உலகெங்கும் ஒரு குடையின் கீழ் ஆளம் கனவுகளுடன், உலகிலுள்ள அனைத்து உற்பத்தியையும் தனியார் மயப்படுத்த உலக முதலாளிகள் கோரி வருகின்றனர். இதன் தொடர்ச்சியில் உலக முதலாளிகள் தரகு அரசான இலங்கை அரச பீடம் அரசு தொழில் பிரிவுகளை தனியார் மயப்படுத்த முனைப்புப் பெற்றுள்ளனர். இதையடுத்து இலங்கை மின்சார சபையைத் தனியார் மயப்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
போர்க்குணம் கொண்ட பிரஞ்சு தொழிலாளியும் பிரஞ்சு மக்களின் மொத்த சமூக அமைப்பும்
கடந்து சென்ற நவம்பர் மார்கழி மாதம் பிரான்சின் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை பாட்டாளி வர்க்கம் தனது போர்க்குணாம்சத்தை உலகுக்குப் பறைசாற்றியது. பிரஞ்சு மக்களின் போர்க்குணத்துடன் கூடிய போராடும் தன்மை மட்டுமன்றி, வரலாற்றை மாற்றும் தகைமையை தன்னகத்தே கொண்டுள்ளதை இனம் காட்டினர்.
மக்களின் எதிரி யார்? இதை மறுப்பது ஒரு திசைவிலகளாகும்
தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியின் ஆரம்பம் முதலே உருவான மக்கள் விரோத நடவடிக்கைகள், அப்போராட்டத்தையும் , போராடிய சக்திகளையும் பல பரிணாமங் கொண்ட சிந்தனைக்குள்ளும், அதன் தொடர்ச்சியில் இன்று புலிகள் மட்டும் போராடும் சக்தியாக அவர்களே ஏற்படுத்திய நிலையில், சில குழுக்கள் துரோகம் இழைத்த பின்னர் பலர் உதிரிகளாகவும், சிறு குழுக்களாகவும் விரவிச் சிதறிச் சென்றனர்.
8 வருடங்களக்கு முன்னர் கொல்லப்பட்ட விமலேஸ்வரன்
18.07.1988 ல் விமலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டான். ஏன்?
பின்தங்கிய மாவட்டமான கிளிநொச்சியில் பிறந்த விமலேஸ்வரன் மக்களின் துன்ப துயரங்களைக் கண்டு அதற்கெதிராகப் போராட உணர்ந்து P.L.O.T இன் மாணவர் அவையாவன வுநுளுழு வில் இணைந்தான்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பாரிய பின்னடைவை நோக்கி
கடந்த 15 வருட கால தேசிய விடுதலைப் போராட்டமானது இன்று முன்னொரு போதும் இல்லாத ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. யாழ் குடா நாட்டை முற்றுமுழுதாகவே இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையும் , சிங்களப் பெரும் தேசிய இனவாதிகள் தமது இனவெறிக் கொடிகளை உயரப் பறக்கவிட்ட நிலையில் தமிழ் மண்ணானது சூரையாடப்பட்டுள்ளது.
பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?
மக்களை நேசிக்கும் எவரும், அந்த மக்களுக்காக தம் கடந்தகாலத் தவறுகளை திருத்தியாக வேண்டும். எதிர்காலத்தில் தவறான வழியைக் கையாளாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் நாம் இன்று செயல்படுகின்றோம் என்பதை, நாம் திரும்பி பார்க்கவும், எம்மை நாம் கேட்டுப்பார்க்கவும் வேண்டும்.
மகிந்தாவின் பேரினவாத பாசிசம், ஊடகவியலை குதறுகின்றது
இனவொடுக்குமுறையும் இனவழிப்பும் பேரினவாத பாசிசமாக, அதுவே குடும்ப ஆட்சியாக மாறி வருகின்றது. அது தன்னை விமர்சிக்கின்ற, தன்னை எதிர்க்கின்ற அனைத்தையும், ஈவிரக்கமின்றி அரச இயந்திரங்கள் மூலம் ஓடுக்குகின்றது அல்லது போட்டுத் தள்ளுகின்றது. ஒரு கூலிப்படையும், சலாம் போட்டு நக்கும் கூட்டமும் தான் அரசாக உள்ளது. இந்தக் கும்பல் போடும் பாசிசக் கூத்தைத்தான், சட்டத்தின் ஆட்சி என்றும், ஜனநாயகத்தின் சிம்மாசனம் என்று கூச்சல் போடுகின்றது.
வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்
"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர். பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு.
"வரட்டுத்தனம்" குறித்து வினவும், "ஈழ நினைவு குறித்து" புலிப்பாசிசமும் (பகுதி : 6)
"வரட்டுத்தனம்" குறித்த புலிப்பாசிசமும், "ஈழ நினைவு குறித்து" வினவும், தத்துவார்த்த ரீதியாக அதில் முரண்பாடு காணவில்லை. அவரவர் கோசத்தை மற்றவர் அரசியல் ரீதியாக அங்கீகரித்துதான், எம்மை "வரட்டுவாதிகள்", "இனத்துரோகிகள்" என்கின்றனர். இங்கு சார்புத்தன்மை இன்றி, யாரும் இதை சொல்லவும் எழுதவும் முடியாது.
வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)
'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.
தோழர் வினவின் தளத்தின் கட்டுரையாளர் ஒரு அப்பாவியல்ல, ஒரு பாசிட்டே (பகுதி 4)
குறிப்பு : இக்கட்டுரை "அறிவிப்பு : “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்ற வினவு குழுவின் அறிவுப்புக்கு முன் எழுதியது. 5வது பகுதி வினவு குழுவுக்கான பதிலாகவும், 6 வது பகுதி கட்டுரையின் தொடராகவும் வெளி வரும்.
நாங்கள் இதை எந்த அடிப்படையில், எந்த அரசியலில் இதைச் சொல்லுகின்றோம் என்பது, இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களையும், அப்பாவிகளையும் புலிப் பாசிசத்தில் இருந்து பிரித்து அணுகவும், அறியவும் இது எமக்கு உதவும்.