வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" ஒரு அரசியல் புள்ளியில் சந்திக்கின்றனர்
அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ஆயுதத்தை கீழே வைக்கி என்கின்றனர். இதற்கு மாற்றாக, இவர்கள் ஏதாவது கோரிக்கையை வைக்கின்றார்களா!?
புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?
துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.
துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும்
புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.
இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும்
புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.
1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு
2. இறுதிவரை போராடி மடிவது.
இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.
அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது
முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.
யூ. என். பி யின் இனவாதமும் தொண்டமானின் கைக்கூலித்தனமும்
தொண்டமானுக்கும் ஜ.தே.க கும்பலுக்கும் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த காதல் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொண்டமான் எதிர்கட்சிகளுடன் கூடிக்குலாவத் தொடங்கியுள்ளார். தொண்டைமானின் இன்றைய நிலையை சுட்டிக்காட்டி பலர் தொண்டமான் மக்களின் நண்பன் என்று கருத்துப்பட கட்டுரைகள் வரைகின்றனர்.
கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையில்........
அண்மைக் காலமாக கருணாநிதிக்கும் கோபாலசாமிக்கும் இடையிலான அதிரடிப்(அதிகார ?);போட்டி முன்னிலைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கோபாலசாமியை தமிழ்ப்பற்று உள்ளவராக காட்டமுனையும் செய்திகள் பலதரப்பாலும் பரப்பப்படுகிறது.
சிறையிலிருந்து எழுதும் கடிதம்
அம்மா
நண்பர்கள் என்னைத்தேடி வந்து
கதவிலே தட்டும் போதெல்லாம்
தாயே நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை
எண்ணி நான் வேதனைப்படுகின்றேன்.
புதிய நாற்று
தேயிலை செடிகள் மீது
தென்றல் இல்லை
இலைகளும், பூக்களும்
இறந்து விழுந்தன.
இன்னும் என்ன?
எதிர்காலப் பிரஜையின் பாடல்
இன்னும் மலராத் தேசமொன்றில்
இருந்து வந்தவன் நான்
இங்கு பிறந்தது
நான் மட்டுமல்ல
நீ மட்டுமல்ல
நாம். சகோரதரர்கள்...