Language Selection

பி.இரயாகரன் - சமர்

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

 

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

மனிதஅவலத்தை பற்றி பேசுவது சடங்காகி சம்பிரதாயமாகிவிட்டது. இதற்குள் அரசியல் சூழ்ச்சிகள். இதற்கு அமைய அவலம் அரசியலாக்கப்பட்டு, அவையே அவர்களின் அரசியலாகின்றது. இதற்கு பின் பிழைப்புத்தனம், நக்குண்ணித்தனம் என்ற விதம்விதமான கயவர் கூட்டத்தின் பிழைப்புகள்.

யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

இல்லை. மாறாக அது மகிந்த சிந்தனையிலான நவீன பாசிசம். புலியின் பாசிசத்தைச் சொல்லி, மகிந்தாவின் வாலாக ஈ.பி.டி.பியின் பாசிசம் ஆட்டம் போடுகின்றது. இதுவோ மற்றொரு புலியிசம் தான். புலி அரசியலில் இருந்து, எந்த வேறுபாடும் இதற்கு கிடையாது. இதற்கு அப்பால் புலி எப்படி தன் பாசிசத்தை நிறுவியதோ, அதையே தான் சிங்கள பேரினவாத துணையுடன் ஈ.பி.டி.பியும் செய்கின்றது.

புலியெதிர்ப்பும், புலியிசமும் பேசும் உண்மைக்குள் உள்ள பொய்மைகள் அனைத்தும்,  மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையின் பாலான எந்த அக்கறையுமற்றதும், குறுகிய நோக்கத்துக்குட்பட்டதுமாகும். மனிதம் சந்திக்கின்ற அவலங்கள் உண்மையானது, எதார்த்தமானது. அதை கண்டு கொள்ளாத கூத்துகள் கோமாளித்தனமானது. இதற்குள் றீல்விட்டு எழுதும் புத்திஜீவிகள். உண்மையை ஒருபக்கம் அடமானம் வைத்துவிட்டு, நடிக்கும் நேர்மையீனம். 

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

உங்கள் அழிவை நோக்கி, உங்கள் வழியில் நீங்கள் நகர்கின்றீர்கள். உங்கள் வழிகள், இதை தடுத்து நிறுத்தாது. தற்கொலைக்குள் நீங்கள் மட்டுமல்ல, மக்களையும் சேர்த்து அழைத்துச் செல்லுகின்றீர்கள். தயவு செய்து இதை நிறுத்துங்கள். 

10 வருடத்துக்கு முன் மக்களின் விடுதலையை முன்னிறுத்திய கனடா தேடகம், இன்று புலிக்கு பின்னால் ஓடுகின்றது. அன்று புலிகள் பல்வேறு நெருக்கடிக்களை சந்தித்து வந்த தேடகம், இன்று அவர்களின் லேபல் அமைப்பாக மாறி அறிக்கை வெளியிடுகின்றது.

தமிழ் மக்களின் எதிரியை முறியடிக்க முடியாத புலிகளின் நடைமுறைகளுடன், நாம் எப்படி ஒன்றுபட்ட நிற்கமுடியும். பேச்சுவார்த்தையாக இருக்கலாம் அல்லது இராணுவ வடிவங்களாக இருக்கலாம், எதிலும் அரசியல் ரீதியாக புலிகள் தோற்கின்றனர். கிணற்றுத் தவளைகளாக மாறி கத்துவதால், உலகம் மாறிவிடாது. 

ஒன்றா இரண்டா! இல்லை! தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வாழ்வியலில், பல எதிரிகளை அவர்களுக்கு அடையாளம் காட்டி வருகின்றது. ஏகாதிபத்தியங்கள், இந்தியா, சிங்கள பேரினவாத அரசு, இலங்கை இந்திய அரசுடன் உள்ள கூலிக் குழுக்கள், புலிகள் என்று, இன்று இவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மக்களுக்கு எதிராக  இயங்குகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE