காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12
வெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தமிழினவாதிகள் காணாமல் போன தங்கள் தமிழ் பல்கலைக்கழகம் குறித்து பேசுவதில்லை.
தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழனின் தலைநகரம் திருகோணமலையிலேயே அமைப்போம் என்று கூறியே, 1960 களில் நிலத்தை விலைக்கு வாங்கினர். கட்டிடங்கள் அமைக்க அடிக்கல்லை நாட்டினர். கட்டிடங்களை அமைத்தனர். தொடர்ந்து நிதி சேகரிப்புகளைச் செய்தனர்.