Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார். 

மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்;படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

 

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது. 

எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது. 

 

இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.

1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, அவர்களின் கல்வி வளங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு தமிழ் தேசிய தலைவர்கள் தூணாக துணையாக நின்றனர், நிற்கின்றனர்.

யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு  தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.

மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.

 

இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.

தமிழ்மக்கள் தாம் போராடாமல், தமக்கான விடுதலையை ஒருநாளும் அடையமுடியாது. இதுவல்லாத அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் மக்கள் போராட வேண்டும் என்பதை அங்கீகரிக்காத வரை, மாற்றுப்பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை தமது மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த உதவும் வாதத்துக்கு உரிய வெற்றுச் சொல்லாடல்கள் தான்.

'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

கிழக்கில் திட்டமிட்ட வகையில் நடைபெறும் கற்பழிப்புகளோ அரசியல் ரீதியானவை. இதை மூடி மறைப்பது கூட, அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இலங்கையில் நடைபெறும் பொதுவான கற்பழிப்புக்களை விட, இது வேறுபட்டவை. இந்தக் குற்றம் நிகழ்கின்ற ஒரு பொதுச் சூழலில் தான், ஆசிய மனித உரிமை அமைப்பின் செய்தி வருகின்றது. குறித்த ஒரு சம்பவம் மீது, கவனத்துக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எதிர்வாதங்கள், இது போன்ற உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் மிக இழிவான அரசியல் செயலாகும். 

பேரினவாதத்தை ஆதரிக்கும், பேரினவாத கூலிக் கும்பலை 'ஜனநாயக”வாதிகளாக காட்டும், பேரினவாத நடத்தைகளை புலி ஒழிப்பாக போற்றும், கிழக்கு பாசிட்டுகள் தான் இப்படிக் கூறுகின்றனர். அரசு மற்றும் கிழக்கு கூலிக்கும்பல் நடவடிக்கைகளை பாதுகாக்க முனைபவர்களிடம், நாம் எப்படி தான் நேர்மையை எதிர்பார்க்க முடியும். கிழக்கு மக்களுக்காக போராட மறுப்பவர்கள் தான் இவர்கள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” என்று இவர்களால் அழைக்கப்பட்டவர்களின், கிழக்கு மக்களுக்கு எதிரான மனித விரோதத்தை எப்போதாவது எதிர்த்துள்ளனரா? சொல்லுங்கள். இவர்களிடம் நாம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும். 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE