Language Selection

பி.இரயாகரன் - சமர்

தேவதாசி முறையை விபச்சார நிலைக்கு இட்டுச் சென்ற பார்ப்பனியம் தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள இதை ஊக்குவித்தனர். உடல் சேர்க்கை மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற மதக்கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, பெண்ணைப் பக்தியின் பின்னால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். தமிழில் ~தேவரடியாள்| (தேவ அடியாள்) என்ற சொல்லின் மொழி பெயர்ப்பே தேவதாசியானது. தேவதாசி முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்து மத ஆதிக்க வெற்றியின் விளைவாகியது. பார்ப்பன இரத்தத்தில் பிறப்பவர்கள் மட்டுமே அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற இறைவன் அருள் கிடைக்கும் என்று கூறினர். அதைத் தாண்டி உருவான அறிவாளிகளைத் தமது உறவின் விளைவாகப் பிறந்தவர்கள் எனக் காட்டி, பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டினர். இன்று பாலியல் விடுதலையைச் சுதந்திரத்தின் அடிப்படை என்று எப்படிக் கூறுகின்றனரோ அப்படித்தான், பக்தியின் பின்னால் பார்ப்பனருடனான உடலுறவு பெண்ணின் மோட்சத்துக்கும், நிகழ் உலகச் செல்வத்துக்கும் திறவு கோள் என்று கூறி ஆணாதிக்கம் கொழுசாக வாழ்ந்தது. தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயிலில் ''400 தேவதாசிகள்"7 இருந்தனர்.

ஜப்பானில் பெரும் பணக்காரர்கள் ஆசிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த பின் கைவிடப்படுவது சாதாரணமாக உள்ளது. இந்தப் பாலியல் தரகில் ஈடுபடும் இரகசிய நிறுவனங்கள் மட்டும் 700 உள்ளன. இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியா என்ற பெண் வழக்கு தொடர்ந்து போராடியதால் இது அம்பலமானது. (1.5.1991)6 பெண்ணை ஏமாற்றி, பாலியலை அனுபவிப்பது என்பது உலகம் தழுவிய போக்காக உள்ளது. இங்கு எப்போதும் பெண் தற்காப்பு நிலையிலும், ஆண் எப்போதும் தாக்குதல் நிலையிலுமே அணுகுகின்றனர். இது சில விதிவிலக்காக ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடையே பெண்ணும் தாக்குதல் கட்டத்துக்கு மாறிவிடுவது உண்டு.

 

சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், தென்கொரியா உட்பட்ட ஐந்து நாடுகளிலும் 10 கோடி பெண்கள் பாலுறவுக்காகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இப்படி வருடா வருடம் பெண்களில் 5 கோடி பெண்கள் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர்.2 மேலும் ''எல்லை தாண்டும்; மிரட்டல்" என்ற தலைப்பில் வருடம் 7,000 நேபாளியப் பெண்கள் வறுமை காரணமாகப் பெற்றோரால் விற்கப்பட்டு, இந்தியாவின் விபச்சாரப் பகுதிகளுக்குக் கடத்தி வரப்படுகின்றனர். எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகிய பெண்கள் மீள நேபாளத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

''வாடகைத் தாய்" ''அவன் - அவள் - அது" என்ற தலைப்புகளில் குழந்தையைப் பணத்துக்குப் பெற்றுக் கொடுத்தலைப் பற்றி எழுதுகின்றன பல பத்திரிக்கைகள். இதில் ஆணின் விந்தை வாடகைத் தாயின் கருவுடன் சேர்த்தல் அல்லது இருவரும் உடலுறவு கொள்ளல் மூலம் நடக்கின்றது. சிலவேளை வாடகைத் தாய் குழந்தையைக் கொடுக்க மறுத்து நீதி மன்றம் வரை செல்வதும் நிகழ்கின்றது. (21.7.1997)34

சுஸ்மிதாசென் உலக அழகு ராணியாக தெரிவானதை ஒட்டி மொடல் உலகம் பற்றி பணம், புகழ்... பற்றி பெருமையாக விவரிக்கப்படுகின்றது இந்தியா டுடே. (21.10.1994)34 மேலும் ''அலிகள் அழகுப் போட்டி" ''மூன்றாம் அழகு" என்ற தலைப்புகளில் தன்னார்வ அமைப்புகள் எயிட்ஸ் விழிப்புணர்வை முன்வைத்து நடத்திய அழகுப் போட்டியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளது. (6.5.1997)34


அழகு என்பது வரையறைக்குள் உள்ளாக்க முடியாது என்பதை உலகமயமாதல் தலைகீழாக்கியுள்ளது. மனிதனுக்கு மனிதன் அவனின் வேறுபட்ட வாழ்க்கை சூழலை ஒட்டியும் பலவிதமான காரணத்தாலும் அழகு பற்றி வௌ;வேறு விதமான பார்வையை மனிதன் கொண்டிருந்தான். ஆனால் சந்தைத் தளம் இதைத் தலைகீழாக்கியுள்ளது.

 

உலகமயமாதல் வேகம் பெற வக்கரித்த பாலியல் சுதந்திரம் உச்சத்துக்குப் போகின்றது. பாலியல் நோய்கள் என்றுமில்லாத வகையில் உலகைப் பிடித்தாட்டுகின்றது. உலக நாகரிகத்தின் தலைமையிடமாகக் கொண்டு கொண்டாடப்படும் அமெரிக்காவில் பாலியல் நோய் சமூகமயமாகிச் சமூகத்தையே நாசமாக்குகின்றது.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை 16 பேர் கொண்ட குழு செய்த ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் 1.2 கோடி அமெரிக்கர்கள் பாலியல் நோயில் சிக்கி விடுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன (15.4.1995)6 இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1989-ஆம் ஆண்டு பதிவான வரதட்சணைப் படுகொலை 4,821 ஆகும். இரு மணி நேரத்துக்கு ஒன்றாக நாள் ஒன்றுக்கு 13 வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன. இது 1983-இல,; நாள் ஒன்றுக்கு மூன்று மட்டுமே. 1986-இல், ஆறாக இருந்தது. அதாவது 1983-இக்கும் 1989-இக்கும் இடையில் 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. (1.10.1990)6


டெல்லியில் 1985-இல், பதிவான வரதட்சணை படுகொலை 43-இல் இருந்து 1988-இல், 71ஆக அதிகரித்துள்ளது. இது 1989 ஜனவரி முதல் 1990 மார்ச் வரை 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (16.5.1990)6

இந்தியாவில், வீட்டில் பெண்கள் மீதான துன்புறுத்தல் 13.2 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இந்தியாவில் குடும்பப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 53 பேர் தற்கொலை செய்கின்றனர் என என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கின்றது. நீதிமன்றத்தில் பெண்கள் மீதான துன்புறுத்தல் வழக்கு இழுத்து அடித்தே (தாமதப்படுத்துதல்) தாக்கல் ஆகின்றது. இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் போது 40 சதவீதமான பெண்கள் இறந்து விடுகின்றனர். (9.12.1998)34

கற்பழிப்பு என்பது வரலாற்று வழியாகக் காலாகாலமாக ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாக உள்ளது. ஆண் சமுதாயத்தின் சுதந்திரமான ஆணாதிக்கப் பிறவியாக இருந்தபடி, அதன் அதிகாரப்படி நிலையில் பெண் மீதான வன்முறையைக் கையாளுகின்றனர். இதன் போது சமுதாயம் எதிர்த்து நிற்கின்றது. இது வரலாற்றின் படி நிலையில் எங்குமே நீடித்துக் கிடக்கின்றது. இந்த வன்முறையின் போது எதிர்த்துப் போராடியவர்கள் கடவுளாக்கப்பட்டு வழிபாட்டுக்கு உரியவரானார்கள். இந்த வகையில் பணங்குடியில் வசித்த இஸ்லாமிய தையற்காரன் போராடி மடிந்த சம்பவத்தைப் பார்ப்போம்.


அந்த ஊரில் அழகான தயிர்க்காரி தினசரி காலையில் தயிரை ஊரிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இந்தத் தயிர்க்காரியைக் கற்பழிக்க ஒருவன் முயன்ற போது, அவள் அந்தத் தையற்காரன் கடையில் அடைக்கலம் புகுகின்றாள். அந்த நிலையில் தையற்காரன் அப்பெண்ணைப் பாதுகாக்க முயல அவனைக் கொன்று விடுகின்றான் கற்பழிக்க வந்தவன். இதைத் தொடர்ந்து அந்தத் தையற்காரன் அந்த மக்களின் "வழிபாட்டுக்குரிய மாடனாக (இறைவனாக)''51 இன்றும் இருக்கின்றான். இந்தச் சம்பவம் ஆணாதிக்கத்துக்கு எதிரான மக்களின் பொதுத்தன்மையைக் காட்டுகின்றது. ஆனால் இந்தக் கொடுமை முன்பைவிட அதிகரித்துச் செல்வது மட்டும் உண்மையாகும். அதை நாம் ஆராய்வோம்.

இன்று உலகின் தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீதான நம்பிக்கைகள் இந்த அமைப்பின் அச்சாணியாக உள்ளது. இந்த ஜனநாயகம் மிக்க சிலருக்கு, பலர் உழைக்கும் சுரண்டலில் தன்னை நியாயப்படுத்துகின்றது. பெண்கள் இந்த அமைப்பில் போட்டி போடுவதன் மூலம், சலுகை பெறுவதன் மூலம், போராடி வெல்வதன் மூலம், ஆணுக்கு நிகராக விடுதலை பெற முடியும் என்ற கோட்பாடுகள் மீது உலகமயமாதல் முகத்தைப் பொத்தி அடிப்பதைப் பார்ப்போம். 1990-இல், 120 கோடி வறிய மக்கள் 130 கோடி டொலரை மட்டுமே வருவாயாகக் கொண்டுள்ளனர். 1998-இல், 120 கோடி டொலராக குறைந்து வறுமை சமூகமயமாகி அதிகரித்துள்ளது. இந்த வறுமையில் சிக்கியுள்ளோரில் பெரும் பகுதி பெண்கள் ஆவர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 70 டொலரை உற்பத்தி செய்வதுடன், உலக உற்பத்தியில் 78 சதவீதத்தைப் ப+ர்த்தி செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 6 சதவீதத்தையே பெறுகின்றனர். இதிலும் நேரடியாகப் பெறுவது 3 சதவீதத்தையே. அதாவது ஒரு டொலரைவிட குறைவாகும். (4.2000)42

சரிநிகர்

 


நாட்டுப்புறப் பாடல்கள் ஒருபுறத்தில் பெண்ணின் அவலத்தைப் பிரதிபலிக்கும் போது, மறுதளத்தில் ஆணாதிக்க வக்கிரம் வெளிப்படுவது ஆணாதிக்கச் சமூக எதார்த்தமாக இருக்கின்றது. கிழக்கிலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல் வகைகளில், கிராமியக் கவிகள் பெண் பற்றிய பலவிதமான தகவல்களைத் தருகின்றது. அதில் இருந்து பெண்ணை ஆராய்வோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE