முட்டாள்கள் முட்டாளாகவே நீடிப்பார்கள். ஒரு தலைமையே முட்டாளாகிவிட்டால், முட்டாள்தனமே சமூகத்தை குரூரமாக்குகிறது. இதுவே போராட்ட அமைப்பில் ஏற்பட்டுவிட்டால், எங்கும் வேதனையும், துன்பமும், தீமையும் சமூகத்தின் தலைவிதியாகி விடுகின்றது. சமூகம் எதையும் சுயமாக ஆற்றும் சமூக ஆற்றலை இயல்பாகவே இழந்து விடுகின்றது. சமூகம் சுய உணர்வை இழந்து, சுதந்திரத்தையே இழந்து விடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சுக்கள் எந்தவிதமான இரைச்சலுமின்றி போகின்றது. வாய்விட்டு அழவும் முடியாத, பீதி கலந்த அச்சவுணர்வே சமூக உறவாகிவிடுகின்றது.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்
தமிழ் சமூகம் சமூக சீரழிவுக்குள்ளாகி வரும் ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் எம்மை அறியாது பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ்மக்களின் படித்த சுயநலம் கொண்ட முட்டாள்தனத்தையே பயன்படுத்தி உருவான புலிப் பாசிச பயங்கரவாதம், மக்களிள் வாழ்வை உறுஞ்சிக் குடிப்போருக்கு இசைவானதாகவே உள்ளது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களையே எதிரியாக்கி ஒடுக்கி நிற்க, புலிகள் சிங்கள அரசை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழ்மக்களையே அரையடிமைகளாக்கியுள்ளர். இதன் மூலம் ஒரு கும்பல் உழைப்பின்றி உழைப்பை சூறையாடி வாழ்வதே தேசியமாகிவிட்டது. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகள் சொந்த உழைப்பின்றி, இவர்கள் கருதும் தேசியத்தையே உறிஞ்சி வாழ்வது எதார்த்தமாகிவிட்டது.
ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்
மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள் முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை
இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்
பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.
வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன் வெறும் சடலம் தான்.
பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து
மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்
நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன என எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.
அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.
தமிழ்மக்களின் தலைவிதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று
ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்பி, இவர்களின் மக்கள்விரோத செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுனைவோம்.
பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்
"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் கூட ஆணின் ஒழுக்கக்கேட்டை மடடுமல்ல,
ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?
ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை பெண்ணியல்வாதியாகவும், தம்மை அவரின் சிஷ்சிகளாகவும் வரிந்து கட்டிக் கொண்டு கூத்தாடினர்.
வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் மட்டும் தான்.
லும்பனுக்கு நட்பார்ந்த வணக்கம்
முதலில் தூசணத்தால் பதிவிட்டது முதல் பலவிதமாக அணுகிய நீங்கள், இன்று சில கேள்விகளுடன் விவாதத்தளத்துக்கு வந்தமைக்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள். ஆனாலும் கூட கேள்விகள்,