Language Selection

பி.இரயாகரன் - சமர்

அரச பாசிசம், தன் வதைமுகாமில் உள்ள மருத்துவர்களைக் கொண்டு இப்படி அறிவிக்கின்றது. தன் போர்க்குற்றத்திலான உண்மைகளை எல்லாம், இப்படி தன் பாசிச வழயில் பொய்யாக்க முனைகின்றது. அறிவு நாணயம் எதுவுமற்ற வகையில், தங்கள் இரும்புப்பிடிகொண்ட உருட்டல் மிரட்டல்கள் மூலம், உலகத்தையே தலைகீழாக்கி காட்ட முனைகின்றனர் பாசிட்டுகள்.

புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

வன்னி நிலம், வன்னி நீர், வன்னி மக்கள் என்று அனைத்தையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பேரினவாத அரசு விற்று வருகின்றது. வன்னியின் "அபிவிருத்தி", "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில, இவை அரங்கேறுகின்றது. மக்களின் சுதந்திரமான வாழ்வு, சுதந்திரமான உழைப்பு, சுதந்திரமான நடமாட்டம் என அனைத்தும், இனவாதிகளுடன் சேர்ந்து மண்ணை ஆக்கிரமிக்கும் பன்நாட்டு நிறுவனங்களால் "அபிவிருத்தி" என்ற பெயரில் பறிக்கும் கூட்டுச்சதி இங்கு அரங்கேறுகின்றது.

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை. 

உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.

சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.

ஜனநாயகவேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.  

மகிந்தாவின் பாசிசம் மக்களுக்கானதே என்று வைக்கின்ற வாதங்கள் அனைத்தும், தவிர்க்க முடியாதவை என்கின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம், புலியின் கடந்த இதற்கு ஒப்பிட்டு நியாயம் செய்கின்றனர். நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ, இதை ஏற்றேயாக வேண்டும் என்கின்றனர்.

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள்  யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

மகிந்தாவை நம்பு, மக்களை நம்பாதே. மகிந்தா அரசியலை வை, மக்கள் அரசியலை வையாதே. மகிந்தாவை நம்புவதா? என்ற இந்தக் கேள்வியின் பின்னுள்ள அரசியல் நோக்கம், மக்கள் அரசியலை மீண்டும் மறுப்பது தான். இதன் மூலம் மகிந்தாவின் பாசிச சிந்தனையை ஆதரிப்பதுதான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE