எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான அரசியல் எது?
எம்மினத்தின் பெயரில் உருவான 'தேசியம்", 'ஜனநாயகம்" கொண்டிருந்த அரசியல் என்ன? அதன் நடைமுறைகள்தான் என்ன? இதுதான் சிறுமி வர்ஷாவின் படுகொலையை வழிகாட்டுகின்றது. இது தொடக்கமுமல்ல முடிவுமல்ல, மாறாகத் தொடரும்.
மகிந்தாவின் பாசிசத்துக்கு முண்டு கொடுக்கும் புலியிசம்
மகிந்தாவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதே புலிதான். அமைதியும் சமாதானமும் வந்து தம்மை கருவறுத்துவிடும் என்று அஞ்சிய புலிகள், யுத்தத்தை விரும்பியதால் மகிந்தாவை தேர்ந்தெடுத்தனர். தமிழ்மக்கள் விரும்பியதோ, சமாதானத்தையும் அமைதியையும். புலிகள் விரும்பியதோ யுத்தத்தை.
புலிகள் அழிவும், புலியிசமாகும் இலங்கையும்
புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.
மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும்
மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எம்மத்தியில் உள்ளனரா? அப்படி யாரும் அரசியல் ரீதியாக எம் மத்தியில் கிடையாது. மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்பது, மக்களுக்காக வைக்கப்படும் புரட்சிகர கருத்துகளின் அடிப்படையில் தான், அரசியல் ரீதியாக அதை வரையறுக்க முடியும்;. அரசியல் அல்லாத தளத்தில், இது வெறும் நபர்கள் அல்ல.
கூலி எழுத்தாளர்கள் மூலம், மூடிமறைக்கப்பட்ட எதிர்ப்புரட்சி அரசியல்
எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்;டுள்ளது.
நான் நாம் என்பது எதை? : மக்களுக்கான புரட்சிகர வரலாற்றை மறுத்தல், அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதம்
தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.
புலிக்கும் - அரசுக்கும் பின்னால், சலசலக்கும் 'மாற்று" அரசியல்
மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.
கருணாவும் – பிள்ளையானும் 'ஜனநாயகத்துக்கு" திரும்பிய கதை
இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?
நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல
தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்" உச்சரிக்கப்படுகின்றது.
பரிஸ்சில் நடந்த சுயவிளம்பரப் போராட்டம்
தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும் நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.