Language Selection

பி.இரயாகரன் - சமர்

 ஏற்றுமதிச் சந்தையைக் கட்டுப்படுத்திய ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதியை பலதுறையில் முடமாக்கியது. சர்வதேச சந்தையில் வர்த்தகப் பொருட்களுக்குத் தேவையான ஆதாரப் பொருட்கள், 1979இல் 40.5 சதவீதமாக இருந்து. இது 1987இல் 28.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மூலப் பொருட்களின் விலை வீழ்ந்து, அதனிடத்தில் விலை அதிகம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. 1980க்கும் 1986க்கும் இடையில் ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. சில மூலாதாரப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்திய அடிமட்ட விலைக்கு வீழ்ச்சி கண்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான தேசங்களின் வளர்ச்சியை, இதன் மூலம் ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தின. சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படாத சந்தைப் பொருளாதாரம் என்ற தேசிய கூக்கூரலை, குரல் வளையில் நெறிக்கப்பட்ட நிலையில் ஏகாதிபத்தியங்களால் சிலுவையில் அறைப்பட்டன. உயிர்த்தெழும் அனைத்து வாய்ப்புகளையும், இந்தச் சமூக அமைப்பில் இல்லாது ஒழித்தன.

 

 மனித அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான உற்பத்திகளை ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் போது, அவை பெரும்பாலான நாடுகள் மேலான ஆதிக்கத்தைப் பெற்று விடுகின்றன. குறித்த நாட்டின் பிரதான வருவாயாக குறித்த ஒரு பொருள் உள்ள போது, அதை அன்னிய ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனம் கட்டுப்படுத்தும் போது, நாடே குறித்த நிறுவனத்தின் அடிமையாகி விடுகின்றது. இதனடிப்படையில் தான் பன்மையான பொருளாதார உற்பத்திக் கூறுகளை அழித்து, ஒற்றைப் பொருளாதாரத்தில் தங்கி நிற்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் திணிக்கின்றது. குறித்த ஒரு பொருளின் ஏற்றுமதியே, நாட்டின் அனைத்துத் தேவைக்குமான இறக்குமதிக்கான வளத்தை வளங்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் உருவாக்கின்றது. ஒரு நாட்டின் திவாலை எப்படி அறிவிப்பது என்பதையே, ஏகாதிபத்தியமும் இறுதியாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனது கையில் எடுத்துக் கொள்கின்றன. இந்தவகையில் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியே ஒற்றைப் பொருளாதாரமாகியதுடன், அது ஏகாதிபத்திய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுள்ளது. உதாரணமாக பார்ப்போம்.

 மனிதனின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு முதல் அனைத்துப் பொருட்களையும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. அத்துடன் ஒரு உற்பத்தியில் காணப்படும் இயற்கையின் பன்மையை அழித்து, ஒருமையான, ஒற்றை உற்பத்தியை நோக்கி மாற்றி அமைக்கின்றனர். ஒரு பொருளின் பன்மையான கூறுகள் சார்ந்த இயற்கைத் தெரிவை, மற்றவன் உபயோகிக்கக் கூடாது என்ற தனிமனித நலன் சார்ந்து இயற்கையிலேயே இருந்து ஒழித்துக் கட்டப்படுகின்றது. 1995இல் 15 பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்த 20 முக்கியமான அடிப்படை பொருளில், பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தின. இப்படிக் கட்டுப்படுத்திய சில பொருட்களையும், அதன் அளவையும் நாம் பார்ப்போம்

தேசங்களின் சுயேச்சையான வாழ்வு என்பது எங்கும்  எப்போதும், மக்களின் சொந்த உற்பத்தியில் தங்கிநிற்பதில்  சார்ந்துள்ளது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவையை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் போதே, தேசத்தின் உட்கூறுகள் நீடித்து நிலைத்து நிற்கமுடியும். இதுவே தேசியப் பண்பாடுகளையும், தேசியக் கலாச்சாரத்தையும், தேசத்தின் தனித்துவத்தையும் பாதுகாக்கத் தேவையான அடிப்படையாகும். சொந்த தேசிய பலத்தில், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலத்தை இது தேசங்களுக்கு வழங்குகின்றது. அனைத்து வகையான காலனிய வடிவங்களும் இந்தக் கூறுகள் வளர்ச்சியுறுவதை தடுத்து நிறுத்தியிருந்தன. மாறாக ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதை நாடகவும், ஏகாதிபத்தியத்தின் தேவைகளை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு இழிநிலை நாடுகளாக காலனிகள் நீடித்திருந்தன.

 முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத்தின் உருவாக்கம், உலகளவில் ஒரு அதிர்வை சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படுத்தியது. காலனிகளில் இருந்து செல்வங்களை அபகரித்து வந்த மேற்கின் நலன்களில், இது ஒரு அதிர்வை உருவாக்கியது. சோவியத் உலகில் மிகவும் தனித்துவமான, சுரண்டலுக்கு எதிரான, உழைக்கும்  வர்க்கத்தின் அதிகாரத்தில் இருந்தமையால், மேற்கின் காலனிகள் எங்கும் கடுமையான கொந்தளிப்பான சர்வதேச நிலைக்கு சென்றது. காலனிய மக்கள் தமது சொந்த விடுதலையில் புதிய நம்பிக்கைகளை பெற்று, போராடத் தொடங்கினர். உழைக்கும் மக்களின் சொந்த அதிகாரத்தை கோரும் சர்வதேச நிலைமை, உழைப்பையே சுரண்டி வாழ்ந்த மேற்கின் நவீன போக்கு பலத்த அடியாக இருந்தது.

 சீனாவில் இவை எதிர்மறையில் வறுமையைப் பன்மடங்காக்கு கின்றது. இது உள்ளூர் உற்பத்தியில் நடக்கும் மாற்றத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றது. மூலதனத்தின் ஜனநாயகம் மக்களின் வறுமையில் பறப்பதையே, சீனாவில் நாம் தெளிவாகக் காணமுடியும்.

 எதிர்மறையில் சீனச் சந்தை ஒரு மணி கூலி அடிப்படையில், ஜெர்மனியில் 128 பேரின் வேலையின்மையை உருவாக்குகின்றது. சம்பள விகிதங்களின் அடிப்படையில் வேலை இன்மையை உற்பத்தி செய்கின்றது. 128 பேரின் வேலைக்குரிய ஒரு ஜெர்மனிய தொழில்துறை தனது வேலை ஆட்களை நீக்கிவிட்டு சீனாவுக்குள் ஓடிவிடுவதையே விரும்பும். ஒரு ஜெர்மனியரின் கூலியைக் கொண்டு, சீனாவில் 128 பேரை வேலைக்கு அமர்த்த முடியும். அதாவது ஜெர்மனியில் 128 தொழிலாளிக்கு கொடுத்த கூலி மூலம் 16,384 சீனத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்த முடியும்.

 1750இல் உலக ஏற்றுமதியில் சீனா மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இந்தியா நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பா அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியை கொண்டிருந்தது. மிகுதியான 20 சதவீதத்தையே மற்றைய நாடுகள் கொண்டிருந்தன. இங்கு உழைப்பவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு சமச்சீரான சர்வதேசப் போக்கு காணப்பட்டது. செல்வத்தைப் பகிர்வதில் இடைவெளிகள் குறைந்து காணப்பட்டது. இடைப்பட்ட மத்தியதர வர்க்கம் சமூகத்தின் பெரும் போக்காகக் காணப்பட்டது.

இயற்கைக்குப் புறம்பாக மனித வரலாற்றில் எதை சக  மனிதனுக்கு மறுக்கின்றனரோ, அதுவே வர்த்தகமாகின்றது.  மற்றொரு மனிதனுடன் தனது சொந்த உழைப்பிலான உற்பத்தியை பகிர்ந்து கொண்ட சமூக நிகழ்வை மறுப்பதே, இன்றைய நாகரீகமாகும். இதுவே வர்த்தகமாகும். எல்லாவிதமான இன்றைய சிந்தனைகளும், செயல்களும் இதற்குள் தான் கட்டமைக்கப்படுகின்றன. மற்றைய மனிதனுடன் தனது சொந்த உழைப்பை பகிர்ந்து கொள்வதை, இன்றைய ஜனநாயகமும் சுதந்திரமும் காட்டுமிராண்டித்தனமாகக் காண்கின்றது. இதையே ஜனநாயக மறுப்பாகவும், சுதந்திரமின்மையாகவும் கூட சித்தரிக்கின்றது. இதுவே அனைத்து அரசுக் கட்டமைப்பினதும் சித்தாந்த உள்ளடக்கமாகும்.

சீ ன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை  உருவாக்குகின்றன. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்கும்  இங்குமாக ஓடவைக்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறி விட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையின் விலைகள் பலவற்றை, சீன உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. சீன உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் ஏற்படுத்துகின்றன. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள், அதிக இலாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தியும், உற்பத்திகளில் அராஜகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது.

 2002இல் நடந்த ஏற்றுமதியை 2003உடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் உலக அளவிலான ஏகாதிபத்திய முரண்பாடுகளை தெளிவாக இனம் காணமுடியும். ஒப்பீட்டு அளவில் ஜெர்மனிய ஏற்றுமதியை எடுத்தால் 13,620 கோடி டாலரால் அதிகரித்தது. அமெரிக்கா ஏற்றுமதி 3050 கோடி டாலரால் அதிகரித்தது. சீனா ஏற்றுமதி 11,280 கோடி டாலரால் அதிகரித்தது. ஜப்பானிய ஏற்றுமதி 5,690 கோடி டாலரால் அதிகரித்து. ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு கடுமையான வீச்சான மோதல் நடக்கின்றது. சந்தையை யார் அதிகம் ஆக்கிரமிப்பு செய்வது என்பதில் கடுமையாகவே மோதுகின்றன. இது தேசங்கடந்த உள்நாட்டு இராணுவ மோதலாக, இராணுவ ஆக்கிரமிப்பாக மாறி வருகின்றது. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE