Language Selection

பி.இரயாகரன் - சமர்

சமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திட்டத்தில் திருத்தங்கள் செய்ததனினூடாக மூன்றாவது பாதைக்கான ஜக்கியமுன்னணியை ஒரு ஸ்தாபனமாக உருவாக்கியுள்ளனர்.

மனிதம் இதழ் 22 இல் சி.வசந்தன் தேசிய சக்தியும் என்ற தலைப்பில் ஒரு அவசரக் குறிப்பு எழுதியுள்ளார். இவர் இக்கட்டுரையில் தேசியசக்தி பற்றி ஒரு பார்வையை பார்த்ததுடன், நடைமுறை பற்றியும் சொல்ல முற்பட்டுள்ளார். விமர்சிப்பவர்களை மக்கள் விரோதிகள் என்று, ஜக்கியம் நடைமுறை பற்றி கதைப்பதன் ஊடாக கூறியுள்ளார்.

மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை, நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்க முன்பு, நாம் மனிதம் ஆசிரியர் குழுவுடனும், வாசகர்களுடனும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். முன்பு மனிதம் தொடர்பான எமது கருத்தை முன்வைத்தபோது திரிபுவாதம் எனக் குறிப்பிட்டோம். இது தொடர்பாக மீண்டும் சமர் 7 இல் விவாதித்தோம்.

இன்று தமிழீழப் போராட்டம் தவறானது எனவும் அது குட்டிபூர்சுவா,குறுந்தேசியவாத....... என வரையறுத்து பலர் இன்று கருத்துக்கூறுகின்றனர். அவர்கள் இதிலிருந்து ஜக்கிய இலங்கைப் புரட்சியைக் கோரி நின்றனர். ஜக்கிய இலங்கை புரட்சிககான ஒன்றுபட்ட கட்சியைக்கோரும் அனைவருக்கும் இக்கட்டுரை பதிலளிக்கின்றது. இக்கட்டுரையுடன் மாறனின் கட்டுரைக்கும் சமா 8 இல் மாறனின் கடிதத்துக்கும், மனிதம், உயிர்ப்பு, பனிமலரில் வெளிவந்த மாறனின் கருத்துக்களை உள்ளடக்கியதே இவ் விமர்சனம். அத்துடன் தேடலில் இந்திரனின் கருத்துக்களையும் இக்கட்டுரையில் விமர்சிக்கின்றோம். முதலில் மாறனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து எமது கட்டுரையும் வெளிவருகின்றது.

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

அன்றைய கவிஞர்

இயற்கை அழகைப் பாடினார்

பனிப்படலங்கள், பட்டுப் பூக்கள்

பால் நிலா, பாடிவரும் தென்றல்

பொழியும் மழைத்துளிகள்

பச்சை வண்ணத் மலைத் தொடர்கள்,

பாயும் ஆறுகள்---அவர்களின் பாடல்கள்

இவைகளைத் தொட்டன

ஆனால்.........

இரும்பு எஃகுமே

இன்றைய நிலையில்--நமது

பாட்டின் இதயக் கருப்பொருட்கள்!

கவிஞனின் பணி--

கவிதை மட்டுமா.....?

ஒரு போராட்டத்தைத் தலைமை ஏற்று

நடத்தவும் வேண்டும்.

 

---ஹோ-சி--மின்-----

 

 

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

சுத்திசுத்தி கடைசியில் புலியெதிர்ப்பு, தன் இலக்கு அரசை ஆதரிப்பதுதான் என்பதை வெளிப்படையாக சொல்லத்தொடங்கியுள்ளனர். புலிக்கு மட்டும் இன்று சேடமிழுக்கவில்லை, புலியெதிர்ப்புக்கும் வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. அரசின் பின்னால் அம்மணமாகவே பவனிவரத் தொடங்கியுள்ளனர்.

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE