Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன்று ஜரோப்பாவில் முற்போக்குகள் எனக் கூறிக் கொள்ளும் எல்லோரையும் நாம் முற்போக்குகளாக ஏற்காமையைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம். இம் முற்போக்குள் விமர்சனமா? என்று கேள்விக் கணைகளுடன் தாக்குகின்றார்கள். முற்போக்கு எனச் சொல்லிக் கொண்டவர்களின் எம் மீதான தாக்குதலை தொடர்ந்து நாம் இது தொடர்பாக விளக்க முற்பட்டோம். சமர் தனக்கென ஒரு அரசியல் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலிருந்தே எமது விமர்சனம் அமைகிறது. நாம் எமது கருத்துக்களை அரசியலின்றி வெறும் தாக்குதலாகச் செய்யவில்லை. அப்படி அரசியலுக்கப்பால் தாக்குதல் செய்ததாக எழுத்திலோ எதிலோ சுட்டிக்காட்டின் சுயவிமர்சனத்தை நாம் பூரணமாகச் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் தனிநபர் மீது ஏன் இன்று விமர்சனத்தை முன் வைக்க வேண்டியுள்ளது என்பதை விளங்கப்படுத்தினோம். கடந்த சமர் இதழில் ஆசிரியர் தலையங்கம், இவ்விதழின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதியின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது உதாரணத்துக்கு ஓரிரு விடயங்களே சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பெண்ணுடன் ஏழு பேர் தொடர்பு கொண்டதை சுட்டிக்காட்டி (என்-எல்-எவ்-டி- வரலாற்றைப் படிக்கவும்) இதை விமர்சிக்கக் கூடாதா? ஜந்தாறு பெண்களை அரசியலைப் பயன்படுத்தி ஏமாற்றின் விமர்சிக்கக் கூடாதா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

 

இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயபாலன் எழுந்து கடுமையான வார்த்தைகளால் வாயில் வந்தபடி சமரைத் தாக்கினார். அத்துடன் மாவோவை உதாரணத்துக்கு எடுத்தவர் சமர் சார்பாகப் பேசியவரைக் குறிப்பிட்டு உம்மை மாவோயிஸ்ட் என நம்பியதாகவும், மாவோவின் வாழ்வில் சம்மந்தப்பட்ட பெண்கள் தொடர்பாக மாவோ மீது அவதூறு சொல்வதாக கூறினார். ஜெயபாலன் கூறிய இக் கூற்று மாவோவுடன் ஒப்பிட்டு, அதை தனக்குப் பொருந்துவதை தாமாகவே ஏற்றுக்கொண்டார். மாவோ வரைமுறை மீறி பல பெண்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அது அடிப்படையில் தவறானது மட்டுமின்றி அது விமர்சனத்துக்குட்பட்டதே. மாவோவின் தத்துவங்களை ஏற்கும் நாம் அவரின் தவறுகளை விமர்சிப்பவர்களே. அப்படி மாவோ செய்திருந்தால் அதைச் சொல்லி ஜெயபாலன் செய்யின் அது மாவோவை சொல்லிப்பிழைக்கும் பிழைப்புவாதமே. மாவோ பெண்கள் தொடர்பாக மத்திய குழுவில் விவாதம் நடைபெற்றதாக அறிகின்றோம். அங்கு விமர்சனம், சுயவிமர்சனம் இது தொடர்பாக நடைபெற்றிருக்கும். இது தொடர்பாக பெரிதாக தெரிந்து கொண்டிராத நிலையிலேயே உள்ளோம். ஜெயபாலன் இதை நியாயப்படுத்தி தனது செயலை நியாயப்படுத்த முயன்றார். கடந்த காலப் போராட்டத்தில் ஜெயபாலன் பெண்களை சதைப் பிண்டங்களாக பயன்படுத்தியதை பலரும் அறிந்ததே. இவர் ஆண் பெண்ணுக்கிடையிலான உறவை தவறாகப் பயன்படுத்தினார். இவர் சமூக அரசியல் இயக்கத்தைப் பயன்படுத்தி அதில் பங்குகொண்ட பெண்களுக்கு தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் தசைகளை ரசித்தவர் தான். இதை மறுக்கமுடியாத வகையில் (உமாமகேஸ்வரன் கொலைகளை செய்தது போல்) கடந்த காலத்தில் இவருடன் இயக்கத்திலிருந்த அனைவரும் அறிவர். குறித்த பெண்கள் இவர் தம்மை மணம் செய்வார் (இவரின் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் மீதான நம்பிக்கையில் ) என்ற நம்பிக்கையில் தம்மை இழந்தவர்கள் தான். நீர் மாவோவை வைத்து நியாயப்படுத்தாது சுயவிமர்சனத்தை மனப்பூர்வமாக செய்யவும். இவர் பேசி முடிந்த பின் சமர் ஆசிரியரை வெளியில் சந்தித்து தான் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார். மன்னிப்புக் கொடுக்க என்ன எம்மைக் கர்த்தர் என நினைத்தாரா? ஏனெனில் இது சுயவிமர்சனமாக அமையவில்லை. அடுத்த நாள் நடந்த சம்பவம் இதை உறுதி செய்தது.

 

அன்று தொடர்ந்து ஜெயபாலன் பாசாங்கு தொடாபாக இரு விடயங்களை சுட்டிக்காட்டினார். இது எம்மை மார்க்சிசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பாசாங்கு செய்வதாக குற்றம் சாட்டினார். பாசாங்கு, மற்றும் மாவோ தொடர்பான கருத்துக்களை கூறி சமர் மீது தாக்குதலை தொடுத்த போது சபையிலிருந்தோர் கை தட்டி ஆரவாரித்தனர். மார்க்சிசத்தின் மீது எமது நிலையை பாசாங்கு எனச் சொன்னதுடன் மார்க்சிசத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்தார். மார்க்சிசம் இறந்துவிட்டதென சொன்னதுடன் எப்படி ஏன் என்று சொல்லாமல் விட்டதுடன், எம்முடன் விவாதிக்க தயாரின்றி மாhக்சிசத்தை கதைப்பதைத் தடுக்கும் வகையில் நையாண்டி செய்து, தனிநபர் தாக்குதலாக மாற்றினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தொடரில் நாம் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் அரசியலைக கொண்டுவர முற்பட்டபோது (மார்க்சிசமல்ல) அவர் தாக்குதலை நடத்தியதுடன், எம்மை பேசவிடாது தடுத்தார்.

 

மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்லி வர்க்கப் போராட்டம் தொடர்பாக கதைக்க முற்பட்ட போது வெறுப்பைக் காட்டும் ஜெயபாலன் எந்த அரசியல் ஆய்வில் நின்று இம் முடிவைச் சொன்னார் எனப் பார்ப்போம் (ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணையும் முன் ஒரு சரியானதொரு அரசியலைக் கொண்டிருக்கவில்லை. அப்படி ஒரு சரியான அரசியலைக் கொண்டிருப்பின் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணைந்திருக்கவே முடியாது. பி-எல்-ஓ-டி இல் இணைந்திருந்த ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-இன் உட்படுகொலையைத் தொடர்ந்து பலர் வெளியேறியபோதும் பி-எல்-ஓ-டி-க்கு மார்க்சிச மூலாம் பூசி நியாயப்படுத்தி பதவிக்காக அலைந்தவர். அத்துடன் இவர் இவ் அரசியலைப் பயன்படுத்தி பல பெண்களைப் தவறாகப் பயன்படுத்தியவர். பி-எல்-ஓ-டி இன் இயல்பான அழிவுடன் தானாக ஒதுங்கிக் கொண்ட ஜெயபாலன், தனது கடந்த காலத்தையோ தான் நியாயப்படுத்திய மார்க்சிசத்தையோ சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக அதே அரசியலைத் தொடர்ந்து பிழைப்புவாத நோக்கில் இன்று கடந்தகாலத்தின் மீதும் எந்த சுயவிமர்சனத்தையும் செய்யாது தொடரும் ஜெயபாலன் மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்ல எந்தவித தார்மீக பலமும் கிடையாது.

 

அடுத்தநாள் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தன. அதில் கருத்துச் சொன்ன நான்கு பெண்களில் மூன்று பெண்களின் கருத்துக்கள் இன்று ஜரோப்பாவிலுள்ள பெண்களின் பிரச்சனையைத் தொட்டு நின்றது. இது தொடர்பாக நாம் அவைகளைத் தீர்க்க என்ன மாதிரியான வேலைத்திட்டத்தை அதாவது எந்த வழிகளுக்கூடாகவெனக் கேட்க முற்பட்டபோது ஜெயபாலன் எம் மீது தாக்குதலைத் தொடுத்தார். தனிநபர் மீது அவதூறு செய்தார். குறித்த நபரின் மனைவி இதில் பங்கு கொள்ளாமையை சொல்லி அவர் மனைவியை அறையில் பூட்டி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னார். நோர்வேயிலிருந்து வந்த ஜெயபாலன் வாயில் வந்தபடி கண்மூடித் தனமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தனது மனைவி மனநோயாளியாக உள்ளார் எனச் சொல்லி கண்ணீர் வடித்து கூட்டத்தின் அனுதாபத்தை பெற முயன்றார். மனைவியெனின் எந்த மனைவியெனத் தெரியாத நிலையில், மனைவி மனநோயாளியாவதற்கு தானே காரணம் என்பதை என்ன பேசுகின்றோம் எனத் தெரியாமல் ஏற்றுக்கொண்டார். அத்துடன் தான் தற்கொலை செய்ய முயன்றதாகவும் சொன்னார். இவரின் கண்மூடித்தனமான உளறல்களுக்கூடாக தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார்.

 

அதே நேரம் ஜெர்மனியிருந்து வந்திருந்த பெண்ணொருவரும் (இவர் ஜெயபாலனின் தங்கை) வேறொரு பெண்ணும் இதே அவதூற்றைப் பொழிந்தனர். இவற்றிக்கும், அதற்கு முதல் நடந்த சமர் இதழ் மீதும், மார்க்சியத்தின ;மீதும் தொடுத்த தாக்குதலுக்கும் பதிலளிக்க முற்பட்ட போது எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் தாக்குதலாக மாறும் நிலையையும் அடைந்ததை தொடர்ந்து நாம் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதைக் கண்டித்து சபையிலிருந்து வெளியேறினோம். நாம் வெளியேறிய பின் ஜெயபாலன் சபையில் மன்னிப்புக் கேட்டிருந்தாராம். இவரின் மன்னிப்பென்பது அர்த்தமற்றது. தாம் எதையும் வாயில் வந்தபடி கதைத்துவிட்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்பது போல் கேட்பது சுயவிமர்சனமாகாது. முதல் நாளும், இரண்டாவது நாளும் இருமுறை மன்னிப்புக் கேட்டு சுயவிமர்சனமென்பதை பாவமன்னிப்பென்ற நிலைக்கு கேவலமாக்கியதை பார்க்க முடிகிறது. ஜெயபாலன் தன்;னை தேவையான நேரத்தில் இடதுசாரியென பறைசாற்றிக் கொள்பவர். அவர் மார்க்சியத்தின் மீது தாக்குதலை தொடுத்ததுடன், மற்றவர்கள் மார்க்சியத்தின் மீது தொடுத்தபோது, அவர் அங்கீகரித்து கைதட்டி ஆரவாரித்ததினூடாக மிகத் தெளிவாக ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதை ஏற்றுகொண்டார்.

 

ஆரம்பத்தில் எமது கருத்துக்களை தொடர்ந்து பாரதி என்பவர் எம் மீது தாக்குதலை நடத்தினார். நாம் எமக்கென ஒரு கொள்கையிருக்கின்றதென சொன்னதை சொல்லி இவர்கள் பயங்கரவாதிகள் எனச் சொன்னது தான் தாமதம் சபை கர ஒலிகளால் நிறைந்தது. ஏகாதிபத்தியங்கள் முதல் மூன்றாம் உலக நாடுகளை ஆளும் அரசுகளும், ஏன் புலிகளும் கூட அவர்களுக்கெதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் எனச் சொல்லி அழைக்கின்றனர். இக் கருத்தை கூறியவர்க்கும், கைதட்டி பாராட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் என்ன வேறுபாடு உண்டு. இவர்கள் அவர்களின் செல்லப்பிள்ளைகளாகவும், அவர்களின் இருப்பை அங்கீகரிப்பவர்களாகவும் இருந்தனர். தொடர்ந்து பாரதி அடுத்த நாள் பெண்கள் விடயத்தில் நாம் அரசியலுடன் பேசியதைப் பார்த்து கூறினார். இவர்கள் போப் போன்ற சமயவாதிகள் என்றார். இப்படி அவர் கூறியவுடன் பலத்த கரகோசங்களுடன் சபை மகிழ்ச்சியை தெரிவித்தது. இது இன்று எமக்கு மட்டும் நடந்ததில்லை. யார் புரட்சியை நேசித்தார்களோ அவர்கள் மீது அரசுகள் மற்றும் பித்தலாட்ட பேர்வழிகள் இது போன்ற குற்றச்சாட்டை அடுக்கியவர்களே. உளவாளிகள், சமயவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள்......என யார் சரியான புரட்சிக்கு குரல் கொடுக்கிறார்களே அவர்களுக்கு வளங்கப்பட்ட பட்டங்களே. இதை கூறிய பாரதியோ அதற்கு கைதட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டவர்களோ, எதைச் செய்கிறார்கள் என்பதை பயங்கரவாதிகள், சமயவாதிகள் ............ என்ற கூற்றுக்களுடன் தம்மை இனம்காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி பேசிய இரு முறையும் சமர் மீது முரண்பாட்டுக்குள் முரண்பாடு கொண்டதாகக் கருத்துக் கூறியவர் முரண்பாட்டை சுட்டிக்காட்டவில்லை. மீண்டும் கேட்டோம் என்ன சொல்லுகிறீர்களென்று ஆனால் அவரால் எதையும் விளங்கப்படுத்த முடியாமல் வெறும் வார்த்தைகளை மட்டும் கொட்டி உளறினார். கூட்டத்தில் ஓரிருவர் அரசியல் நிலையில் நின்று பிரச்சனைகளைப் பார்க்க முற்பட்டபோது எம்மை நோக்கி பாரதி கேட்டார் எத்தனை பேர் வந்தீர்கள் என்று. இதற்கூடாக இவர்கள் மார்சிசத்தைக் கதைப்பதையோ, அதை நேசிப்பவர்களையோ வெறுப்புடன் பயங்கரவாதிகள், சமயவாதிகள் என அலறி தமது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி கார்த்திகை 92 இன் 21ம், 22ம் திகதிகளில் ஜெர்மனியில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதில் இடம்பெற்ற விடயங்களாவன,

 

1) தேசியவாதம்

 

2) தேசியவாதமும் மார்க்சிசமும் ஒரு தொடர்பற்ற கூட்டு

 

3) தமிழ் தேசியம்

 

இந் நிகழ்ச்சிகளில் மார்க்சிசத்தை வெறுக்கும் பாரதி உட்பட சிலர் கலந்து கொண்டதுடன், வேறு சிலரும் இதில் மார்க்சிசத்தை வெறுக்கும் இவர்களின் கலந்துரையாடலின் நோக்கு எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் மார்க்சிசத்தை நேசிப்பவர்களை பயங்கரவாதிகள், சமயவாதிகள்,..... எனச் சொல்வதனூடாக இவர்கள் சரியான ஒரு தேசிய விடுதலையைச் சிந்திப்பவர்களைக் குழப்புவது அல்லது அழிக்கும் நோக்குடன் சில பிரமுகர்கள் தமது பிழைப்பை நடத்துவதற்கு வழியமைத்ததே இந்நிகழ்வு.

 

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிவசேகரம், மார்க்ஸ்ட், மனிதனும் மாசுபடும் சூழலும், ஜரோப்பிய இலக்கியஙகளும் நாமும்........ எனப் பல நிகழ்ச்சியில் உரையாற்றினர். இவர் ஆற்றிய உரைகள் எதிலும் இடதுசாரி அரசியலைக் கைவிட்டு தனது போலிமுகத்தை(அது அல்லது இதுவென) காட்டிக்கொண்டார். இவர் மார்க்சிசத்தை கதைத்தபோது அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் கதைப்பதைத் தடுப்பதில் முன்னின்று செயற்படுத்தினார். கலாமோகன் வாசித்த கதையைத் தொடர்ந்து அசோக் என்பவர் கேட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக பிரஞ்சு மொழியில் சிறந்த இலக்கியம் இல்லையே என்று. அக் கேள்விக்கு கலாமோகனே பதிலளிக்கவேண்டிய நிலையில் சிவசேகரம் கருத்து சுதந்திரத்தைப் மறுக்கும் வகையில் செயற்பட்டார். பிரஞ்சுப் புரட்சியும் சமகால இலக்கியமும் என்ற தலைப்பில் நாளை ஒருவர் கட்டுரை வாசிப்பாh.; அப்போது அவர் இதற்கு பதில் சொல்வார் என்றும், இப்போது கேட்க முடியாதென்றார். அடுத்தநாள் கட்டுரை வாசித்தவர் அதற்கு பதிலளிக்கவில்லை. கருத்துக்குப் பதிலளிப்பதைத் தடுத்ததுடன் இதை நாம் சுட்டிக்காட்டி இதன் தலைப்பு .ஜரோப்பிய இலக்கியமும் நாமும் எனச் சொன்னதுடன், தெரியாவிட்டால் தெரியாதெனச் சொல்வது தானே என்றோம். நாம் அந்நேரம் இந்த தலைப்பை மாறி உச்சரித்த சிவசேகரம் தலைப்பே சரியாகத் தெரியாமல் விமர்சிப்பதாகச் சொன்னதுடன் கேள்விக்குப் பதிலளிப்பதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டார். சிவசேகரம் எப்போதும் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் நழுவல் போக்குடன் சொல்பவரே. இவர் இலங்கையிலுள்ள சீனசார்பு புதியஜனநாயக் கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினரானவர். இவர் அனைத்துப் பிரச்சனைகளையும் பாராளுமன்ற வழிகளுடாக தீர்க்கப்பட முடியும் எனக் கருதுபவர். அதாவது 1970—1977 க்கிடைப்பட்ட காலத்திலிருந்தே சிறிமா சார்பு அரசுக்கள் போன்ற வடிவங்களால் தீர்க்க முடியுமெனக் கருதுபவர். சிறிமாவின் காலம் பொற்காலம் எனக் கருதுபவர். இன்று {-ஜ-தே-க- இடத்துக்கு மாற்றுத் தலைமையை(கூட்டு முன்னணியை) ஆதரிக்கத் தயாராகவுள்ளார். இவர்கள் தாம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதில் நம்பிக்கையற்றவர்கள். தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுபவர்களுக்குச் சேவை செய்யக் கோருபவர்கள். இக் கட்சியிலுற்ற சிவசேகரம் போன்றோர்pன் கருத்து எப்போதும் புதியஜனநாயக கட்சியின் சார்பானதாகவே உள்ளது. அக்கருத்துக்கள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. இவர் பின் இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்துக்கொண்டு தொழிலாளர்களை தமது அதிகாரத்துக்குட்படுத்தி போராடுவதை தடுக்கும் பச்சோந்திகள்.

 

இவர்கள் பாட்டாளி வர்க்கக் கருத்துக்களை உச்சரித்தவர்களைக் கண்டு வெறுப்பதுடன், அவர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்கத் தம்மால் இயனறவரை முயல்வார். இதை நாம் 1971----1977 க்கிடைப்பட்ட காலத்தில் சிறிமா மக்களின் கருத்து சுதந்திரத்தை பறித்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவர் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல், அடிப்படையைத் தொடாமலும் நசுக்கிவிடும் போலிகளே. இவர் வர்க்கப் போராட்டத்தை ஏற்பவரல்ல. இன்று ஒடுக்குபவர்கள் வன்முறைகளுக்கூடாக ஆளுகின்றார்கள். ஒடுக்கப்படும் மக்கள் அதற்கெதிராக வன்முறைகளுக்கூடாகவே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதை ஏற்றது கிடையாது. இவர் பாராளுமன்ற வழிகளுக்கூடாக சமூகத்தை மாற்றிவிடமுடியும் எனச்சொல்லி தமது பிழைப்பை சீனாவுடன் நடத்துகின்றனர். சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதைக் கூடக் கண்டிக்க திராணியற்ற பிரமுகப் பச்சோந்திகள்.

 

மார்கழி 92 இன் சுவடுகள் இதழில் சிவசேகரத்தின் கருத்துக்களையொட்டி விமர்சனம் வெளி வந்திருந்ததது. அக் கருத்துக்களுடன் உடன்படுகிறோம். அதே நேரம் இது தொடர்பாக நாம் ஆராய்வோமாயின் தற்கொலை என்பதை வீரம், தியாகம் எனச் சிவசேகரம் வர்ணித்ததுடன் புலிகளின் பேச்சாளராகவும் மாறியிருந்தார். அண்மையில் பி.பி.சி. யில் புலிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பிரபாகரன் சயனைற் அருந்தும் தற்கொலைக் கொலையாளிகளின் வீரம், தியாகம் பற்றிச் சொன்ன கருத்துக்கும் சிவசேகரத்தின் கருத்திற்கும் வேறுபாடு கிடையாது. எதிரியிடம் சிக்காமலிருக்க தற்கொலை தான் ஒரே மார்க்கம் எனின் புலிகளிடம் இன்று சிக்கியுள்ள 5000 க்கும் மேற்பட்ட கைதிகளும் சயனைட் அருந்தி இறந்திருக்க வேண்டும். புரட்சியெனக் கூறி சிவசேகரம் போன்றோர் தலைமைகளில் இருந்திருந்தால் இன்று புலிகளின் வதைமுகாமிலுள்ள 5000க்கும் மேற்பட்டவர்களும் மரணித்திருக்க வேண்டும். உண்மையான புரட்சிவாதி தற்கொலைக்குப் பதில் சிறைவாழ்வை எதிர் கொள்ளல் வேண்டும். அவ் வாழ்வை எதிர் கொள்வதே வீரம் மட்டுமின்றித் தியாகமுமாகும். சிவரமணி போன்றோரின் தற்கொலை என்பது அடிப்படையில் கோழைத்தனமானது. சிவரமணி வெறும் கவிதைகள் மட்டுமென்ற நிலையிலிருந்தததுடன், தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளாத நிலையிலிருந்ததும் தற்கொலைக்கான காரணம் எனலாம். கலை கலைக்காக மட்டுமென்ற வாதம் உடையவர்கள் கூட சில பிரச்சனைகளைக் கண்டு அதன் மீதான வெறுப்புடன் தற்கொலைகளை நாடுகின்றனர். அப் பிரச்சனைகளை மாற்றத் திராணியற்ற இவர்களின் மரணம் கோழைத்தனமானது. இதைத் தியாகம் வீரம் எனப் பிதற்றி சிவரமணியைச் சொல்லிப் பிழைக்கும் சிவசேகரத்தின் அரசியல் இதுவே.

 

ரதி உங்கள் வாதம் அடிபட்டு விட்டதெனத் தொடங்கிய நித்தியானந்தன் மார்க்சிசத்தை அவதூறு செய்து தனது கடந்தகால அரசியலின் தொடர்ச்சியை இனம் காட்டினார். உங்கள் வாதம் அடிபட்டுவிட்டது என்றதனூடாக சமூக மாற்றத்தை விரும்பிய அனைவரின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார். எமது வாதம் இச்சபையிலும் சரி, உலகத்திலும் சரி இன்றும் உயிர் வாழ்வது மட்டுமின்றி அதுவே உலகத்தை மாற்றும் தன்மை கொண்டது. இன்று சோவியத் முதல் சீனா வரை ஆட்சியிலுள்ள சீரழிந்த முதலாளித்துவமே(நித்தியானந்தன் விரும்புவது போல்) சமூகப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமெனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் மூலம் அந்நாட்டின் மக்கள் முன்பு இருந்ததைவிட மிக மோசமான வறுமைக்குள் சென்றதுடன் மோசமான அடக்கு முறையையும் எதிர்கொள்கின்றனர். அந்நாடுகளில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் இன்று மீண்டும் வீறுநடை போடுவதை இவர் போன்றவர்கள் கண்ணிருந்தும் குருடான அரசியல் குருடர்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.இன்று மார்க்சிசம் அதாவது வர்க்கப் போராட்டம் உலகை மாற்ற முடியாதெனின் இவரும், இவர் போன்றோரும் வைக்கும் தீர்வு தான் என்ன? நித்தி, உமக்கு முதுகெலும்பு இருப்பின் நீரும், உமது சகபாடிகளும் சேர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கான மாற்றுத் தீர்வை (மாற்று வழியை) முன் வையுங்கள். உங்கள் அனைத்துக் கருத்தின் மீதும் அத் தீர்வையும், வழியையும் வையுங்கள். எது உங்கள் தீர்வு?

முகமூடிக்குள் நின்று பேசுவதைக் கைவிடுங்கள். எது உங்கள் அரசியல் வழியோ அதை முன்வையுங்கள்.

 

இவரும், இவர் போன்றவர்களும் அப்படி வைக்கவே போவதில்லையென நாம் நம்புகிறோம். ஏனெனில் வர்க்கப் போராட்டமே சுரண்டலை ஒழிக்கும். அது பிழையெனின் சுரண்டலை ஆதரிக்கும் இவர் போன்றவர்கள் எப்படி தமது அரசியல் கருத்துக்களை நேரடியாகச் சொல்லிப் பிழைக்க முடியாமல் போய்விடும். இவருடைய அரசியல் நிலையைச் சிறப்பாகப் புரிய வைக்க ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். கடந்தகாலத்தில் இவர் விடுதலைப்புலிகளின் தத்துவவாதியாகவும், விடுதலைப்புலிகளின் பத்திரிகையாசிரியராகவும் இருந்தவர். அவற்றில் பல பல கட்டுரைகளையும் கவிதைகளையும்(இவை தாம் இவரின் இலக்கியங்கள்) எழுதியவர். (இன்று வரை அதை சுயவிமர்சனம் செய்யவில்லை. எப்படிச் செய்வார். அதுவே இன்று வரையான அரசியல்) அவற்றில் ஈ.பி.ஆர்-எல்-எவ்-வைச் செந்தோழர்கள் என நக்கலடித்து கவிதை வடித்தவர். அன்று செந்தோழர்கள் மீதிருந்த வெறுப்பு (புலிகளின் அரசியல்) இன்று வர்க்கப் போராட்டத்தைப் பற்றிக் கதைத்தவுடன் அதே தொடருடன் தாக்குதலை நடத்துகிறார். இதைத் தொடரும் இவரின் நடவடிக்கைக்கு மேலுமொரு உதாரணம், பிரான்சில் நடந்தவொரு கூட்டத்தில் இராமையா தொடர்பாக நித்தியானந்தன் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியைப் புலிகள் குழப்ப முயன்றனர். பலர் குழப்பத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். இதில் ஒருவர் நித்தியானந்தனைப் பார்த்து நீ யார் எனக் கேட்டதற்கு அவர் தான் ஒரு மனிதன் என்றும் சேட்டின் நிறத்தையும் சொல்லி தன் முகமூடியை இறுக்கப் போட்டுக் கொண்டார். அவனின் கேள்வியின் அர்த்தம் இதுவே. நானும் நீயும் சேர்ந்தே பல கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தினோம். அத்துடன் நடந்த கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தி அரசியல் முலாம் கொடுத்தது, எம்மை இயக்கத்தில் சேர்த்ததும் நீயே. அப்படியிருக்க இன்று என்ன நீ ஜனநாயகம் பற்றிப் புரட்டுகின்றாய்.? என்பதே அதன் அர்த்தம். அதற்கு அவர் சுயவிமர்சனத்துடன் (உண்மையில் கடந்தகால தனது அரசியலை கைவிட்டிருந்தால்) பதிலளிக்காமல் தனது போலிமுகங்களைக் காப்பாற்றிக் கொண்டார்.

 

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் நித்தியை திலகர் வந்து சந்திக்க அழைப்பு விடுத்தார். அப்போது இவருக்கு ஒத்துழைப்பாக நின்ற பலரின் கருத்துக்களையும் மீறி திலகரைச் சந்தித்தார். நித்தி திலகர் தனியாகச் சந்தித்து சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தனர். இரு முரண்பட்ட அரசியலைக் கொண்டவர்கள்(உண்மையில் அப்படியல்ல) சுமூகமாக சிரித்து கதைத்து மகிழ்ந்தனர். இதில் அவர்கள் அரசியல் கதைக்கவில்லை என்று யாரும் வாதிடமுடியாது. நித்திக்கு அரசியல் நேர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் புலிகள் தமது அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள். அவர்கள் நித்தியுடன் பொழுது போக்குக்காக அழைத்துக் கதைக்கவில்லை. அவர்கள் தேவையுடன் மட்டும் அழைப்பவர்களே. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த நித்தி தாம் என்ன கதைத்தோமென தமது ஆதரவாளர்களுக்கு கூடச் சொன்னதில்லை.

 

இந்நிகழ்வு இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது புலிகளுக்கும், பிரோமதாசாவுக்குமிடையில் நடந்த இரகசிய தேன்நிலவைப் போன்றதே. புலிகள் தமது உறுபபி;னர்களுக்கோ, மக்களுக்கோ தம்முடைய இரகசிய தேன்நிலவு பற்றிச் சொல்லவில்லை. சொல்லப் போவதும் இல்லை. அதே அரசியலின் தொடர்ச்சியே. நித்தி திலகர் தேன்நிலவு பற்றி தமது ஆதரவாளர்களுக்கோ, மக்களுக்கோ சொல்லவில்லை, சொல்லப் போவதுமில்லை. இது புலிகள், பிரோமதாசா, தமக்கிடையே அரசியல் வேறுபாடு இல்லை என்பதையும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தாமல் தடுக்கும் நோக்கில் இன்று யுத்தத்தை நடத்துவது போல் நித்தி, திலகர் சந்திப்பும் தமக்கிடையில் அரசியல் வேறுபாடின்மையையும் வர்க்கப் போராட்டத்தை தடுக்க (புலிகளின்; அரசியலை ஒதுக்க முயலும்) மூன்றாவது பாதையாளர்) தமக்கிடையில் முரண்பட்டிருப்பது போல் காட்டிக்கொள்வதன் அவசியத்தை புலிகள்- பிரேமதாசா போல் புரிந்து கொண்டனர்.

 

நித்தி தொடர்ந்து இலக்கியச் சந்திப்பில் நாவலன் என்பவர் சொன்ன கருத்தின் மீது அவை நாசிகளின் கருத்து என்று தனது தாக்குதலை நடத்தினார். இவர் நாசிகள் பற்றி ஓரிரு கட்டுரைகளை எழுதிவிட்டால் (அரசியல் இன்றி சம்பவங்களை) மட்டும் தான் எதிர்ப்பாளர்கள் என்ற முகமூடியை போட்டு விடுகிறார். நாவலன் சொல்லிய கருத்து வெளிநாடுகளில் 90 வீதமானவர்கள் பொருளாதார அகதிகளே என்பது. இப் புள்ளிவிபரம் சரியானதா என்பதைவிட இங்கு புகலிடம் பெற்றோரில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார அகதிகளே. இவர்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் இவர்களை இங்கு வர வைத்தது. நித்தி இவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் எனக் கருதுபவரெனில் இலங்கையிலுள்ள அனைவரும் அரசியல் அகதிகள் தான். இவர்கள் அனைவரிலும் இருந்து அரசியல் ரீதியில் அரசு மற்றும் விடுதலை இயக்கங்களின் கொலைப்பயமுறுத்தல் உள்ளவர்களையே மிகுதி பத்து(10) வீதமான அரசியல் அகதிகளுக்குள் நாவலன் குறிப்பிட்டார். இலங்கையியுள்ளோர் அனைவரையும் அரசியல் அகதியென ஏற்பின் நாட்டில் உள்ள அனைவரும்(முழுத் தமிழ்மக்களும்) நாட்டைக் கைவிட்டு இங்கு குடிபெயந்து வந்திருக்க வேண்டும். இதைத் தான் இங்குள்ளவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் என நித்தி அங்கரீத்துச் செய்ய நினைப்பது.

 

நாசிகள் சொல்லும் பொருளாதார அகதிகள் என்ற கூற்று வேறொரு நோக்கில் வெளிவந்ததே. நாசிகளின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்க ஒரு வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை புறம் தள்ளி கறுப்பினத்தவர் என்று முகம் கொடுத்தே புரட்சியை தடுக்க முயல்கின்றனர். இங்குள்ள அகதிகளை வெளியேற்றாதேயென நாமும் கோருகின்றோம். எந்த அடிப்படையிலெனின் இன்று இலங்கையில் நடைபெறும் யுத்தம், மற்றும் மக்களின் வறுமைக்கு காரணம் இந் நாடுகளே. யுத்தத்தை நடத்துபவர்களும் இவர்களே. இவ் யுத்தத்தை நடத்துவதனூடாக எம்மக்களை ஒட்டச் சுரண்டி கொழுப்பவர்களும் இவர்களே. அங்கு உள்ள நிலைமைக்கு இவர்களே காரணமாக இருக்கும் போது எம்மை வெளியேற்ற எக்காரணத்தையும் கூறமுடியாது என்பதே. இதே நோக்கில்(அரசியல் ரீதியில்) நாசிகளுக்கு எதிராக கருத்துக்களை கூற மறுத்து கருத்துக்களை திரிபுபடுத்தி நித்தி போன்றார் பிழைப்பதுடன் நாசிகளின் அரசியலை தொடர்கின்றார். அதாவது புலிகளின் அரசியலுக்கும், நாசிகளின் அரசியலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாத நிலையில் கடந்தகாலத்தில் புலிகளின் கொள்கைகளின் வகுப்பாளராகச் செயற்பட்ட நித்தி அதை சுயவிமர்சனம் செய்யாததுடன், திலகருடன் தேன் நிலவுகளை நடத்தும் இவர், தான் சொல்லும் கருத்துக்களில் அரசியலை நேரடியாகச் சொல்ல மறுப்பவர், மார்க்சிசம் இறந்து விட்டதென சொல்வதின் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.

 

1984 இன் ஆரம்பத்தில் டெலோ அமைப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட நாவனும், நேருவும்(இவர் பின்னால் என்-எல்-எவ்-டி உறுப்பினர் என சுட்டுக் கொல்லப்பட்டவர்) மற்றும் வேறு சிலரும் தப்பியோடிய நேரம் இவர்களுக்கேற்பட்ட உயிராபத்தைத் தடுப்பதாக் கூறி புலிகள் பாதுகாப்பு வழங்கினர். அப்போது இவர்களுக்கு பொறுப்பாக இருந்த நித்தி பாதுகாப்பு என்ற பெயரில் புலிகளுடன் இணையும்படி வற்புறுத்தியதும், அது சாத்தியமாகாது போக அவர்களை மிரட்டிய நித்தி பின் அவர்களை வேறு இயக்கம் அமைக்கக் கூடாதெனச் சொல்லி எச்சரித்தார். இதன் பின் இவர்களின் பாதுகாப்பிலிருந்தும் தப்பித்துச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. இதுவே நித்தியின் பாத்திரம் புலிகளுக்குள்.

 

நித்தி ஒரு கட்டத்தில் மார்க்ஸ்சைக் கூட விபச்சாரத்துக்கு அழைத்துக் கொண்டார். மார்க்சிசம் பெண்களின் உழைப்பை பற்றி சொல்லவில்லை மாறாக ஆணின் உழைப்பு பற்றி மட்டுமே கூறினார் என்றார். ஆண் உழைப்பு தொடர்பாக மார்க்சின் கருத்தை ஏற்காத நித்தி புலிகளின் பிரச்சாரகராக நின்று மார்க்சித்தைக் திரிபுபடுத்தினார். மார்க்ஸ் எப்போதும் ஆண் பெண் உழைப்பைப் பிரித்து தனது தத்துவத்தைக் கூறவில்லை. முதாலாளித்துவத்தின் தோற்றம் (இது நித்திக்கு தெரியாது) உழைப்பின் தேவையோடு பெண்களை ஈடுபடுத்தியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி மீதே மார்க்ஸ்சின் தத்துவம் உருவானது. அதாவது முதலாளித்துவ வளர்ச்சியில் உழைப்புத் தொடர்பாக விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து வெளிவந்ததே. இன்று வரை முதலாளித்துவவாதிகளுட்பட(நித்தி போன்ற வகையறாக்கள் தவிர) மார்க்ஸ்சின் தத்துவத்தையே ஏற்றுள்ளனர். உழைப்பு என்பது. ஆண், பெண்ணுக்குப் பொதுவானதே. நித்தி போன்றோரே மார்க்ஸ்சை விபச்சாரத்துக்கு கூப்பிட்டு பிழைக்க முயல்வதுடன், தனது புத்திஜீவித்தனம் என்று தனது முட்டாள்தனமான அரசியலை வெளிப்படுத்தினார்.

 

சமர் குழுவிலிருந்து ஒருத்தர் வெளியேற்றப்பட்டதையொட்டிய கடிதம் 5-6 சமர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. கருக்கலைப்பு சமூகத்தேவையை ஒட்டியதல்ல எனச் சமரால் முன்வைக்கப்பட்டதாக திரிபுபடுத்தி சரிநிகரில் கார்-மார்கழி-1992 இற்கான இதழில் இது பற்றிய விமர்சனம் அனிச்சா என்னும் பெயரில் வெளியாகியிருந்தது.

 

கருக்கலைப்பு, கருத்தடைக்கும் உள்ள வேறுபாட்டை சரிநிகர் ஆசிரியர் குழு சரியாக ஆராயாமலோ என்னவோ கருத்தடை ஒரு உயிர்க்கொலை என்னும் வியாபார நோக்குள்ள தலையங்கம் கொடுத்திருந்தும் ஒரு கசப்பான உண்மை எனச் சுட்டிக்காட்டுவதோடு மேற்கூறிய நபருக்கும், சமருக்கும் இருந்த பிணைப்பும், பிரிவும் பற்றி தெளிவுபடுத்துவதன் ஊடாக தொடர்ந்து கருக்கலைப்புப் பற்றிய சமரின் கருத்தை தெளிவாக்க முனைகின்றது.

 

1) குறிப்பிட்ட கடிதம் மேற்படி நபருக்கு சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு அனுப்பப்பட்டது.

 

2) சமர் முன் வைத்த வேலைத்திட்டத்திற்கமைவாக, கருத்தொருமிப்பும், புரிந்துணர்வோடும், சமூகநோக்கம் கொண்டதாக சொந்த வாழ்க்கையில் கறாராக நடந்து கொள்ளுதல் ஆகிய உடன்பாடு இருந்தது.

 

3) மேற்குறிப்பிட்ட நபர், சமர் குழுவில் இருந்த சிலர் மீது சொந்த வாழ்க்கையில் சமூகநோக்கற்று நடந்ததை சுட்டிக்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

4) சமர் இதழ் 2 இல் பெண் என்னும் கட்டுரையையும் மேற்படி நபரே எழுதினார்.(இக்கருத்தே இன்றும் சமருக்கு உள்ளது.

 

5) இவரது கருக்கலைப்பு அந்தரங்கம் இவராலேயே சமர் குழுவுக்கு ஒரு முற்போக்கு வேடத்தில் அறிவிக்கப்பட்டு தனித்தனியாக விவாதித்தார்.

 

6) குழந்தை ஒன்று தேவை என்று தனது குடும்பம் விரும்புவதாகவும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியால் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

7) இதுமுதற் தடவையல்ல, இரண்டாவது தடவை என்பதும் இவராலேயே அறிவிக்கப்பட்டது.

 

8) குறித்த காலத்தின் பின் தான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகவும் கூறினார்.

 

மேலே குறிப்பிட்ட இந் நபரின் கருத்துக்களை நிலை நிறுத்தி சமர் குழுவிலிருந்தோர்(தனிநபர்களாக)

 

1) இச்சமகால பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்ல பண உதவி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்ய முன்வந்தனர்.

 

2) கருக்கலைக்க வேண்டாம் எனக்கோரி குழந்தை பிறக்கும் வரைக்கும் உள்ள பண நெருக்கடியைக் கவனிப்பதாகவும், குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் தந்து விடும்படியும் குழுவில் ஒருத்தர் நட்போடு வேண்டுகோள் விடுத்தார்.

 

3) இக்கருச்சிதைவு பெண்ணின் விருப்பத்திற்க்கு மாறாக நெருக்குதலால் நடக்கிறதா? என்பதை அறிய தோழமையோடு குறிப்பிட்ட நபரை அணுகியபோது அவர் கூறினார், நீங்கள் எனது மனைவியை குழப்பிவிடுவீர்கள் என்று அனுமதிக்கவில்லை.

 

4) நெருக்கடி முற்றிய நிலையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களோடு உடன்பாடுள்ள மேற்படி நபரின் மனைவியை சமர் குழுவில் ஒருத்தர் தனது மனைவி சகிதம் சந்தித்து நட்புரீதியில்; இது பற்றிக் கதைத்த போது, இப் பெண்ணிலைவாதியானக் கருவைச் சுமந்து நின்ற தாய் எவ்விதமான பதிலும் கூறாமல் ஏக்கமான மௌனம் சாதித்தார்.

 

5) இதன் தொடர்ச்சியாக கருச் சிதைவு நடந்தது. நாம் சமர் குழுவின் ஏகமனதான முடிவோடு வெளியேற்றினோம். அதற்குரிய கடிதமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

 

இக் கருக்கலைப்பு நடைபெற முன்னர், இது பற்றி குழுவாக விவாதிப்பதை தட்டிக்கழித்து வந்த இவர் கருச்சிதைவின் பின்னர் குழுவின் பெரும்பான்மை முடிவோடு செயற்படுமாறும், விவாதிக்கவும் கோரினார். ஆனால் சமர் குழு இதை ஏகமனதாக நிராகரித்து விட்டது. இதை இவர் ஜனநாயகமற்ற செயல் எனக் கூறித் திரிந்தமையால் மாத்திரமே நாம் அக்கடிதத்தைப் பிரசுரிக்க வேண்டி ஏற்பட்டது.

 

இங்கே நாம் உறுதியாகக் கூறும் கருத்து என்னவெனில் நட்பு புரிந்துணர்வு, தோழமை ஆகியவற்றால் கருத்தொருமித்திருந்த எம்மில் ஒருத்தருக்கு (குறிப்பிட்ட நபர்) சமூக முரண்பாட்டிற்கு முகம் கொடுத்து போராடி வாழும் சராசரி மனோபாவம் இல்லாமல் போனமை, நடுத்தர வர்க்கத்திற்கே சொந்தமான வறுமையிலும் வரட்டுக்கௌரவம் என்னும் தன்மையிலிருந்து யதார்த்த நிலைக்கு இறங்கி வராமல் சக நண்பர்களின் உதவியைத் தட்டிக்கழித்தமை, இக் கருக்கலைப்பில் இப் பெண்ணிற்கு எந்தளவு தூரம் உடன்பாடுண்டு என்பதை நேரில் பேசி அறிய எம்மைத் தடுத்தமை போன்ற பிற்போக்கு அம்சத்தை தனது சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டு, முற்போக்குச் சாயம் பூசி சமரோடு இருப்பதை சரியாக இனங் கண்டு இவரை வெறியேற்றியமை ஒரு குழு நடவடிக்கையே. இது விடயமாக சமர் 5-6 இல் வெளியாகியிருந்த கடிதம் எந்த விதத்திலும் கருக்கலைப்பு சம்பந்தமான சமரின் ஒட்டுமொத்த கருத்தை வெளியிட்டதில்லை. அனிச்சாவின் விமர்சனம் சமர் பற்றிய ஊகங்கள் அடிப்படையிலேயே அதிகம் எழுந்திருந்த போதிலும் தொடர்ந்து பதிலளிக்கின்றோம்.

 

வளர்முக நாடுகளிலும் சரி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி கருக்கலைப்பு(சிசுக்கொலை) பெண்விடுதலையில் மையமாக சில பெண்ணிலைவாதிகளால் பூதாகாரமாக்கபபட்டுள்ளதையிட்டு உண்மையில் நாம் அனைவரும் வருத்தமடைய வேண்டியுள்ளது. பரந்துபட்ட துறையில் ஒதுக்கப்பட்டுள்ள பெண்ணின் உரிமையை ஒரு பாலியல் பிரச்சனையாகக் குறுக்கி வைத்துள்ளதும் இவர்களே தான். நிபந்தனையற்ற கருக்கலைப்பை எதிர்ப்போர், பிற்போக்குவாதிகள் என்றும் ஆதரிப்போர் நவீன முற்போக்காளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

 

முன் நிபந்தனையற்ற கருக்கலைப்பு என்னும் கருத்துருவாக்கம் சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, சமூகத்தீர்வாக முன் நிறுத்தும் சமூக நோக்கற்ற செயலே.

 

நிலப்பிரபுத்துவத்தின் இறுக்கமான கலாச்சாரக்கட்டிலிருந்து முதலாளித்துவத்தின் முற்போக்கு அம்சம் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற குறிப்பிட்ட சில உரிமைகளை பெண்களுக்கு வழங்கியிருப்பது உண்மையே. ஆனால் இதுவே பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விடவில்லை. மாறாக முதலாளித்துவம் கொடுத்த உரிமைகளாலேயே பெண் இம்சைப்படுத்தப்படுவதும், அலங்காரப் பொருளாக சித்தரிக்கப்படுவதும் இயல்பாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இவையிலிருந்து ஒருபடி மேலே போய் வரையறையற்ற பாலுறவு, ஓரினச் சேர்க்கை, சமூக வரம்புகளை மீறிய குடும்ப அமைப்பு போன்றவற்றால் இந் நாடுகளில் மனநோயாளர்களை, பாலியல் நோய்களையும் இவ்வுலகத்திற்குத் தந்ததோடு கணவன், மனைவி உறவுக்கே உலை வைக்கக்கூடிய(எயிற்ஸ்) எனும் கொடிய நோயையும் இவர்களே இவ்வுலகுக்கு வழங்கினார்கள்.

 

நிலப்பிரபுத்துவக் கலாச்சார நாடான (பிற்போக்குக்கலாச்சார)இலங்கையிலிருந்தும் ஜரோப்பிய நாடுகளில் குடியேறி பெண்விடுதலை பேசும் இவர்களால் ஏகாதிபத்தியங்களின் சீரழிந்த கலாச்சாரத்தை உரிமையாகக் கோருவதற்கப்பால் வேறு எதுவும் செய்ய முடியாதுள்ளனர். இதனடிப்படையில் நாம் நோக்கும் போது நமது மரபுவழிப் பிற்போக்குக் கலாச்சாரத்துக்குப் பதிலாக மேற்கத்தைய நாடுகளே வெறுக்கும் சீரழிந்த கலாச்சாரத்தை முன் வைக்க முனைகின்றனர்.

 

பெண்விடுதலைக்கு ஆண், பெண் உட்பட ஒட்டுமொத்தச் சமூகமே ஓர் புரட்சிகரச் சூழ்நிலையில் கருத்தால் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை நிராகரித்து மனித இயல்பை மீறிய ஆண், எதிர்ப்பு கோசம் வெளியாகின்றது. பெண்கள் விடுதலையைப் பிரதிபலிக்கும் கலைவடிவங்களாகவும், எழுத்து வடிவங்களாகவும் ஆண்களே அதிகப் பங்காற்றியுள்ளனர். பெண்களைத் தட்டி கொடுப்பவர்களும் இவர்களே.

 

பெண்கள் விரசமான பாத்திரங்களில் பெண் எழுத்தாளர்களால் சித்தரிக்கப் படுவதையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். நாம் இதை எழுதுவதால் தொடர்ந்தும் இநத நிலை இருக்கும் என்பது பொருளல்ல. ஆனால் இதுதான் தற்போதைய உண்மை. இன்று நாம் சார்ந்துள்ள, சமூகப்பொருளாதார, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களின் பிரதிப்பலிப்பாகவே பெண் ஒடுக்குமுறை உட்பட்ட அனைத்து அனைத்து ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றன.(கருக்கலைப்பு உட்பட) சீதனக் கொடுமையால் பெண்கள் தீயில் எரிக்கப்படுதல் (மாமி-மருமகள்) குழந்தை பிறந்தவுடன் பெண் குழந்தையானால் கொல்லுதல் அல்லது அனாதரவாக விடுதல், நிபந்தனையற்ற கருக்கலைப்பு ஆகியவை ஒரே பிரச்சனையின் பல்வேறு வடிவங்களே.

 

கரு உருவாகாமல் கருத்தடை மாத்திரை, கருத்தடைச் சாதனம் மற்றும் கருத்தடை அறிவியலூடாக கருத்தடைப்படுத்திக் கொள்வதும் கருத்தடையாகவே கருதலாம்.(சிசுக்கொலை) சரிநிகர் விமர்சகர் இவை இரண்டையும் குழப்பி இதை முன்னால் செய்தாலென்ன? பின்னால் செய்தாலென்ன? இரண்டும் ஒன்று தானே என்கின்றார். நாம் இவர் பாணியிலே கேட்கின்றோம், பத்து மாதத்தில் குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின்னர் குடும்பத்தின் பழைய இருப்பைப் பேண முடியாமல் போகுமாயின் அக் குழந்தையைக் கொல்லலாம் தானே? உங்கள் பாணியில் இவைகள் ஒன்று தான்.

 

ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பெண் குழந்தைகள் சீனாவில் பிறந்தவுடன் கொல்லப்படுகின்றார்கள். ஆண் குழந்தைகளே பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் உதவுவார்களென்று பெற்றோர் காரணம் கூறுவதாக சீனாவின் பிரபல பெண்ணிலைவாதியான வென் முகுவா கூறுகின்றார்.( நன்றி சுவடுகள் இதழ் 36)

 

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகமான கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் கொன்றுவிடுவதாக செய்திகள் வருகின்றன். 1989ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரை 44 பெண் குழந்தைகள் உசிலம்பட்டி கிராமத்தில் பிறந்தவுடன் கொல்லப்பட்டுள்ளார்கள். இவை இறப்புப் பதிவில் குறிப்பிட்டவை மாத்திரமே. பதிவு செய்யாதவை பலமடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது. இக் குழந்தைகளின் பெற்றோர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது 10 பவுண் நகையும் 10 ஆயிரம் ரூபா பணமும் இல்லாமல் திருமணம் செய்து கொடுக்க முடியாது அதனாலேயே கொல்லுவதாகக் கூறுகின்றனர். நிபந்தனையற்ற கருக்கலைப்பை ஆதரிப்போர் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதையும் ஆதரித்தேயாக வேண்டும். ஏனெனில் இவை ஒரே பிரச்சனையும் ஒரே வடிவமுமேயாகும்.

 

ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் தனி அங்கமாயிருந்த போதும், தனிமனித அபிலாசைகளோடு பொருந்திய தேவை ஒரு சமூகத்திற்கு பொருந்தி வராது. ஒட்டுமொத்தச் சமூகத்துக்குப் பொருந்திய தேவை மாத்திரமே ஒரு தனிமனிதனுக்கும் பொருந்தும்.

 

நிபந்தனையற்றுக் கருவைக் கலைக்கலாம் என்னும் வாதம் சமூகச்சீரழிவையே கொடுக்கும். கருவில் இருக்கும் குழந்தை குறைபாடாயிருந்தால், கருவுற்ற தாய் நோயுற்றிருந்தால், தாயின் உயிருக்கு ஆபத்தாயிருந்தால் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஒட்டிய வைத்திய ஆலோசனையுடன் செய்து கொள்வது அவசியமானதே.

 

பலாத்காரத்தாலோ, இராணுவ பலாத்காரத்தாலோ உருவான கருக்களையும் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லாத இந் நிலையில் கலைத்தேயாக வேண்டும். இவை பேன்ற சமூகத்தேவைகளையொட்டிய கருக்கலைப்புக்கள் மேற்கூறிய நிபந்தனைகளோடு ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவை தவிர்ந்த கருக்கலைப்புக்களை சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஆண்கள் எத்தனை பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தாலும் இயற்க்கையின் சாதகத்தன்மையால் அவர்கள் தப்பிவிடுகின்றனர். இயற்கையாக பெண் கருப்பையைச் சுமந்து நிற்பதால் சமூகத்தின் கொடியப் பார்வைக்குள்ளாகி ஒதுக்கப்படுகின்றாள் என்பது உண்மையே.

 

மது அருந்துதல், போதைப் பொருள் பாவித்தல், பல பெண்களோடு பாலுறவு ஆகியவை ஆண்களின் உரிமையாக இருப்பின் இதே உரிமை பெண்களுக்கும் நிச்சயமுண்டு. ஆனால் இவைகள் ஒட்டு மொத்தச் சமூகத்திலுமிருந்து முடிந்தவரை களையப்பட வேண்டியவையே. மேற்குறிப்பிட்ட உரிமைகளையும் நிபந்தனையற்றக் கருக்கலைப்பையும் கோருவது எவ்விதத்தில் சமூக நோக்காகும். அனைத்து நாடுகளிலுமுள்ள அரசுகளாலும் சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டே தானிருக்கின்றன. இவற்றிற்கு மூல காரணமாக அரசும் சமூக அமைப்புமேயுள்ளன(கருக்கலைப்பு உட்பட). இவைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதால் சமூகம் நடைமுறையில் இவற்றைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இதன் நிமித்தமே சமூகம் ஒட்டு மொத்தமான ஓர் சமூக மாற்றத்தை நாடி நிற்கிறது.

 

அதன் மூலம் மாத்திரமே படிப்படியாக இவைகட்கு தீர்வு காணமுடியும். மற்றும் சில பெண்ணிலை வாதிகள் மணம் செய்யாமலே ஒரு ஆணோடு சேர்ந்து வாழலாம் என்னும் ஜரோப்பிய நாடுகளில் பிரதி பண்ணிய (கொப்பி) ஒரு கருத்தைக் கொண்டுள்ளதோடு மறறவர்களுக்கு போதிக்கவும் செய்கின்றனர்.

 

பொருளாதாரச் சார்பு நிலையும் ஆணாதிக்கமும் அற்ற ஒரு சமூக மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இயல்பான மனிதத் தேவைகளையொட்டி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் நிலையில் யதார்த்தமான குடும்ப உருவாக்கம் உண்டு என்னும் விஞ்ஞான பூர்வமான ஆய்வினை நாம் மறுக்கவில்லை. மேற்கூறிய பெண்ணிலைவாதிகள் சமகால சமூக அமைப்பிலுள்ள அனைத்து அம்சங்களையும் விட்டுவிட்டு இவ்விடத்தில் மாத்திரம் மிகவும் வேகமாய் போய் விட நினைக்கின்றார்கள். இவைகள் தான் நாம் சமூகச் சீரழிவு என்கிறோம்.

 

நாம் இருக்கும் சமூக அமைப்பின் அனைத்து வரையறைகளையும் உடைத்து எறியப்படும் தறுவாயில் புரட்சிகரமான புதிய சமூக வரம்புகளின் ஊடாகவே பரிணாம வளர்ச்சி பெற்று பூரண விடுதலையை அனுபவிக்க முடியும்.

 

இதைத் தவிர இவர்களது இந் நடவடிக்கை இச் சமூக அமைப்பை மாற்றி அமைக்கப் போராடுவதற்க்கு பதிலாக, இச் சமூகத்தில் ஆண் ஒரு சரியான காரணி என்றே காட்ட முனைகின்றனர். இதன் அடிப்படை வக்கிரமான தனிநபர் சுய தேவைகளையும், சமூக நோக்கற்ற ஆண்களின் நடவடிக்கையை பெண் உரிமையாகக் கோரும் பிற்போக்குவாதமுமேயாகும்.

 

ஜரோப்பிய சமூகப் பெண்கள் சுரண்டும் வர்க்கங்களால் நேரடியாகப் பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றனர். ஜரோப்பிய பெண் விடுதலை அமைப்புக்களால் கூட இவர்களை அணிதிரட்டி ஒருங்கிணைத்துப் போராடுவதற்கு பதிலாக சுரண்டுவோரின் சுரண்டலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கருக்கலைப்பு கோசத்தை முன்வைக்கின்றனர்.

 

உதாரணமாக இங்குள்ள சந்தைப் பொருளாதார அமைப்பு முறையிலுள்ள சிறுமுதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்கள் உட்பட பல்தேசியக் கொம்பனிகள் வரை பணிக்கு அமர்த்தியுள்ள பெண்களைப் பொறுத்த வரையில், நிறுவனம் குறைவாக இலாபம் பெறும் போது, அல்லது ஆள்குறைப்புச் செய்யவேண்டிய தேவையேற்படும் போது 38-40வயதை தாண்டியோர், குடும்ப பெண்கள் போன்றோரே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பணிப்பெண்கள், உல்லாசப் பயணிகளோடு தொடர்புபட்ட வேலையாட்கள்(ஹொட்டல்)வரவேற்பாளர், காரியதரிசி விற்பனைப் பகுதியிலுள்ள வெகுசனத் தொடர்பாளர் போன்றோர் முன்னணியிலுள்ளனர். இவற்றுக்குரிய காரணங்கள் கட்டான உடலமைப்பு இழந்தமை, வசீகரமான இளமைத் தோற்றத்தை இழந்தமை போன்றவையே. மேலே குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பெண்கள் மேற்கத்தைய நாடுகளில் இன்னுமோர் வேலை பெறுவது முயற் கொம்பாகவே இருக்கும். ஏகாதிபத்தியங்களின் கவர்ச்சிகரமான இலாப நோக்கம் கொண்ட வேலைத்திட்டத்தால் பெண்கள் உழைப்பு உறிஞ்சப்பட்டு ஒடுக்கப்படுவதை இசைந்து, ஏற்று பழக்கப்படுத்திக் கொள்ளவும் கருக்கலைப்பைக் கோருவது இவர்களுக்கும் அவசியப்பட்டுள்ளது. சுரண்டலுக்கு துணைபோகும் ஒரு நடவடிக்கையாகவே கருக்கலைப்பும் கோரப்படுகின்றது. சில ஏகாதிபத்திய நாடுகளில் இவ்வுரிமையை கொடுக்க மறுத்த போதிலும் அனேகமாகக் கட்சிகள் இவ்வுரிமையை வழங்க முன்வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகளில் அனேக பெண்கள் திருமணம் செய்யாமல் ஒருத்தரோடு சேர்ந்து வாழுதல், அல்லது தங்கள் உடலியல் தேவைக்கு கணவனோடு சோந்து கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டுதல் போன்றவை இவர்களது தொழில் சார்பு வாழ்நிலையைப் பேணுவதற்காகவே.

 

வளர்முக நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் தான் நாம் கூறுகிறோம் பெண்விடுதலை என்பது பெண்கள் மாத்திரம் சம்மந்தப்பட்ட கோசமாக அமையமுடியாது. சுரண்டலுக்கெதிரான பாட்டாளிவர்க்கப் புரட்சியிலேயே உண்மையான பெண் விடுதலையின்; கருத்து உருவாக முடியும். வளர்முக நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ள பெண்விடுதலை அமைப்புக்களின் பொதுவானதோர் கருத்து யாதெனில் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே. இது உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்ற போதிலும் பெண்கள் தங்களைத் தாங்களே காட்சிப் பொருளாக நினைத்து அலங்கரித்து மற்றவர்களின் பார்வைக்காக பவனிவரும். காலம் மாறும் வரை பெண்விடுதலையின் முதல் படியையேனும் தொடமுடியாது. தொடர்ந்து அனிச்சாவின் விமர்சனத்திலிருந்து பெறப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.

 

1) குழந்தைக் கொலையையும், கருச்சிதைவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியுள்ளது. வர்க்கப் போராட்டமே எல்லாவற்றிக்குமான முடிந்த முடிவு எனக் கூறி நடைமுறைப் பிரச்சனையைக் கோட்டை விடுவது சமரின் பிரச்சனை என்றும் கூறியுள்ளார். உண்மையில் அனைத்து முரண்பாடுகளிற்கும் வர்க்கப் போராட்டத்தின் மூலமே தீர்வு காணமுடியும் என்பது சமரின் உறுதியான முடிவு. ஆனால் இவ்விடயத்தை எழுதுவது, விமர்சிப்பது, நிபந்தனைகளை விதிப்பது, சமூகச் சீரழிவை நோக்கித் தள்ளும் கருத்திலிருந்து விலகி ஆராய்வது, அனைத்துமே நடைமுறையைக் கருத்தில் கொண்டே ஈடுகொடுத்து நகர்வதாகும். இதை விளங்கிக்கொள்வது இந்தச் சமூக அமைப்பில் ஏகாதிபத்தியத்திற்குச் சார்பான வகையில் உள்ள உங்கள் நடைமுறை பிரச்சனையின் தீர்வை அங்கீகரிக்கக் கோரும் இவரது வாதம், இப்பிரச்சனையை இச்சமூக அமைப்பில் தீர்க்க முடியும் என்று கூறுவதாகும். அது எப்படி?

 

.2) மூலிகைகளாலும் மற்றும் பல முறைகளாலும் ஆதிகாலத்திலும் கருக்கலைப்பு நடந்ததாகக் கூறி தற்போதைய சுயதேவைக்குரிய கருக்கலைப்புக்கு ஆதாரம் காட்டியுள்ளார்.

 

இதிலிருந்து இவர் கூறி வருவது காலத்தின் புரட்சிகர வளர்ச்சிக்கேற்றவாறும், சமூக ஆரோக்கியமாகவும் ஆராய இவர் தயாராயில்லை என்பதே. மரபுவழி பழமைகள் யாவற்றையும் ஒதுக்கி அதிசிறந்த பெண்ணிலைவாதியாக விமர்சனம் எழுதிய இவர் கருக்கலைப்பு விடயத்தில் மாத்திரம் பழமையே பேண நினைக்கிறார். இதையே தான் மேலே குறிப்பிட்டோம். இது சமூகநோக்கல்ல சுயதேவையென்று.

 

3) பெண்ணை ஆட்டக்காரி எனவும் அடக்கமற்றவள் எனவும் கூறி அவளை இரண்டாம் தரமாகக் கருதும் இந்த மனப்பான்மையிருக்கும் வரை கருக்கலைப்பை எப்படி தடுக்கமுடியும்.?

 

இக் கேள்வி பெண்விடுதலையை நிராகரிக்கும் கேள்வி மாத்திரமல்ல ஆண் எதிர்ப்புக் கோசத்தையும் முன்வைக்கிறது. மேலே குறிப்பிட்ட ஆட்டக்காரி என்னும் சொற்பிரயோகம் பிரயோகிப்போரின் அறிவின் அளவைப் பொறுத்தது. இதற்கு இன்னும் வேறு நாகரீகமான சொற்களும் பிரயோகிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கும் மாத்திரமல்ல ஆண்களுக்கும் பிரயோகிக்கப்படுகின்றன. (பொருந்தும்) எந்தவொரு சமூகக் கட்டமைபபிலும் குறைந்தபட்சம் தனக்குத்தான் எனும் ஒரு வரம்பமைத்து வாழாமல், மனம் போன படி வாழ்வதும் (நடவடிக்கைகள்) பின்னர் அதன் பிரதிபலிப்பான கருவைக் கலைப்பதும் சமூகத்தேவையா? பெண்விடுதலை என்ற பெயரில் சமூக சீரழிவான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை ஆதரிப்பதோ அல்லது இதற்குச் சமமாக நடந்து கொள்ளும் ஆண்களை அவர்களின் ஆழுமை என்று கூறுவதோ அல்லது இதை ஆராய்ந்து நடைமுறையில் ஏற்பட்ட சூழ்நிலையின் தேவை என்று நியாயப்படுத்த முயற்சிப்பதோ ஒரு போதும் சமூக நியாயமாகாது.

 

4) வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பெருந்தோகையான ஆண்கள் கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் திரும்பவும் சென்று விடுவார்கள். ஆண், பெண், பாலியல் உறவுக்கே ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியான கல்யாண உறவில் கூடப் பெண்களுக்கு ஆண்களின் உறவு அற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் பெண்களின் இரகசிய உறவுகள் வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப் படுகின்றன. இரகசிய உறவால் உருவாகும் பிள்ளையை சமூகம் ஒருபோதும் அஙகீகரிப்பதில்லை. இந் நிலையில் தனித்து வாழும் பெண்கள் எப்படி வாழவேண்டுமென்று சமூகம் எதிர்பார்க்கிறது? என்றும் கேட்கின்றார்.

 

கணவன் வெளிநாடு செல்வது மத்தியதர வர்க்கத்தின் மனோநிலையை உயர்த்திக் கொள்ளவே. அவர்கள் மனோநிலையில் இருந்து நோக்குமிடத்து குடும்பத்தின் முன்னேற்றம் முதன்மைப்படுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு முழுக்க முழுக்க படுக்கையறை மாத்திரமே என்று நினைப்பது தவறு. ஆனால் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் குடும்ப அமைப்பையே தகர்த்துவிடும். அவரவர் சிந்தனை, அறிவு, சூழல் இவைகளைப் பொறுத்த விடயம். கணவன் ஒரு பக்க சார்பு முடிவோடு நீண்ட நாள் வெளிநாட்டில் இருந்தால் தனது நிலையை விளக்கி அவரை திரும்பவும் அழைக்க முயற்சி செய்யவேண்டும். அவர் நியாயமற்று மறுத்தால் விவாகரத்துச் செய்துவிட்டு இன்னுமோர் மணம் செய்து கொள்ளாலாம். இதுவே பெண்ணின் உரிமை. இதைவிடுத்து யாரோடோ இரகசிய உறவை வைத்து பின்னர் கருக்கலைப்பது பெண் உரிமையல்ல. சமூகநோக்குமல்ல. மூன்றாவது மண்டல நாடுகளில் மேற்குறிப்பிட்டவை போன்றன விவாகரத்துக்களால் கிடைக்கு நன்மைகளைப் போன்றே தீமைகளும் உண்டு என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

 

உதாரணமாக நிலப்பிரபுத்துவ குடும்ப அமைப்பிலிருந்தும் சற்றும் மாறாத இந் நாடுகளில் அனைத்து வர்க்கங்களிலும் குடும்பம் சார்ந்த பொருளாதார பலத்தையே கொண்டுள்ளன. இதற்குரிய முக்கிய காரணம் வேலையற்றோருக்கு உதவிப்பணமோ, வயோதிபர், அனாதைகள் போன்றோர்க்கு உதவிசெய்யும் திட்டமேதும் அரசுகளால் செய்முறையில் இல்லாததும், பொது நிறுவனங்கள் கிடையாததுமாகும். இந்நிலையில் இளமைக்காலத்தில் ஏறபடும் விவகாரத்துக்களால் தங்கள் குழந்தைகள் நன்மை பெற தாய் தந்தையர் வாழ்வைத் தியாகம் செய்கின்றனர் அல்லது தாய் தநதையர் வாழ்வு பெற குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில் பெண் பூரண உரிமை பெற சமூக அமைப்பையும் அரசியல் அமைப்பையும் மக்களுக்குரியதாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் நடைமுறையில் நமது பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைமாரைக் கிராக்கிப்படுத்துவதும், விரும்புவதும் அதிகரித்தே வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். நாட்டில் போர்ச்சூழல் ஏற்படும் முன்னரே இதே நிலையிருந்தது.


5) பொருளாதார ரீதியில் குழந்தை பெறுவது சாத்தியமற்றதாக இருப்பதுண்டு. குழந்தையை உருவாக்கி விட்டு பட்டினியாலும் பசியாலும் சாகடிப்பதை விட கருவில் சிதைப்பதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. மார்க்சினாலேயே தனது மகன் எட்காரை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஜென்னியின் முலையில் பாலுக்கு பதில் இரத்தம் கசிந்த போதுள்ள வேதனையை விட பிறந்த பின் உணவூட்ட முடியாமல் சாகடிக்கச் செய்த துன்பத்தை விட கலங்களால் உருவாகிக் பொண்டிருக்கும் சிசுவை கருச்சிதைவு செய்வதை பாரதூரமானதாகக் கருதமுடியுமா? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருக்கலைப்பை சட்டபூர்வமாக கோருவது, நடுத்தர வர்க்கம் மாத்திரமே. இது முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனையும் கூட. சொத்து சேகரித்தல், பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையடைதல், சமூகத்தில் நிலவும் சீதனம் போன்ற பிற்போக்கு அம்சங்களை பாதுகாத்தல் போன்றதாகும்.

 

வாழ்க்கைக்கு முகம் கொடுத்தல், அன்றாடம் மனித வாழ்க்கையில் தொடரும் போராட்டத்தை வாழ்க்கையோடு இணைத்தல் போன்றவற்றை நிராகரித்து இயங்கியலை மறுப்பதாகும். மேற்கூறியபடி இவரது கருக்கலைப்பு நியாயப்பூர்வமாகின், பொருளாதாரச் சிக்கலுக்கு முகம் கொடுக்கும் அனைத்துப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளைக் கொல்லலாம் என்னும் உரிமையையும் கொடுக்க வேண்டும். ஜென்னியின் முலையிருந்து மாத்திரம் இரத்தம் கசியவில்லை, யாழ்ப்பாணத்து பங்கர்களில் குழந்தை பெறும் தாய்மார்களின் முலையிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டுதானிருக்கிறது. நடைமுறையில் கோட்டை விடுவதாகச் சமரைக் குறறம் சாட்டிய அனிச்சா, நடைமுறையில் மூன்றாவது மண்டல நாடுகளில் வாழும் 80 வீதம் மக்களின் வாழ்வை நிராகரிக்கிக்கின்றார். இது எந்தக் கோட்பாடு என்று புரியவில்லை. இதையே தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் கூறுகிறது. மேலும் அனைத்து முரணபாடுகளுக்கும் வர்க்கப் போராட்டமே தீர்வு என்றே மார்க்ஸ் கூறினார். அனிச்சாவின் அகராதியில் மார்க்ஸ்சும் வர்க்கப் போராட்டத்தைக் கூறி நடைமுறைப் பிரச்சனையில் கோட்டை விட்டவரே. மார்க்ஸ் வறுமையில் வாடியதற்க்கான காரணமான இச்சமூக அமைப்பை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தும் தத்துவப் பிச்சைக்காரராகவும் இருக்கவில்லை. மாறாக இவ்வுலகை மாற்றும் மாபெரும் தத்துவவாதியாகவும், மனித வாழ்வின் மகிமையை மதித்து முகம் கொடுத்தவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே ஜென்னியின் முலையில் இரத்தம் கசிந்தும் நீங்கள் கோரும் சுயதேவைக் கொலையைச் செய்யவில்லை.

 

6) கருச்சிதைவைக் கொலை என்று கூறும் சமர் வாக்கப்போராட்டம், புரட்சி எல்லாம் முடிந்து பொருளாதார காரணிகள் சுமூகமாக அமையப் போகிற சோசலிச சமுதாயத்தில் இத்தகைய பிரச்சனை வராது என்று கருதுகின்றதா?

 

சோசலிச சமுதாயத்தில் புரட்சிகள் முடியுமே தவிர இவர் கூறுவது போல் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வராது. மாறாக அது தொடரும் என்பதே உண்மை. ஆனால் இச் சோசலிச சமுதாயத்தில் ஆணின் ஸ்தானங்களுக்காக பெண்கள் போட்டி போட்டு இன்றைய ஆணை ஒரு சரியான காரணி எனக்காட்ட ஒரு போதும் பெண்கள் முன்வர மாட்டார்கள். சமூகத்தேவை தவிர்ந்த, வக்கிரமான சுயதேவைகட்கு கருச்சிதைவு தேவை என்று கோரும் சமூகமற்றப் பெண் உரிமைகளைச் சரியாகப் புரிந்து செயல்படும் ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். குழப்பவாதிகள் தெளிவடைவார்கள்.

 

 

என் உணர்வுகள்

எங்கே செல்கின்றன

அன்னிய நாட்டில்

நடைப் பிணமாக நாம்

உணர்வுகளை இழந்து

இயந்திரமாக நாம்

சிந்திக்கும் எம் உணர்வுகள்

மீண்டும் எம் மண்ணை நோக்கி

சிந்திக்கும் என் உணர்வை அழிக்க

அலையும் ஒரு கூட்டம்

மண்ணில் சிந்திக்க முயன்றவர்கள் மீது

இறுக்கப்பட்ட கட்டைகள்

மிஞ்சியது எது

மனிதப் பிணவாடையே

மண்ணில் சொல்ல முடியாததை

சொல்ல நினைத்தேன்

இங்குமா மிரட்டல்

இது தான் வாழ்வா

ஒரு கணம் சிந்தித்தேன்

ஒரே ஒரு கணமே

மரணம் பயமுறுத்தக் கண்டேன்

மௌனத்தின் முடிவும் மரணமே

செயல் ஆற்ற புறப்பட்டேன்

எனது மரணம் வரை

அதுவே எனது சுதந்திரம்

அதுவே மக்கள் விடுதலை

பி.றயா

சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் இதழ்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் இதழில் தேசிய சக்திகள் தொடர்பாக கட்டுரை வெளிவந்துள்ளது. தேடல் இதழ் 10இல் சி.சிவசேகரம் எழுதிய கட்டுரையை நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்கும் அதேநேரம் தேடல் இதழ் 10 க்கு முந்திய இதழ்கள் எமக்கு கிடைக்காமையால். அதில் இது தொடர்பான விவாதம் நடந்ததாவென தெரியாமல் உள்ளது.

 

1970 களிலும் 1980 களிலும் உலகநிலைமைகள் இளைஞர் மத்தியில் மார்க்சிச, சோசலிச சிந்தனைகள் பற்றிய அக்கறையை ஓரளவு தூண்டின. பழைய அரசியல் தலைமைகள் வெற்றிகரமாகத் தமிழரின் பாராளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கிய இடதுசாரி சிந்தனைகள் 1970 களுக்குப் பின் இனைஞர்களைக் கவர்ந்த காரணங்கள் நாட்டின் உள்ளேயும் இருந்தன. தமிழ் தேசியவாதத் தலைமையின் வலதுசாரி அரசியலின் இயலாமையும் 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் 1970 களுக்கூடாக படிப்படியாக விரிவடைந்து 1977க்குப் பின் உக்கிரமடைந்த அரசு ஒடுக்குமுறையும் வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் தமிழர் முன்னெப்போதும் கண்டிராத இனவாத வன்முறைக்கு முகம் கொடுக்க நேர்ந்தமையும் இடதுசாரி முனைப்புக்கட்கு ஆதாரமாக இருந்தன என்ற வாதத்தில் 1970 களில் வளர்ச்சியடைந்த ஜே-வி-பி மார்க்சியத்தை சொல்லிக்கொண்டாலும், அவர்கள் எப்போதும் அடிப்படையில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியும், 1970 களில் எழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியும், இளைஞர்களை புரட்சியின் பக்கத்திற்கு தள்ளியது. புரட்சியை விரும்பிய இளைஞர்களை ஜே-வி-பி-யும், அதே நேரம் சிறிமாவோ தலைமையிலிருந்த இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்தபடி சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாக்க முயன்றனர். மற்றும் பழைய அரசியலிலிருந்து ஒதுங்கிய இடதுசாரிச் சிந்தனைகள் என்ற வாதம் அடிப்படையில் தவறானது. 1970க்கு பின் தமிழ்த் தலைமைகள் தீவிரமாக முன்பை விட ஒன்றிணைந்து பலம் பெற்றனர். 1977களில் தேர்தல் வெற்றி இதை தீர்மானகரமாக பறைசாற்றுகிறது. 1980 களில் பாராளுமன்ற அரசியல் தலைமையை இடதுசாரிகள் ஒதுக்கவில்லை, மாறாக 1977 தேர்தலில் எந்த கோசத்தை முன் வைத்து வென்றார்களோ அதே கோசத்தைக(வலதுசாரிகள்) முன்னெடுத்த ஆயுதம் ஏந்தியோரே அவர்களை ஒதுக்கினர். 1977 களின் பின் தீவிரமடைந்த வன்முறைக்கு மூலகாரணமாக (சுரண்டல் பேர்வழிகள்) 1970 களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோவுடன் இருந்த இடதுசாரிகளே பிரதானமாகவும் இருந்தனர். இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தலை அமுலுக்குக்கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனையை இனவாத வன்முறைக்கூடாக அடக்கினர்.

 

1970 களில் வலதுசாரிகளின் இயலாமையெனக் குறிப்பிடும் கடடுரையாளர் 1970 இன் பின் வந்த இடதுசாரிகள் மக்களின் பிரச்சனையைத் தீர்த்ததாகப் பறைசாற்றுகின்றார். இடதுகள் கூட இயலாமையால் தான் தேசியப் பிரச்சனையை முன்தள்ளி தமது இயலாமையை வெளிக்காட்டினர். அத்துடன் 1977இல் இடதுசாரிகளின் இயலாமை மீண்டும் வலதுசாரிகளை ஆட்சியில் ஏற்றினர். எனவே கட்டுரையாளர் 1970 க்கும் 1977 க்கும் இடையிலான அரசை(சுரண்டும் வர்க்கத்தை) நியாயப்படுத்துகின்றார்கள்.

 

இன்று புலிகள் அரசாங்ககத்தின் இன ஒடுக்கல் யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் போராட்ட சக்தியாக உள்ளனர். ஆயினும் நிலைமை மாறக்கூடியது. என்ற வாதத்திலோ, தொடர்ச்சியான விவாதத்திலோ முக்கியமான ஒன்றைப்பற்றி ஆராயத் தவறியுள்ளார். வர்க்க நோக்குப் பற்றி சொல்லும் கட்டுரையாளர் தேசியத்தையும், பாசிசத்தையும், வர்க்கத்துடன் ஒப்பிடத் தவறுவது ஏன்?. வர்க்கத் தன்மையுடன் ஒடுக்குமுறை மாறுபாட்டுத் தன்மையை..... பார்க்காமல்; விடுவதன் ஊடாக இக்கட்டுரை தவறானதாகவுள்ளது. இது வர்க்கத்தன்மையுடன் சம்மந்தப்பட்டது. அதைக் கட்டுரையாளர் சொல்லத் தவறி, தனது அரசியல் பார்வையை தெளிவாக வாசகர்களுக்கு இனம் காட்ட தவறுகின்றார்.

 

இவ்வாறான பிறழ்வுகள் ஒரு விடுதலை இயக்கத்தின் முற்போக்கான தன்மையின் மறுதலிப்பாகும். இவற்றினூடு அந்த இயக்கத்தின் போராட்டம் தடம் புரளலாம். ஆயினும் இவை ஒரு இயக்கத்தின் தேசிய தன்மையை மாற்றி விடுவதில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று எவ்வாறு மாறுபடும் தேசிய, சர்வதேசிய நிலவரங்கட்கேற்ப ஏகாதிபத்தியத்துடன் தனது நாட்டின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் தனது உறவை மாற்றிக் கொள்ளுகிறதோ அவ்வாறே பாட்டாளி வர்க்கத் தலைமையற்ற ஒவ்வொரு தேசிய விடுதலை இயக்கமும் ஊசலாட்டத்துக்குள்ளாகின்றது. இதில் தேசிய முதலாளிவர்க்கம் ஒன்று எனச் சொல்லி அதைப் பொதுப்படையாக அரசு, மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு பொதுவாகப் பொருத்த முயன்றுள்ளனர். இவ்விவாதம் புலிகளை தேசிய முதலாளிகள் எனச் சொன்னதாகவும் வாதிடலாம். சொல்லவில்லை எனவும் வாதிடலாம். அது அல்லது இது எனக் தேவைக்கு வசதியாக வாதிடும் வகையில் அமைந்ததே. ஏகாதிபத்தியத்தின் உறவுடன் எப்போது அரசோ, விடுதலை இயக்கங்களோ, ஊசலாட்டத்திற்கும், ஒடுக்கும் வர்க்கத்துடன் உறவை மாற்றுகின்றதோ அன்றே குறித்த சக்தி தேசிய முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து தரகு முதலாளிகளாக மாறிவிடுகின்றனர். இச் செயற்பாடு பற்றி ஒரு புரட்சியில் எதிரி பற்றிய விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டப்படாவிடின் பாரிய தவறு இழைக்கப்படும். குறித்த இச்சக்திகள் போராட்டத்தில் எதிரி நிலைக்கு மாறிவிடுகின்றனர். இவர்கள் கூட தேசியத்தை முன்னெடுக்கமுடியும். கிட்லர், காந்தி, அமிர்தலிங்கம்...... என நீண்ட வரலாற்றில் அனைவரும் தேசியத்தை உயர்த்திப் பிடித்தனர். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றச் சேவை செய்ய முயன்றனர். இவர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரியே. தேசியத்தை முன்னெடுக்கின்றார்கள் என்ற ஒரு வரையறையை மடடும் கொண்டு இவர்களைத் தேசிய சக்தியாகப் பார்க்கக் கூடாது. இவர்களின் வர்க்கமூலம் அதிலிருந்து அவர்களின் நோக்குகளை ஆராய்வதின் மூலம், ஆரம்பம் முதலே அம்பலப்படுத்தியழிக்க வேண்டும்.

 

திராவிடப் பிரிவினை தமிழ் நாட்டின் சுயாட்சி போன்ற கொள்கைகளைக் கைவிட்டதால் தி-மு-க போன்ற சக்திகள் தேசிய சக்திகளாக இல்லாமல் போய் விடவில்லை. என்ற விவாதத்தில் மேற்குறிப்பிட்து போல் சுயாட்சி கோரினார் என்ற காரணம் தேசிய சக்தியாக பார்க்க போதுமானதில்லை. அக் கட்சியின் வர்க்க மூலத்திலிருந்தே தேசிய சக்தியா என ஆராய முடியும். சுயாட்சியைக் கைவிட்ட பின்பும் தி-மு-க இன்று தேசிய சக்தியாகக் காட்ட முனையும் சிவசேகரம் வர்க்க அடிப்படையிலிருந்து விலகிய நிலையில் வெளிவந்த கருத்துக்களே. தி-மு-க- ஆட்சி ஏறிய காலத்தில் கூட அவர்கள் தேசிய நோக்கில் சமுதாயத்தை மாற்றவில்லை. இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் ஆட்சி ஆட்சியதிகாரத்திலுள்ள வர்க்கமான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவத்திற்குச் சேவை செய்வதில் சிறந்த பிரதிநிதிகளாகவே இருந்தனர். அவர்கள் கூட பெரும் நிலப்பிரபுக்களாகவும், தரகு முதலாளிகளாகவுமே உள்ளனர். அவர்களைத் தேசியவாதிகள் எனச் சொல்ல வரும் சிவசேகரம் எதையோ நியாயப்படுத்த முயல்கின்றார்.

 

இன்று விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பு பற்றிய கேள்வியே நமக்கு முக்கியமானது. அவர்களது நேச சக்தி யார் எதிரிகள் யார் என்பதை வர்க்க நலன்களே தீர்மானிப்பன. புலிகளின் வர்க்கத்தைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்டதுடன் விட்டு விடுவதால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று என்ற சிவசேகரம் சொன்ன வரையறை புலிக்குப் பொருந்தாது எனக் கொள்ளளாம். புலிகளின் வர்க்கத்தைச் சுட்டிகாட்டாமல் புலிகளின் தேசியத்தன்மை தொடர்பாக, தேசிய சக்திகளாக இனம் காணப் புறப்பட்ட சிவசேகரம் வர்க்க நோக்கிலிருந்து தேசிய சக்தியெனச் சொல்லாமை புலப்படுகின்றது. இதன் பின் அவர்களின் நேசசக்திகள் எதிரிகள் பற்றி கதைக்க முற்படும் சிவசேகரம் புலிகளின் தத்துவவாதியாக நின்று ஆராய முற்படுகின்றார்.

 

அவர்களை(புலிகளை) ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்க்கோ அவர்கள் தேசிய சக்தியா, இல்லையா என்ற கேள்வியை மட்டும் நாம் பயன்படுத்த முடியாது. இதில் முடியாதெனின் எதை வைத்துத் தீர்மானிப்பது. இதை சொல்லாமல் நழுவி விடும் சிவசேகரம் முடியாது எனச் சொல்லும் முறை விமர்சகர்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ உரிய பாணியல்ல. புலிகளின் வர்க்கத்தில் இருந்தே தேசிய சக்தியா என முடிவுக்கு வரவேண்டும். இராணுவத்திற்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்ற ஒரு எடுகோளிலிருந்து முடிவுக்கு வரமுடியாது. ஆனால் வர்க்க மூலத்திலிருந்து ஒரு சக்தியை தேசிய சக்தியென அறிந்து கொண்டால் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கவேண்டும்.

 

விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளல்ல என்போர் அவர்களைப் பாசிச சக்திகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். பாசிசம் என்பது தேசியவாதத்தின் மிகவும் கொடூருமான வடிவமாக இருக்கையில் தேசிய சக்திகள் இல்லாதொரு இயக்கம் பாசிச சக்தியாக எவ்வாறு விருத்தியடைய முடியும்? இவ் விவாதம் தேசிய சக்திகளை நிறுவும் நோக்கில் பாசிசம் தேசிய சக்திகளுக்கு மட்டும் உரிய பண்பென வாதிட முயல்கின்றனர். பாசிசம் என்பது தேசியத்தை முன்னெடுப்பவர்களும், தேசியத்தை முன்னெடுக்காதவர்களும் கூட பயன்படுத்தமுடியும். தேசியத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கெதிராக செயற்படும் அரசுகளும் பாசிசத்தையே பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறுது. இதை வியட்நாம், இலங்கை, சீனா.... என்று அனைத்து அரசுகளும் நாட்டில் எழும் தேசிய எழுச்சியைப் பாசிசத்தைக் கொண்டு அடக்குகின்றது. எனவே தேசியத்தின் குணம் குறி பாசிசமல்ல. பாசிசத்தை எந்தச்சக்தியும் கையாளும.; எனவே பாசிசம் என்ற சொல்லை சிவசேகரமே ஆழமான அறிவில் நின்று சொன்னதாக தெரியவில்லை. தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடையும் நாடுகளில் அவ்வரசுக்கள் பாசிச அடக்குமுறையை மக்கள் மீது ஏவுகின்றனர்.

 

பாசிசவாதி என்பது வகைச் சொல்லாக பயன்படுத்துவதாகச் சொல்லும் சிவசேகரம் அடாவடித்தனமும், எதேச்சதிகாரமும் மட்டுமே பாசிசத்தின் அடையாளங்களாயின் என்று கேட்பதனூடாக இதற்கப்பால் பாசிசத்தை இனங்காண என்ன வரையறையை முன்வைக்க முனைகின்றார். அது பற்றி விட்டுவிடும் சிவசேகரம் தம்முன்னுள்ள சக இயக்கங்களின் மோதலை காட்ட முயல்கின்றார். இயக்கங்களுக்கிடையிலான மோதல் என்பது ஒரு வர்க்க நலன் சார்ந்ததே. பாசிசம் தொடர்பானதல்ல. பாசிசம் என்பது ஒரு இயக்கத்தின், அரசின் பண்பாகவே இருக்கும். பாசிசவாதி என்பது வகைச் சொல்லல்ல. அதுவொரு சக்தியின் செயற்பாட்டை வகைப்படுத்தும் வகையில் அமைந்ததே.

 

ஸ்டாலின் வாதி, ரொஸ்க்கியவாதி, குட்டிபூர்சுவா போன்ற பதங்கள் எவ்வாறு எதிரிகளை மட்டும் தட்டும் நோக்குடன் மடடுமே பயன்படுகின்றனவோ என்ற வாதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது எனின் சரியாகப் பயன்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க பொதுப்படையாக எதிரியை மட்டம் தட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி குட்டிப்பூர்சுவா கருத்துக்களை வெளியிடுபவர்களை பாதுகாக்க முனைகின்றார். ஸ்டாலினியவாதி என்ற கருத்துக்களை எடுப்பின் அவர்கள் ஒவ்வொருவரும் தனியான தத்துவத்தை கொண்டிருந்தவரென அழைக்கப்படலாம். ஸ்டாலின் அப்படித் தனியான தத்துவத்தை மார்க்சிசத்திலிருந்து வேறுபட்டுக் கொண்டிருக்கவில்லை என நாம் கருதுகின்றோம். அந்த வகையில் ஸ்டாலின் வாதி என்ற பதம் அர்த்தமற்றது.

 

பாசிசத்தின் பிரதான தன்மை வலதுசாரி, தேசியவாத சர்வாதிகார அரசியலாகும். பாசிச நடைமுறையில் சில கொடும் செயல்களை சில விடுதலை இயக்கங்கள் வரித்துக் கொண்டுள்ளன. அத்தகைய பாசிசப் பண்புகளையும் இப்படியான பண்புகளைக் கொண்டுள்ள இயக்கங்களும் பாசிச வாதிகளே. இவர்களை பாசிசவாதிகளெனச் சொல்ல முடியாதெனச் சொல்லி பாசிசவாதி என்ற சொல் வெறும் வகையாகப் பயன்படுகின்றது என்பது கற்பனையானது. பாசிசப் பண்பை ஏற்றுக்கொள்ளும் சிவசேகரம் அதைப் பாசிசமில்லை எனச் சொல்லி வகைச் சொல்லாக சொல்லுவது தவறானது. பாசிசப் பண்பு தேசியவாதம் இல்லாத பிரிவுகளிடத்தில் ஏற்படினும் அவைகளை பாசிச சக்திகளாக இனம் காணமுடியும்.

சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் மற்றும் தனிநபர்களின் கடந்தகால விவாதங்களில் புலிகள் தமிழ் மக்களின் தேசவிடுதலைப்போராட்டத்தை தமது நோக்கில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் புலிகளைப் பாசிச சக்தியெனக் கூறுகின்றனர். ஆனால் சிவசேகரத்தின் விவாதம் தேசியசக்தியெனச் சொல்லாதவர்கள் (தேசியத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) பாசிசம் எனச் சொல்வதாக சொல்கிறார். அப்படியான கருத்துக்களை யார் முன்வைத்தார்களெனத் தெரியாமல் உள்ளது. பழைய தேடல் இதழ் அல்லது இது தொடர்பான கருத்துக்கள் கிடைப்பின் இவ் விவாதம் சிறப்பாக அமையும். அப்படி வெளிவந்த கருத்துக்கள் எதில் வந்ததென அறியத்தரின் விவாதத்தை தொடரமுடியும்.

 

 

தமிழ் ஈழப் போராட்டத்தின் பாய்ச்சல் இன்று சீரழிக்கப்பட்டுச் பாசிசமாக பரிணாமம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாசிசம் முழுமையாக எந்த நிபந்தனையுமின்றி அம்பலப்பட்டு வரும் இன்றைய நிலையில், எழுந்து வரப்போகும் போராட்டம் வேறொரு பாதையில் சீரழிந்து வருகிறது. எப்படிப் பாசிசம் மக்களின் விடுதலைக்கு எதிரானதோ அதற்கு எந்த விதத்திலும் திரிபுவாதமும், நவமார்க்சிசமும், வரட்டுவாதமும் குறைவானதல்ல.

 

திரிபுவாதமும், நவமார்க்சிசமும் வரட்டுவாதத்திற்கும் எதிராகப் போராடும் அதேநேரம் மார்க்சிசத்தை பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது அவசியமானது. நாம் அந்த வகையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெலின், ஸ்டாலின், மாவோ போன்றோரின் அடிப்படைக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது தவிர்க்க முடியாது. அவர்கள் சொந்த நாட்டின் குறிப்பான நிலைமைகளையொட்டி வரைந்த கருத்துக்கள் எம் பொருத்தமான நிலைமைகளுடன் பொருந்தமாலிருக்கலாம். ஆனால் பொதுவானவையும், அடிப்படை விதிகளும் என்றும் அடிப்படையானது. இதை மறுக்கும் சிலர் அடிப்படைக் கோட்பாடுகள் எந்த வகையில் தவறானது என்பதை ஆராய்வதை விடுத்து, தமது புதிய கருத்துக்களைத் திணிக்கும் வகையில் வகையில் அடிப்படை விதிகளைப் பழைமைவாதமென கூச்சலிடுகின்றனர். புதிய கருத்துக்களை நிராகரிக்கத் தவறுவதேன்? அப்படி நிராகரிக்காமல் பழைமைவாதம் என்ற ஒரு சொற்றொடரூடாக நிராகரிப்பதென்பது கற்பனாவாதமே. இன்றைய சோவியத், சீனா நிலைமைகளைக் கொண்டே புதியதென ஆராய்வதும், கடந்தகால தத்துவம் தவறெனின் அதை தெளிவாக முன்வைத்தே புதியதை நோக்கிச் சொல்ல வேண்டும். இதுவே மார்க்சிய அணுகுமுறையாகும்.

 

முரண்பாடுகளைக் கையாள்வது பற்றிய அடிப்படை விடயத்திலிருந்தே சமூகப் பிரச்சனைகளைக் கண்டறிய முடியும். இன்று ஜக்கிய இலங்கை, தமிழீழம் மற்றும் பல விடயங்களை ஆராய்வதெனின் முரண்பாடுகளின் செயற்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை முரண்பாட்டை கண்டறிய மாவோவினால் எழுதப்பட்ட முரண்பாடுகள் பற்றி... என்ற நூலிருந்து சில பகுதிகளைத் தொகுத்து முன்i வைக்கிறோம்.

 

அறிவதில் இரு போக்குகள் உள்ளன. ஒன்று குறிப்பிட்ட தனி இயங்கியலிலிருந்து பொதுவானதைப் பற்றி அறிவது. மற்றொன்று பொதுவானதிலிருந்து குறிப்பிட்ட தனி இயல்பு வாய்ந்ததை அறிந்து கொள்வது. இவ்வாறு அறிவு எப்போதுமே சூழல் வட்டங்களாக இயங்குகின்றது. அறிவியல் முறை நெறிபிறழாமல் கடைப்பிடிக்கப்படும் வரை ஒவ்வொரு சுற்று வட்டமும் மனித அறிவை மேலும் ஒருபடி உயர்த்தி அதை மேன்மேலும் ஆழமானதாக்குகின்றது. இப்பிரச்சனையில் நமது வறட்டு தத்துவவாதிகள் எங்கே தவறுகிறார்கள் தெரியுமா? ஒர் முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பையும் பொருட்களின் பொது உட்சாரத்தையும் ஆராய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மற்றோர் புறம் பொதுவான உட்சாரத்தையும் புரிந்து கொண்ட பிறகு, நாம் தொடர்ந்து சென்று, இதுவரை முற்றாக ஆராய்ந்தறியப்படாத அல்லது இப்போது புதிதாகத் தோன்றியுள்ள திட்டவட்டமான பொருட்களையெல்லாம் ஆராய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளாததிலும் தான் அவர்கள் தவறு இழைக்கின்றனர். நமது வறட்டுத் தத்துவவாதிகள் முழுச் சோம்பேறிகள். அவர்கள் திட்டவட்டமான விசயங்களை பற்றி ஆராய எவ்வித முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். பொது உண்மைகள் வெறும் மையத்திலிருந்து- சூனியத்திலிருந்து---- தோன்றுவதாக கருதுகின்றார்கள். அவர்கள் அவற்றைச் சிறிதும் புலனற்ற அருவமான ஆழங் காணமுடியாத ஒட்டை வாய்ப்பாடுகளாக ஆக்கி விடுகிறார்கள். அதாவது குறிப்பிட்டதிற்குமுள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

 

பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட முறைகளாலேயே தீர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு சோசலிசப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்து பட்ட மக்களுக்கும், நிலவுடமை அமைப்புக்கிடையில் உள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். குடியேற்ற நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையில் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும்.....

 

நமது வரட்டுவாதிகள் இக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை வெவ்வேறு வகையான புரட்சியில் அதன் நிலைமைகள் வேறுபடுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அதற்க்கு மாறாக தாம் கற்பனை செய்து கொண்ட மாற்ற முடியாத வாய்ப்பாடொன்றை எப்போதும் எல்லா இடங்களிலும் தம் மனம் போனபடி எதிலும் கையாளுகின்றனர். ஒரு பிரச்சனையை ஆராயும் போது அகநிலைப் போக்கு, ஒரு தலைப்பட்ட போக்கு, மேலோட்டமான போக்கு ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

 

ஒரு தலைப்பட்சப் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகவும். எடுத்துக் காட்டாக ஜப்பானைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, கோமிடாங்கைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, முதலாளிய வர்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பாட்டாளிவர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது, பெரு நில உடமையாளர்களைப் புரிநது கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிநது கொள்ளவது, முழுமையாக புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது----------

லெனின் கூறினார் ஒரு பொருளை உண்மையாக அறிய வேண்டுமானால் நாம் அப்பொருட்களின் அனைத்துப் பகுதியையும் எல்லாத் தொடர்புகளியும் இடைத்தொடர்புகளையும் தழுவிய வகையில் ஆராயவேண்டும்.

 

ஒருதலைப்பட்ச போக்கு, மேலோட்டப் போக்கும் கூட அகநிலை நோக்கு தான் காரணம். புற நிலையில் உள்ளவை அனைத்தும், உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அவ்விதிகளின் நியதிக்குட்பட்டவை. ஆனால் ஒரு சிலரோ, உள்ளவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே அவற்றைச் சிந்தனைக்கு உட்படுத்தும் கடமையைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை ஒரு தலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் மட்டும் பார்க்கிறார்கள். அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்புகளையோ, அவற்றின் அகவிதிகளையோ அறியாதிருக்கின்றனர். எனவே அவர்கள் முடிபு அகநிலைப் போக்காக உளளது.

 

ஒரு பொருளின் வளர்ச்சியிலுள்ள எதிரானவைகளின் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கு முழுவதும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. இச் சிறப்புத்தன்மை, அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பிலும், அவற்றின் ஒவ்வொரு கூறிலும் காணப்படுகிறது. அத்தோடு அவ் வளர்ச்சிப் போக்கிலுள்ள ஒவ்வொரு கட்டமும் அக் கட்டத்திற்கே உரிய சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது.

 

ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையிலுள்ள ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமைகள் வேறுபடுவது இயல்பு. ஏனெனில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அடிப்படை முரண்பாட்டின் தன்மையும் மாறாமல் இருந்த போதிலும், இந் நீண்ட போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அடிப்படை முரண்பாடானது மென் மேலும் கடுமையானதாகிறது. கூடவே அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிற அல்லது தாக்கப்படுகிற பல்வேறு பெரிய அல்லது சிறிய முரண்பாடுகள் சில கடுமையாகின்றன. சில தற்காலிகமாகவோ, அல்லது அரைகுறையாகவோ தீர்வு பெறுகின்றன. அத்துடன் சில புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

 

நாம் எவ் வகையிலும் அகநிலைப் போக்குடையவர்களாக இருக்கக் கூடாது. தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியில் போக்குகளின் மெய்யான புறநிலை இயக்கத்தில் உள்ள திட்டவட்டமான பாருண்மையான நிலைகளிலிருந்து அவற்றின் திட்டவட்டமான முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும். முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று கொண்டுள்;ள திட்டவட்ட உறவுகளையும் காணவேண்டும். அதாவது இயக்கம், பொருட்கள், நிகழ்ச்சிப் போக்குகள், சிந்தனை இவையெல்லாமே முரண்பாடுகள் தான் முரண்பாட்டை மறுப்பது என்பது அனைத்தையும் மறுப்பது ஆகும். இது எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்களுக்குமுரிய, விதிவிலக-;--------; பொதுமை தழுவிய உண்மையாகும்.

 

ஒவ்வொரு முரண்பாடும் குறித்த தன்மை கொண்டிருப்பதாலேயே தனிப்பண்பு தோன்றுகின்றது. தனிப்பண்புகள் யாவும் நிலைமைக்குட்பட்டவையாகும், தற்காலிகமானவையாகவும் இருக்கின்றன. ஆகவே அவை சார்புடையவையாகவும் இருக்கின்றன.

 

சீனா போன்ற அரைக் காலனிய நாட்டில் முதன்மை முரண்பாட்டிற்கும் முதன்மையல்லாத முரண்பாடுகளுக்குமிடையே உள்ள உறவு ஒரு சிக்கலான கட்சியை நமக்கு வழங்குகின்றது.

 

இத்தகையதொரு நாட்டின் மீது ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் போது, ஒரு சில தேசத் துரோகிகளைத் தவிர, நாட்டின் பல்வேறு வர்க்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான தேசியப் போரொன்றில் தற்காலிகமாக ஜக்கியப்பட முடியும். அத்தகைய வேளையில் ஏகாதிபத்தியத்திற்கும் குறிப்பிட்ட நாடுகளிற்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் அனைத்தும்(இவற்றில் முன்பு முதன்மை முரண்பாடாக இருந்ததே அதுவும் அடங்கும் அதாவது நிலவுடமை அமைப்பு முறைக்கும் பரந்துபட்ட மக்கள் திரளினருக்கும் இடையிலான முரண்பாடும் இவற்றில் அடங்கும்.) தற்காலிகமாக ஓர் இரண்டாம் தர கீழ்ப்பட்ட நிலைக்குத் தாழ்த்;தப்படுகின்றன எது நிகழ்ந்தபோதிலும், ஒவ்வொரு கட்டத்திலும் தலைமைப் பாத்திரம் வகிக்கும் முதன்மை முரண்பாடு ஒன்றே ஒன்று தான் இருக்கும் என்பதிலும் யாதொரு ஜயமுமில்லை.

 

ஆகவே எந்தவொரு வளர்ச்சிப்போக்கிலும், ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமேயானால், அவற்றில் ஒன்று தலைமைப் பங்கை, நிர்ணயம் செய்யும் பங்கை வகிக்கும் முதன்மை முரண்பாடாகவே இருக்கும். மற்றவை இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையிலிருக்கும். எனவே, இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகளுடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் நாம் ஆராயும் போது அதன் முரண்பாட்டைக் காண நாம் அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். ஒரு முறை இம் முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றியதும் எல்லாப் பிரச்சனைகளும் எளிதில் தீர்வு காண்கின்றன. இந்த முறையான முதாலாளியச் சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்ஸ் நமக்கு கற்றுத் தந்துள்ள முறையாகும்.

 

ஒரு வளர்ச்சிப் போக்கிலுள்ள அனைத்து முரணபாடுகளையும் ஒன்றுக்கொன்று சமமானவையாகக் கருதக்கூடாது. முதன்மை முரண்பாட்டுக்கும் இரண்டாம் நிலை முரண்பாட்டிற்குமிடையிலுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும். முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

 

முரண்பாடுக் கூற்றுக்களின் இரண்டில் ஒன்று முதன்மையானது. மற்றொன்று இரண்டாம் நிலையானது. முதன்மைக்கூற்றே முரண்பாட்டில் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிப்பதில் முதன்மைப் பங்கு வகிப்பது ஒரு முரண்பாட்டிலுள்ள முதன்மைக் கூறாகும். இது ஆதிக்க நிலையைப் பெற்றுள்ள கூறாகும்.

 

ஆனால் இந்நிலைமை நிலையானதன்று. முரண்பாட்டின் முதன்மைக் கூறும் முரண்பாட்டின் முதன்மையல்லாத கூறும் அவற்றின் எதிர் மறைகளாகத் தாமே மாறிவிடுகின்றன. இதற்கேற்பவே ஒரு பொருளின் இயல்பும் மாறுகிறது.

 

குறிப்பிட்ட கட்டத்தில் அ என்பது முதன்மைக் கூறாகவும் ஆ என்பது முதன்மையல்லாதக் கூறாகவும் இருக்கின்றன. மற்றொரு கட்டத்தில் அல்லது மற்றொரு வளர்ச்சிப் போக்கில் பாத்திரங்கள் இடம் மாறுகின்றன. ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள இரண்டு கூறுக்குமுள்ள சக்தி எந்த அளவுக்குக் கூடுகிறதோ அல்லது குறைகின்றதோ அந்த அளவுக்கு இடமாற்றம் நிகழ்கின்றது.

 

 

NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...

 

குமரன்

 

1983இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யபட முன்பே இவர் பிரதேசக் கொமிட்டியில் இருந்தவர். இவர் தீவிர இயஙகு சக்தியாக செயல்பட்டவர். 1980-81 முதல் என்-எல்-எவ்-டியில் வேலை செய்தார்.

 

மார்க்;சிசத்தில் ஆழாமான அறிவைக் கொண்டிருக்காவிட்டாலும் அனைத்து விடயங்களிலும் தீவிர விமர்சகராக இருந்தவர். சில வேளைகளில் தன்னிச்சைப் போக்கை கடைப்பிடிப்பார் இவர் ஒரு ஸ்தாபகர் என்ற நிலையை விட்டு இவர் ஒரு ஊழியராக எப்போதும் செயற்பட்டவர். எந்தப் பிரச்சனை மீதும் உடனடியாக விமர்சனத்தை முன்வைப்பதுடன், அமைப்பில் நெருக்கடி ஏற்படும் போது உடனடியாக முடிவுகளை எடுக்கக் கூடியவர். அமைப்பின் நெருக்கடியின் போது போராட்டங்களில் முன்னிலை நின்று போராடுபவர், இவர் 1987 ஆரம்பகாலங்களில் இருந்து படிப்படியாக ஒதுங்கிக் கொண்டவர்.

 

.ஜோர்ஜ்

 

இவர் 1980-81 இற்கு முதலே என்-எல்-எவ்-டி யில் வேலை செய்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட முன் பிரதேச கொமிட்டியில் இருந்தவர். இவர் மார்க்சியத்தில் ஆழமான அறிவை கொண்டிருக்காவிட்டாலும், ஒரு ஸ்தாபகர் என்ற நிலைக்கப்பால் ஒரு ஊழியராகவே கூடுதலாக செயற்பட முனைந்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டவுடன் மத்திய குழு செயலாளாராக தெரிவு செய்யப்பட்டார். இதற்கான தகுதியில்லாமலேயே இத் தெரிவு நிகழ்த்தப்பட்டது. இதைச் செய்வதில் விசு, ராகவன் என்ன நோக்கு நிலையில் நின்று செய்தார்கள் என்பதை கட்டுரையின் தொடர்ச்சியில் ஆராய்வோம். இவர் எபபோதும் நெருக்கடியின் போது முடிவுகள் எடுப்பதில் தயககம் காட்டுவார். மத்திய குழு அல்லது மத்திய குழுவில் வேறொருவருரின் துணையுடனேயே எப்போதும் முடிவெடுப்பபவர். அவர் தனக்கு என்ற வேலையில் தீவிர இயங்கு சக்தியாக செயற்பட்டவர். இவர் 1987 இன் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக அமைப்பிலிருந்து விலகினார்.

 

சண்முகம்

 

இவர் 1984 இல் என்-எல்-எவ்-டி யின் மத்திய குழுவிக்குத் தெரிவு செய்யப்பட்டவர். இவர் 1984 இன் ஆரம்பத்தில் அமைப்பில் இணைந்து கொண்டவர். இவர் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். அவ் வமைப்பின் ஆரம்பகால உறுப்பினர். இவர் இந்தியாவில் என்-எல்-எவ்-டியின் நிதி இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர். இவர் மார்க்சிச அறிவை பெரிதாக கொண்டிருக்காவிட்டாலும், தீவிர விமர்சகராக இருந்தவர். தீவிர இயங்கும் தன்மை கொண்டவர். ஊழியர்களின் பால் மிகுந்த அக்கறையுடைய இவர் அமைப்பை நிர்வகிக்கும் தன்மையைக் கொண்டிருந்தார்;. இவர் என்-எல்-எவ்-டியில் இணைந்த பின் ஈழத்தில் வேலை செய்யாதமையால் இவரின் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படு விட்டது. இவர் 1988 இல் அமைப்பிலிருந்து விலகினார்.

