தேவதாசி முறையை விபச்சார நிலைக்கு இட்டுச் சென்ற பார்ப்பனியம் தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள இதை ஊக்குவித்தனர். உடல் சேர்க்கை மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற மதக்கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, பெண்ணைப் பக்தியின் பின்னால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். தமிழில் ~தேவரடியாள்| (தேவ அடியாள்) என்ற சொல்லின் மொழி பெயர்ப்பே தேவதாசியானது. தேவதாசி முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்து மத ஆதிக்க வெற்றியின் விளைவாகியது. பார்ப்பன இரத்தத்தில் பிறப்பவர்கள் மட்டுமே அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற இறைவன் அருள் கிடைக்கும் என்று கூறினர். அதைத் தாண்டி உருவான அறிவாளிகளைத் தமது உறவின் விளைவாகப் பிறந்தவர்கள் எனக் காட்டி, பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டினர். இன்று பாலியல் விடுதலையைச் சுதந்திரத்தின் அடிப்படை என்று எப்படிக் கூறுகின்றனரோ அப்படித்தான், பக்தியின் பின்னால் பார்ப்பனருடனான உடலுறவு பெண்ணின் மோட்சத்துக்கும், நிகழ் உலகச் செல்வத்துக்கும் திறவு கோள் என்று கூறி ஆணாதிக்கம் கொழுசாக வாழ்ந்தது. தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயிலில் ''400 தேவதாசிகள்"7 இருந்தனர்.