பாசிசத்துக்கு எதிராகப் போராடிய செல்வநாயகத்தின் மரணச் செய்தி
1986 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள், இயக்கங்களின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராகப் போராடிய போது, புலிப் பாசிட்டுகள் போராடுபவர்களை எல்லாம் கொன்று வந்தனர். விஜிதரன் புலிகளால் காணாமலாக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் விமலேஸ்வரனுடன் கலந்து கொண்ட எங்கள் செல்வநாயகம் இன்று எம்முடன் இல்லை.
19.11.1986 அன்று உண்ணாவிரதம் தொடங்க முன் ஆற்றிய உரை. (நன்றி :- இலங்கை தமிழர் போராட்ட வரலாறு : அரசியல் அனாதைகள் - பக்கம் 191)
19.11.1986 : "எங்களுக்கு சிங்களத் துப்பாக்கி தமிழ் துப்பாக்கி என்ற வேறுபாடு கிடையாது" - செல்வநாயகம்
"என் உயிரினும் இனிய அன்புத் தோழர்களே! உங்களுக்கு என் அன்பான வணக்கம்."


