Language Selection

பி.இரயாகரன் - சமர்

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்

அப்படித்தான் நிலைமை காணப்படுகின்றது. அதைத்தான் மகேஸ்வரன் படுகொலை சொல்லுகின்றது. இந்த ஆண்டு இலங்கையில் என்றுமில்லாத மனித அவலங்கள் ஏற்படவுள்ளது. கடந்து வந்த தொடர்ச்சியான மனித துயரங்களை எல்லாம், இது மிஞ்சும்.

கிழக்கு மக்களோ மீளமீள, யாரும் கைகொடுத்து உதவ முன்வராத துன்பத்தையே அனுபவிக்கின்றனர். கடுமையான மழையும், வெள்ளமும், அந்த மக்களை மீண்டும் ஓருமுறை அகதியாக்கியுள்ளது. இயற்கை தான் இதை உருவாக்கிய போதும், செயற்கையான யாழ் மேலாதிக்கமோ, அந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

அவலமும் துயரம் நிறைந்த ஒரு சமூகம் தான் தமிழ் இனம். இன்று எமது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.

சுயநலமும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்த சமூக அமைப்பில், மனிதனாக வாழ்தல் என்பது கூட விதிவிலக்குத் தான். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற குறுகிய வட்டத்தில் வாழ்கின்ற மனிதர்களிடையே, விதிவிலக்காக வாழ்ந்த ஒரு தாயின் மரணச் செய்தியை கேட்க நேர்ந்தது.

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது.

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE