Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _6.jpgநவீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணைப் பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டுக் கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பது அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவச் சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டிப் பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.

book _6.jpgஇன்றைய உலகில் பெண்கள் எப்படி உள்ளனர்? என்ற விவாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதனின் ஒவ்வொரு மாற்றமும் இயற்கையைச் சார்ந்து இருந்த போக்கில், மனிதனின் உழைப்பை ஒட்டி இயற்கையும் பாரிய மாற்றத்தைக் கண்டது. இம் மாற்றம் என்பது மாறிவந்த ஒவ்வொரு பொருளாதார மாற்றத்துடனும் தீவிரப்பட்டது. உடலியல் கூறுகளின் செயற்பாடுகள் ஒருபுறம் நிகழ்ந்தன. இயற்கையும், இயற்கை மீது மனித உழைப்பைத் தொடங்கிய போதும் மாற்றம் மேலும் தீவிரமடைந்தது.

1. சட்டத்தை மதிக்காமல் இவான் அர்ட்சிப÷சாவ்

2. கண்காணிப்பின் அரசியல் இரவிக்குமார்

3. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பி. ஏங்கெல்ஸ்
4. ஈழ முரசு பிரான்சில் வெளிவரும் புலி ஆதரவு பத்திரிக்கை
5. மகளிர் விடுதலை இயக்கங்கள் கிளாரா ஜெட்கின்
6. சர்வதேசத் தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி லெனின்
7. இளைஞர்களைப் பற்றி லெனின்
8. பெண்ணுரிமை சில பார்வைகள் மைதிலி சிவராமன்
9. உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் ப. செங்குட்டுவன்

10. வேதங்கள் ஓர் ஆய்வு சணல் இடமருகு
11. பிராமண மதம் ஜோசப் இடமருகு
12. பெண் (மே டிசம்பர் 1996) இந்தியப் பெண்கள் சஞ்சிகை
13. பார்ப்பனியத்தின் வெற்றி பி.ஆர். அம்பேத்கர்
14. பரிசுத்த வேதாகமம் (பைபிள்)
15. ஜீவ தண்ணீர் தென்னிந்தியத் திருச்சபை பிரெஞ்சு பிரிவு வெளியீடு
16. விடுதலைக்கு வழிநிடத்தும் தெய்வீகச் சத்தியப் பாதை
17. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை
18. மண்ணும் மனித உறவுகளும் முனைவர். கோ. கேசவன்.
19. திருக்குர்ஆன் பாகம் 1,2
20. சுமைகள் நோர்வே முற்போக்குத் தமிழ்ப் பத்திரிகை
21. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில்
வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை
22. பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள் டாக்டர். அரங்க. இராமலிங்கம்.
23. கீதையின் மறுபக்கம் கி. வீரமணி
24. புத்தரது ஆதிவேதம் க. அயோத்திதாசப் பண்டிதர்
25. டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி: 7
26. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் வல்லிக் கண்ணன்
27. சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும் எம்.வி.சுந்தரம்
28. பண்பாட்டு வேர்களைத் தேடி தொகுப்பு: ஞா. ஸ்டீபன்
29. தலித் அரங்கியல் கே.ஏ. குணசேகரன்
30. புதிய கலாச்சாரம் இந்தியப் புரட்சிகர மார்க்சிய ஆதரவு கலாச்சாரப் பத்திரிக்கை
31 தமிழ்ச்சமூகமும் தெய்வங்களும் ஆ. இரவழ கார்த்திகேயன். பி.காம்
32. பெரியார் களஞ்சியம் தொகுதி: 6
33. இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் பி.ஆர். அம்பேத்கர்
34. பெரியார் களஞ்சியம் தொகுதி: 2
35. பகவத் கீதை ஓர் ஆய்வு ஜோசப் இடமருகு
36. மூவர் தேவாரம். தலைமுறை (அடங்கல்முறை)
37. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 1) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.
38. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 2) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.
39. இலக்கணமும் சமூக உறவுகளும் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி
40. திருக்குறள் எஸ்.என் ஸ்ரீராமதேசிகன்
41. சுயமரியாதை திருமணம் ஏன்? பெரியார்
42. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் கு.வெ. பாலசுப்பிரமணியன்
43. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு செல்வி திருச்சந்திரன்
44. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்
45. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்
46. அர்த்தமுள்ள இந்துமதம் (பாகம் 2) கண்ணதாசன்
47. திருமந்திரம் ஜி. வரதராஜன்
48. சித்தர் பாடல்கள்
49. புராணச் சார்பு கதைப் பாடல்களில் ஆண் பெண் உறவு முமுனைவர். கோ. கேசவன்
50. பேய் ஓட்டும் உடுக்கடிப் பாடல்கள் சி. ருக்மணி
51. அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்
52. CLARA ZETKIN - பிரான்சில் வெளிவரும் பூர்சுவா பெண்கள் பத்திரிக்கை

 

book _5.jpgஜனநாயகம் மறுக்கப்பட்ட மண்ணில் இருந்து வந்தோரும், வராதோரும் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனையில் இருந்து நழுவிய, அதேநேரம் அதற்கு எதிரான புலம் பெயர் இலக்கியத்தைப் படைப்பாக்கினர், படைப்பாக்குகின்றனர். இதேபோல் நாட்டிலும் எந்தவிதத்திலும் முரண்படாத போக்குகளைக் கொண்டு சமமாகவே வளர்ச்சி பெற்றன. இதன் போக்கில் பல இலக்கியங்களை, சில எழுத்தாளர்கள் பாலியல் பிரச்சனை மீது அதிகளவு எழுதத் தொடங்கினர். இன்று அதுவே இலக்கியம் என்றளவுக்கு விடயம் மாறிச் செல்கின்றது. பாலியல் பிரச்சனைகளை இவர்கள் எப்படி புரிந்து கொள்கின்றனர் என்பது முதல், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் முக்கியமானதாகின்றது.

book _5.jpgபுற உலகின் வெளிப்பாடான இயக்கத்துக்கு வெளியில் மனிதச் சிந்தனை தனக்குள், தன்னளவில் வெளிப்படுவதில்லை. புற உலகில் நடக்கும் மாற்றத்தையொட்டி மனிதச் சிந்தனை அனைத்துத் துறைகளிலும், புற உலகு மீதான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட விதத்தில் மனிதன் வெளிப்படுத்துகின்றான், சிந்திக்கின்றான்;. இதைத் தாண்டிய சிந்தனைத் தளம் கிடையவே கிடையாது.


இந்த வகையில் பாலியல் பற்றிய அறிவும், அதன் வெளிப்படுத்துதலும் புற உலகின் வெளிப்பாடாகவே மனிதனுக்குள் வெளிப்படுகின்றது. இது மாறுபட்ட சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மனிதச் சிந்தனையில் வெளிப்படுகின்றது. இந்த வெளிப்பாடுகளின் விளைவுகள், குறித்த பாலியல் நடத்தை மீது மட்டும் தொழிற்படுவதில்லை. மனிதனின் புறச் சூழல் பாதிப்பின் விளைவாக வெளிப்படும் பாலியல் நடத்தைகள் எல்லாம் மாறிக் கொண்டிருப்பதுபோல் மாறிய வண்ணம் நீடிக்கின்றது.

book _5.jpgபெண்ணை அடிமைப்படுத்திய தனிச்சொத்துரிமை ஆணாதிக்கப் போக்கில் பழமொழிகள் உருவாகின்றன. இவை சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகின்றன. இந்தப் பழமொழிகள் ஆணாதிக்க அமைப்பின் ஒழுக்கமாகின்றது. இதை ஆராய்வோம்.


''விதவை எதிரே வருவது அபச குணம்."37


இந்த ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் திருமணமே அவளின் உயிர் வாழும் தகுதியை அங்கீகரிக்கின்றது. சாதிய ரீதியாக, தாழ்ந்த சாதி மக்கள், உயர் சாதி தெருவில் நடப்பது எப்படி குற்றமோ, அதுபோல் விதவைக்கும் நிகழ்கின்றது. ஆண் அற்ற பெண், விதவை நிலையில் வீட்டில் அடைந்து வாழ வேண்டும் என்ற, ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தில் இருந்து இந்தப் பழமொழி சமூக நடைமுறை விளக்கமாகின்றது.

book _5.jpgஆணாதிக்கம் சமூகப் பொருளாதார ரீதியாகப் பலம்பெறும்போது, மொழியிலும் அதன் செல்வாக்கு ஆழமாக ஊடுருவுகின்றது. இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, பால்வேறுபாடு வேறு பிரிந்த ரீதியில் இனம் கண்டு விளக்குவதற்கு அப்பால், ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து விளக்குவதாக மொழியுள்ளது. மொழி பாலியல் ரீதியாக வரையறைக்கு உட்பட்டும், வரையறைகளை மீறியும் பால்தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழியின் பயன்பாடு, அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு தொடர்பாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

book _5.jpgஇந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

book _5.jpgசாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

book _5.jpgநாம் பெண்ணின் உரிமை, கடமை, மற்றும் ஆணாதிக்கம் தொடர்பாக ஆராய வௌ;வேறு வரலாற்று, இருகட்டங்களின் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.


மனுதர்மத்தைப் பெண்கள் மீது ஆணாதிக்கப் பார்ப்பனியம் திணிக்கும்முன் சமுதாயம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது எம்முன் கேள்வியாக உள்ளது அல்லவா? ~அதர்வண வேதம்| பெண்கள் உபநயனம் செய்யவும், சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும், வேத மந்திரங்களைப் பயின்றதையும் உறுதி செய்கின்றது. பாணினியின் ~அஷ்டாத்யாயில்| பெண் குருகுலத்தில் பயின்றதை உறுதி செய்கின்றது. பதஞ்சலியின் ~மகாபாஷ்யத்தில்| பெண்கள் பயிற்றுவிக்கும் குருவாக இருந்ததை உறுதி செய்கின்றது. பெண்கள் தத்துவவியல், சமயம் போன்றவற்றில் ஆண்களுடன் விவாதம் செய்ததை வரலாறு நிறுவுகின்றது.

book _5.jpg2500 வருடம் பழமை வாய்ந்த புத்தமதம் பற்றிய மதம் சார்ந்த தமிழ் மூல நூல்கள் இன்மையால், கிடைத்த தரவுகளில் இருந்தே கூட புத்தமதம் ஓர் ஆணாதிக்க மதமாக இருப்பதைக் காணமுடியும். புத்தமதத்தை ஆணாதிக்கமற்ற மதமாகக் காட்ட முனையும் எல்லாப் போக்குகளின் பின்பும், பிழைப்புத்தனமே எஞ்சிக் கிடக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE