Language Selection

பி.இரயாகரன் - சமர்

பாரிஸ் தலித் மாநாடு உள்ளடக்க ரீதியாக தவறான அரசியல் வழியைக் கொண்டு இருந்தது. எமது சரியான அனுபவம் மூலம், தலித்திய உணர்வை சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த தவறை உணர்த்த விரும்பினோம். அதை கொள்கை அளவில் ஏற்க வைத்தோம்.

இந்தக் கேள்வி எம்முன் தொடருகின்றது. மூடி மறைக்கப்பட்ட செயற்பாடுகள், குழுவாதங்கள், இயக்க நலன்கள் என்று எண்ணற்றவர்களின் நலன்களுடன் கூடியிருந்த கூட்டம். பிறப்பால் தலித்துகள் மற்றும் தலித் ஆதரவு போலிகள் கூடியிருக்கவே, தலித் மாநாடு நடந்தது.

அதைத்தான் உயிர்நிழல் 26 இல் அதன் ஆசிரியர் தனது கருத்தின் ஊடாகச் செய்கின்றார். மக்கள் போராட்டத்தை இழிவாடும் அவரின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அம்சமாக, என்னை அதில் கட்டுடைக்கின்றாராம். நல்ல வேடிக்கை.

தலித் மாநாட்டில் பசிர் என்ற முஸ்லிம் மதவாதி, முஸ்லீம் இடையே சாதி இல்லையென்றார். ஒரு பகுத்தறிவாளனாக அல்லாது, முஸ்லீம் என்ற மத அடையாளத்துடன் சாதிய அவலத்தையே மூடிமறைக்க முனைந்தார். இவர்கள் மனித உரிமைவாதிகளாம். ஒரு மதவாதி எப்படி மனித உரிமைவாதியாக இருக்கமுடியும். பக்தன் இருக்க முடியும், மதவாதியோ தத்துவஞானியோ (புலியெதிரிப்பு ஆய்வாளர்) அல்ல.


தமிழ் மணத்தில், எமது தமிழ் அரங்கம் தளத்தில் வாசகர் ஒருவர், ஆதாரத்துடன் முஸ்லீம் மதத்தில் சாதியம் பற்றி கூறுவதை பாருங்கள்.

பி.இரயாகரன்
22.10.2007

நீங்கள் பதிந்துள்ள விஷயம் வெகுவாக உண்மையென்று நினைக்கின்றேன். இது உண்மை தான். குர்-ஆனும், முகம்மது நபியின் இறுதி சொற்பொழிவும் சாதி, நிற, மொழி வேற்றுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கிறது. ஆனால் நடைமுறையில் உலக முஸ்லீம்களிடையே குறிப்பாக உர்தூ பேசும் முஸ்லீம்களிடையே நீங்கள் கூறியுள்ள சாதி வேறுபாடு இருப்பது உண்மைதான். சமீபத்தில் "India Untouched" எனும் திரைப்படம் கண்டேன்.

அதனை இயக்கியவர் ஸ்டாலின் எனும் ஒரு மலையாளி ஆவார். அந்த திரைப்படம் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்களால் திரையிடப்பட்டது. இயக்குனரும் அங்கே இருந்தார். அத்திரைப் படம் அனைத்து மதங்களிலும் சாதியிருப்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது. இஸ்லாத்தில் உள்ள சாதி பழக்கங்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். ஏனெனில் நான் அறிந்த இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை. நடைமுறையிலும் ( நான் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்) நான் காணவில்லை. படம் முடிந்ததும் சேக்குகளும் செய்யத்களும் செய்யும் சாதி வேறுபாடுகளைப் பற்றி, உர்தூவினை தாய் மொழியாகக் கொண்ட நண்பனிடம் கேட்ட போது அவன் அதை அமோதித்தான்.

நடைமுறையில் உள்ள இஸ்லாத்தில் தமிழகத்தில் கூட முஸ்லீம்களிடையே இராவுத்தர், மரைகாயர் என்று பல்வீனமான பிரிவுகள் உள்ளன. ஆனால் திருமணம் போன்றவற்றில் இப்பிரிவுகள் பெரிய தடையாக இருப்பதில்லை. ஆனால் உர்தூ மக்களிடையே, செய்யத் - ஷேக் பிரிவு ஒருவருகொருவர் ஆகாத பிரிவுகள். இவர்கள் இருவரும் தங்களை அரபு நாட்டின் வாரிசுகள் எனக் கருதுகின்றனவாம். அந்த படத்திலும் அதைத்தான் கூறினார்கள். எனது நண்பனும் அதைத்தான் கூறினான்.

ஒரு காஷ்மீரத்து நண்பரிடம் இது பற்றிக் கேட்ட போது அவரும் அது உண்மை யென்றார். அதன் பிறகுதான் நான் பாக்கிஸ்தானில் நிகழும் கெளரவ கொலைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.அந்த திரைப் படத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கின்றேன். அதிர்ச்சித் தகவல்கள் அதில் உள்ளன. இந்த சாதி சண்டைகளால் தனியே கட்டப்பட்ட பள்ளிவாசலையும் பற்றி கூட காணலாம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ளதை போல இது பீகாரில் அதிகம் எனக் கருதுகிறேன். அப்படத்திலும் அப்படித் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. (ஆனால் ஷேக் - செய்யது சண்டை இந்தியா முழுவதும் உள்ளது என நினைக்கிறேன்)(அந்த படம் இந்திய கிறிஸ்தவத்தில் உள்ள சாதியையும், சீக்கியர்கள் மத்தியில் உள்ள சாதியையும் பற்றிக் கூட பல அதிர்ச்சித் தரும் ஆனால் நடை முறையில் உள்ள உண்மைகளைக் கூறுகிறது.)உங்கள் பதிவிற்கு நன்றி. அப்படத்தினைப் பார்த்ததும் அதைப் பற்றி ஒரு பதிவு போட நினைத்தேன். ஆனால் அப்போது இணையப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை.

மு மாலிக்

http://vilambi.blogspot.com/

 

 

யாரெல்லாம் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்பனியத்தையும், புலியிசத்தையும் ஆதரிக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களின் எதிரிகள். அந்த மக்களின் எதிரிகளே, எமது எதிரிகள். இவர்களுடன் நாம் இணக்கம் காணமுடியாது.

கடன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில், அங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடனோ நாடுகளையே திவõலாக்கி வருகின்றது. மக்கள் கடனைக் கட்டுவதுடன், வாழ்க்கை பூராவும் வட்டியைக் கட்டும் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். கடனில் இருந்து மீள முடியாத நிபந்தனைகள். வேடிக்கை என்வென்றால் கடனை வாங்குவது கூட, அவசியமான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகிவிட்டது. உதவி என்ற பெயரில், நிபந்தனைகளுடன் கூடிய கடன் வாரி வழங்கப்படுகின்றது. இந்தக் கடன், மனிதனின் சமூக சாரத்தையே உறிஞ்சி அழிக்கின்றது.

 book _9.jpg"நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும்.'' இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ் என்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளார்ந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள்.

எண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல இடங்களில் எடுத்துக் கையாளும்போது குழப்பியடித்துள்ளனர். எந்த அலகைப் பயன்படுத்தினர் என்ற குறிப்பு தரப்படவில்லை. உதாரணமாகச் சர்வதேச ரீதியாகப் புள்ளி விபரங்களை எடுத்துக் கையாளும்போது டிரில்லியன், பில்லியன் எனப் பல்வேறு எண் அலகுகளை எடுத்துப் பயன்படுத்திய போது, புள்ளி விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று குழப்பமாகவே காணப்படுகின்றது. இயன்றவரை எனது நூலில் அவற்றைச் சரிபார்த்துப் பயன்படுத்தியுள்ளேன். சரிபார்க்க முடியாதவைகளை இந்த நூலில் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் அடைப்புக்குறியுடன் பயன்படுத்தியுள்ளேன்.  கீழே சர்வதேச அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


சர்வதேச அலகுகள்


ஐரோப்பிய அலகு
டிரில்லியன்             10,000 கோடி கோடி (1018) (1 000 000 000 000 000 000)
பில்லியன்               1,00,000 கோடி  (1012) (1 000 000 000 000)
மில்லியட்                 100 கோடி  (109)  (1 000 000 000)


அமெரிக்க அலகு
டிரில்லியன்            1,00,000 கோடி  (1012) (1 000 000 000 000)
பில்லியன்              100 கோடி  (109)  (1 000 000 000)


பொதுவானது
மில்லியன்            10 இலட்சம்  (10,00,000)
நூறுஆயிரம்        1 இலட்சம்  (1,00,000)
பத்தாயிரம்            10 000
ஆயிரம்                   1000
நூறு                         100
பத்து                        10
ஒன்று                     1


 இக்கட்டுரையில் குழப்பத்தைத் தவிர்க்க கோடி, இலட்சம்,  ஆயிரம் என்ற பழக்கமானதும், விளங்கக் கூடியதுமான சொற்களையே பயன்படுத்தியுள்ளேன். இதன் சர்வதேச அலகுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்குரிய அட்டவணையை தந்துள்ளேன். உலகமயமாதல் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக உள்ளதால், சர்வதேச அலகில் எண் பற்றிய தெளிவு அவசியமானது. உலகமயமாதலை எதிர்த்த போராட்டத்தில், நிலைமையைப் பூரணமாக புரிந்து கொள்வதற்கு, எண்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியமானதாகும். 


கோடி              1,00,00,000  (100  இலட்சம்)
லட்சம்             1,00,000  (100  ஆயிரம்)
ஆயிரம்           1,000   (100  பத்து)


 நிலங்களின் பரப்பைப் புரிந்து கொள்ள, கீழ் உள்ள அலகை தெரிந்து கொள்வது அவசியம்.


ஹெக்டேர்   10,000 சதுர மீட்டர் 


 இக்கட்டுரையில் ரூபா என பயன்படுத்தியுள்ள அனைத்தும் இந்திய ரூபாயைக் குறிக்கின்றது. மற்றவை குறித்த நாட்டின் பணப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.

அனுபவ ரீதியான வாழ்வில், அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளும் சரி, புலிகளும் சரி இந்த உண்மையை மறுக்கின்றனர். தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இருவரும் மறுக்கின்றனர். ஒருவர் இதை பயங்கரவாதம் என்கின்றார் என்றால்,

இவை தனிப்பட்ட பெண்களை அணுகுவதாக இருந்தபோதும், இது ஆணாதிக்க சமூக நோய். சமூகம் என்ற அறநெறிகளை இழந்து வரும் சமூகத்தில், இவை போன்றன தனிப்பட்ட சம்பவங்களாக மிக வக்கிரமாக வெடித்துக் கிளம்புகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE