ஏதோ இதை புலியிடம் மட்டும் கோரியதாக கூட சிலர் (திடீர் ஜனநாயகவாதிகள்) திரிக்கின்றனர். யாரெல்லாம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை தீர்க்க முனையவில்லையோ, அதாவது இதை யார் பாதுகாத்து நின்றனரோ, அவர்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டமும் நடந்தது.
பலரும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்ற, பல நூற்றுக்கணக்கானவர்களின் தியாகம் செய்த போராட்டம் இதற்காக நடந்துள்ளது. முதல் பலி இவர்கள் தான். யாரும் அஞ்சலி செலுத்தாத தியாகமாகவே எம்முன் உள்ளது. இதை மக்களுக்கான ஒரு தியாகமாக இன்று வரை மதிக்காத தேசியம் பாசிசமாகவும் மறுபக்கத்தில் ஜனநாயகம் கூலிக்கு மாரடிக்கும் அரச எடுபிடியாகவும் உள்ளது. இதையே தமது போராட்டம் என்கின்றனர்.