Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.

இதற்கு மாறாக சுயவிமர்சனம் செய்ய மறுக்கின்ற, பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டத்தையே புலி கோருகின்றது. "சுற்றிச்சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்", கயிறு திரிக்கவே முனைகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரான சேகர் குப்தாவிற்கு, என்.டி.ரி.வி.யின் “வோக் த ரோக்" நிகழ்ச்சியில் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஷ பேட்டியளித்தபோது தான், 100 உட்பட்ட பொதுமக்களே யுத்தத்தில் இறந்ததாக கூறுகின்றார். மக்களைக் கொன்று குவித்துவிட்டு,  பாசிட்டுகளுக்கே உரிய கொழுப்புடன் பதிலளிக்கின்றான்.

அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

இலங்கை அதிபயங்கரமான பாசிச சூழலுக்குள் நகர்கின்றது. அரசு எதை நினைக்கின்றதோ, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மீறுபவர்கள் அனைவரும், இந்த அரசின் பாசிசப் பயங்கரவாதத்தை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர். 

புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.

இன்று இனவழிப்பு மூலம் மக்கள் கொல்லப்படுவதை மறுக்கும் இந்தக் கொலைகாரன், அன்று மக்களை  கொல்லப்படுவதற்கு எதிரான ஒருவனாக இருப்பதைப் பாருங்கள். 1989-1990 இல் சிங்கள் இளைஞனைக் கொன்ற அதே பொலிஸ், அதே இராணுவம், இன்று தமிழனைக்  கொல்லுகின்றது.

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

மேடைக்கு ஏற்ப ஆட்டம். ஆட்களுக்கு ஏற்ப அரசியல். போலிக் கம்யூனிசத்தின்  புதுவிசைக்கு ஏற்ப பேட்டி. அரசு – புலிக்கு எதிராக, அரசியல் நீக்கம் செய்த விமர்சனங்கள். ஏகாதிபத்திய நிலைக்கு ஏற்ப தாளம். இதுவே சுசீந்திரன் முதல் பலரின் இன்றைய அரசியல் கூட. மக்கள் அரசியலை முன்னிறுத்தி, அதற்காக எந்த முன்முயற்சியும் பொதுவில் கிடையாது. இதற்கு எதிராகத்தான் பயணிக்கின்றனர். 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE