உறவினர்களினதும், நண்பர்களினிதும் நல்ல உறவுகளை கூட துண்டிக்க கோரும் மதம், வீட்டு கதவுகளையும், தொலை பேசிகளிலும் மற்றைய மதங்களையும், மனிதர்களையும் தூற்றி, செம்மாறியாடாக தம்மிடம் வந்துவிடும்படி கொடுக்கும் தொல்லைக்கு முடிவுகட்ட, தொடர் துண்டுப்பிரசுரம் அவசியமாகிவிடுகின்றது. இதை நீயும் உன்னால் இயன்றளவு பரப்பி பங்களிப்பது உனது கடமையாகும்.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
விளம்பரத்தில் மார்க்சியமாகிய அசை, திரிபுவாதத்தை கொடியாக்கின்றது
பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் மற்றும் புரட்சிக்கு முந்திய பிந்திய சமுதாயத்தில் வன்முறை சார்ந்த வர்க்கப் புரட்சியை மறுக்கும் அசை, மார்க்சியத்தை இதன் அடிப்படையில் திருத்தக் கோருகின்றது. மார்க்சியத்தை கல்லறைக்கு அனுப்ப முயலும் முதலாளித்துவ அறிவித்துறையினர், "மார்க்சிடம் திரும்பவது" என்ற பெயரில் மார்க்சியவாதிகளாவது நவீன திருத்தல்வாதமகும்;. மார்க்சியத்தை முன்வைத்த மார்க்சுக்கு திருத்தை முன்வைத்த திருத்தும் எழுத்துக்குகளையே, சொந்த அரசியல் வறுமை மீது கையேலதனத்தில் நின்றே அசை காவடியாக்கின்றது.
பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?
வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.
அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.
இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்
"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்
தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனயொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது.
உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்
தேசியம் என்பதன் அடிப்படை உள்ளடக்கமே என்ன? தேசிய பொருளாதார கட்டமைப்பாகும். தேசிய பொருளாதார கட்டமைப்பை பற்றி பேசாத அனைத்து தேசியங்களும் பிற்போக்கானவையாகும். அவை உள்ளடக்கத்தில் இன்றைய உலக ஒழுங்கை பேணிக் கொள்வதையும், அதன் நீட்சியாக இருப்பதையும் மூடிமறைக்கின்றது. இலங்கையில் சிறுபான்மை இனங்கள் முதல் பெரிய தேசிய இனங்கள் ஈறாக தேசியத்தை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும், தேசிய பொருளாதாரம் பற்றி மக்களுக்கு இருட்டடிப்பு செய்கின்றனர். இதில் இருந்தே இலங்கையில் பிற்போக்கான மக்கள் விரோத தேசியங்கள், மக்களின் மேல் சவாரி செய்வதை தனது தேசிய கொள்கையாக தேசியமாக வருணிக்கின்றனர்.
இனவாதமும் சுயநிர்ணயமும்
திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது.
இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
1978 வரையப்பட்ட இனவாத அரசியல் சட்டம் "சிறீலங்க குடியரசு என்பது பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்கும். பௌத்த சாசனத்தையும் தர்மத்தையும் பேணிக்காக்கும் பொறுப்பு அரசுடையதாகும்." இந்த இனவாத மதவாத அரசில் சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையை தெளிவாகவே அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கின்றது. போலிச் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டனின் நலன்கள் சார்ந்து உருவான அரசியல் அமைப்பு கிறிஸ்தவ மதம் சார்ந்தே காணப்பட்டது.
மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.
மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்
இனவாதம் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்தவர்கள் அதற்காக கையேந்தக் கோரினர். இலங்கை பிரஜாவுரிமை வேண்டுமாயின் விண்ணப்பிக்க கோரினர்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
இனவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெதுவாகவே தலைகாட்டத் தொடங்கியது. 1911 இல் "இந்திய வம்சாவழித் தமிழர்" என்று உத்தியோகபூர்வமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.
இந்த கோப்பிச் செய்கைக்கு அந்த மலைகளின் அடிவாரங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை பயன்படுத்த முடியாமைக்கு இருந்த பிரதான காரணம் என்ன.