுக்கத் தவறிய நிலையில் தான் இனவாதிகள் அதை "பிரிவினை"யாகக் காட்டி பாட்டாளி வர்க்க யுத்ததந்திரத்தை செயலற்றதாக்கியுள்ளனர். இந்த வகையில் சுயநிர்ணயத்தை முன்வைத்து இன ஐக்கியத்தை உருவாக்குதல் என்பது, குறிப்பாக பெரும்பான்மை இனம் மத்தியில் சவால் மிக்க அரசியலாக மாறியுள்ளது.

தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் மேலான அதிருப்தியுணர்வை வளர்ப்பதற்கு பதில், இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு அணுகவேண்டும். இது முஸ்லீம் மக்களின் சொந்த தெரிவல்ல. முஸ்லீம் மக்களைப் புரிந்து கொள்வதும், எப்படி இதற்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுவது என்பதில் இருந்து நாம் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும். இனம், மதம், பிரதேசவாதம் மூலம் பார்க்கின்ற எம் பார்வையைக் கடந்து, அப்படி சிந்திக்கின்ற எம் குறுகிய உணர்வைக் கடந்து, மனிதனாக ஒன்றிணைவதன் மூலம் மக்களுக்கு எதிரான இந்தச் சொத்து அரசியலை முறியடிக்க முடியும். இனம் மதம் கடந்து நாம் மக்களைச் சார்ந்து எம்மை அரசியல்படுத்துவதன் மூலம்தான், அந்த மக்களுடன் நாமும் அணிதிரள முடியும்.

நீ இனவாதியாக இருக்கும் வரை, இன ஐக்கியத்தை தடுக்கின்றாய். நீ இனவாதியாக இருக்கும் வரை, நீ மக்களை நேசிப்பவனாக, மக்கள் முன் உண்மையானவனாக நேர்மையானவனாக இருக்க முடியாது. உனது வஞ்சகமற்ற அர்ப்பணிப்புகளும் தியாகங்களும், உன்னை இனவாதியாக்கியவனின் குறுகிய நலனுக்குதான் பயன்படுகின்றது.

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர்.  மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE