தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
அரச கைக்கூலிகள் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இனி தம் உரிமைக்காக போராட மாட்டார்களாம்!?
இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,
குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம்
ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.
புலம்பெயர் போராட்டங்களும், அதன் தோல்விகளும்
புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்
மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும்
கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல் நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.
கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது
மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும்
பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.
இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?
அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.
பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது
காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.
எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல
இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.
இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம்
இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் உரிமையும் உண்டு.