வெக்ரோன் தனது சொந்த அவலத்தின் உண்மைத்தன்மையைக் கூட தனது ஊடகமான தொலைக்காட்சியின் ஊடாகக் கொண்டு வந்துவிட முடியவில்லை. இந்த நிலையில், எப்படித்தான் தமிழ்ச் சமூக நலன் சார்ந்த உண்மைகளைக் கொண்டு வர முடியும்?
திடீரென சில காரணங்களைக் கூறி நிறுத்திய வெக்ரோன் தொலைக்காட்சி, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது சொந்தக் காதுகளிலேயே பூக்களைச் செருகியபடி அரோகராச்சாமி ஐயப்பன் பாட்டு பாடுகின்றனர். எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது நடத்தும் திரைமறைவுச் சதிகள் மற்றும் நாடகங்கள், தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தின் மேல் செங்கம்பளம் விரித்து அதன் மீதாகவே நடைபோடுகின்றது.