Language Selection

பி.இரயாகரன் - சமர்

கிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.

பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.

பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்த கிழக்கு மக்களின் இன ஒற்றுமையை, தமிழ்தேசியம் தான் பிளந்தது என்று கூறிக்கொண்டு புலியெதிர்ப்பு என்ன அரசியல் நடத்தியது? தமிழ்தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தியதை விட, மிகமோசமாக இன ஒற்றுமையை கிழக்கிசம் சிதைத்தது.

 

கொலைக் கலாச்சாரம் தான் எமது தேசியம். நாங்கள் நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல், ஜனநாயகம் பேச முடியாது. யார் இதற்கு எதிராக எதைச் சொன்னாலும், எப்படி விமர்சித்தாலும் நாம் சுயவிமர்சனம் செய்ய முடியாது. நாங்கள் இதற்கும் மரணதண்டனையைத் தான் வழங்குவோம். இதையே தான் வலதுசாரிய மக்கள் விரோத புலிகள், மீண்டும் சொல்ல முனைகின்றனர்.

பாசிசப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரியை வைத்து, தமது துரோகத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது புலியெதிர்ப்பு "ஜனநாயகம்". புலியெதிர்ப்பையே தனது அரசியலாக செய்பவர்களில் ஒருவரான ராகவன், 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்று கேட்டு, எழுதுகின்றார். இதன் மூலம் தமது துரோகத்துக்கு, நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

பொறுக்கிகளுக்கேயுரிய வகையில் எல்லா புலியெதிர்ப்பு கோஸ்ட்டிகளும் மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களை நம்பி, அவர்களைச் சார்ந்து எந்த அரசியலும் இவர்கள் செய்வது கிடையாது. மாறாக ஆயுதம் ஏந்திய குண்டர்களையும், ரவுடிகளையும், கூலிப்படைகளையும் சார்ந்து நின்று தான், இவர்கள் தமக்கேற்ற ஒரு 'ஜனநாயகத்தைப்" பேசுகின்றனர்.

பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!

 

மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!

பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.

புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE