கனடா சென்ற போது பி.இரயாகரனிடம் எடுக்கப்பட்ட பேட்டி, நம்மொழி சஞ்சிகையில் வெளியாகியது.
எது சமூகத்துக்கு நடக்கக் கூடாதோ, அது நடக்கும். சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி, அதை தமது அலுக்கோசுத்தனத்துக்கு பயன்படுத்துவது நிகழும். சமூகத்தின் அறிவை நலமடித்து, அதையும் திண்டு செரிக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றது.
இலங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர்.
உ ன்னதமானதாகக் காட்டப்படும் உலகமயமாதல் என்ற சுதந்திரமான, ஜனநாயகமான, நாகரிக சமூக அமைப்பில், மனிதர்கள் சுயசிந்தனையற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்ட மந்தைக் கூட்டமே. இங்கு பண்ணை அடிமைகளாக, பண்ணை மந்தைகளைப் போல் வாழவே கற்றுக் கொள்கின்றோம். சமூக அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும் ஒருங்கே கொண்ட காட்டுமிராண்டிகளாக மனிதர்களை மாற்றுவதில்தான் உலகமயமாதலின் வெற்றி அடங்கியுள்ளது.
ம னித வரலாற்றில் தனிச்சொத்துரிமை அமைப்பு உருவானது முதலே, சக மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவது தனிமனித உரிமையாகியது. இதுவே மனிதனின் ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதுடன், மனித நாகரிகத்தின் பண்பாட்டுச் சின்னமாகவும் கொழுவேற்றுள்ளது. இது சட்டதிட்டங்களினால் மட்டும் சுரண்டல் அமைப்பை கட்டமைத்துவிடவில்லை. சட்டதிட்டங்களைச் சுற்றியுள்ள சமூக ஒழுக்கங்களும், சமூகப் பண்பாடுகளும், சமூக கலாச்சாரங்களும் கூட, இதற்குள்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
மனித சமூக சாரத்தை நாம் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்வதற்கு, ஒட்டுமொத்தமாகவே இயற்கை சார்ந்து முழுமையாக ஆராயவேண்டும். மாவோ கூறியது போல் ""ஒரு விசயத்தைப் பூர்த்தியாக அதன் முழுமையில் பிரதிபலிக்க வேண்டுமானால், அதன் சாராம்சத்தையும் அதில் உறைந்து கிடக்கும் விதிகளையும் பிரதிபலிக்க வேண்டுமானால், புலன் உணர்வுகளின் மூலம் கிடைக்கும் ஏராளமான விவரங்களில் கொச்சையானதைத் தள்ளி, சாராம்சத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு பொய்யானதை அகற்றிவிட்டு உண்மையானதை வைத்துக் கொண்டு, ஒரு அம்சத்திலிருந்து இன்னொரு அம்சத்திற்குத் தொடர்பு கொண்டு, புறத்திலிருந்து உட்பொருளுக்குச் சென்று ஆராயவேண்டும்.
நா ம் எப்படி இருந்தோம், எப்படி இருக்கின்றோம், எப்படி இருக்கப் போகின்றோம் என்பதை உலகமயமாதல் ஒவ்வொருவர் முன்னாலும் கேள்வி எழுப்புகின்றது. உலகமயமாதல் உலகில் உள்ள அனைத்தையும் ஒற்றைப் பரிணாமத்தில் கட்டமைக்கின்றது.
உலகளவில் மக்கள் கூட்டம் தமது வரலாற்று ரீதியான சுயஅடையாளங்களையே, படிப்படியாக ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களிடம் இழந்து வருகின்றன. மறுபக்கத்தில் உழைப்பு சார்ந்து உருவாகும் மனிதனுக்கேயுரிய சுயமான சிந்தனைத் திறனை, மூலதனம் மலடாக்குகின்றது. சுதந்திரமான ஜனநாயகமான தெரிவுகள் அனைத்தும், உலகளவில் பரந்துபட்ட மக்களுக்கு படிப்படியாக மறுக்கப்படுகின்றது. தேசங்கடந்த அந்நிய முதலீட்டினால், இயற்கையான மனித தேர்வுகள் எல்லாம் பாரிய அளவில் எல்லை கடந்து அழிக்கின்றது.
எண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல இடங்களில் எடுத்துக் கையாளும்போது குழப்பியடித்துள்ளனர். எந்த அலகைப் பயன்படுத்தினர் என்ற குறிப்பு தரப்படவில்லை. உதாரணமாகச் சர்வதேச ரீதியாகப் புள்ளி விபரங்களை எடுத்துக் கையாளும்போது டிரில்லியன், பில்லியன் எனப் பல்வேறு எண் அலகுகளை எடுத்துப் பயன்படுத்திய போது, புள்ளி விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று குழப்பமாகவே காணப்படுகின்றது. இயன்றவரை எனது நூலில் அவற்றைச் சரிபார்த்துப் பயன்படுத்தியுள்ளேன். சரிபார்க்க முடியாதவைகளை இந்த நூலில் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் அடைப்புக்குறியுடன் பயன்படுத்தியுள்ளேன். கீழே சர்வதேச அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
77
ECONOMIC RESEARCH DEPARTMENT
78
THE WORLD'S WOMEN 2000: TRENDS AND STATISTICS
79
HDRO homepage
80 உறவு1286
CHALLENGES
87
MARIANNE - 11.2000
88
LIBERATION
89 உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச் சூழலும். வந்தனா சிவா96
COURIER - INTERNATIONAL
97
LE FIGARO ECONOMIE
98
PARISIEN
99 சரிநிகர்101
IMPERIALISM - Decadent; Parasitic, Moribund, Capitalism Harpal Brar
102 தொழிலாளர் பாதை103
Challenges
104
ECONOMISTE
105
ALTERNATIVES ECONOMIQUES
106
ECONOMIA
107
COURIER
108
Banque Mondiale
109
L'Economie Mondiale 1820-1992
110
La dette dans le tiers monde
111
Peches, alimentation et development
112
Courier
113
Newsweek
114
L'Express
115
Jonas
116
OBSERVATEUR
117
Population Mondiale - 1997
118
Forbes.com
119
la pauvrete des enfants - 2000
120 உலக வங்கி இணையம்122
Faim Development
123 கூரியர்124
ILO
125 உலகமயமாக்கலும் தலித் மக்களும் சேது
Courier International
உ லகமயமாதல் எப்படி மனித குலத்துக்கு எதிராகச் செயல்படுகின்றது என்பதையே மேலே பார்த்தோம். மனித வாழ்விற்கான சகல அடிப்படைக் கூறுகளையும், மனிதன் ஒரு சமூகக் கூறாக நெருங்க முடியாத வகையில், நலமடிப்பதே உலகமயமாதலின் அடிப்படை குறிக்கோளாகவே உள்ளது. இயங்கியலின் போக்கையே இது மறுதலிக்கின்றது. இயற்கையின் உள்ளடக்கத்தை, மனிதன் தனது சமூக இருப்பின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திய இயங்கியல் போக்கில் இருந்து, அவனைத் துண்டிக்கும் பணியை மூலதனம் செய்கின்றது. அதாவது மனிதர்களின் மிகப் பெரும் பகுதியை மந்தைக்குரிய நிலைக்குத் தரம் தாழ்த்தி, அடைத்து வளர்க்கும் ஒரு மந்தையின் பண்பின் நிலைக்கு இட்டுச் செல்வதே உலகமயமாதலாகும்.