 

1983 இல் மேதினம் என்-எல்-எவ்-டி-யினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது இது கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டம் அன்று பொலிஸினால் சற்றி வளைக்கப்பட்டு கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

 

1983 இல் முந்திய காலத்திலிருந்தே மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு என்பன கட்டப்பட்டன. இவற்றை கட்டுவதில் என்-எல்-எவ்-டி நேரடியாகவே செயற்பட்டது. இவ் வமைப்புக்களை கட்டுவதில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இப்படி திட்டம் இன்றி உருவான மாணவர் அமைப்பில் பலர் பின்னால் என்-எல்-எவ்-டி வேலை செய்தனர் தனியொரு பகுதியாக மாணவர் அமைப்பு இல்லாமையினால் அத் தொடர்புகள் படிப்படியாக அறுபட்டுப் போய்விட்டது. இன்னொரு பகுதியினர் பல்வேறு இயக்கங்களில் இணைந்தும் கொண்டனர். என்-எல்-எவ்-டியில் இணைந்த மாணவர்கள் பின் என்-எல்-எவ்-டி உருவாக்கிய புதிய ஜனநாயக மாணவரமைப்பில் வேலை செய்தனர். பாடசாலைகளை முடித்தவர்கள் என்-எல்-எவ்-டி யின் இளைஞரணியான முற்போக்கு இளைஞரணியில் இணைந்து செயற்பட்டனர். உருவாகிய பெண்கள் அமைப்பு பெண்விடுதலை தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. பெண்கள் கொண்ட அமைப்பு வடிவத்தை மட்டும் கொண்டு பெண்கள் இணைக்கப்பட்டனர். இப் பெண்கள் அமைப்பு அரசியல் அறிவெதையும் பெரிதாக கொண்டிராத நிலையில் அவ் அமைப்பை பிரபாவே கூடுதலாக வகுப்புக்களையும் மற்றும் நெறிப்படுத்தல்களையும் செய்தார். இதில் மூன்று நான்கு பெண்கள் ஓர் அளவு வளர்ச்சி நிலையையடைந்தனர். பின் இவர்களே யாழ் மாவட்டத்தின் பல பாகங்களில் பெண்கள் அமைப்புக்களை உருவாக்கினர். அதே நேரம்(சக்தி) ஒரு பெண்கள் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது ஒரு இதழ் மட்டுமே வெளிவந்தது. இச்சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை ஆண்களாலேயே எழுதப்பட்டது. வடமராட்சியில் தெங்குபனம் பொருள் கூட்டுஸ்தாபனத்தில் வேலை செய்த பெண்கள் ஒரு பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் கதைக்க முற்பட்டபோது கூக்குரலிட்டு தடுக்கப்பட்டது. இந் நிகழ்வைத் தொடர்ந்து பெண்கள் அமைப்பில் அரசியல் தரம் பற்றியும், திட்டம் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தது. இப்படியான பெண்கள் அமைப்பின் அவசியமின்மையைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அரசியலில் முன்னேறிய பெண்கள் மட்டும் தொடர்ந்தும் அமைப்புடன் இயங்கினர். உருவாகிய பெண்கள் அமைப்பு கைவிடப்பட்டது. அது இயல்பாக செயலிழந்து போனது. எஞ்சிய பெண்கள் (10ற்கு உட்பட்ட) தொடர்ந்து என்-எல்.-எவ்-டி யுடன் இணைந்து வேலை செய்தனர். பின்னால் இவர்கள் ஒரு பெண்களமைப்பை உருவாக்கவில்லை. என்-எல்-எவ்-டி- யும் உருவாக்கிக் கொடுக்கவில்லை. ஆனால் அமைப்பில் மத்திய குழுவில் இருந்த சிலர் தனியான பெண்களமைப்பின் தேவையை உணர்ந்தாலும் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் தனியான பெண்களமைப்பின் உருவாக்கத்திற்கு தடையாகவும் இருநதது.

 

1983 இல் என்-எல்-எவ்-டி யின் உருவாக்கத்தின் முன்பே பகிரங்கமாக வெளிப்பட முடியாத கருத்துக்களைத் தாங்கிய ஒரு பத்திரிகை வெளிவந்தது. அப் பத்திரிகையின் பெயர் பயணம் ஆகும். அது என்-எல்-எவ்-டியால் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை என்-எல்-எவ்-டி க்குள்ளும் வெளியிலும் முன்னேறிய சக்திகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இப் பத்திரிகை 4 இதழ்கள் மட்டும் வெளிவந்தது. 4ம் இதழ் வெளியிடப்படாமல் முற்றாக எரிக்கப்பட்டது. இவ் இதழில் (4ம் இதழ்) அமைப்பிற்கு வெளியிலிருந்த சேரனால் சேகுவோராவின் போராட்டத்தை ஆதரித்து கட்டுரை எழுதப்பட்டது. இவை தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. கியூபா புரட்சி தனிநபர் பயங்கரவாதத்தின் மூலம் பெற்றுக் கொண்டதை நியாயப்படுத்துவது, ஈழத்தில் தனிநபர் பயங்காரவாதத்தை, அது சார்ந்த குழுக்களை அங்கீகரிப்பதில் இட்டுச் செல்லும் என்ற விமர்சனத்தினூடாக பயணம் இதழ் எரிக்கப்பட்டது.

 

1983 இல் மாநாட்டைத் தொடர்ந்து ஒரு பத்திரிகை வெளியிடப்படுவதென முடிவெடுக்கப்பட்டதையடுத்து இலக்கு எனும் இதழ் இந்தியாவிலிருந்து வெளிவந்தது. இவ் விதழ்கள் 1986 இல் 6 இதழ்களும் 1988 இல் ஓரிதழும் வெளிவந்தது. இவ ;விதழ்களின் கட்டுரைகள் ஒரு சில இலங்கையில் எழுதப்பட்டாலும், பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து விசுவால் எழுதப்பட்டவையே. விசுவின் கட்டுரைகள் தொடர்பாக அமைப்புக்குள் முரண்பாடுகள் கூட இருந்தன. இலக்கு இதழ்கள் விற்பனைக்கு என்று தயாரிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் இலவசமாவே விநியோகிக்கப்பட்டது. 1984 இல் இப் பத்திரிகைக்கப்பால் இலங்கையிலிருந்து செய்திகளைக் கூடுதலாகக் கொண்ட முன்னணிச் செய்தி என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையை அமைப்பினால் வெளியிடும் பொறுப்பை சிறீ என்பவர் கொண்டிருந்தார். இப் பத்திரிகை 7 இதழ்கள் வெளிவந்தன. இவ்விதழ்கள் றோனியோ செய்யப்பட்டே வெளியிடப்பட்டது. பின் 1986 இன் ஆரம்பத்தில் என்-எல்-எவ்-டி க்குள்ளிருந்த கட்சியினால் லெனினிசம் எனறொரு பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையில் முழுமையாக அரசியல் கட்டுரைகளையே தாங்கி ஒரேயொரு இதழ் மட்டுமே வெளிவந்தது.

 

1983 முடிந்தவுடன் விசு, சிறீ உட்பட நான்கு பேர் இந்தியா அனுப்பப்பட்டனர். மற்றைய இருவரும் இராணுவத்தைச் சேர்ந்தோர். அவர்கள் இருவரும் ஆயுதம் சேகரித்தல், பயிற்சி முகாம் தயாரித்தல்;;;;;....போன்ற வேலைகளுக்காக அனுப்பப்பட்டனர். சிறீ இந்தியாவில் பகிரங்க தொடர்புகளுக்கும், பகிரங்க வேலைக்கும் என அனுப்பப்பட்டார். இவர்கள் இந்தியா செல்வதற்கு முன்பே விசு அங்கு நீண்டகாலம் இருந்தவர். இவர்கள் நால்வரும் நெடுந்தீவிலிருந்து வள்ளம் மூலம் இந்தியா செல்ல நெடுந்தீவு சென்ற போது நால்வரும் செல்வதற்கு வள்ளம் கிடைக்காமையினால் விசும், சுரேனும் முதலில் இந்தியா சென்றனர். சிறீயும், ரமேசும் ஒரு வாரத்தின் பின்பே வள்ளம் மூலம் சென்றனர். இவர்கள் சென்ற வள்ளம் இடைநடுவில் பழுதுபட்டதனால் 4---5 மணிநேர தாமதத்தின் பின்பு இராமேஸ்வரம் கரையில் இறக்கப்பட்டனர். இவர்கள் உடமைகள் யாவும் அவ்வூரிலிருந்த சிலரால் வழிமறித்துப் பறிக்கப்பட்டன.

 

இந்தியாவில் விசுவுடன் இணைந்து கொண்ட இவர்கள் விசுவின் இந்திய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினர். அவருடன் மேலும் இருவர் இருந்தனர். அந் நண்பரின் பொருளாதார நெருக்கடிக்குள் நாம் அவரைச் சார்ந்திருந்தோம். எம் கைகளிலும் பெரிதாகப் பணம் இருக்கவில்லை. நாம் சாப்பிடுவதற்குக் கூட பணமில்லாத நிலையில் அவர்கள் சமைப்பதில் இரவில் தரும் உணவுடன் ஒரு மாதம் ஒடியது. எமது அடுத்தகட்ட வேலைக்கு பணம் இலங்கையிலிருந்து (ஒருகொள்ளையினூடாகவே) எதிர்பார்க்கப்பட்டது. அதாவது குறித்த திகதிக்கு முன் பணம் அனுப்புவதாக கூறிய உத்திரவாதத்தை மட்டும் கொண்டு சில அடிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் இருந்தோர் பயிற்சி முகாம் போடுவதற்கென்று சில இடங்களைக் கூட சென்று பார்த்தனர். அங்கு செல்வதற்காக கையிலிருந்த அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டன. ஊட்டி வரை சென்று சில காடுகன் தொடர்பாக ஆராயப்பட்டது. அங்கு விசுவுக்கு நண்பர்கள் இருந்தனர். இப்படி பார்க்கப்பட்ட காடு தொடர்பாக இராணுவம் சார்பாக வந்த ரமேஸ் இவ்வளவு தூரம் நடந்து சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா? கால் உளைகிறது என்று சொல்லி ஒரு கடினமான போராட்டத்துக்கு தயாரின்மையை நடைமுறையில் காட்டினார். இவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமாவார். இவரின் இச் செயற்பாடு தொடர்பாக விசு,சிறீ, சுரேன் ஆகியோரால் விமர்சிக்கப்பட்டது.

 

மேலும் விசு நக்சல்பாரி குழுவான (மக்கள் யுத்தக் குழுவுடன்) தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் மூலம் ஒரு வீடு எடுக்கப்பட்டு நால்வரும் அவ் வீட்டில் தங்கினர். இக் காலத்தில் மக்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்-எல்-எவ்-டி யில் அடிக்கடி தொடர்பு கொண்டு விவாதித்தார். இந் நிலையில் முன்பு புலிகளிலிருந்த சண்முகம் என்பவருடனும் தொடர்ந்து விவாதித்தோம். அதை தொடர்ந்து அவர் என்-எல்-எவ்-டியுடன் இணைந்து வேலை செய்ய முன் வந்தார். அங்கு ஏற்பட்ட பண நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பணம் வராமையால் விசு நாடு திரும்ப முடிவு செய்தார். பணம் நெருக்கடி ஏற்படின் சண்முகத்திடம் கோரும்படி கூறிச் சென்றார். விசு நாடு திரும்பும் போது சிறீயையும் கூட்டிசசென்றார். விசு, சிறீ நாடு திரும்பியபோதும் அங்கு எக் கொள்ளைகளும் செயற்பட்டு இருக்கவில்லை. அமைப்பு மொத்தத்தில் நிதி நெருக்கடிக்குள் மூழ்கியிருந்தது.

 

விசு சிறீ நாடு திரும்பியவுடன் கூட்டப்பட்ட மத்திய குழுக் கூட்டத்தில் மத்திய குழுவுக்கப்பால் ராகவனும் கலந்து கொண்டார். நிதி நெருக்கடியைத் தீர்க்க மிக விரைவில் கொள்ளைகளுடாகத் தீர்ப்பதாக கூறி உத்திரவாதம் அளித்தனர். மேலும் விசுவின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்தியாவுககு இராணுவப் பயிற்சி தொடங்கவென ஆட்களை இந்தியா அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. இராணுவப்பயிற்சி தொடர்பாக இந்தியாவிலிருந்து வந்த சிறீ அந்த கூட்டத்தில் பெரிதாக கருத்துச் சொல்லாமல் அங்கீகரித்தார். மேலும் அங்கிருந்த உணவுப் பிரச்சனை, இடப்பிரச்னை, மற்றும் நிதியின்மை போன்ற நெருக்கடிகள் தொடர்பாகவும் கருத்துச் சொல்ல தயங்கினார். சிறீ போன்றோர் விசு, ராகவன் போன்றோரின் வாதத் திறமைக்கெதிராக ஒரு கருத்தைக் கூட சொல்லி விடும் தகுதி அவர்களுக்கு இருக்கவில்லை. விசு இந்தியாவிலிருந்து ஒரு சில ஆயுதங்களை பணம் அனுப்பின் எடுத்துக் கொடுத்து விடுவதாக உத்திரவாதம் வழங்கினார். அதையடுத்து ரகு என்பவரை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரகு மேலும் ஜவர் பயிற்சிக்காக புதிதாக சிறீயுடன் அனுப்பப்பட்டனர்.

 

இவர்கள் இந்தியா செல்வதற்கான வள்ளம் எமது அமைப்பிலிருந்த செல்வம் என்பவர் ஒழுங்கு செய்தார். இவர் சிறிய பிளாஸ்டிக் போட் ஒன்றை அவரின் நண்பரிடம் மீன் பிடிக்க செல்லவெனச் சொல்லி இரவல் வாங்கினார். அவ் வள்ளத்தின் இயந்திரம் வலு 15 குதிரைச் சக்தியை மட்டுமே கொண்டிருந்தது. இச் செயற்பாட்டிற்குப் பொறுப்பாக இராணுவக் குழுவே இருந்தது. குறித்த நடவடிக்கையில் முன் அனுபவமற்ற நிலையில் இதில் அனுப்பியிருந்த தவம், மோகன்,(இவர்கள் இராணுவப பிரிவில் இருந்தவர்கள்)ஆகியோரே வள்ளத்தை ஒழுங்கு செய்தனர். வள்ளத்தில் தவத்துடன் வேறொருவர் ஓட்டியாக வந்தார். சில புத்தகப் பார்சல்களுடன் (மாவோவின் நூல் திரட்டுக்கள். இவை பின் மக்கள் யுத்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டது.) புறப்பட்ட வள்ளம் இடைநடுவில் இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் கடும் மழைக்கும் காற்றுக்கும் மத்தியில் நீண்டநேரம் தததளித்தது. நீண்ட நேரமுயற்சியின் பின் வள்ளம் மீண்டும் ஒடத்தொடங்கியது. வள்ளம் புறப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின் வள்ளம் இலங்கையை நோக்கி வருவதை காங்கேசன்துறை வெளிச்சக் கோபுரத்தைக் கொண்டு அறிய முடிந்தது. பின் மீண்டும் வள்ளம் திருப்ப்பபட்டு இந்தியா நோக்கி செலுத்தப்பட்டது. விடியற்காலை 5-6 மணியளவில் தெரிந்த வெளிச்சக் கோபுரத்தைக் கண்டு இலங்கையா, இந்தியாவா எனக் குழம்பினர். பின் மெதுவாக செலுத்தி சென்ற போது இந்தியா எனத் தெரிந்தது. அந்தளவுக்கு உயிர்களைப் பற்றிய எச்சரிக்கையின்றி அமைப்பு ஆரம்பிக்கத் தொடங்கியது. வள்ளத்தின் இயந்திரம் காலை ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தும் மறு நாள் காலையே கரை வந்து சேர்ந்தது. இயந்திரம் குறித்த நேரத்தில் ஒப்படைக்கப்படாமையால் இயந்திர உரிமையாளர் பொலிஸ்சில் புகார் செய்திருந்தார். இவைகளெல்லாம் அமைப்பின் மிக மோசமான நிலைமையைச் சுட்டிக்காட்டியது.

 

 

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

உலகளவில் கொள்ளையடித்தவர்களால் உருவாகியுள்ள உலக நெருக்கடி, தெளிவாக எமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றது. அரசுகள் என்பது மக்களை ஏய்க்கும் கொள்ளைக் கோஸ்டிகளை வழிநடத்தும் திருட்டுக் கோஸ்டி என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவர்களின் 'ஜனநாயக" ஆட்சியில் சர்வதேச நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் மீதோ, மக்களின் நிதியைக் கொள்ளையடித்தவர்கள் மீதோ எந்த நீதி விசாரணையும் கிடையாது. பணத்தைத் திருடி வைத்துள்ளவர்களிடமிருந்து அதை மீளப் பறிமுதல் செய்தது கிடையாது.

இதன் அரசியல் சாரம் என்ன? ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளுவது தான். இதை விட வேறு இதில் ஒன்றுமில்லை.

 

பிள்ளையான் கோரும் பொலிஸ் அதிகாரம், தன் எதிரிகளை இதைக் கொண்டு ஒடுக்குவதற்குத் தான். கருணா உட்பட யாரையும் இவரின் 'ஜனநாயகம்" கிழக்கில் அனுமதிக்காது. இதற்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றார். 

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக்  கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE