07. 07.2005 அன்று நடந்த ரி.பி.சி.யின் அரசியல் விவாதக்களம் தன்னை மற்றொரு புலி அமைப்பு தான் என்பதைப் பிரகடனம் செய்துள்ளது. நாம் கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு அணி மீதான எமது தொடர் விமர்சனத்தில் எதைச் சொன்னோமோ, அதை உறுதி செய்துள்ளது.
விவாதக் களத்தில் சுதந்திரம் என்பது ரி.பி.சி. கூறி வந்த கடந்த காலக் கருத்தாகும். ஆனால் திடீரென்று ரி.பி.சி. இதை மாற்றியுள்ளது. தனது நேயர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறமுடியாது என்று கூறி தொலைபேசி அழைப்புகளைத் துண்டித்தது. தமக்கு உதவ முடியாது என்று கூறுபவர்களுக்கு இனி இதில் இடமில்லை என்றனர். இதைத்தான் புலிகளும் செய்கின்றனர். அவர்கள் ஆயுதம் வைத்திருப்பதால், அதைச் சமூக மயமாக்குகின்றனர். உங்களிடம் ஆயுதம் இல்லாததால் உங்கள் அளவில் அதை மட்டுப்படுத்துகின்றீர்கள் அவ்வளவே.